Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.!

Screenshot-2021-01-03-22-33-16-326-com-a 

ஜெனிவா விவகாரத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ம.ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் கொழும்பில் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் கூடிப் பேசுவதற்கு இன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

ஜெனிவா விவகாரங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று மதியம் தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழர் தரப்பு ஜெனிவா விவகாரத்தைக் கையாள்வதற்கான முறைமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் கூடி ஆராய்வர் என முடிவு செய்யப்பட்டது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை நடைபெறும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://aruvi.com/article/tam/2021/01/03/21126/

டிஸ்கி

Screenshot-2021-01-03-22-35-21-845-com-a 

எந்த வில்லங்கமும் இல்லாமல்  இந்த ஒற்றுமையை இறைவன் காக்குக..👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-01-03-22-35-21-845-com-a

அடடா தவற விட்டோமே, வவுனியா போய் கூழ் காச்சியிருந்தால்.....!. நினைக்கவே நாக்கில் உமிழ் நீர் சுரக்கிறதே.!! 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

டிஸ்கி

Screenshot-2021-01-03-22-35-21-845-com-a 

எந்த வில்லங்கமும் இல்லாமல்  இந்த ஒற்றுமையை இறைவன் காக்குக..👍

பொய்யுரைப்பதை நிறுத்தி சொந்த மக்களுக்காக பாடுபட முன்வருமாறு சுமந்திரனுக்கு சிவிவி அழைப்பு.!

Screenshot-2021-01-04-18-45-38-785-com-a 

பொய்யுரைப்பதை நிறுத்தி தனது சொந்த மக்களுக்காக பாடுபட முன்வருமாறு சுமந்திரனுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தில் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் முன்மொழிவு வரைபு தொடர்பில் வவுனியாவில் வைத்து நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும் வகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இவ்வறு தெரித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

நான் தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய்!

ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக எனக்கு அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார். எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது.

சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப் படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது. நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice), சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ சாத்தியம் இல்லையோ பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை. ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் TV யில் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது. சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன். அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

பாராளுமன்ற உறுப்பினர்

யாழ்மாவட்டம்

04.01.2021

http://aruvi.com/article/tam/2021/01/04/21169/

டிஸ்கி

😢..😢

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

நான் தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய்.

ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை.

இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக எனக்கு அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது.

சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப் படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice), சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல.

அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ சாத்தியம் இல்லையோ பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும்.

சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை. ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை.

அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் ரிவி யில் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும்.

விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/srilanka/01/265580?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா விவகாரத்தை ஆராய 3 தமிழ் கட்சிகள் கொழும்பில் நாளை கூடுகின்றன: இணக்கப்பாடு சந்தேகமே!

By admin -

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஓரணியில் தமது நிலைப்பாட்டை சமர்ப்பிக்கும் திட்டம் அனேகமாக சாத்தியப்படாது என தமிழ்பக்கம் அறிகிறது.

நேற்று முன்தினம் (3) வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தினார்கள். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், 3 கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பில் 6ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது வரைவு இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்கள்.

எனினும், நாளை கொழும்பில் நடைபெறும் சந்திப்பில் இணக்கப்பாடு ஒன்றை எட்ட வாய்ப்பில்லையென்றே தமிழ்பக்கம் அறிகிறது.

காரணம், நேற்று முன்தினம் வவுனியாவில் நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் எவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த போதும், சந்திப்பு சுமகமாக நடக்கவில்லை, இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இந்த கூட்டத்தை தமிழ் மக்கள் வாழ்வுரிமை கழகத்தின் வி.சிவகரன் ஒழுங்கமைத்திருந்தார். வவுனியா கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சிவகரன்- கஜேந்திரகுமார் இடையே மோதல் வெடித்து, சிவகரன் கலந்துரையாடலை தலைமைதாங்க முடியாத நிலைமையேற்பட்டது.

பின்னர் கஜேந்திரகுமார் தரப்பு பாதிரியார் ஒருவர் தலைமையில் கூட்டம் நடந்தது.

சர்வதேச விசாரணை நீதாயம் ஒன்றை நிறுவுவது, சர்வஜன வாக்கெடுப்பு கோரிக்கையை விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தை கஜேந்திரகுமார் தரப்பு முன்வைத்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சி தரப்பில் எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதும், தமது தரப்பு நிலைப்பாட்டை அவர்கள் முன்வைக்கவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி இரண்டு கட்சிகளும் கோரிய போதும், அவர்கள் முன்வைக்கவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற- கஜேந்திரகுமார் தரப்பு கோரிக்கையை ஆதரிக்க தயார் என்று மட்டும் குறிப்பிட்டனர்.

இந்த நிலைப்பாடுகளையொட்டி வாதப்பிரதிவாதங்கள், தர்க்கங்கள் நடந்தன.

மனித உரிமைகள் பேரவையில் தமிழர்தரப்பில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையென எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஒரு வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைபுடன் விக்னேஸ்வரன் இணக்கியுள்ளார். அந்த வரைபை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மின்னஞ்சல் வழியாக அவர் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி இரவு கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ் ஆகியோருக்கான தனித்தனி வரைபை முன்னணி பிரமுகர்களிடமும் சமர்ப்பித்திருந்தார். வவுனியா கூட்டத்தின்போது, “நேற்றுத்தான் அதை என்னிடம் தந்தார்கள். நான் இன்னும் படிக்கவில்லை“ என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

தமது நிலைப்பாடுகளில் இருந்து இறங்க கஜேந்திரகுமார் தரப்பு, சிவாஜிலிங்கம் தரப்பு மறுத்து விட்டன.

இணக்கப்பாடு இல்லாமலே கூட்டம் முடிந்தது.

கொழும்பில் நாளை (6) நடக்கும் கூட்டத்தில் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர, சில மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு அழைத்துள்ளது. நிமல்ஹா பெர்ணான்டோ, பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.

எனினும், இதில் இணக்கப்பாடு எட்டப்பட வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

https://www.pagetamil.com/166144/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, பெருமாள் said:

ஜெனீவா விவகாரத்தை ஆராய 3 தமிழ் கட்சிகள் கொழும்பில் நாளை கூடுகின்றன: இணக்கப்பாடு சந்தேகமே!

 சுமந்திரன் இதுக்குள்ளை புகுந்து குரங்கு வேலை பார்க்காட்டில் சந்தோசம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மூன்று நாட்களுக்கு முன்னர்தான் TV யில் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும்.

 சிங்களவனின் எலும்புத்துண்டுக்கு நீங்கள் வாலாட்ட தயாரில்லை, உங்களை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும். அல்லது நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போட்டு தான்தான் பெரிய சாணக்கியன் என்று பெயர் எடுத்து, தமிழரை தோல்வியடையச் செய்யவேண்டும். வெகு விரைவில் கஜேந்திரகுமாரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு உங்களை ஒதுக்கிவிடக்கூடும். எல்லாரும் தனக்குக்கீழ் அடக்கி வாசிக்க வேண்டும் என்பதே அவர் பிரச்சனை. 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய சந்திப்பொன்றில் பங்கேற்கும் விக்கி, கஜேந்திரகுமார், சுமந்திரன்

(ஆர்.ராம்)

 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நாளை புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்து. 

 

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/142529/Vicky__Gajendrakumar__Sumanthiran.jpg

 

கொழும்பில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் மேலும் சில துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. 

 

இந்தச் சந்திப்பில் எதிர்வரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பான தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

ஏற்கனவே புதிய பிரேணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் வவுனியாவிலும் இரண்டாம் கட்டச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

வவுனியாவில் நடைபெற்ற சந்திப்பின்போது கஜேந்திரகுமார் பங்கேற்றிருந்தார். அதேநேரத்தில் விக்னேஸ்வரன் இந்த இரண்டு சந்திப்புக்களிலும் பங்கெடுக்கவில்லை என்பதோடு, அவரவர் சார்பில் கிளிநொச்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் கலந்துகொண்டிருந்தார். 

அத்துடன் அக்கூட்டணியைச் சேர்ந்த பங்காளிக்கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

 

அக்கூட்டத்தின்போது, ஜெனிவா தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்தாடல்களும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தது. 

 

இதில் பூரணமான இணக்கம் இன்னும் ஏற்படாத நிலையில் தற்போது அரசியல் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். 

 

விசேடமாக கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளிகளை குறைப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய சந்திப்பொன்றில் பங்கேற்கும் விக்கி, கஜேந்திரகுமார், சுமந்திரன் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.