Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை - Newsfirst

தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை!

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும்.

புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.

எமது மக்களைப் பொறுத்தவரை – எம்மைப் பொறுத்தவரை ஒரு நியாயமான- சமத்துவமான – அனைவரதும் உரிமைகளையும் மதிக்கின்ற – நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத – சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய – நீடித்து நிலைத்திருக்கக்கூடிய – நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய – புதிய அரசமைப்பு உருவாவதற்கு நாம் பரிபூரண உதவி வழங்குவோம்.

நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவே நாட்டு மக்களின் எதிர்காலம் வளமடையும் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அந்தத் தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும். இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வெய்துகின்றேன்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு கிடைக்க இன்றைய நாளில் பிரார்த்தனை செய்வோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தற்போதைய-ஆட்சியாளர்கள்-ப/

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.

பகிடிக்காவது கள உறவுகள் யார் ஒருவரும் கருத்துக்களை பகிரவில்லை , தலைவருக்கு வந்த நிலைமை வேதனை அளிக்கிறது தோழர்..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிடிக்காவது கள உறவுகள் யார் ஒருவரும் கருத்துக்களை பகிரவில்லை , தலைவருக்கு வந்த நிலைமை வேதனை அளிக்கிறது தோழர்..😢

ஆளை... கைகழுவி விட்டு விட்டார்கள், போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு பாவம், இம்முறை பொங்கல் தீர்வு ரிலீசுக்கு ஆள் சீனிலேயே இல்லை 
பாவம் எதிர்கட்சி தலைவர் ,உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ,V8 சஹாரா என்று மஜாவாக வாழ்ந்த ஆளை 
இப்படி புலம்பவிட்டுட்டியே பகவானே 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிடிக்காவது கள உறவுகள் யார் ஒருவரும் கருத்துக்களை பகிரவில்லை , தலைவருக்கு வந்த நிலைமை வேதனை அளிக்கிறது தோழர்..😢

புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களே! சம்பந்தர் என்ன நிலமையில் இப்போ உள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் கருத்தெழுதக் கூடாது, சொல்லிப்புட்டேன். அவர் தற்போதுள்ள நிலை புல்லரிக்கிறது.👇

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

எம்மைப் பொறுத்தவரை ஒரு நியாயமான- சமத்துவமான – அனைவரதும் உரிமைகளையும் மதிக்கின்ற – நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத – சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய – நீடித்து நிலைத்திருக்கக்கூடிய – நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய – புதிய அரசமைப்பு உருவாவதற்கு நாம் பரிபூரண உதவி வழங்குவோம்

எந்த நாட்டுக்கு உதவி வழங்கப்போகிறீர்கள்? வாங்கிய கடனை திருப்பி  கொடுக்கமுடியாமல் இலங்கை தத்தளிக்குது. கடன் கொடுத்த நாடுகள் நாட்டை பங்கு போடப்போகுது. எதுக்கும் உங்களுக்கு இப்போ உள்ள சலுகைகளை வழங்க தயாராக இருக்கும் நாடுகளை கண்டுபிடித்து விரைவாக  நாட்டைப் பிடிப்பதற்கு உதவி அனுசரணை வழங்குங்கள். இந்த நாடு வெகு விரைவில் முழுகப்போகுது. இதற்கு உதவி வழங்குவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

எந்த நாட்டுக்கு உதவி வழங்கப்போகிறீர்கள்? வாங்கிய கடனை திருப்பி  கொடுக்கமுடியாமல் இலங்கை தத்தளிக்குது. கடன் கொடுத்த நாடுகள் நாட்டை பங்கு போடப்போகுது. எதுக்கும் உங்களுக்கு இப்போ உள்ள சலுகைகளை வழங்க தயாராக இருக்கும் நாடுகளை கண்டுபிடித்து விரைவாக  நாட்டைப் பிடிப்பதற்கு உதவி அனுசரணை வழங்குங்கள். இந்த நாடு வெகு விரைவில் முழுகப்போகுது. இதற்கு உதவி வழங்குவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை உங்களுக்கு.

ஐயா இந்தியாக்கு கொடுக்க நினைக்கிறார் நாங்க சைனா பக்கம் தாவப்போறம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.