Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை ஒன்றினை சமரிப்பிக்க உள்ள ஐ நா மனித உரிமைகள் அமைப்பு, அந்த அறிக்கையின் பிரதி ஒன்றினை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்த அறிக்கை கிடைத்துள்ளது என உறுதிப்படுத்திய அரசு, அதற்குரிய பதிலை தயாரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில், ஐ நா வுக்கு அளித்த இலங்கை அரசின் உறுதிமொழிகளில் இருந்து புதிய அரசு விலகியது மட்டுமல்லாது, நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில், பல கரிசனத்துக்குரிய தலைகீழ் மாறுதல்களை அவதானிப்பதாக இந்த அறிக்கை சொல்கிறது.

மனித உரிமைகள் சபை, இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது.

http://www.dailymirror.lk/breaking_news/UNHRC-Damning-report-on-Sri-Lanka-to-be-tabled/108-204169

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை ஒன்றினை சமரிப்பிக்க உள்ள ஐ நா மனித உரிமைகள் அமைப்பு, அந்த அறிக்கையின் பிரதி ஒன்றினை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்த அறிக்கை கிடைத்துள்ளது என உறுதிப்படுத்திய அரசு, அதற்குரிய பதிலை தயாரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில், ஐ நா வுக்கு அளித்த இலங்கை அரசின் உறுதிமொழிகளில் இருந்து புதிய அரசு விலகியது மட்டுமல்லாது, நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில், பல கரிசனத்துக்குரிய தலைகீழ் மாறுதல்களை அவதானிப்பதாக இந்த அறிக்கை சொல்கிறது.

மனித உரிமைகள் சபை, இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது.

http://www.dailymirror.lk/breaking_news/UNHRC-Damning-report-on-Sri-Lanka-to-be-tabled/108-204169

என்ன அழுத்தத்தை பிரயோகிக்கப் போகினம். சும்மா தடவிக் குடுப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

என்ன அழுத்தத்தை பிரயோகிக்கப் போகினம். சும்மா தடவிக் குடுப்பினம்

இந்த முறையாவது.... நம்பிக்கையுடன் காத்திருப்போம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு

 
Gota-Michel-696x387.jpg
 33 Views

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை ஒன்றை முன்வைக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிசேல் பசெலட் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு வெளியிடவும், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார். அதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது அவரின் திட்டம்.

சிறீலங்கா அரசுக்கும் இந்த அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசு அதற்கான பதிலை இன்றுவரை வழங்கவில்லை என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தாரங்கா பாலசூரியா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் 22 ஆம் நாள் முதல் மார்ச் மாதம் 19 ஆம் நாள் வரை இடம்பெறும் இந்த கூட்டத்தொடரில் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றையும் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் சிறீலங்கா அரசின் தோல்வி தொடர்பில் விமர்சனங்கள் இருக்கும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு முன்னைய தீர்மானத்தில் இருந்து வெளியேறியது குறித்து தனது கவலையை கடந்த செப்படம்பர் மாதம் வெளியிட்ட ஆணையாளர் இது தொடர்பில் ஆணைக்குழு அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

https://www.ilakku.org/?p=39937

 

 

இலங்கை தொடர்பான கடும் அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்கவுள்ளது

Digital News Team 2021-01-21T16:16:54

இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளது.
ஜெனீவா அமர்விற்கு முன்னரே அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள ஐநா வட்டாரங்கள் அந்த அறிக்கை தாக்கம் செலுத்துவதாகயிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அறிக்கையை முன்கூட்டியே வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

michele-bachelet-1-300x135.jpg
இலங்கை அரசாங்கத்திற்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அரசாங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மக்களிற்கு பகிரங்கப்படுத்துவோம் என ஐநா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலக அறிக்கை கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்றுவரை அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையை இலங்கை சமர்ப்பிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 22ம் திகதி முதல் மார்ச் முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இந்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கை குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார், குறிப்பிட்ட அறிக்கையில் அவர் மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதமை தொடர்பில் கடும் கண்டனங்களை முன்வைக்கவுள்ளார்.

 

https://thinakkural.lk/article/106432

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சி இருக்கிற தமிழ் மக்களையும் புலம் பெயர உதவினாலே இனப்பிரச்சனை சுபமாய் முடிஞ்சிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

இலங்கையைக் கடுமையாகச் சாடும் அறிக்கையொன்றை, ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ அடுத்த மாதமளவில் சமர்ப்பிக்கவுள்ளாரென கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமுன்னர் அதற்கு இலங்கையின் பதிலைப் பெறுவதற்காக அறிக்கையின் பிரதியொன்று முற்கூட்டியே இலங்கை அரசுக்கௌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அப்பதில் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உட்தரப்புச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46வது அமர்வு நடைபெறவிருக்கிறது. ஆனால் அதற்கு முதலே இவ்வறிக்கையை வெளியிட ஆணையாளர் விரும்புவதாகவும் அதற்கு முன்னர், அறிக்கைக்குப் பதிலளிக்கும் உரிமையை இலங்கைக்கு அளித்து அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் எனவும் டெய்லி மிரர் தெரிவிக்கிறது.

இவ்வமர்வின்போது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் குறிப்பிட்டபடி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், தொடர்பான இலங்கையின் நடவடிக்கைகள் மீதான விபரமான அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, இத் தீர்மானத்தில் இணக்கம் தெரிவித்தபடி, தற்போதைய, முந்திய அரசாங்கங்கள் மேற்கொள்ளத் தவறிய விடயங்கள் பற்றி அவர் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


தீர்மானம் 30/1 மற்றும் ரணில் அரசினால் இணைந்து முன்மொழியப்பட்ட 30/1 உடன் தொடர்புடைய தீர்மானமான 40/1 ஆகியவற்றிலிருந்து தாம் விலகுவதாக தற்போதைய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், இவ்விரு தீர்மானங்களிலும் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, 2015 முதல், மார்ச் 2021 வரை ஐ.நா. கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், இலங்கை அரசு இவற்றை உதாசீனம் செய்து வருகிறது என சர்வதேச சமூகமும், பல மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த வருடம் புதிய அர்சு பதவியேற்றதும் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகுவதற்குக் காட்டிய அவசரம் தனக்கு மிகவும் குழப்பம் தருவதாகவும், இலங்கை தொடர்பாக சபை அதிக கவனத்தைச் செலுத்தவேண்டுமெனவும் ஆணையாளர் பக்கெலெ தெரிவித்திருந்தார்.

https://marumoli.com/இலன்கையைக்-கடுமையாகச்-சா/

  • கருத்துக்கள உறவுகள்

காட்டமான அறிக்கை எல்லாம் இப்ப உதவாது. எதையும் செயலில் காட்ட வேணும் சும்மா அறிக்கை அறிக்கையா விட்டுக்கொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையோடு உறங்கிவிடுவினை. அடுத்த கூட்டத்தொடருக்கு அடிச்சு விழுந்து இன்னோரு அறிக்கை. இப்படியே காலங்கடத்தி நிலங்கள் பறிபோயிற்று, உரிமைகள் இழந்தாச்சு, இப்போ தொல்பொருள் ஆராய்ச்சி என்று இறங்கி இருக்கிறதையும் முழுங்கின பிற்பாடு சாதிக்க ஏதும் இல்லை. சிங்களத்தை  பாராட்டி  மூடிப்போட்டு போவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.