Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.!

Screenshot-2021-01-29-09-48-01-239-com-a

2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் நினைவேந்தல் இன்று (ஜன-29) காலை 09.00 மணி முதல் சென்னை கொளத்தூரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அன்புடையீர் வணக்கம்,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் (29.01.2021) இன்றாகும்.

தன்னுடைய ஈடு இணையற்ற உயிர்த்தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புலவர் புலமைப்பித்தன், சத்யராஜ், த.வெள்ளையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமாரின் திருவுடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் ஈழ சொந்தங்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் முதலான 27 ஈகியர் நினைவாக அந்த மலர்த்தூண் அமைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

29.01.2021 வெள்ளிக்கிழமை காலை 10.07 மணியளவில், முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த அதே நேரத்தில் வீரத்தமிழச்சி செங்கொடியின் சார்பாக தோழர்.பேரறிவாளனின் தாயார் அற்தம்மாள், முத்துக்குமாரின் தாயாகவும் திகழ்ந்த சகோதரி தமிழரசி கருக்குவேல்ராஜன் மலர்த்தூணுக்கு மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றுவோர் மலர் வணக்கம் செலுத்தி மெழுகுவர்த்திகளை ஏந்தி, அந்த தியாகத் திருவிளக்குகள் நம் நெஞ்சில் மூட்டிய அக்கினிக் குஞ்சை நினைவூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எவரும் பேசாமல், முழக்கங்கள் இல்லாமல், அந்த வீர தமிழ் மகனின் மரணவாக்குமூலம் மட்டுமே பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, மௌனமலர் அஞ்சலியாக இந்த நிகழ்வு நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்.

முத்துகுமார் முதலான 27 மாவீரர்களின் மனசாட்சியோடு நாம் ஒவ்வொருவரும் மனம்விட்டு பேச வாய்ப்பளிக்கும் விதத்தில் கனத்த அமைதியுடன் நாம் வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

முத்துகுமாரின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த மாவீரர்களின் குடும்பத்தினரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முத்துகுமாரின் திருவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தத் திரண்ட ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வுக்கு உரிமையுடன் அழைக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது.

அந்த தமிழர் பெருங்கூட்டம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கிறது என்பதை உறுதி செய்வது ஒன்றே இந்த வீரவணக்க நிகழ்வின் நோக்கம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் அமைப்பும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றோம்.

இந்த நிகழ்வை பொறுத்தவரை நாங்கள் வெறும் நார் மட்டுமே. மலர்களாகிய நீங்கள் தான் இதை மாலையாக்க முடியும். எனவே 2021 சனவரி 29 காலை 9 மணியளவில் நிகழ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உரிமையோடும் உண்மையோடும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி

இப்படிக்கு,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு

செம்பியன்.

http://aruvi.com/article/tam/2021/01/29/22068/

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகத்தின் நோக்கம் நிறைவேறாதது ஏன்?’ – தோழர் பாஸ்கர்

 
Untitled-1-1.jpg
 69 Views

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் கழிந்து பனிரெண்டாவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு கொந்தளிப்பு அப்போது நிறைவேறினாலும், அவரது நீண்டகால நோக்கம் நிறைவேறவே இல்லை.

அவ்வாறு நிறைவேறாது என்பதற்கான தடயங்கள் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ஒட்டியே நன்கு தெரிந்து விட்டது.  இன்றுவரையிலும் அவ்வாறே. முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தினால் முக்கியமான இரு சாதகங்கள் மட்டும் ஏற்பட்டன.

முதலாவது

தமிழகத்தில் ஈழச் சிக்கல் மேலும் முன்னெப்போதும் விட பரவலான கவனத்தைப் பெற்றது.

இரண்டாவது

எண்ணற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் அரசியல் அரங்கிற்கு வந்தனர்.

ஆனால் இவ்வாறு வந்தோரில் ஏகப்பெரும்பான்மையினரை  திடப்படுத்தாமல் இருக்கவே செய்தன முதன்மையான ஈழ ஆதரவு அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகமானது ஈழ ஆதரவு அமைப்புகள் புதியவை தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. இத்தகைய புதிய அமைப்புகள் ஈழச் சிக்கலுக்காகவே முதன்மையாகச் செயற்படுவதற்கு தோன்றின.

ஆனால் இவை முள்ளிவாய்க்காலின் முதன்மையான போர் குற்றவாளியான இந்திய விரிவாதிக்க அரசை அவ்வாறு அம்பலப்படுத்துவதற்கு தயாராய் இல்லாத அரசியல் கண்ணோட்டத்தில் இருக்கின்றன. இப்பொழுதோ இலங்கையில் இந்திய விரிவாதிக்க அரசின் கூட்டோடு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிய கும்பலே மீண்டும் அங்கு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஆதரவோடு. ஈழச் சிக்கலுக்கான முதன்மையான பழைய மற்றும் புதிய அமைப்புகள் இதை தடுப்பதற்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

அதற்கு இரு காரணங்கள் மட்டும் இருக்கக்கூடும்.

முதலாவது காரணம் என்னவெனில்

இத்தகைய ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள் தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு முகங்கொடுப்பதிலேயே சிக்கியிருக்கக்கூடும்.

இரண்டாவது காரணம் என்னவெனில்

முள்ளிவாய்க்கால் போர் குற்றச் செயல் கும்பலான இராஜபக்ச கும்பலானது  இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் சீன சாய்வு ஆட்சியை நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராய் இந்தியா தலையிடும் எனும் அனுமானம் ஆகும். எவ்வாறாயினும் இந்த அனுமானம் தவறே. இந்தியா தலையிட்டாலும் ஈழம் கிடைக்காது. இந்தியாதான் முதன்மைப் போர் குற்றவாளியாக இருக்கும் நிலையில் அதை எதிரியாய் வரையறுக்காத/அம்பலப்படுத்தாத நிலையில் ஈழம் அறவே கிடைக்காது. இதை இன்னமும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய கொந்தளிப்பு வழங்கிய வாய்ப்பிலும் அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதே நிலைமைதான்.  இந்நிலையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய உணர்வை தட்டியெழுப்பினால்தான் அத்தியாகத்தின் நோக்கத்தை நோக்கி நகருவதற்கு முடியும். அதற்கு யார் உண்மையான எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள் என்பதை சரியாய் வரையறுப்பதும் அவசியம். “யார் உண்மையான தமிழ் தேசியவாதிகள்/எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள்…..”

ஈழ ஆதரவு அமைப்புகள் இடையே  இந்த விஷயத்தில் தெளிவு இல்லை. அதனால் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.

https://www.ilakku.org/?p=40633

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் ...ஒருத்தரும் அஞ்சலி செலுத்தக் காணோம் ...அவ்வளவு தான் இவர்களது இறப்பிற்கு உள்ள மரியாதை  

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரத் தமிழ்மகன்... முத்துக்குமாரனுக்கு, வீர வணக்கங்கள்.  😢

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் மீதான இனப்படுகொலை யுத்தத்திற்கு எதிராக தன்னை தானே தீமூட்டி எரித்து மக்களின் மனதில் அனலை விதைத்த  தமிழகத்து உணர்வாளன் முத்துக்குமார் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் நடைபெற்றது . 

Bild

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.