Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது - தமிழர்கள் கனவு காணக்கூடாது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது - தமிழர்கள் கனவு காணக்கூடாது.!

Screenshot-2021-02-12-10-30-46-056-com-a 

"இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது."

- இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

"சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே பொத்துவில் தொடக்கம் - பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை எனவும், இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் எவையும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் இலங்கை விவகாரத்தில் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அடிப்படை கொள்கைக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இம்முறை இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பலம் கொண்ட நாடுகள் செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://aruvi.com/article/tam/2021/02/12/22538/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு சுத்திவர கடன், ஒன்றை அடைக்க இன்னொன்றிடம் கடன் வாங்கும் நிலை, கடன் கொடுத்த நாடுகள் நாட்டை பங்கு போட போட்டி நடக்குது, அதுக்குள்ள வீறாப்பு கதையளுக்கு குறைச்சல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சொறிலங்காவின் எந்த பாகத்தை சைனாவுக்கு அடுத்து கொடுப்பதாய்  பிளான் ?

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரின் கூற்று உண்மை தான் என்பதை வரலாறு கூறுகிறது.
ஆனால் நீங்களும் ஒன்றும் செய்யிறதா இல்லை தானே?!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஒன்டு செய்யலாம்.ஊரில் இருக்கும் தமிழரை தங்கள் நாடகளுக்கு அழைத்துக் கொள்வது.😃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

சர்வதேசம் ஒன்டு செய்யலாம்.ஊரில் இருக்கும் தமிழரை தங்கள் நாடகளுக்கு அழைத்துக் கொள்வது.😃

ஏன் அண்ன ஏன் நல்லத்தானே போய்க்கிட்டு இருக்கு வெளிநாடுகள் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

சர்வதேசம் ஒன்டு செய்யலாம்.ஊரில் இருக்கும் தமிழரை தங்கள் நாடகளுக்கு அழைத்துக் கொள்வது.😃

ட்ரம் கள்ளக்குடியேற்றத்தை தடுத்த பிறகு எங்களுக்கு மலசலகூடங்களை கழுவ போதுமான ஆட்கள் இங்கில்லை என்பது, உண்மைதான். ஆனால் அதற்காக இப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சொறிலங்காவின் எந்த பாகத்தை சைனாவுக்கு அடுத்து கொடுப்பதாய்  பிளான் ?

சில நாட்களுக்கு முன், நாட்டை முழுக்க வித்து, விற்ற நாட்டை முன்னேற்றப்போறேன் என்று முன்னாள் இராணுவ தளபதி பெரிய பகிடிவிட்டாரே, நீங்கள் அதை ரசிக்கவில்லையா? இந்தளவில் நிக்குது சிறிலங்காவின் மன எண்ணங்களும், பேச்சுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

சில நாட்களுக்கு முன், நாட்டை முழுக்க வித்து, விற்ற நாட்டை முன்னேற்றப்போறேன் என்று முன்னாள் இராணுவ தளபதி பெரிய பகிடிவிட்டாரே, நீங்கள் அதை ரசிக்கவில்லையா? இந்தளவில் நிக்குது சிறிலங்காவின் மன எண்ணங்களும், பேச்சுகளும்.

நான் கவனிக்கவில்லை அந்த பகிடியை இங்கு இணைத்துவிடுங்க நாலு பக்கம் ஓட  வைப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியும், இந்த உண்மையில் நடந்த பழைய பகிடியான ஒரு நிகழ்வு குறித்து பதிந்தேன்.

யாழிலுள்ள, தொழில் நிறுவனத்தில், ஒருவர் வேலை.... இரண்டு கிழமையா சம்பளம் கொடுக்கவில்லை. அடுத்த வாரம், சேர்த்து தாறன்  எண்டு முதலாளி சுத்துறார்.

நாலாவது கிழமை...... எப்படியும் சம்பளம் வந்துவிடும் என்று, நம்மாளு, காலைல, துன்னூறு எல்லாம், பூசிக்கொண்டு வேலைக்கு வருகிறார். அன்றய வேலையினை முடித்து, சம்பளத்தினை எதிர்பார்த்துக் கொண்டு, வெளியே இருந்த கல் ஒன்றில் குந்திக் கொண்டு இருக்கிறார்.

முதலாளி, கூப்பிடுவதாக இல்லை..... மெதுவாக உள்ளே எட்டிப் பார்க்கிறார். 'இங்கயே நிண்டனி..... நான் கவனிக்கேல்ல...'.... என்ன விசயம் எண்டால், உண்ட வேலை சரி இல்லை கண்டியே.... அதுதான்.... நாலு கிழமை விட்டுப் பிடிச்சனான்.... சரி வாற  மாதிரி தெரியல்ல.... அதாலை காசு தரேல்லாது, வேற வேலைக்கு போ.... ...'

நம்மாளுக்கு கொதி வந்துவிட்டது.... விறு விறு எண்டு வேகமா போனார்... அப்பா... சொன்னதை கேட்டு ஆள் போட்டுதே என்று, முனாவுக்கு சந்தோசம்....

ஆனால்.....

போனவர்.... கப்புப்கப்பெண்டு தண்ணியை ஏத்திக்கொண்டு வந்தார் வேகமாக.... மூனா... தரோடையோ கதைத்துக்  கொண்டிருக்கிறார்...

வந்த வேகத்தில், நம்மாளு கத்தினார்....

'காலைப் *****ல் இருந்து மாலைப் **** வரை வேலை **** 
சம்பள **** யை கேட்டால், நடப்புப் ****'   (ஸ்டார் போட்ட இடத்தில விருப்பமானதை போட்டு நிரப்பவும்)

என்றார் பெரும் சத்தமாக....

மூனா... லாச்சியினை திறந்தார், கை நிறைய காசினை எடுத்தார். எழும்பி மரியாதையாக கொடுத்து விட்டு, திங்கள்கிழமை வேலைக்கு நேரத்துக்கு வா தம்பி என்று சொல்லி அனுப்பி விட்டார்.

எதுக்கு இந்த கதை....

இந்தியன் ஆமியிடம் இருந்து, அடிபட்டு, பாதுகாத்து தந்ததை நீயே வைச்சு கொண்டு, கிரந்தம் விடும் பரதேசிப்பயலே, இன்னும் கொஞ்ச நாளிலை, சீனாக்காரனிடம் சுதந்திரம் கேட்டு, சேர்ந்து போராட, தமிழன் வேணும்..... அப்ப வருவாய் தானே, பார்த்துக்கிறோம்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நான் கவனிக்கவில்லை அந்த பகிடியை இங்கு இணைத்துவிடுங்க நாலு பக்கம் ஓட  வைப்பம் .

நீங்கள்தான் இணைத்திருந்தீர்கள். "முன்னேற வேண்டுமாயின் முழுநாட்டையும் விற்பனை செய்யவேண்டும்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.