Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

 
 

படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது.

முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும்.

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார்.

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

 
 

படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது.

முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும்.

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார்.

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

பாதி  சனம்  அங்கு இல்லை ஆனாலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இவர்களின் ஒவ்வொரு திட்டத்திலும் மறைநீர் இழப்பு உண்டு .

தீவுப்பகுதிகள் கோடைகாலம்களில் சொல்லவே தேவையில்லை .

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கின்றது 

வரைதல்

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

கருத்து

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

நீர் சேகரிப்பு வலையமைப்பு

மூங்கில் வலுவான இணைப்புகள்

https://www.intelligentliving.co/bamboo-tower-collects-water-from-air/

கண்ணை குத்திக்கொண்டு விடியலை தேடுகிறோம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பாதி  சனம்  அங்கு இல்லை ஆனாலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இவர்களின் ஒவ்வொரு திட்டத்திலும் மறைநீர் இழப்பு உண்டு .

தீவுப்பகுதிகள் கோடைகாலம்களில் சொல்லவே தேவையில்லை .

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கின்றது 

வரைதல்

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

கருத்து

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

நீர் சேகரிப்பு வலையமைப்பு

மூங்கில் வலுவான இணைப்புகள்

https://www.intelligentliving.co/bamboo-tower-collects-water-from-air/

கண்ணை குத்திக்கொண்டு விடியலை தேடுகிறோம் .

 

இப்பொறிமுறை யாழ்ப்பாணம் போன்ற வறண்ட இடங்களில்( ஈரப்பதம் குறைந்த ) சாத்தியமானதா?. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 50L முதல் 100L வரை புதிய தண்ணீரை சேமிக்கின்றது என்று  கூறுகிறானர் . இந்த உரிமைகோரல் சாத்தியமானதா?

 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

 

இப்பொறிமுறை யாழ்ப்பாணம் போன்ற வறண்ட இடங்களில்( ஈரப்பதம் குறைந்த ) சாத்தியமானதா?. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 50L முதல் 100L வரை புதிய தண்ணீரை சேமிக்கின்றது என்று  கூறுகிறானர் . இந்த உரிமைகோரல் சாத்தியமானதா?

 

சாத்தியமானது ஆனால் விளங்காத அரசியலால் இருப்பதையும் பறி கொடுக்க போகிறம் தற்போது உள்ள மழை 40 வீதம்   வீழ்ச்சியை சேமித்தாலே  காணும் .

The structure provides both clean water and shade

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

 தற்போது உள்ள மழை 40 வீதம்   வீழ்ச்சியை சேமித்தாலே  காணும் .

 

உங்கள் கூற்று உண்மையானதே. மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை  செய்யாமல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மெத்த படித்த அறிவாளிகள் இரணைமடுவில் இருந்து நீரை உறிஞ்ச பாக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி பெருமாள். மிகத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பம் இது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதில் இசுரேலும் எளிமையான ஆனால் பயன் மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இவை பற்றியும் அறிந்தவர்கள் பகிர்ந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

உங்கள் கூற்று உண்மையானதே. மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை  செய்யாமல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மெத்த படித்த அறிவாளிகள் இரணைமடுவில் இருந்து நீரை உறிஞ்ச பாக்கின்றார்கள்.

அங்குள்ள அரசியல்வாதிகளை கேளுங்கள் சராசரி யாழின் மழைவீழ்ச்சி எவ்வளவு என்று சரியான பதில் வராது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, கற்பகதரு said:

மிகவும் நன்றி பெருமாள். மிகத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பம் இது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதில் இசுரேலும் எளிமையான ஆனால் பயன் மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இவை பற்றியும் அறிந்தவர்கள் பகிர்ந்தால் நல்லது.

பெரிய தொழில் நுட்பமெல்லாம் தேவையில்லை. இருக்கிற குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி  மழைத்தண்ணியை சேகரிச்சாலே போதும். நிலமும் குளிர்ச்சி அடையும். நல்ல தண்ணியும் எப்பவும் கிடைக்கும்.

எப்ப பாத்தாலும் தொழில் நுட்பம்.....வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் புத்தி நல்ல புத்தி.

எங்கடை முன்னோர்கள் செய்ததை தான் வெள்ளைக்காரனும் செய்யிறான். 

நீர் தேக்கங்கள் அன்று தொடக்கமே வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

பெரிய தொழில் நுட்பமெல்லாம் தேவையில்லை. இருக்கிற குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி  மழைத்தண்ணியை சேகரிச்சாலே போதும். நிலமும் குளிர்ச்சி அடையும். நல்ல தண்ணியும் எப்பவும் கிடைக்கும்.

எப்ப பாத்தாலும் தொழில் நுட்பம்.....வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் புத்தி நல்ல புத்தி.

எங்கடை முன்னோர்கள் செய்ததை தான் வெள்ளைக்காரனும் செய்யிறான். 

நீர் தேக்கங்கள் அன்று தொடக்கமே வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.

கடந்த முறை ஊருக்கு போன பொழுது(2019) பார்த்தது என்னவென்றால், குளங்களை தூர்வாரவில்லை அதனை நிரப்பி வீடுகள் கட்டி வைத்திருக்கின்றார்கள். யாழ் நீரேரிகளை நானீரேரிகளாக மற்றும் ஆறுமுகம் திடத்தை சில யாழ்ப்பாண  அறிவாளிகள் தடுத்து வைத்துள்ளனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

பெரிய தொழில் நுட்பமெல்லாம் தேவையில்லை. இருக்கிற குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி  மழைத்தண்ணியை சேகரிச்சாலே போதும். நிலமும் குளிர்ச்சி அடையும். நல்ல தண்ணியும் எப்பவும் கிடைக்கும்.

எப்ப பாத்தாலும் தொழில் நுட்பம்.....வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் புத்தி நல்ல புத்தி.

எங்கடை முன்னோர்கள் செய்ததை தான் வெள்ளைக்காரனும் செய்யிறான். 

நீர் தேக்கங்கள் அன்று தொடக்கமே வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.

அண்ணை, இசுரேல் “வெள்ளைக்காரன்” இல்லை - மத்தியகிழக்கு ஆசிய நாடு. பாலைவனம் என்பதால் தண்ணீர் சேகரித்து பயன்படுத்துகிறார்கள். எங்கட ஆட்களின் போர்க்கால தொழில்நுட்பங்கள் பற்றி “பொருத்தமான தொழில்நுட்பம்” Appropriate Technology என்ற உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகையில் அந்த நாட்களில் படிக்க கிடைத்தது. பொருளாதாரத்தடையிலும் எப்படி வாகனம் ஒடியது, மின்சாரம் கிடைத்தது, தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இயங்கியது என்றெல்லாம் யாரோ ஒரு “வெள்ளைக்கார” விஞ்ஞானி வியந்து எழுதியிருந்தார். ம்..... எங்களுடைது என்றால் அதை தொழில்நுட்பம் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவா இந்த தாழ்வு மனப்பான்மை?

  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்ரேல் கடல் நீரை சுத்திகரித்து (உப்பை நீக்கி) தான் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். 

https://www.irishtimes.com/news/ireland/irish-news/how-israel-used-desalination-to-address-its-water-shortage-1.3959532

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகளில் உலக வெப்பமயமாவதை பெரும்பாலும் பொய்யென்று நம்புகிறார்கள், குறிப்பாக வலது சாரி அரசியல்வாதிகள். சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, வரட்சி, காடெரிவு, பனிப்பொழிவு என்று சடுதியான காலனிலை மாற்றம் நிகழ்வதற்கு துருவங்களில் நிகழ்ந்த பனியுருகல் காரணம் கூறுகிறார்கள், உயர் மற்றும் தாழமுக்கங்களினால் காற்று ஒரு நதி போல் பிராந்தியங்களினூடக பயணிக்கின்றது அந்த நதியோட்டம் பலவீனமடைந்ததால் இவ்வாறு காலனிலை மாற்றம் நிகழ்வதாகக்கூறப்படுகிறது, 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.