Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ,  திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

 

1.jpg

326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2.jpg

அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா  இணைப்புப்பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

EwLaujcUYAIUFUt.jpg

EwLav-RUcAIFYJ2.jpg

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,  இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார். 

EwLavA3VIAELTG9.jpg

 

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நோக்கமோ தெரியாது, ஆனால் தாற்பரியமும், குறியீடுத்துவமும் அருந்தியும், அளவிலாததும்.  

என்ன நோக்கமோ தெரியாது, ஆனால் தாற்பரியமும், குறியீடுத்துவமும் அறுதியும் , அளவிலாததும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலத்தால் (வானரப்)படைகள் வ்ந்து குதிப்பினமோ.. 😀

அதற்கான கட்டியம் கூறுகிறார் போல.. 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் வர்த்தக சமூகத்துடன் பேச்சு

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் யாழ். நல்லூருக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

159737494_359753025198125_36710740744632

நல்லை ஆதீனத்தையும் சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் ஆசி பெற்றுக்கொண்டார்.

159693612_754473162167019_87325745397844

யாழில் வர்த்தகம் சார் செயற்பாடுகளுடன் இன்றைய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றநிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக சம்மேளனங்கள், வியாபார மற்றும் கைத்தொழில்துறைத் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.

160493779_3778301122245911_9212920668031

வான் மற்றும் கடல் மார்க்கமான தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சக்தி, சுற்றுலா, ஆளுமைவிருத்தி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர முதலீட்டினையும் ஒத்துழைப்பினையும் மேம்படுத்த கணிசமான முன்மொழிவுகள் இந்த சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டிருந்தன.

மகா சிவராத்திரி தினமான நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில்  ஆசிபெற்ற பின்னர் வடமாகாணத்துக்கான விஜயத்தினையும் ஆரம்பித்தார்.

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டதோடு, இலங்கை - இந்திய மக்களின் நலனுக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுப்பட்டார்.

அத்துடன் இந்திய உதவி திட்டத்தின் கீழ் 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலயத்தில் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.

159140512_186035336368719_55468483899128

பல நூற்றாண்டுகளாக இந்தியா - இலங்கை இணைப்புப் பாலமாகவிருந்த ராமர் சேது பகுதியை பார்வையிட்டதுடன் விசேட வழிபாடுகளிலும் கலந்துக்கொண்டார்.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை இதன் போது நினைவுகூர்ந்த அவர் இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளையும் சந்தித்தார். அதிகளவான முதலீடு மற்றும் உதவிகளுடன் வட மாகாண அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகுறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இம்மாகாணத்தில் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்த நீண்டவரலாற்றை இந்தியா கொண்டுள்ளமை இந்த சந்திப்பின் போது எடுத்துரைத்தார்.

160014223_150994716882665_42804531103328

மேலும் இந்திய திட்டங்களுக்கிசைவாக புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் உயர்ஸ்தானிகர் கலந்துக்கொண்டார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் வர்த்தக சமூகத்துடன் பேச்சு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

இந்திய உதவி திட்டத்தின் கீழ் 326 மில்லியன் ரூபா செலவில்

பல கோடி ரூபாய்..! நீ பாத்த.?.☺️

EhL4KdVUMAE_dwP.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு - செல்வம் எம்.பி.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில்  யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13.02.2021)காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

dsdadad.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்  யாழில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.

குறிப்பாக பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம். முக்கியமாக தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுக்கமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம் பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது.இந்தியாவை எமது மக்கள் கூடுதலாக பாதுகாப்பின் நிமித்தம் நேசிக்கின்ற ஒரு நிலை உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்

 

https://www.virakesari.lk/article/102028

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் எங்களை விட்டால்....

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா எம்மை எவ்வளவு எட்டி உதைத்தாலும்.. ஹிந்தியாவின் காலைப் பிடிச்சுக் கெஞ்சித் திரியும் எமது அரசியல் வியாதிகள் இருக்கும் வரை.. ஹிந்தியா தமிழர்களுக்கு என்று ஒரு கொள்கை வகுக்காது.

ஹிந்தியாவை புலிகள் கையாண்ட வழிமுறை தான் சரி. ஆனால்.. புலிகள் சர்வதேச பரப்பில் வலுவான நாடுகளில்.. தமக்கு ஆதரவான தேசங்களை அடையாளம் காணவும்.. அணுகவும்.. அவர்களின் நம்பிக்கையை கட்டி வளர்க்கவும்.. தவறியமை தான் விட்ட தவறு.

அதனை ஹிந்தியா.. சொறீலங்கா.. சீனா போன்ற நாடுகள் சரியாகப் பாவித்துக் கொண்டுள்ளன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.