Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு

19 மார்ச் 2021
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் மாதிரி

இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது.

சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கொழும்பு மயூரா பிளேஸ் ஆலயத்தில் வைத்து, இந்த கல் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சீதா அம்மன் கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், இந்தியாவிடம் கையளித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அயோத்திக்கு கல் - இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது

பட மூலாதாரம், HIGH COMMISSION OF INDIA IN COLOMBO

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று, இந்தியாவில் அமைக்கப்படுகின்ற அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

"சீதா-எலிய" கோயிலிலிருந்து ஏன் கல் கொண்டு செல்லப்படுகிறது?

இந்தியாவிலிருந்து ராவணனினால் கடத்தப்படும் சீதை, இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் சீதை, அசோகவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.

அசோகவனம் என கூறப்படும் இடமே, இலங்கையின் சீதா எலிய என நம்பப்படுகின்றது. இந்த வரலாற்று சான்றாக அமைக்கப்பட்ட கோவிலே, சீதா அம்மன் கோயிலாகும்.

இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

சீதா-எலிய கோயில்

பட மூலாதாரம், KRISHANTHAN

 
படக்குறிப்பு, சீதா-எலிய கோயில் இலங்கையின் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் உள்ள கல் பாறைகளில் சில அடையாளங்கள் காணப்படுவதுடன், அது இராவணனின் கால் தடங்கள் என கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், சீதா அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இந்த வரலாற்று ரீதியிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்குடன், சீதை அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக நம்பப்படும் சீதா எலிய (அசோக வனம்) ஆலய வளாகத்திலிருந்து இந்த கல் எடுக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சீதா அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் கல் தொடர்பில், பிபிசி தமிழுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவித்தார்.

''இந்தியாவில் அமைக்கப்படவுள்ள ராமர் ஆலயத்திற்கான புனித கல், சீதா எலிய சீதை அம்மன் கோவிலிலிருந்து நேற்று வைபவ ரீதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை - இந்திய இராமாயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், இராமாயணத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் இலங்கையின் நுவரெலியாவிலுள்ள சீதா எலிய சீதை அம்மன் ஆலயமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.''

''அதேபோன்று, ராமருடைய ஆலயமாக கருதப்படுகின்ற அயோத்தியில் உள்ள ராமர் ஆலயம் முக்கியத்துவமான ஆலயமான கருதப்படுகின்றது. ஆககே புனித சின்னம் இங்கிருந்து அனுப்பப்படுகின்ற போது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும், அதேபோல் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் உறவு பாலமாகவும் இது அமைந்திருக்கின்றது." என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கிறார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-56460000

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா முனிவர், தனி?

அலுவல், வேகமா நடக்குது பாருங்கோ....

பிஜேபி கட்சி, ஆரம்பிக்க, வேலை அதுபாட்டுக்கு நடக்குது.... 

சீத்தாம்மன் கோயில் பெரிசா கட்டாமல் விடமாடினம்....  😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் புட்பக விமானத்தில் சீதையைச் சிறைப் பிடித்துவர இராமனோ கால்நடையாக வரவேண்டி இருந்திருக்கிறது...☹️

பின்னர் சீதைக்கு ஏற்பட்ட நிலையைப் பார்க்கையில் இராவணனுடன் சீதை ஒன்றாக இருந்து புட்பக விமானத்தில் உலகை வலம் வந்து (Private Jet) enjoy பண்ணியிருக்கலாம். 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

எங்கப்பா முனிவர், தனி?

அலுவல், வேகமா நடக்குது பாருங்கோ....

பிஜேபி கட்சி, ஆரம்பிக்க, வேலை அதுபாட்டுக்கு நடக்குது.... 

சீத்தாம்மன் கோயில் பெரிசா கட்டாமல் விடமாடினம்....  😁

பெரிசாக்க இடம் காணாதெல்லோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெரிசாக்க இடம் காணாதெல்லோ? :cool:

அதுதான் தமிழ் சிறியர் ஐடியா தந்துட்டாரே.

தலதா மாளிகை ஏரியா பக்கம், சீதா அம்மன் கொடுத்த சின்ன கணையாழியை, அனுமான் கை தவறி விழுத்திப்போட்டார். அதையும் கிண்டி எடுத்து, கோவிலையும் பெரிசா கட்டுவம் எண்டு ஸ்ரீ லங்கா பாரதிய ஜனதா கட்சீல ஒரு யோசனை இருக்குதாமே.   😎

அப்ப தேடி களைச்சு போன அனுமான், பெரிசை மட்டும், ராமரிடம் கொடுத்தவராம். சின்னத்தை துளைச்ச விசயத்தை வெளியாலை சொல்லேல்ல. இப்பதான் விசயம் வெளியாலை தெரிஞ்சு போட்டுது கண்டியளே. 🤧

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இனி விகாரை எழுப்ப கல் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுமோ? இல்ல பவுத்த மத வளர்ச்சிக்கு என்று இந்தியா பணம் கொடுத்ததாக கதை அடிபட்டது. அவங்களெல்லாம் ஒன்றுக்கை ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இனி விகாரை எழுப்ப கல் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுமோ? இல்ல பவுத்த மத வளர்ச்சிக்கு என்று இந்தியா பணம் கொடுத்ததாக கதை அடிபட்டது. அவங்களெல்லாம் ஒன்றுக்கை ஒன்று.

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க...சிங்களத்தின் அரசியல் ஒரு கல்லிலயும் ஒரு பல்லிலையும் தான் தங்கியிருக்கு!😄

பௌத்த மதத்தை இந்தியாவிலேயிருந்து முற்றாக வழித்தெறிந்தது பார்ப்பனியம் தான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இடித்ததை கட்டியெழுப்புவதிலும், கட்டியதை இடிப்பதிலும் அரசியல் செய்பவர்கள். ஏனெனில் அவர்கள் இழப்பது ஒன்றும் இல்லை, எதிலும் பெறுவது லாபமே.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும் குடிகளே ....இந்த தமிழனுக்கு மாகாணசபை அதிகாரங்களை வழங்கி நீங்களும் நிம்மதியாக வாழுங்கோவன்டா ?...ஏன்டா சீனா ,மற்றும் இந்தியா, மேற்குலகின் அடிமையாக தான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கிறீயள்.....?....அது சரி விதி யாரை விட்டுது....

  • கருத்துக்கள உறவுகள்

அவனுகள் உலகில் ஒரு அழிவு ஏற்படுத்தப் போகிறோம் என்று அடம் பிடிக்கிறானுகள்.

47 minutes ago, putthan said:

மேற்குலகின் அடிமையாக தான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கிறீயள்

பழக்க தோஷம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.