Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.(15)
 

 

http://www.samakalam.com/யாழ்-மாநகர-சபை-காவல்-படைய/

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கே இவ்வளவு கெடுபிடி. இதில அவையின் மாகாணசபைத்தேர்தலால் என்ன லாபம் கிடைக்கபோகுது தமிழருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

 போலீஸ் அதிகாரம் கிந்திய - இலங்கை உடன்பாடு.?

  • கருத்துக்கள உறவுகள்

24 மணித்தியாலம் கூட... யாழ். மாநகர சபையின் செயல் பாட்டை, பொறுத்துக் கொள்ள முடியாத குரோத எண்ணம் கொண்ட காட்டுமிராண்டிதான் சிங்களவன். 😡

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சையை ஏற்படுத்திய சீருடை : தெளிவுபடுத்தினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும்  சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கிய விடையத்தில்  வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளர் மற்றும்,  கண்காணிப்பு காவலர்களுக்கு காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் தொடர்பாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

623.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று புதன்கிழமை நாங்கள் யாழ் மாநகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக எங்களுடைய மாநகர சபை ஊழியர்களை ஒரு பணிக்காக அமர்த்தியிருந்தோம்.

அது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஊடாக அதனை மக்களுக்கு கூறியிருந்தோம். உன்மையிலே  யாழ் மாநகரத்தை அசிங்கப்படுத்துகின்ற, குப்பைகளை வீசியெறிகின்ற, கட்ட இடங்களில் வெற்றிலை துப்புகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதர்க்காக யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் ஊடாக எவ்வளவு ரூபா தண்டப்பணமாக அறவிடுவது என்பதை வர்த்தமாணியில் அறிவித்து அந்த வர்த்தமானி பிரசுரம் வெளியாகிய பின்னர் நாங்கள் எங்களுடைய வழமையான செயற்பாட்டில் ஒன்றாக விசேடமாக சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ஊழியர்களும் சபையில் ஊழியர்களாக செயற்பட்டவர்களே அவர்களையே இந்த விசேட பணிக்கு நாங்கள் நியமித்திருந்தோம்.

அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மக்கள் அவர்களை இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலும், அவர்களுக்கு வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை ஒன்றையும் அறிமுகப்படுத்தி வழங்கியிருந்தோம்.

இந்த சீருடை எதை பார்த்து நாங்கள் செய்தோம் என்றால் கொழும்பு மாநகர சபையில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான்.  கொழும்பு மாநகர சபை பின்பற்றுகின்ற, பாவிக்கின்ற சீருடையையே நாங்களும் இந்த ஊழியர்களுக்கு  வழங்குவதென யோசித்து அதே மாதிரியான சீருடையை வழங்கியிருந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ எங்களுக்கு இருக்கவில்லை.

சிலர் இதனை சொல்லுகின்றார்கள் தமிழீழ  விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடை போன்று இருப்பதாக என்னை பொறுத்தவரை சில இடங்களில் அது பொருந்தியிருக்கலாம் ஆனால் நாங்கள் கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே இதனை செய்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய சீருடை : தெளிவுபடுத்தினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எது தற்போது தேவை என்பதை உணர்ந்து அதை எப்பொழுது இவர்கள் செய்வார்கள்?? சிந்திப்பார்கள்??

அது மணிவண்ணன் ஆக இருந்தாலும் சரி விக்னேஸ்வரன் ஆக இருந்ததால் சரி. ☹️☹️☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

தமிழ் மக்களுக்கு எது தற்போது தேவை என்பதை உணர்ந்து அதை எப்பொழுது இவர்கள் செய்வார்கள்?? சிந்திப்பார்கள்??

அது மணிவண்ணன் ஆக இருந்தாலும் சரி விக்னேஸ்வரன் ஆக இருந்ததால் சரி. ☹️☹️☹️

 

தாங்களும் செய்ய மாட்டார்கள், மற்றவனையும் செய்ய விடமாட்டார்கள். 😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

தாங்களும் செய்ய மாட்டார்கள், மற்றவனையும் செய்ய விடமாட்டார்கள். 😥

சிங்களம் கிட்டத்தட்ட சாரைப்பாம்பு மாதிரி....பயத்திலை தான் கடிக்கும். தமிழன்ரை பலம் சிங்களத்துக்கு நல்லவடிவாய் தெரியும். அதிலையும் புலம்பெயர் தமிழர் ஒரு பெரிய சக்தியாய் மலை போலை நிக்கிறது இன்னும் நல்லவடிவாய் அவையளுக்கு தெரியும்.அதாலைதான் காலையும் கட்டி வாயையும் மூடப்பாக்கினம்.

இது குமாரசாமி ஆகிய நான் நிதானத்தில் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிங்களம் கிட்டத்தட்ட சாரைப்பாம்பு மாதிரி....பயத்திலை தான் கடிக்கும். தமிழன்ரை பலம் சிங்களத்துக்கு நல்லவடிவாய் தெரியும். அதிலையும் புலம்பெயர் தமிழர் ஒரு பெரிய சக்தியாய் மலை போலை நிக்கிறது இன்னும் நல்லவடிவாய் அவையளுக்கு தெரியும்.அதாலைதான் காலையும் கட்டி வாயையும் மூடப்பாக்கினம்.

இது குமாரசாமி ஆகிய நான் நிதானத்தில் எழுதியது.

பயங்கர உள் குத்து அண்ணே... 😂

தொப்பி அளவானவர்கள் மட்டும், போட்டுக் கொள்ளவும் பிளீஸ். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.