Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் - அனுரகுமார திஸாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியால், நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே துறைமுக நகரத்தை ஆட்சி செய்வார்கள். அத்துடன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதனை செய்தாலும் செய்ய தவறினாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோப் உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இந்த சீன மாநிலத்தை அழைக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே துறைமுக நகரில் முதலீடு செய்ய முடியும். துறைமுக நகரில் தொழில் புரியும் நபர்களுக்கு சீனாவின் யுவான் நாணயம் மூலமே சம்பளம் வழங்கப்படும்.

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது. இப்படியான பல பாரதூரமான விடயங்கள் இதன் மூலம் நடக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/jvp-leader-anurakumara-disanayaka-speech-1618319466

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது

இராவணனின் போரில் தோற்ற வலியை ஒப்பிடுவதற்காக உவமையைத் தேடிய கம்பன் கண்டு பிடித்த உவமானம் தான்,

கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான், இலங்கை வேந்தன்...!

இன்றைய சிங்களத்துக்கும்...அதுவே  நிலை....! கலங்கட்டும்...!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... இலங்கைக்கு உதவி செய்வது மாதிரி  உள்ளே வந்து,
இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது.
இனி.. அவனை கலைக்க... எந்த வழியிலும் முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சீனா... இலங்கைக்கு உதவி செய்வது மாதிரி  உள்ளே வந்து,
இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது.
இனி.. அவனை கலைக்க... எந்த வழியிலும் முடியாது.

ஆனால் சிங்களவர்கள் கற்பனையில் வாழ்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் விழித்தெழுந்தால் தமிழரின்  பாதை சுலபமாகும். ஆனால் அவர்கள் விழித்தெழும்பாமல் தமிழர் பிரேதேசத்தில் ஏதாவது பூச்சாண்டி கிளப்பி கொண்டே இருப்பார்கள். அந்த  இடைவெளியில் சீனா நாட்டை விழுங்கிவிடும். சிங்கள நாடு என்று கனவுதான் கலைந்து போகும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

சிங்களவர் விழித்தெழுந்தால் தமிழரின்  பாதை சுலபமாகும். ஆனால் அவர்கள் விழித்தெழும்பாமல் தமிழர் பிரேதேசத்தில் ஏதாவது பூச்சாண்டி கிளப்பி கொண்டே இருப்பார்கள். அந்த  இடைவெளியில் சீனா நாட்டை விழுங்கிவிடும். சிங்கள நாடு என்று கனவுதான் கலைந்து போகும். 

இது வரை சிங்கள இன வாதிகளின் மந்திரம், இறைமையும் தன்னாதிக்கமும்...!

இனி மேல் தான், நீங்களும் நானும்...திகில் படங்கள் பார்க்கப் போகின்றோம்...!

வரி கூடக் கட்டக் கேட்கவியலாத நிலையில் சிங்களம்! தன்னாதிக்கம் ஏற்கனவே தள்ளாடத் தொடங்கீட்டுட்து..!

வயிறு காயத்தொடங்க....இறைமையும் விடை பெறும்...!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புங்கையூரன் said:

இது வரை சிங்கள இன வாதிகளின் மந்திரம், இறைமையும் தன்னாதிக்கமும்...!

இனி மேல் தான், நீங்களும் நானும்...திகில் படங்கள் பார்க்கப் போகின்றோம்...!

வரி கூடக் கட்டக் கேட்கவியலாத நிலையில் சிங்களம்! தன்னாதிக்கம் ஏற்கனவே தள்ளாடத் தொடங்கீட்டுட்து..!

வயிறு காயத்தொடங்க....இறைமையும் விடை பெறும்...!

 

வெகு விரைவில் சிங்களவர்கள் இந்த ஸ்ரீ லங்காவை  விட்டு பொருளாதார  அகதியாக கூட்டம் கூட்டமாய்  கிளம்புவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வெகு விரைவில் சிங்களவர்கள் இந்த ஸ்ரீ லங்காவை  விட்டு பொருளாதார  அகதியாக கூட்டம் கூட்டமாய்  கிளம்புவார்கள். 

திரு நீறும் பூசிக் கொண்டு தான் வெளிக்கிடுவினம்....!😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, பெருமாள் said:

துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முந்தி கொஞ்சநாள் சிறிலங்கா இந்தியாவின்ரை மாநிலமாக மாறப்போகுது எண்டு கத்தினாங்கள். இப்ப சீனாவின்ரை இதாய் மாறப்போகுது எண்டுறாங்கள்.மாசிக்கருவாட்டு புகழ் மாலைதீவின்ரை மாநிலமாக மாறப்போகுது எண்டு சிணுங்காத வரைக்கும் சந்தோசம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முந்தி கொஞ்சநாள் சிறிலங்கா இந்தியாவின்ரை மாநிலமாக மாறப்போகுது எண்டு கத்தினாங்கள். இப்ப சீனாவின்ரை இதாய் மாறப்போகுது எண்டுறாங்கள்.மாசிக்கருவாட்டு புகழ் மாலைதீவின்ரை மாநிலமாக மாறப்போகுது எண்டு சிணுங்காத வரைக்கும் சந்தோசம்.:grin:

ஶ்ரீலங்கா... சீனாவின் மாநிலமாக மாறினால்...

பாவங்கள்.... றோட்டிலை திரியிற ஜிம்மி, பிறவுணி, பிளக்கி எல்லாம் காணாமல் போயிடும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

றோட்டிலை திரியிற ஜிம்மி, பிறவுணி, பிளக்கி எல்லாம் காணாமல் போயிடும்.

எமது அழியாச் செல்வங்கள், வேறு கலாசாரம் கொண்டவர்களால் அழிக்கப்படுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா... சீனாவின் மாநிலமாக மாறினால்...

பாவங்கள்.... றோட்டிலை திரியிற ஜிம்மி, பிறவுணி, பிளக்கி எல்லாம் காணாமல் போயிடும். 🤣

ஊரில திரியுற கட்டாக்காலி நாய்களை பட்டினசபை ஊழியர்கள் பிடித்து  வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவார்கள். அதன் பிறகு அந்த திட்டம் நின்றுபோனது. அந்த திட்டத்தை மஹிந்தா தடைசெய்து விட்டார் என்று காரணம் சொன்னார்கள். இப்போ அதுகள் பலுகிப் பெருகிப்போய் இருக்குதுகள், விக்கிறதுதான் விக்கிறதோட  அதுகளையும் சேர்த்து சீனாவுக்கு விக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது : தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது - விஜயதாஸ

 

(இராஜதுரை ஹஷான்)

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது. 

No description available.

இலங்கையின் தலைநகருக்கும், மேல்மாகாணத்திற்கும்  சவால் விடுக்கும் வகையில்  இதனால்  துறைமுக நகரம் காணப்படுகிறது.

விசேட ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என  முன்னாள் நீதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபயராம விகாரையில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி,  எல்லை கடந்த   அரசமுறை கடன் நெருக்கடி, சுகாதாரமற்ற உணவு  பயன்பாடு என பலதரபபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. பொருளாதார மட்டத்தில்; இலங்கை  அச்சுறுத்தலான தன்மையினை நோக்கி நகர்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முறையற்ற அரச முறைகடன்களினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் விற்க நேரிட்டது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்குவதற்கு அக்காலக்கட்டத்தில் அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதனால் அப்போது வகித்த நீதியமைச்சர் பதவி மாத்திரம் பறிபோனது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரச தலைவர்கள் இன்று  அனுபவ ரீதியில் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

ஏனையோரை காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாடம் புகட்டியுள்ளார்கள்.  அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும்  பன்மடங்கு விளைவு  கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தினால் ஏற்படும்.

 இலங்கையின் ஆட்புல மற்றும் கடல் எல்லை ஆகியவை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேல்மாகாணத்தில் காலி முகத்திடலில் ஒரு 644 ஹெக்டயார் கடற்பரப்பு மணலாம் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்நிலப்பரப்பினை  இலங்கையின்  மொத்த பரப்பளவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  விசேட ஆணைக்குழு கொழும்பு துறைமுகத்தை தனித்த ஒரு பகுதியாக காண்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம்மூலம்  சபைமுதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் , வியாபார வழிமுறைகள்,வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு. பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது : தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது - விஜயதாஸ | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/4/2021 at 16:01, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா... சீனாவின் மாநிலமாக மாறினால்...

பாவங்கள்.... றோட்டிலை திரியிற ஜிம்மி, பிறவுணி, பிளக்கி எல்லாம் காணாமல் போயிடும். 🤣

இப்ப சீனாக்காரர் முந்தினையை மாதிரி இல்லை   ஐரோப்பிய வெள்ளையள் போல நாய் பூனையள்ளை நல்ல பாசம். 😄

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை மறைக்க: சரத் வீர சேகர தமிழருக்கு எதிராக வீர வசனம் பேசுவார், தினேஷ் குணவர்தன ஐ.  நாடுகள் சபையை சாடுவார், மக்கள் அதற்குள் உறங்கி கனவு காணத் தொடங்கிவிடுவார் என்று காய் நகர்த்தலாம். ஆனால் வெற்றியளிக்குமா என்பது கேள்வியே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.