Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீனாவிற்கு தனிநாட்டை கொடுக்கிறார்கள்! ராஜித சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர்.

எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர். அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையான்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

https://ibctamil.com/article/rajitha-senaratne-says-portcity-issues-1619070649

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

றகனின் வாலைப்பிடிச்சாச்சு 

இனி எவராலும் இவர்களை காப்பாற்ற முடியாது

அவ்வளவு தான் ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் விண்ணை முட்டும் விலைவாசி மறுபக்கம் நாட்டை துண்டு துண்டாய் விற்பனை இப்போ  துட்ட கைமுனு இருந்து இருந்தால்  “மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழரும் இன்னொரு பக்கத்தில் கோத சமுத்திரமும் (வங்கக் கடல்) இன்னொரு பக்கம் சீனர்களும்  இருக்கும் போது என்னால் எப்படி காலை நீட்டிப் படுக்க முடியும் நின்றுகொண்டு தூங்குகிறேன்" என்று தாய்க்கு சொல்லியிருப்பான் . 

  • கருத்துக்கள உறவுகள்

சீனனுக்குப் புத்த மதத்தில நல்ல விருப்பமுள்ளது..!

என்னை நம்பா விட்டால், தலாய் லாமாவிடம் கேட்டுப் பார்க்கவும்...!

புத்தனின் புனித தந்தப் பேழையைச் சுமந்த யானையின்....தோற்றம்..! 

இந்தப் பாவம்....தேரர்களைச் சும்மா விடாது...!

வாயில்லாத சீவன்..!!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 20:16, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

செய்த பாவம் திருப்பித் தாக்க வெளிக்கிட்டிருக்குது. தாங்குமா சிங்களம்? அக்களிப்போடு விதைப்பவன் கண்ணீரோடு அறுவடை செய்வான் ஐயா! இது விதி.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

செய்த பாவம் திருப்பித் தாக்க வெளிக்கிட்டிருக்குது. தாங்குமா சிங்களம்? அக்களிப்போடு விதைப்பவன் கண்ணீரோடு அறுவடை செய்வான் ஐயா! இது விதி.  

நூற்றி ஐம்பதாயிரம்.... (ஒன்றரை லட்சம்)  தமிழ் மக்களை,
குழந்தை, குட்டி, பெண், வயோதிபர் என்று பார்க்காமல்,
முள்ளி வாய்க்காலில்,  கொத்துக் குண்டு வீசி... அழித்தவன் சிங்களவன்.

அவனும்.... அந்த, அனுபவத்தை, செமித்து ஆக வேண்டும். 
இது, இறந்த என் தமிழ் மக்களின் சாபம். 
நிறைவேறும்.... 

  • கருத்துக்கள உறவுகள்

"சீனா ஈழம்" என்ற சொல்லை ராஜிதா பாவித்தார் .....தமிழன் ஈழத்தை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

"சீனா ஈழம்" என்ற சொல்லை ராஜிதா பாவித்தார் .....தமிழன் ஈழத்தை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள்

அவர்களை உயிர்ப்போடு வைத்திருப்பதே புலிகளும், தமிழீழமுமே. எப்படி அவர்களால் மறக்கமுடியும்? அப்படி அவர்கள் மறந்து விட்டார்கள் என்றால் ஒன்று இறந்துவிட்டார்கள் அல்லது சிங்களவர் விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 12:16, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்காது.. இரண்டு பகுதியும் புத்தசமயம். மொழிதான் வேறு. சிங்களத்தைக்குப்பையில் போட்டுவிட்டு ..அவங்கள் சீனாப்பாஷை கதைக்கத்தொடங்கி விடுவார்கள் ..பெரிய தலையிடி  தமிழர் தலையில் வத்து விழும். 😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்காது.. இரண்டு பகுதியும் புத்தசமயம். மொழிதான் வேறு. சிங்களத்தைக்குப்பையில் போட்டுவிட்டு ..அவங்கள் சீனாப்பாஷை கதைக்கத்தொடங்கி விடுவார்கள் ..பெரிய தலையிடி  தமிழர் தலையில் வத்து விழும். 😜😜😜

நடக்காது...  என்று, தெரிந்தாலும்... ஒரு நப்பாசை.

நாம்... முள்ளிவாய்க்காலில், அழுத மாதிரி...  
எதிரி... கதறக்  கதற,  அழ  வேண்டும்.

இப்போதைத்கு...   அது, என் பேராசை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

நடக்காது...  என்று, தெரிந்தாலும்... ஒரு நப்பாசை.

நாம்... முள்ளிவாய்க்காலில், அழுத மாதிரி...  
எதிரி... கதறக்  கதற,  அழ  வேண்டும்.

இப்போதைத்கு...   அது, என் பேராசை.

கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசை மட்டுமல்ல எங்கள் எல்லோரின் ஆசையும் இனிதே நிறைவேறும் நாள் நெருங்குகிறது. தூக்கி வைத்தவர்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசை மட்டுமல்ல எங்கள் எல்லோரின் ஆசையும் இனிதே நிறைவேறும் நாள் நெருங்குகிறது. தூக்கி வைத்தவர்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள்.

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

எதுக்கும் ஆறுமட்டும் பொறுத்திருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

இது தான் உண்மை

தமிழினம் விட்டுக்கொடுப்புக்கும் ஏன் மண்ணின் ஒரு பகுதியை இழக்கவும் தயாராகி விட்டது

ஆனால் சிங்களம் அதற்கு அனுமதியாது 

தமிழர்கள் கவனமாக கையாள வேண்டிய வேளை வரும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.