Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டதே துன்பத்திற்கான காரணம் – மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டதே துன்பத்திற்கான காரணம் – மனோ

 
mano-ganesan-1-696x393.jpg
 19 Views

ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழ்த் தலைவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டே வந்ததுடன், பல தவறுகளையும் செய்து வந்துள்ளனர் அதனால் தான் தமிழ் இனம் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோ காணேசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இப்போ சரத் பொன்சேகாவை ஏன் பாராட்டினீர்கள்? அவரும் போர்க்குற்றவாளிதானே என ஒருதரப்பினர் என்னை இணைய-வெளியில் விமர்சனம் செய்கிறார்கள்.

சரத் பொன்சேகா, அதை செய்தார், இதை செய்தார் என குற்றப்பத்திரிக்கை எழுதி எனக்கு அனுப்புகிறார்கள்.

ஏதோ, எனக்கு ஒன்றும் தெரியாதது போல் எழுதும் இவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

சரத் பொன்சேகாவை, 2010ம் வருடம் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட வைப்பதில் முக்கிய பங்காற்றிவன், நான். எனவே அவரை பற்றி யாரும் எனக்கு டியூசன் எடுக்க தேவையில்லை.

நேற்று முதல்நாள், சரத் பொன்சேகா பேசிய பேச்சின் முக்கியம் என்னவென்றால், “இராணுவ வீர்ர்கள் தமிழ் மக்களை கொலை செய்துள்ளார்கள்” என்பதை முதன் முதலாக முன்னாள் இலங்கை இராணுவ தளபதி பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார், என்பதுதான்.

இந்த உண்மையை கூறியதால்தான், நான் அவரை பாராட்டினேன்.

அதேபோல் சில மாதங்களுக்கு முன் அவருடன் சபையில், மரணித்தோரை நினைவுகூறல் தொடர்பில் மோதிக்கொண்டதை மக்கள் மறக்க கூடாது.

மற்றபடி அவரது வரலாறு, எதிர்காலம், பற்றி இதில் நான் தொடர்புபடுத்தவில்லை.

இனி இலங்கையில், நாம் இவர்களுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது.

அவ்வப்போது கண்டிக்க வேண்டிய நேரத்தில் முரண்பட்டு அப்புறம் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, தட்டிக்கொடுத்து, தட்டி திருத்தி, பயணிக்க வேண்டியுள்ளது.

இதுதான் என் வழி. எனக்கு தெரிய வேறு வழி இல்லை.

ஏனெனில் வரலாறு முழுக்க தமிழ் தலைவர்களும் தவறு செய்துள்ளார்கள். சந்தர்ப்பங்களை தவறு விட்டுள்ளார்கள்

புதிய தலைமுறை குறிப்பாக 90, 2000களில் பிறந்த தமிழ் இளையோர் (Tamil Kids of 90s, 2000s) வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஏதோ தமிழ் தலைவர்கள் பிழையே செய்யாதவர்கள் போலவும், முக்கியமாக “வரலாறு தந்த சந்தர்ப்பங்களை” ஒருபோதும் தவறேவே விடாத “ராஜதந்திரிகள்” போலவும், இன்னமும் நம்மில் சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

உண்மையில், ஆரம்பமே கோணல். முதற்கோணல் முற்றிலும் கோணலாக்கி விட்டுள்ளது.

1940களில் தெற்கில் இருந்து சிங்கள அரசியல்வாதிகள் சமஷ்டி கோரிக்கை எடுத்து வந்தபோது, வடக்கின் அறிவாளி தமிழ் தலைமை அதை பெரிய எடுப்பில் நிராகரித்தது.

“பாகிஸ்தானை கொடுத்து விட்டு போ” என கூறிய முஹமத் அலி ஜின்னா மாதிரி, “1560 களில் போத்துகீசியர் முதலில் கைப்பற்றிய யாழ்ப்பாண ராஜ்ய நாட்டை எமக்கு கொடுத்து விட்டு போ” என சுதந்திரத்துக்கு முன்னமேயே, கடைசி பிரித்தானிய ஆளுனர்கள் டொனமூரிடமும், சோல்பரியிடமும் அறிவாளி தமிழ் தலைமை சொல்லவில்லை.

(இவர்கள் ஏன் இப்படி சொல்லவில்லை என இன்னொருநாள் கூறுகிறேன்..!)

அப்புறம் 1987ம், 2000ம் ஆண்டுகளில் “சந்திரிகாவின் தீர்வுபொதி” மற்றும் “இலங்கை-இந்திய ஒப்பந்தம்” மூலமாக வந்த ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு சந்தர்ப்பங்களை அன்றைய தமிழ் தலைமை தவற விட்டது.

இதை வாசித்து விட்டு, எனக்கு சந்திரிகா மீதும், இந்தியா மீதும் குற்றப்பத்திரிக்கை எழுதி அனுப்ப வேண்டாம்.

சந்திரிகா, இந்தியா ஆகியோர் எவ்வளவு “யோக்கியர்கள்” என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், “அவர்கள் நலன் அவர்களுக்கு”. “எங்கள் நலன் எங்களுக்கு”.

எவர், எதை, எவரை, எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதுதான், இங்கே தலைமைக்கு அவசியமான தகைமை.

 

https://www.ilakku.org/?p=48164

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான கருத்து. 👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

1940களில் தெற்கில் இருந்து சிங்கள அரசியல்வாதிகள் சமஷ்டி கோரிக்கை எடுத்து வந்தபோது, வடக்கின் அறிவாளி தமிழ் தலைமை அதை பெரிய எடுப்பில் நிராகரித்தது.

அறிவாளிகளின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.சரி அதை இப்போ தரச்சொல்லுங்கோவன்.

3 hours ago, உடையார் said:

 

1940களில் தெற்கில் இருந்து சிங்கள அரசியல்வாதிகள் சமஷ்டி கோரிக்கை எடுத்து வந்தபோது, வடக்கின் அறிவாளி தமிழ் தலைமை அதை பெரிய எடுப்பில் நிராகரித்தது.

அப்புறம் 1987ம், 2000ம் ஆண்டுகளில் “சந்திரிகாவின் தீர்வுபொதி” மற்றும் “இலங்கை-இந்திய ஒப்பந்தம்” மூலமாக வந்த ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு சந்தர்ப்பங்களை அன்றைய தமிழ் தலைமை தவற விட்டது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் எமது எதிர்கால தலைமுறையால்  முக்கியமாக சிந்திக்கவேண்டிய ஆராய்ந்து பார்க்கவேண்டிய  உண்மை. இரண்டு சந்தர்பங்களுக்கும் 60 வருட இடைவெளி. அதாவது இரண்டு தலைமுறை இடைவெளி. இரண்டு தலைமுறை போன  பின்னர் கூட தமிழ் தலைமை என்பது தமது மக்களின் அரசியல் எதிர்காலம்  பற்றிய பொறுப்பற்றவர்களாகவே இருந்துள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் எமது எதிர்கால தலைமுறையால்  முக்கியமாக சிந்திக்கவேண்டிய ஆராய்ந்து பார்க்கவேண்டிய  உண்மை. இரண்டு சந்தர்பங்களுக்கும் 60 வருட இடைவெளி. அதாவது இரண்டு தலைமுறை இடைவெளி. இரண்டு தலைமுறை போன  பின்னர் கூட தமிழ் தலைமை என்பது தமது மக்களின் அரசியல் எதிர்காலம்  பற்றிய பொறுப்பற்றவர்களாகவே இருந்துள்ளனர். 

பொறுப்பற்றவர்கள் பொறுப்புடன் எதையாவது பெற்று காட்டிவிட்டு வந்து சொல்லுங்கள் 

அவர் தனது இயலாமையையும் சொல்கிறார் அதை லாவகமாக கடந்து செல்கிறீர்கள்

(மற்றபடி அவரது வரலாறு, எதிர்காலம், பற்றி இதில் நான் தொடர்புபடுத்தவில்லை.

 

இனி இலங்கையில், நாம் இவர்களுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது).

3 minutes ago, விசுகு said:

பொறுப்பற்றவர்கள் பொறுப்புடன் எதையாவது பெற்று காட்டிவிட்டு வந்து சொல்லுங்கள் 

அவர் தனது இயலாமையையும் சொல்கிறார் அதை லாவகமாக கடந்து செல்கிறீர்கள்

(மற்றபடி அவரது வரலாறு, எதிர்காலம், பற்றி இதில் நான் தொடர்புபடுத்தவில்லை.

 

இனி இலங்கையில், நாம் இவர்களுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது).

விசுகு,  தமிழ் தலைமைகளை பற்றிய அந்த  கூற்றில் உள்ள உண்மை  பற்றி மட்டுமே தெரிவித்தேன்.  பொறுப்பாக செயற்படவேண்டியவர்கள் தலைமைகளே ஆவர். நான் அல்லது விசுகு போன்ற சாமான்ய மக்களைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

விசுகு,  தமிழ் தலைமைகளை பற்றிய அந்த  கூற்றில் உள்ள உண்மை  பற்றி மட்டுமே தெரிவித்தேன்.  பொறுப்பாக செயற்படவேண்டியவர்கள் தலைமைகளே ஆவர். நான் அல்லது விசுகு போன்ற சாமான்ய மக்களைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. 

பொறுப்பற்றவர்கள் என்பதன் அர்த்தத்தை உண்மையில் புரிந்து கொண்டு தான் நீங்கள் எழுதுகிறீர்களா??

அந்த காலகட்டத்தில்

அந்த நேரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே உண்மை தெரியும்

அதற்கு பொறுப்பற்றவர்கள் என்பது அபத்தமான சொற்பிரயோகம் 

உண்மைதான் தருணங்களை உணர்ந்து செயல்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தி said:

அறிவாளிகளின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.சரி அதை இப்போ தரச்சொல்லுங்கோவன்.

எப்படி முடியும்? 1940இல் சிங்களவன்  நினைத்தன் முழு இலங்கையும்  தமிழன் ஆள்வானென்று ஆனால் நடத்தது வேறு.  அந்த நேரம் சிங்களவன் சமஷ்டியை பெற விரும்பினான் தமிழருக்கு தர விரும்பவில்லை இப்போ முழு  இலங்கையையும் சிங்களவன் ஆள்கிறான் ஏன? சமஷ்டி கொடுக்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இப்போ முழு  இலங்கையையும் சிங்களவன் ஆள்கிறான் ஏன? சமஷ்டி கொடுக்கவேண்டும்?

உண்மைதான் சகோ.மாதா பிதா செய்தது மக்களுக்கு,எங்களின் தமிழ் தலைமைகள் செய்தது எங்களுக்கு.அன்றும் சரி இன்றும்சரி ஏன் என்றும்சரி தமிழ் இனம் இலங்கை நாட்டில் அடி பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.