Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்!

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1214490

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தூக்கி செல்கிறார்கள் பிடரியில் ஒன்று போட  தானே போய்  ஏறுவினம்தானே .

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடிய பின் லயத்தை பூட்டுவது போல் இச்செயல் அமைந்துள்ளது. சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்/ நடவடிக்கைகள் எடுக்க சொல்லியும் செவிமடுக்காமல் இருந்துவிட்டு  அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

குதிரை ஓடிய பின் லயத்தை பூட்டுவது போல் இச்செயல் அமைந்துள்ளது. சுகாதார அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்/ நடவடிக்கைகள் எடுக்க சொல்லியும் செவிமடுக்காமல் இருந்துவிட்டு  அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள்.
 

உங்கள் கருத்துப்படி சுகாதார பரிசோதகரர்களின் தகவலின்படி காவற்துறை நடவடிக்கை ஏடுக்க வேண்டும்.
மக்கள் இந்தக் கவனமும் எடுக்கத் தேவையில்லை. அப்படியா ?


அப்பாவிகள் எப்போதும் அப்படியே இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

உங்கள் கருத்துப்படி சுகாதார பரிசோதகரர்களின் தகவலின்படி காவற்துறை நடவடிக்கை ஏடுக்க வேண்டும்.
மக்கள் இந்தக் கவனமும் எடுக்கத் தேவையில்லை. அப்படியா ?


அப்பாவிகள் எப்போதும் அப்படியே இருப்பார்கள் 

உதுவெல்லாம் காலம் கடந்த நடவடிக்கை. இப்பொழுது ஆசியாவிலே இரண்டாவது தொற்று கூடிய நாடு இலங்கையாகும். 
 தற்போழுது செய்யவேண்டியவை.
- ஒரு மாதத்துக்கு நாட்டை முற்றாக முடக்கவேண்டும்.
- தடுப்பூசிகளை மக்களுக்கு அதிகமாக வழங்கவேண்டும்.
தற்போழுது  இலங்கையில் இருப்பது சமூக தொற்று ஆகும், இதனை கடும்நடவடிக்கை எடுத்து தடுக்கவிடடால்  வரும் செப்டம்பருக்கு முன் 20,000 சாவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

உதுவெல்லாம் காலம் கடந்த நடவடிக்கை. இப்பொழுது ஆசியாவிலே இரண்டாவது தொற்று கூடிய நாடு இலங்கையாகும். 
 தற்போழுது செய்யவேண்டியவை.
- ஒரு மாதத்துக்கு நாட்டை முற்றாக முடக்கவேண்டும்.
- தடுப்பூசிகளை மக்களுக்கு அதிகமாக வழங்கவேண்டும்.
தற்போழுது  இலங்கையில் இருப்பது சமூக தொற்று ஆகும், இதனை கடும்நடவடிக்கை எடுத்து தடுக்கவிடடால்  வரும் செப்டம்பருக்கு முன் 20,000 சாவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உண்மையான மறுதலிக்க முடியாத கருத்து.
 
மக்கள் நிலைமையை உணர்ந்து கொண்டு
சூழலுடன் இயங்கி வாழப்பழக வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, zuma said:

உதுவெல்லாம் காலம் கடந்த நடவடிக்கை. இப்பொழுது ஆசியாவிலே இரண்டாவது தொற்று கூடிய நாடு இலங்கையாகும். 
 தற்போழுது செய்யவேண்டியவை.
- ஒரு மாதத்துக்கு நாட்டை முற்றாக முடக்கவேண்டும்.
- தடுப்பூசிகளை மக்களுக்கு அதிகமாக வழங்கவேண்டும்.
தற்போழுது  இலங்கையில் இருப்பது சமூக தொற்று ஆகும், இதனை கடும்நடவடிக்கை எடுத்து தடுக்கவிடடால்  வரும் செப்டம்பருக்கு முன் 20,000 சாவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டை முற்றாக முடக்கினால் தினசரி கூலி தொழிலாளர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு  கடுமையான சட்டங்கள் சரி.  இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு...?

தடுப்பூசி பற்றிய போதிய விளக்கங்கள் கூட இல்லை.

வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றது.
ஜேர்மனிக்கு சாடையாய் கைகடிக்க வெளிக்கிட்டுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நாட்டை முற்றாக முடக்கினால் தினசரி கூலி தொழிலாளர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்.

நியாயமான கேள்வி. முற்றாக முடக்காவிட்டால், கூலி தொழிலாளர்கள் கொரனாவால் இறந்துபோகும் சாத்தியமும் அதிகம். சீனா செய்தது போல, நாட்டை முற்றாக முடக்கிய பின் இராணுவம் உணவை பங்கிட்டு மக்களுக்கு அன்றாடம் விநியோகிப்பதே சாத்தியமானது. 

28 minutes ago, குமாரசாமி said:

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு  கடுமையான சட்டங்கள் சரி.  இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு...?

கடுமையான சட்டங்களினாலேயே சீனாவும் அமெரிக்காவும் கொரனாவை கட்டுப்படுத்த முடிந்தது. அப்படி செய்யாவிட்டால் மக்கள் பெரும்தொகையில் இறப்பது தவிர்க்க முடியாதது.

28 minutes ago, குமாரசாமி said:

தடுப்பூசி பற்றிய போதிய விளக்கங்கள் கூட இல்லை.

விளக்கங்கள் கிடைப்பதற்கு தடுப்பூசியை பயன்படுத்தி உண்டான விளைவுகள் பற்றிய தரவுகள் தேவை.

 

36 minutes ago, குமாரசாமி said:

வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றது.

வெள்ளம் தலைக்கு மேல் போனபின் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? என்ற பழமொழி உண்டு.

இலங்கை கடனிலே வாழும் நாடு. கடன்வாங்கி பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதில் தலைசிறந்த ஆற்றல் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இந்த ஆற்றல் குறைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, கற்பகதரு said:

நியாயமான கேள்வி. முற்றாக முடக்காவிட்டால், கூலி தொழிலாளர்கள் கொரனாவால் இறந்துபோகும் சாத்தியமும் அதிகம். சீனா செய்தது போல, நாட்டை முற்றாக முடக்கிய பின் இராணுவம் உணவை பங்கிட்டு மக்களுக்கு அன்றாடம் விநியோகிப்பதே சாத்தியமானது. 

எனக்கு தெரிந்த ஜேர்மனிய நண்பர் ஒருவர் வருடத்தில் 9 மாத காலம் இலங்கையின்  இயற்கையினது சுகத்தை அனுபவிப்பவர். அவரின் தகவலின் படி நகர்ப்புறங்களில் வாழும் அடிமட்ட மக்களின் வாழ்வு மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை

சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க பொலிசாருக்கு  அறிவுரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன் பொலிஸாருக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுரைகளை வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் என்ற ரீதியில் முன்னெடுக்கும் கொரோனா சுகாதார பாதுகாப்பு நடவைக்கைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் வருபவர்களை கைது செய்வதற்கான முழு அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது.

எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலை மிகவும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் சுகாதர நடைமுறைகளை பேணாதவர்களை கைது செய்து தனிமை படுத்தல் சடத்தின் மூலம் தனிமை படுத்தவும்.

அதேவேளை பொலிஸாரான உங்களையும் பாதுகாத்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம்.

சுகாதர சட்டத்தை மதிப்பவர்களாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அது பொலிஸாரின் கடமை அதே போன்று சுகாதார சட்டத்தை உதாசீனம் செய்பவர்களை கைது செய்ய முடியும்” என தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1214877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.