Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு: 8 கொள்கலன்கள் கடலினுள் விழுந்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய  திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்துள்ளனர்.

1621940955-6037.jpg

 இந்நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  கடர்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்  கெப்டன் இந்திக டி சில்வா கூறினார். அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் குறித்த கப்பலில் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் இந்த திடீர் தீ பரவல் ஆரம்பித்துள்ளதாக, தமக்கு அறிவிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரிக்கு தெரிவித்தார். எனினும் 21 ஆம் திகதி  நண்பகலாகும் போது குறித்த கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும்  விட்டு விட்டு தீ பரவல்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்ட  நிலையில், கடற்படையின் சிறப்பு தீயணைப்பு பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர் குறித்த கப்பலை சூழ விஷேட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கெப்டன் இந்திக டி சில்வா மேலும் கூறினார்.

தீ பரவல் குறித்த தகவல் கடற்படையினருக்கு  கிடைக்கப் பெற்றதும், கடற்படையின்  ஸ்ரீ லங்கா சாகர,  சிதுரல ஆகிய  ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல்கள்,  அதிவேக தாக்குதல் படகொன்றும்  தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இதனைவிட துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 3 டக் படகுகளும் தீயணைப்பு பணிகலில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையிலேயே பல மணி நேர போராட்டத்தின் பின்னர் கடந்த 21 ஆம் திகதி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இலங்கையின் கடல் பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற காலநிலை ( பலத்த காற்றுடன் கூடிய நிலை) காரணமாக, நேற்று  குறித்த கப்பலில் தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார். இவ்வாறு மிக மோசமாக தீ பரவி வரும் நிலையில், குறித்த கப்பலில் இருந்த 8 கொல்கலன்கள் கடலுக்குள் வீழ்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான பின்னனியிலேயே தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கேசரியிடம் கூறினார்.

 ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதியும் விமானப்படை 425 கிலோ உலர்ந்த இரசாயனங்களை தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக வானிலிருந்து தூவிய நிலையில் நேற்றும் அந் நடவடிக்கைகலை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சரக்கு கப்பலிலுள்ள இரசாயணங்கள் கடலில் கலப்பதன் ஊடாகவும் கப்பலிலிருந்து வெளியேறும் புகை காரணமாகவும்  கடல் மற்றும் சூழல் பெரிதும் மாசடைய வாய்ப்புள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது. இந்நிலையில் இலங்கையை சூழ உள்ள கடற் சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமுத்திர சூழல் மாசடைவை குறைத்துக்கொள்ளவும், தீ பரவி வரும் கப்பலை தற்போது உள்ள இடத்திலிருந்து 50 கடல் மைல் தூரம் வரை இழுத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கப்பலிலிருந்து வெளியாகும் புகை காரணமாக நாட்டின் சூழல் கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கப்பலின் கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இரசாயனங்கள் மேலும் தீப்பிடிக்கும் நிலையில், தீ விபத்து குறித்து கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைகளில் நண்பகல் தாண்டியும், கடற்படையினரும், நெதர்லாந்தை சேர்ந்த  சிறப்பு நிபுணர்களும்,  விமானப்படை, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுமாக  பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு: 8 கொள்கலன்கள் கடலினுள் விழுந்தன  | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு: 8 கொள்கலன்கள் கடலினுள் விழுந்தன

என்ன கோதாரியை கொண்டுவந்து பிடிபட்டாங்களோ ஆருக்குத்தெரியும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்ன கோதாரியை கொண்டுவந்து பிடிபட்டாங்களோ ஆருக்குத்தெரியும்? 😎

சாமானுகள் மிதந்து வந்தால் எதையும் தொட வேண்டாம் என்று சொல்லி இருக்காம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

சாமானுகள் மிதந்து வந்தால் எதையும் தொட வேண்டாம் என்று சொல்லி இருக்காம்.

 

கேந்திர முக்கியவத்தின் பலன்களில் இதுவுமொன்று 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கேந்திர முக்கியவத்தின் பலன்களில் இதுவுமொன்று 😁

🤣 உந்த அணு சக்தி நீர்மூழ்கி எண்டு ஒரு கறுமம் இருக்கெல்லே- யுகேயிண்டையை டிரைடண்ட் என்பார்கள். அதை இங்கிலீஷ்காரன் கெட்டிதனமா ஸ்கொட்லண்ட் பக்கம் தட்டி விட்டுட்டான்🤣.

அப்படி எதையாவது அம்பாந்தோட்டைல கொண்டு வந்து இறக்கினால்தான் பிரச்சனை. ஆனால் அப்பவும் சிங்களவன் அதை நைசா காங்கேசந்துறைக்கு அனுப்பி விட்டுவான். 

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவுக்கு பிச்சை எடுக்க வழியில்லை  இது போல் பலது இனி நடக்கும் உலகின் அனுரசாயன கழிவு குப்பை கூடமாக வெகு விரைவில் மாறும் .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

சொறிலங்காவுக்கு பிச்சை எடுக்க வழியில்லை  இது போல் பலது இனி நடக்கும் உலகின் அனுரசாயன கழிவு குப்பை கூடமாக வெகு விரைவில் மாறும் .

இன்று காலை அல் ஜசீரா செய்தியில்.. ஐதரோக் குளோரிக் அமிலம் என்று சொன்னார்கள்!
இவ்வளவும் கடலுக்குள் விழுந்தால்....அதன் விளைவு பார தூரமாக இருக்குமே?
நீங்கள் கூறிய மாதிரி இருக்கும் சாத்தியங்களே அதிகம் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, புங்கையூரன் said:

அதன் விளைவு பார தூரமாக இருக்குமே?

அதைப்பற்றி எல்லாம் சிங்களவன் கவலைப்படமாட்டான். இனிமேல் அது சீனாவின் பிரச்சனை. ஆனால் கப்பற் கொம்பனியிடம் கொஞ்சம் கறப்பான். எண்ட பெருமாளே கொம்பனி குடி முழுகிச்சு.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இன்று காலை அல் ஜசீரா செய்தியில்.. ஐதரோக் குளோரிக் அமிலம் என்று சொன்னார்கள்!
இவ்வளவும் கடலுக்குள் விழுந்தால்....அதன் விளைவு பார தூரமாக இருக்குமே?
நீங்கள் கூறிய மாதிரி இருக்கும் சாத்தியங்களே அதிகம் என நினைக்கிறேன்!

இது... கப்பல் தீப் பிடித்ததால்.... வெளியே  தெரிந்தது. 
இதற்கு முன்... எத்தனை கப்பல்கள், இப்படியான நச்சுப்  பொருட்களை  
உள்ளுக்கு கொண்டு வந்து, இறக்கி விட்டு போச்சுதோ...  யாருக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இது... கப்பல் தீப் பிடித்ததால்.... வெளியே  தெரிந்தது. 
இதற்கு முன்... எத்தனை கப்பல்கள், இப்படியான நச்சுப்  பொருட்களை  
உள்ளுக்கு கொண்டு வந்து, இறக்கி விட்டு போச்சுதோ...  யாருக்குத் தெரியும்.

இப்படியானதுகளை வடக்குக்கு அல்லது கிழக்குக்குத் தான் சிங்களம் அனுப்புவது வழமை..!

நாவாந்துறைப்பக்கம்  களவாய் மணல் அள்ளுற ஆக்கள் தான் கவனமாய் இருக்க வேணும்!

கொஞ்ச நாளால , சொறிஞ்சு கொண்டு திரியப் போகினம்!🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

இப்படியானதுகளை வடக்குக்கு அல்லது கிழக்குக்குத் தான் சிங்களம் அனுப்புவது வழமை..!

நாவாந்துறைப்பக்கம்  களவாய் மணல் அள்ளுற ஆக்கள் தான் கவனமாய் இருக்க வேணும்!

கொஞ்ச நாளால , சொறிஞ்சு கொண்டு திரியப் போகினம்!🤣

கள்ள மணல், வாங்கி.... வீடு கட்டுற  ஆட்களுக்கும், "சொறி வருத்தம்" வரப்பாக்கும். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.