Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் தவிப்பு பழ.நெடுமாறன் அவர்களின் புதல்வி பூங்குழலி எழுதிய உண்மைக்கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் தவிப்பு.

(உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது)

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல...

நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி சிறைக்கம்பிகளும் சித்திரவதைகளுமாக துயரை அப்பிவிட்ட 'தொடரும் தவிப்பு" பேரறிவாளனின் அம்மா போல என்னுள்ளும். 19வயதில் சிறை சென்ற மகன் இன்று வருவான் நாளை வருவான் தங்களது இறுதிக்காலங்களை மகனோடு கழிக்கலாம் என்ற கனவோடிருக்கும் அறிவு அம்மாவின் அழுகையும் அறிவு அப்பாவின் துயரமும் மட்டுமல்ல மரண தண்டனை விதிக்கப்பட்ட 26பேரும் அனுபவித்த கொடுமைகள் யாவும் பதிவாகியிருக்கிறது இந்நூலில். இதுவொரு கதையில்லை ஒரு கொடுமைகளின் ஆவணம்.

உலகத்தில் மனிதவுரிமை பேசியபடி மனிதர்களை வதைக்கும் பட்டியலில் இலங்கையும் இந்தியாவும் அதிகம். சிறைக்கைதிகள் என்றால் அவர்கள் மானிட உலகுக்கே பயனற்றவர்கள் என்ற கணிப்பு இலங்கை இந்தியச் சிறைகளிலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணமாகிறது. அந்த வகைக்குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26பேரும் மனிதப்பிறவிகள் என்ற நினைப்பையே மறந்து வதைத்த அந்த வதைகாரரின் கதை கண்ணுக்குள் ஒரு மாரிகாலத்தை இறக்கிவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளின் நிறைவில் மகனும் மற்றவர்களும் சிறைமுடிந்து வெளிவருகிறார்கள் என போன அறிவு அம்மாவிற்கு அவன் தூக்குத்தண்டனை மேடையிலிருந்து வரமாட்டானென்ற முடிவுடன் ஆரம்பமாகும் கதை....பேரறிவாளனைத்தேடி சோலையார்பேட்டைக்குள் நுளைந்த பொலிஸ் வாகனம் பேரறிவாளின் வீட்டு வாசலில் 10.06.1991இல் நின்றதும் அதன் பின்னான அற்புதம் அம்மாவின் அலைக்கழிவு என நீழும் கதையில் யுகங்களையும் தாண்டிய துயர் நெஞ்சை அறுக்கிறது.

விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளை. நடுநிசி 12மணிக்கு விசாரணையென்று வந்த பொலிசார். 'நளினி எங்கே ? " சொன்னால் அறிவு வருவான் என்ற போலீசின் வார்த்தையில் ஆவிகலங்கிய அறிவின் அப்பா குயில்தாசனும் அற்புதம் அம்மாவும் அந்தரித்த அந்தரிப்பு ஒரு பிள்ளையின் மீதான கொடுமையான தீர்ப்பை ஏற்க மறுக்காத ஒவ்வொரு பெற்றோரையும் நினைவில் கொண்டுவரும் மனிதர்களாகின்றனர்.

19வயதில் சிறை சென்ற அறிவு இதுவரையும் தூக்குமேடைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படாமல் முருகன் , சாந்தன் ஆகியோருடன் கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனை பெற்ற நளினியின் நிலை தொடரும் தவிப்பில் கண்களில் இருந்து கண்ணீரையில்லை இரத்தம் வடிய வைக்கும்படியான துயர். கற்பிணியாக சிறை சென்ற நளினியை உலகில் எந்தவொரு சிறைக்கூடமும் செய்திராத வதைகள் அந்தச் சிறையில் செய்யப்பட்டுள்ளன. அந்த வதையாவும் அற்புதம் அம்மாவின் மொழியாகி உயிரை உலுப்பும் உதிரத்தை உறைய வைக்கும் கொடுமைகள் அவை. அந்தப்பக்கங்களை படிக்கப் படிக்க பாரத தேசத்தின் மனிதாபினம் எத்தகையது என்பதை விளக்குகிறது.

சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து பெற்ற மகளை கடல்கடந்து அனுப்பிவிட்டு அந்தத்தாய் துடிக்கும் துடிப்பு அதுவும் ஒரு இந்திய மகளின் மகளுக்கு இந்தியா செல்லவே இழுபறி ஏற்பட்டதை எங்கே போய் சொல்லியழ ? அகிம்சையும் மனிதமும் போதிக்கப்பட்ட மண்ணில் ஒரு இந்தியப்பிரஜையின் மகளான அரித்திரா இப்போ 15வயதுப்பிள்ளையாகிவிட்ட பின்னும் பெற்றோரின் அரவணைப்போ அன்போ அறியாமல் அரித்திராவின் முகம் நெஞ்சுக்குள்ளும் கண்ணுக்குள்ளும் கனக்கிறது.

யாரால்தான் முடியும் ? தான் பெற்ற பிள்ளையைப் பார்க்கவே வீசா மறுப்பையும் அகிம்சை போதித்த மண்ணில் ஒரு அன்னையின் உணர்வுகள் புரியப்படாமல் போகின்றமையும் ? இதுதான் இந்திய தேசத்தின் இயங்கியல் வளமையோ ?

ராஜீவ் காந்தி என்ற பெரிய மனிதரின் ஆணையில் ஈழம் என்ற சிறிய தேசத்து மனிதர்கள் கொன்றும் கொடுமைப்படுத்தப்பட்டும் டாங்கிகளில் நெரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்ட கொடுமையை மறந்துவிட முடியவில்லை. ஒரு பிரதமரின் உயிருக்கு இத்தனை பெறுமதியா ?

ஒவ்வொரு கைதியும் அந்தச் இசறைக்கம்பிகளுக்குள் பட்ட வேதனைகள்,பொய்ச்சாட்டுதல்களு

இந்த இணைப்புக்கு சாந்தி அவர்களுக்கு நன்றி. இதைப்படிக்கவே மிகவும் வேதனையாக உள்ளது. தொடரும் தவிப்பு என்ற நூல் எப்படி இருக்கும் என்று உணர்கின்றேன். இந்நூலை இணைய வாயிலாக வாங்குவதற்கு வழி உண்டானால் தெரியப்படுத்தவும்.

ராஜீவ் என்ற ஒரு மனிதனின் உயிரும் ஏனைய மனிதர்களின் உயிரும் வித்தியாசமானதில்லை ஆனால் ராஜீவின் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் மயிர் என்ற அரசியல் சாக்கடைத்தனம் அகிம்சைவழியை போதித்த பாரத தேசத்தில் பறைசாற்றி நிற்கின்றது.

இந்த ராஜீவ்காந்தி என்றவரின் கொடுங்கோலுக்கு எத்தனை ஈழத்து உயிர்கள் பரிதவித்து மடிந்தது என்பதை அரசியல் வாதிகள் அறியாதவர்கள் இல்லை. பாரத தேசம் போதித்த அகிம்சையை கையிலெடுத்து பாரத தேசத்திடமே நீதி கேட்டு பரிதவித்து தியாகி திலீபனும் பூபதித்தாயும் உயிர் விடும் வரை உதாசீனம் செய்த ராஜீவ்காந்தியின் கொடுங்கோல் என்பது பாரத தேசத்தையும் களங்கப்படுத்தியது. அடக்கு முறைக்கு எதிரான வன்முறை அற்ற அகிம்சை புரட்சியால் உலகின் நன்மதிப்புக்குள்ளான பாரத தேசத்தின் புனிதத்தின் மீது ஈழத்தமிழரின் குருதியால் கறையை பூசியவர் ராஜீவ்காந்தி. ஆனால் அவரின் உயிருக்கு ஆழும் வர்க்கம் கொடுக்கும் மரியாதையை மற்ற உயிர்களுக்கு கொடுக்க மறுக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு பின் நல்லதொரு ஆவணத்துடன் களத்தில் கண்டு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தபுத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் ஆனால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களிற்கு வாழ்த்துக்கள் தெடர்ந்து அந்த உண்மைகளை மற்றவர்களினுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

இந்தபுத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் ஆனால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களிற்கு வாழ்த்துக்கள் தெடர்ந்து அந்த உண்மைகளை மற்றவர்களினுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

அந்த புத்தகத்தை எங்கே எடுத்தீர்கள். ஜரோப்பாவில் பெற்றுக்கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த புத்தகத்தை எங்கே எடுத்தீர்கள். ஜரோப்பாவில் பெற்றுக்கொள்ளலாமா?

நேசன் நான் அந்த புத்தகத்தை பாரிசில் தமிழாலயம் புத்தக கடையில் வாங்கியிருந்தேன் நீங்கள் ஈழம் ஸ்ரோரில் பாருங்கள் சில நெரம் கிடைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி சகோதரி!

நானும் இப் புத்தகத்தை தேடி வாங்கி படிக்க வேண்டும்.

நல்ல பதிப்பு சாந்தி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

மரணதண்டனை வேண்டாம்

கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

அ.ஞா. பேரறிவாளன்

மரண தண்டனைச் சிறைவாசி

த.சி.எண். 13906

நடுவண் சிறை, வேலூர் - 2

http://perarivalan.blogspot.com/

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நீதி மறுக்கப்பட்டுவிட்டது :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் ஒரு கிழமைக்கு முன் அதிஸ்வசமாக எனக்கு கிடைத்தது.இன்னும் வாசிக்கவில்லை.வாசித்த பின் நூலை பற்றி எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.