Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, uthayakumar said:


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் கவிதையாப்பா விளங்கிடும் ................................

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2021 at 14:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

 

On 5/6/2021 at 07:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

நிதர்சனமான ஆழமான அறிவார்ந்த கருத்து நன்றி தோழர் புங்கையூரன் புரட்சிகர தமிழனுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2021 at 06:51, uthayakumar said:


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

On 5/6/2021 at 06:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?

இந்த அனுபவங்களை எழுதலாமே அண்ணா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

இந்த அனுபவங்களை எழுதலாமே அண்ணா? 

நேரமும், காலமும் கனிந்து வரும் போது, இந்த அனுபவங்களை நிச்சயம் யாழுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன், கோசான்!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புங்கையூரன் said:

நேரமும், காலமும் கனிந்து வரும் போது, இந்த அனுபவங்களை நிச்சயம் யாழுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன், கோசான்!

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  கவி  வரிகள்..ஆளமான  சிந்தனை  வாழ்த்துக்கள்  கவி

 

Edited by பசுவூர்க்கோபி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நிஜகவிதை, இனி Ceylon name Chinaloan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை பாராட்டுக்கள் உதயன்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 07:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

 

On 7/6/2021 at 11:09, goshan_che said:

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

 

On 9/6/2021 at 09:40, பசுவூர்க்கோபி said:

அருமையான  கவி  வரிகள்..ஆளமான  சிந்தனை  வாழ்த்துக்கள்  கவி

 

16 hours ago, suvy said:

நல்ல கவிதை பாராட்டுக்கள் உதயன்......!  👍

 

18 hours ago, உடையார் said:

அருமையான நிஜகவிதை, இனி Ceylon name Chinaloan

நல்ல கருத்துக்களை வழங்கிய தமிழ் தேசியன், கவிஞர் பசுவூர்க்கோவி ,உடையார் ,சுவே கோசான் அனைவர்க்கும்நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.