Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை வழியாக கனடா நாட்டுக்கு தப்பிக்க, முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

 

இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.

அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.

கனடாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர் | 23 arrested in Madurai Airport - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிழம்பு said:

இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.

அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.

கனஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. டாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர் | 23 arrested in Madurai Airport - hindutamil.in

ஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. 

11 minutes ago, தமிழ் சிறி said:

ஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. 

அத்துடன், ஏதோ கொள்ளை அடிச்சுப் போட்டு 'தப்பித்து'  ஓடுகின்றனர் என்பது போன்ற ஒரு பில்டப்

 

மதுரை வழியாக கனடா வுக்கு கப்பல் மூலம் செல்லலாம் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு எம் இளையவர்கள் இல்லை என நினைக்கின்றேன். , 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

அத்துடன், ஏதோ கொள்ளை அடிச்சுப் போட்டு 'தப்பித்து'  ஓடுகின்றனர் என்பது போன்ற ஒரு பில்டப்

மதுரை வழியாக கனடா வுக்கு கப்பல் மூலம் செல்லலாம் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு எம் இளையவர்கள் இல்லை என நினைக்கின்றேன். , 

ஓம்... நிழலி. 
அந்தச்  செய்தியில், உள்ள வசனங்கள் அவ்வளவும், 
காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியுள்ளது அப்பட்டமாகவே... தெரிகின்றது.

உதாரணத்துக்கு.... அகதி முகாம், கள்ளத் தோணி, சுற்றி வளைத்து,  மடக்கிப் பிடித்தனர், போன்ற வசனங்களை பக்குவப் பட்ட  செய்தியாளர்கள், தேவையான இடத்தில் மட்டுமே   பாவிப்பார்கள்.

இது... பூணுல் கோஷ்டியின், வக்கிர செய்தி. 

மதுரை, மட்டும்.... கப்பல் வருமா?  அந்தத் துறை முகத்தின் பெயர் என்ன? என்பதனை..
ராஜ வன்னியன் சார்..  கூறினால், நாங்களும் அறிந்து கொள்ளலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதிகள் கிடையாதே?

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கடல் வழியாக செல்லலாம். ஆனால் கனடாவுக்கு கப்பல் வழியாகவா..? நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான்.... கவனித்தேன்.
கீழுள்ள...   ஈழத்தமிழ் அகதிகளின்,  உண்ணாவிரத செய்தியை கேள்விப் பட்டு,
காதால், புகை போய்... மேலுள்ள செய்தி, சோடிக்கப் பட்டுள்ளது.

பாவம்... எத்தனை, அப்பாவி  தமிழ் இளைஞர்கள்...
தங்கள் வாழ்க்கையை, வீணாக்கப் போகின்றார்களோ.  😢

 

 

1 minute ago, ராசவன்னியன் said:

மதுரை மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதிகள் கிடையாதே?

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கடல் வழியாக செல்லலாம். ஆனால் கனடாவுக்கு கப்பல் வழியாகவா..? நம்ப முடியவில்லை.

மதுரையில்... முன்பெல்லாம், கடல் இல்லை என்று தெரியும்,
சிலவேளை.... புதிய அரசுகள் வந்து,  
"எய்ம்ஸ்" மருத்துவமனை கட்டிய மாதிரி...
கடலையும்,  கட்டி இருக்கலாம்... என, 
ஈழத் தமிழ் இளைஞர்கள், நினைத்து விட்டார்கள் போலுள்ளது.   😜 😂

  • கருத்துக்கள உறவுகள்

 "கியூ பிராஞ்ச்"  போலீஸார்... என்றால் என்ன?
அவர்களுக்கும்.... சாதாரண,  ஏட்டு ஐயாவிற்கும்  என்ன வித்தியாசம்.

 

ப்ளீஸ்... ரெல்,  மீ...

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பவா போறீங்க

கருநாணிதியின் பிறந்த நாளை மையமாக வைத்து இரு பக்கமும் கொள்ளி கட்டைகள் சப்ளை செய்யப்பட்டு ஊரை கொழுத்தி விட்டுள்ளார்கள்😡.

தம்பி v உபி

தெலுங்கன் v தமிழன் என்று மாறி.

இப்போ 

ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என விரிவு படுத்தபடுகிறது.

பேமிலிமான், எழுவர் விடுதலை நாடகம், ஒரே நாளில் டிவிட்டரில் ஒருக்கிணைக்கப்பட்ட விதமாக தலைவர் மீது வைக்கப்பட்ட அவதூறு, இவற்றை போல இந்த பெரும் திட்டத்தின் இன்னொரு அங்கம்தான் இந்த செய்தி.

இந்த முரண் இனி இன்னும் கூர்ப்படையும்.

சில நேரம் தனியே பேரறிவாளனையும், நளினியையும் மட்டும் விடுதலை செய்து இந்த பிளவை மேலும் வலுப்படுத்த முயலவும் கூடும்.

14 minutes ago, தமிழ் சிறி said:

 "கியூ பிராஞ்ச்"  போலீஸார்... என்றால் என்ன?
அவர்களுக்கும்.... சாதாரண,  ஏட்டு ஐயாவிற்கும்  என்ன வித்தியாசம்.

 

ப்ளீஸ்... ரெல்,  மீ...

தமிழக போலீஸ் புலனாய்வுத்துறை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

 

மதுரையில்... முன்பெல்லாம், கடல் இல்லை என்று தெரியும்,
சிலவேளை.... புதிய அரசுகள் வந்து,  
"எய்ம்ஸ்" மருத்துவமனை கட்டிய மாதிரி...
கடலையும்,  கட்டி இருக்கலாம்... என, 
ஈழத் தமிழ் இளைஞர்கள், நினைத்து விட்டார்கள் போலுள்ளது.   😜 😂

அடுத்த எலெக்சனுக்கு தம்பி உதயநிதி ஸ்டாலின் மதுரை கடல்ல இருந்து கொண்டுவந்திருக்கேன்னு வாளியில தண்ணி மோண்டுகிட்டு சுத்தப்போரானே..🤭

Edited by பாலபத்ர ஓணாண்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.