Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம்

News-2021.06.14-5-1-720x375.jpeg

நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை  நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக   அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.

அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும், நாடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News-2021.06.14-1.jpeg News-2021.06.14-2.jpeg News-2021.06.14-3.jpeg News-2021.06.14-4.jpeg News-2021.06.14-5.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நடைமுறைக்கு வந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையான செயற்திட்டம்கள்..

போனமுறை சில இடங்களை துறைமுகம் போல் மாற்றுவேன் என்று அடித்து விட்டவர் மாற்றினாரா என்று கேட்டு பாருங்கள் ?🤣 நாங்கள் மறந்தாலும் ஊரில் இருப்பவர்கள் இவரின் அடிபுளுகுகளை மறக்க மாட்டார்கள் தானே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பெருமாள் said:

போனமுறை சில இடங்களை துறைமுகம் போல் மாற்றுவேன் என்று அடித்து விட்டவர் மாற்றினாரா என்று கேட்டு பாருங்கள் ?🤣 நாங்கள் மறந்தாலும் ஊரில் இருப்பவர்கள் இவரின் அடிபுளுகுகளை மறக்க மாட்டார்கள் தானே ?

தீவு பக்கத்திலை உல்லாச பயண துறை எண்டு ஒரு இடத்திலை படகுசவாரி செய்யிறமாதிரி ஒரு ஏரியாவை காசு செலவழிச்சு செய்து வைச்சிருக்கினம். அது இப்ப கவனிப்பாரற்று கிடந்து காயுது.

அபிவிருத்தி முக்கியம். ஆனால் எங்கே எந்த இடத்தில் யாருக்கு பிரயோசனம் என்பதுதான் பேசு பொருள்.  சுடலைக்கு நல்ல ரோட்டும் மின்சார விளக்கும் எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமாய் ஆரம்பிப்பார். படங்களும், கருத்துக்களும், அறிக்கைகளும் வெளிவரும். அவ்வளவோடு அந்தத் திட்டம் கைவிடப்படும். அவரும் வேறு சோலி பார்க்க கிளம்பிவிடுவார். எதையும் அழிப்பார் ஆக்கத் தெரியாது. வாய்கிழிய பேசுவார் ஏதோ சாதித்தவர் போல். எதை தொடங்குகிறாரோ அதை வைத்து வேலை வாய்ப்பு என்று மக்களிடம் வசூலித்து, தனக்கேற்றவர்களை புகுத்தி, லஞ்சமும், ஊழலும், அடிதடியும் ஊதிப்பெருந்திருக்கு.   

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஆரவாரமாய் ஆரம்பிப்பார். படங்களும், கருத்துக்களும், அறிக்கைகளும் வெளிவரும். அவ்வளவோடு அந்தத் திட்டம் கைவிடப்படும். அவரும் வேறு சோலி பார்க்க கிளம்பிவிடுவார். எதையும் அழிப்பார் ஆக்கத் தெரியாது. வாய்கிழிய பேசுவார் ஏதோ சாதித்தவர் போல். எதை தொடங்குகிறாரோ அதை வைத்து வேலை வாய்ப்பு என்று மக்களிடம் வசூலித்து, தனக்கேற்றவர்களை புகுத்தி, லஞ்சமும், ஊழலும், அடிதடியும் ஊதிப்பெருந்திருக்கு.   

இப்படித்தான் அங்கஜனும் இம்முறை அபிவிருத்தி என்று அநியாயம் பண்ணுது போனமாதம்  முடிப்பம் என்று போட்  போட்டு தொடக்கின திட்டம் சிங்கள ஆமியின்  அத்துமீறல் அடையாளங்களை மறைத்து விட்டு அரைகுறை கட்டிடங்களுடன் பல்லிளிக்குது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பெருமாள் said:

இப்படித்தான் அங்கஜனும்

எங்கை ஆளை இப்ப காணவேயில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து வாக்கு கொள்ளையடிப்போர் நிலை அவ்வாறுதான் இருக்கும். தென் பகுதி இப்போ உணருதில்ல, அவர்களின் ஏவலாளிகளால் அதற்குமேல் செல்ல முடியுமோ. எல்லோரும் ஒரே முதலாளியின் முகவர்கள்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

எங்கை ஆளை இப்ப காணவேயில்லை 

டார்கெட் பண்ணிய பணம் எடுப்பதில் குறியாய் இருக்கிறார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, பெருமாள் said:

டார்கெட் பண்ணிய பணம் எடுப்பதில் குறியாய் இருக்கிறார் .

எனக்கு இலங்கையிலிருந்து ஒருவர் 2009ம் ஆண்டு இறுதியில் சொன்னது.

சிங்கள பகுதி அரசியல்வாதிகளும் தமிழ் பகுதி அரசியல்வாதிகளும் தத்தமது மக்கள் நலன் தொடர்பாக எவ்வித அக்கறையும் எடுக்க மாட்டார்கள். அதிலும் தமிழர் பிரச்சனையை எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் தீர்க்க முனைய மாட்டார்கள். இப்போது இருக்கும் எந்த அரசியல்வாதியாயினும் சரி அவர்களின் குறிக்கோள் பணம் மட்டுமே.

அன்று அவர் சொன்னது இன்று  வெளிப்படையாகவே தெரிகின்றது.
எனவே  சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக இருக்கு இங்கு நடக்கும் விவாதங்களை பார்க்க.. ஜனநாயக அரசியல் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும்.. இப்படித்தான் விமர்சங்கள் பாராட்டுக்கள் பலவும் இருக்கும்.. அதைவிடுத்து யார் ஆதரவும் அற்ற வலிமை இழந்த நம் நிலமை புரியாத சண்டித்தன உசுப்பேத்தல்கள் குண்டுகள்  பேசவே விடாமல் மண்டையில் போட நினைப்பது எல்லாம் உலக நாடுகளின் கொஞ்சநஞ்ச கழிவிரக்கத்தையும் எம்மீது இல்லாமல் செய்துவிடும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

மாமாவின் அபிவிருத்தியின் 30 வருடத்துக்கு மேற்பட்ட களம்  எனது ஊர்

வேறு சாட்சி  தேவையற்றது

வீதி அபிவிருத்தி என்றால் ஒதுக்குவது பல கோடி

செலவு 2 லோட்  மண்ணும் கல்லும்.............

நாயாறு நந்திக்கடலுக்குள்ள ஏதும்  புதையல் கிடக்குது  என்று கேள்விப்பட்டாரோ  என்னவோ??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

மாமாவின் அபிவிருத்தியின் 30 வருடத்துக்கு மேற்பட்ட களம்  எனது ஊர்

வேறு சாட்சி  தேவையற்றது

வீதி அபிவிருத்தி என்றால் ஒதுக்குவது பல கோடி

செலவு 2 லோட்  மண்ணும் கல்லும்.............

நாயாறு நந்திக்கடலுக்குள்ள ஏதும்  புதையல் கிடக்குது  என்று கேள்விப்பட்டாரோ  என்னவோ??

காடாத்து ,காவியம் என்று புலம்புரார்....மகிந்தா இருக்கும் பொழுதே கோடிஸ்வரனாக துடிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

காடாத்து ,காவியம் என்று புலம்புரார்....மகிந்தா இருக்கும் பொழுதே கோடிஸ்வரனாக துடிக்கிறார்

 

இப்ப மட்டும்  என்னவாம்???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

இப்ப மட்டும்  என்னவாம்???

பல்கோடிஸ்வரனாக😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.