Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!

Featured Replies

தலைவர் பிரபாகரன் அவர்களின் முடிவுகளில் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கும் போது மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனை அழைத்ததும் இந்த படுகொலையாளிக்கு / போர்க் குற்றவாளிக்கு கைலாகு கொடுத்ததும் ஒன்று.

நான் துள்ளிக் குதித்து சந்தோசப்பட்ட தருணங்களில் ஒன்று பத்மநாபாவின் கொலைச் செய்தியை அறிந்த தருணம். இங்கு பலர் குறிப்பிட்டது போன்று அசோக் ஹோட்டல் அவலங்களும், மண்டையன் குழுவின் படுகொலைகளும், யாழ் பரியோவான் கல்லூரி மாணவர் அகிலனின் படுகொலையும், இந்தியப் படையுடன் இணைந்து நடாத்திய அட்டூளியங்களும் என்றேன்றும் மறக்க கூடாதவை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

தலைவர் பிரபாகரன் அவர்களின் முடிவுகளில் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கும் போது மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனை அழைத்ததும் இந்த படுகொலையாளிக்கு / போர்க் குற்றவாளிக்கு கைலாகு கொடுத்ததும் ஒன்று.

நான் துள்ளிக் குதித்து சந்தோசப்பட்ட தருணங்களில் ஒன்று பத்மநாபாவின் கொலைச் செய்தியை அறிந்த தருணம். இங்கு பலர் குறிப்பிட்டது போன்று அசோக் ஹோட்டல் அவலங்களும், மண்டையன் குழுவின் படுகொலைகளும், யாழ் பரியோவான் கல்லூரி மாணவர் அகிலனின் படுகொலையும், இந்தியப் படையுடன் இணைந்து நடாத்திய அட்டூளியங்களும் என்றேன்றும் மறக்க கூடாதவை.

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அட விசயத்துக்கு வாங்கப்பூ..

இந்தக்கொலைகளில் இவருக்கும் பங்கு என்கிறது பட்சி..😉

இருக்க ஒரு வீத சாத்தியமும்  இல்லை 

திடீர் தகவல் 
திடீர் திட்டம் 
திடீர் நடவடிக்கை 

இவர்கள் ஒன்று கூடி ஒரு கூட்டம் போட்டு விட்டு வெளியே வரும்போதுதான் இது நடந்தது 
அவர்கள் எஸ் எம் ஜி எனும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள்தான் இதில் பயன்படுத்தினார்கள் 
மகசீனை கழட்டிவிட்டு பாக்குகளில் போட்டுகொண்டு சென்று காத்திருந்து அவர்கள் வெளியில் வரும்போது 
மகசீனை கொழுவிவிட்டு தாக்குதல் நடந்தது. 
இவர்களிடம் சரியான திட்டம் கூட இருக்கவில்லை இலக்கு பத்மநாப சுரேஷ் தான் 
இதில் தாக்குதல் செய்த ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார் 
அன்றிரவே விடுதலை செய்யப்பட்டார் 
கருணாநிதிக்கு மிகுந்த நெருக்கவராம் வருத்துவத்துக்கு அதுவே முக்கிய காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்காது போயிருப்பேன் 
இலங்கை இராணுவத்தின் மிக பெரிய ஒட்டுக்குழுவாக 
ஈபி தான் இருந்து இருக்கும் றோ வின் ஆசியுடன் 

இறுதியில் றோ வின் முழுதான கட்டுப்பாடில் மிஞ்சிய ஒரே 
குழு இதுதான் இவர்களை வைத்து அடுத்த காய்யை நகர்த்துவது என்பதுதான் 
றோ வின் திட்டம்  ஈ என் டி எல்ப் ஒரு சிறு குழுவாக மட்டுமே மிஞ்சினார்கள் 
பரந்தன் ராஜன் என்பவரை தவிர்த்து அதில் ஒரு விம்பம் வடிவமைக்க வேறு எதுவும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த சம்பவங்கள் துரோகத்திற்குள் அடங்குவதில்லை  கிழக்கில்  பல சம்பவங்கள் எந்த இயக்கத்துக்கு எவ்னைப்பிடிப்பது எவனை போடுவது என்று ஆராய்ச்சி பண்ணப்போனால் அருவறுப்பும் கறுவறுப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இந்த சம்பவங்கள் துரோகத்திற்குள் அடங்குவதில்லை  கிழக்கில்  பல சம்பவங்கள் எந்த இயக்கத்துக்கு எவ்னைப்பிடிப்பது எவனை போடுவது என்று ஆராய்ச்சி பண்ணப்போனால் அருவறுப்பும் கறுவறுப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது 

கிழக்கு கதைகள் ஆகக்கொடுமை சகோ.. கேட்க ரத்தகண்ணீர் வரும்.. வடக்கிலாவது நமக்குள் கொன்றுகுவிப்பது ஒருகட்டதுடன் நின்றுவிட்டது.. அப்பப்போ சிஜடி உடன் சேர்ந்து ஈபிடிபி போட்டுதள்உவான்.. ஆனால் கிழக்கில் கருணாபிளவுடன் மீண்டும் கர்ணகொடூரமான சம்பவங்களுடன் தொடர்ந்து இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்கு.. 😢😢 கிழக்கு உறவுகளை நினைத்து அழுதநாட்கள் எத்தனை எத்தனை அப்போ..

6 hours ago, விசுகு said:

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

இப்படி பார்த்தால் நாம் துரோகி என்று யாரையும் சொல்லி இருக்ககூடாது.. அவரவர்க்கு சொல்லிக்கொள்ள ஒவ்வொரு நியாயம் இருக்கும்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறையப்பேர் இவர்களின் அராஜகங்களை மீள எழுதுவது பாராட்டுக்கு உரியது.. ஏனெனில் புலிகளின் அழிவின் பின்னர் புலிகள் தவறுகளை நல்ல நோக்கத்துடன் விமர்சிப்பவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் இந்த கும்பல்களின் பழைய உறுப்பினர்கள் உள்நுழைந்து சந்தில் சிந்துபாடி ஏதோ புலிகள்மட்டும்தான் கொலைகாரர்கள் தங்கட ஆட்களை கொன்றுவிட்டார்கள் அதனால் அழிந்துவிட்டார்கள் ஆனால் தாமும் தம் குழுவும் உத்தமர்கள் போலவும் பொதுவெளியில் எழுதிக்கொண்டு திரிகிறார்கள்.. நாளை இவர்கள் சொல்வதுதான் வரலாறு என்று ஆகிவிடக்கூடாது.. இந்த குழுக்கள் செய்த அநியாயங்களை விடாமல் எமது உறவுகள் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் உண்மைத்தகவல்களோடு எழுதவேண்டும்.. சோபசக்தி உட்பட பல எழுத்தாளர்கள் புலிகளால் கொல்லப்பட்ட சம்ப்வன்களை வைத்து கதை சிறுகதை எழுதுகிறார்கள் ஆனால் யாரும் இந்த குழுக்களால் கொல்லப்பட்ட சம்பவங்களை வைத்து கதை சிறுகதை கவிதைகூட எழுதுவதில்லை.. காலம் பொல்லாதது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும்.. எனக்கே இவர்கள் செய்த அநியாயங்கள் மறந்துகொண்டு வருது எல்லோரும் புலிகள் பற்றி தவறுகளை எழுதுவதால்.. வயது வேற போறதால் நாபக மறதி ஒருபக்கம்.. என் நண்பர்கள் ஊரவர்கள் எத்தனைபேர் ராணுவத்துடன் சேர்ந்து வந்த ஈபிடி உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இருக்க ஒரு வீத சாத்தியமும்  இல்லை 

திடீர் தகவல் 
திடீர் திட்டம் 
திடீர் நடவடிக்கை 

இவர்கள் ஒன்று கூடி ஒரு கூட்டம் போட்டு விட்டு வெளியே வரும்போதுதான் இது நடந்தது 
அவர்கள் எஸ் எம் ஜி எனும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள்தான் இதில் பயன்படுத்தினார்கள் 
மகசீனை கழட்டிவிட்டு பாக்குகளில் போட்டுகொண்டு சென்று காத்திருந்து அவர்கள் வெளியில் வரும்போது 
மகசீனை கொழுவிவிட்டு தாக்குதல் நடந்தது. 
இவர்களிடம் சரியான திட்டம் கூட இருக்கவில்லை இலக்கு பத்மநாப சுரேஷ் தான் 
இதில் தாக்குதல் செய்த ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார் 
அன்றிரவே விடுதலை செய்யப்பட்டார் 
கருணாநிதிக்கு மிகுந்த நெருக்கவராம் வருத்துவத்துக்கு அதுவே முக்கிய காரணம் 

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

தெரிந்ததை சொல்லிவிடுங்களேன். ஏன் மசுந்துகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தெரிந்ததை சொல்லிவிடுங்களேன். ஏன் மசுந்துகிறீர்கள்?

நானறிந்ததைவிட  யாருக்காவது அதிகமாகத் தெரிந்திருக்கலாம் என்று எண்ணினேன். அம்புட்டுதே..😀

அவர்தான் தகவல் வழங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் என்று அறிந்தேன். 🤥

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அவர்தான் தகவல் வழங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் என்று அறிந்தேன். 🤥

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

நான் சொல்வதுதான் உண்மை என்று நான் அடித்து புரளுவது என்றால் 
ஒன்றில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மெய் பாதுகாப்பாளராக அவருடன் 24 மணிநேரமும் கூடி இருந்திருக்க வேண்டும் 
அல்லது புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்து அதை வழி நடத்தியவராக இருக்கவேண்டும் 
நான் அந்த இரண்டிலும் இல்லை.

உங்களைப்போலவே இன்னொருவர் எமக்கு கூறும் கதைகளை கேட்டே நானும் எழுதுகிறேன் 
உங்களுக்கு அவர்களுடன் நெருக்கம் இருந்து இருப்பின் உங்களுக்கு தெரிந்ததை எழுதினால் வாசித்து விட்டு போகிறோம். 

ஆனால் சுரேசை குறிவைத்தே புலிகள் மணலாறு காட்டில் இருந்தே வெளியில் வந்தார்கள் 
அசோகா கோட்டல் அடித்த்து சுரசேஸையும் மற்ற துரோகிகளையும் தூக்குவது எனும் திட்டத்துடன்தான் 
வந்தார்கள். இந்திய இராணுவத்துடனான சண்டையை தவிர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நீர்வேலியில் வந்து முகாமிட்டு நாவற்குழி முகாமை இந்திய இராணுவம் விட்டு வெளியேறியதும் அசோகா 
கோட்டால் அடிக்க காத்து இருந்தார்கள் 

ஆனால் அவர்கள் அதிர்ஷ்ட்டம்  நாவற்குழி இராணுவம் வெளியேறு முன்னரே அசோகா கோட்டலில் இருந்து 
சுரேசும் மற்ற முக்கிய துரோகிகளும் இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள் 

அதன் பின்புதான் ஈ என் டி எல்ப் அங்கும் இங்கும் இருந்து மணியம்தோட்டம் வந்து அங்கிருந்து இந்தியா போவதுக்கு தாயராகி கொண்டு இருக்கும்போது மணியம்தோட்ட முகாமை அடித்தார்கள் 

அப்போதும் நாவற்குழி இராணுவம் வெளியேறவில்லை இனி காத்திருந்தால் அவர்களும் ஓடிவிடுவார்கள் என்றுதான் இந்திய இராணுவத்துக்கு நடுவில் புகுந்து அடித்தார்கள். 
 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

Image

சூரியனும் சந்திரனும் இரவு பகல் என்ற எதிர்மறையில் வாழ்ந்தாலும் 
கிரகணம் எனும் நேர்கோட்டில் சந்தித்தே தீரவேண்டும் 
அது தவிர்க்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கிழக்கு கதைகள் ஆகக்கொடுமை சகோ.. கேட்க ரத்தகண்ணீர் வரும்.. வடக்கிலாவது நமக்குள் கொன்றுகுவிப்பது ஒருகட்டதுடன் நின்றுவிட்டது.. அப்பப்போ சிஜடி உடன் சேர்ந்து ஈபிடிபி போட்டுதள்உவான்.. ஆனால் கிழக்கில் கருணாபிளவுடன் மீண்டும் கர்ணகொடூரமான சம்பவங்களுடன் தொடர்ந்து இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்கு.. 😢😢 கிழக்கு உறவுகளை நினைத்து அழுதநாட்கள் எத்தனை எத்தனை அப்போ..

தமிழனத்தின் சாபக்கேடுகள் என மறந்து போகிறேன் மறக்க நினைக்கிறேன் காரணம் மீள நினைத்தால் ரணகளம் மட்டும் நினைவில் இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.