Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எறிவளைதடு - Boomerang

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஒரு Cappuccino காதல் குறும்படத்தை தயாரித்தவரின் இன்னொரு படைப்பு. 

வயோதிப பெற்றோரை நீங்கள் நன்றாக நடத்தாவிட்டால் அது 🪃 போல திரும்பும் என கூறும் படம்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

வீட்டை சுத்தம் செய்தல், பெயிண்ட் அடித்தல் எல்லாம் பப்பிளிக்கில் வந்து எழுதினால் வயது போட்டுது என்று எடுத்துக் கொள்ளலாம்..😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

வீட்டை சுத்தம் செய்தல், பெயிண்ட் அடித்தல் எல்லாம் பப்பிளிக்கில் வந்து எழுதினால் வயது போட்டுது என்று எடுத்துக் கொள்ளலாம்..😄

இருந்த வீட்டை விட்டுட்டு போகும்போது எல்லாவற்றையும் நிறைவாக செய்து போட்டுத்தான் போகவேண்டி இருக்கு பிள்ளாய்........அவற்றை நானே செய்கின்ற படியால் நான் மிகவும் இளமையாக இருக்கின்றேன்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்

முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க உடலுழைப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

கவலை வேண்டாம் சுவி அவர்களே! உங்கள் அகமுடையாள் அப்படி எல்லாம் நினைக்கமாட்டா...😁

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

பூமராங்கும் சரியென்று நினைக்கிறன்.....!

27 minutes ago, Paanch said:

கவலை வேண்டாம் சுவி அவர்களே! உங்கள் அகமுடையாள் அப்படி எல்லாம் நினைக்கமாட்டா...😁

Quellbild anzeigen

இனி அகமுடையாள் நினைத்தென்ன விட்டென்ன பாஞ்ச் ..........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த/கேட்ட சம்பவங்களை வைத்ததே இதை இணைத்தேன்..இதில் வரும் பெற்றோர் போன்றவர்களே எங்களது சமூகத்தில் அதிகம்.. 

இந்த குறும்படத்தில் வரும் பெற்றோர், பிள்ளைகளை நன்றாக படிக்கவைத்து அவர்களுக்கென வாழ்க்கையை கொடுத்தபின்பும் வயதான காலத்தில் இப்படி செய்யவேண்டுமா? 

இரண்டாவது இதில் வரும் பெற்றோர் தனியே பிள்ளைகளுக்கு படிப்பை மட்டுமே கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.. இல்லாவிடில் அந்த Dr மகன் தாயைபார்த்து அப்படி சொல்லமாட்டார்..

பிள்ளைகளும், பெற்றோருடன் இருக்கும் வரை பெற்றோரில் தங்கியிருந்தார்கள், வளர்ந்தபின் துணையில் தங்கியிருக்கிறார்கள்.. அவர்களுக்கென தனித்துவமான/சுயபுத்தி இல்லாதவர்களாக இந்த படத்தில் காட்டப்படுகிறார்கள்..

இவர்களது பிள்ளை நாளை வளர்ந்து இவர்களை முதியோர் இல்லத்தில்தான் கொண்டுபோய் விடுவாரோ தெரியாது.. 


இந்த படத்தை பார்த்தபின்பு நான் நினைத்தது.. எதையும் அளவோடு செய்தால்தான் எங்களுக்கு பின்னாளில் ஏமாற்றங்கள் ஏற்படாது என்பதுதான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

வளரி என்றும் சொல்வார்கள் (முன்னர் யாழ் இளைஞன் சொன்னதாக ஞாபகம் 🙂).

வளரி என்றதை தேடியபோது பின்வரும் செய்தி கிடைத்தது.. SBS வானெலியில் வந்த செய்தியை இதில் இணைக்கிறேன் இணையவன் அண்ணா!. 

பூமராங்கிற்கு வேறு பல தமிழ்சொற்களும் உள்ளது.. 
//தமிழ்நாட்டில் யானைத்தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்னும் தகவல் நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா? பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அவை இன்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூமராங்குகளுக்கு தமிழில் வளரி என்று பெயர். வளரியின் வேறுசில பெயர்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் போன்றவை. வளரிகள் பெரும்பாலும் அடிமரத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. சிறப்பாக சில உலோகத்திலும் யானைத்தந்தங்களிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.// 

https://www.sbs.com.au/language/tamil/audio/boomerang-known-and-unknown-facts

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

  • கருத்துக்கள உறவுகள்

எறிவளைதடு எனக்கு வட்அப்பில் வந்தது வழக்கமான ஒன்று என்று விட்டுவிட்டேன். பின்பு  பிரபா சிதம்பரநாதன்  Tulpen,  சுவி,ஏராளன் எல்லாம் விமர்சனம் இங்கே எழுதியிருப்பதை பார்த்துவிட்டு தான் படத்தை பார்த்து முடித்தேன் 😂

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கென தனித்துவமான/சுயபுத்தி இல்லாதவர்களாக இந்த படத்தில் காட்டப்படுகிறார்கள்..

தனித்துவமாக பிள்ளைகள் இல்லாமல் தங்களுடன்  தயவில்  பிள்ளைகள் இருப்பதை பெருமையாக 🤦‍♂️நினைக்கும் பலர் இருக்கிறார்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

என்னுடைய பார்வையில்... 
மகன்மாரை , பெண்டாட்டி தாசர்களாக காட்டியுள்ளார்கள். 

சிறிய மகன்.... டாக்டராக  இருந்தும்,
தாயின்  "ஆஸ்மா" பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லாமல்,
மனிசியையும்,   நாய் குட்டியையும்  தடவிக் கொண்டு இருக்கிறான்.

மூத்தவனோ... தகப்பனின், ஓய்வூதிய கடிதத்தில்...  
ஒரு கையெழுத்து போட மனமில்லாமல்,
கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டு...
சோறு எப்ப வரும் என்று... பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

அவர்களை படிப்பித்து, ஆளாக்க... அந்த வயோதியப் பெற்றோர்,
தம் இளவயதில்... எத்தனை சிரமப் பட்டிருப்பார்கள் என்பதனை,
அந்தப் பிள்ளைகள்... ஒரு கணமும் யோசிக்காமல், இருக்கிறார்கள்.

இவங்களை, பெத்த நேரம்... தாய், தகப்பன்... இரண்டு நாய், வாங்கி வளர்த்திருக்கலாம். 🐕 🦮 :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இவங்களை, பெத்த நேரம்... தாய், தகப்பன்... இரண்டு நாய், வாங்கி வளர்த்திருக்கலாம். 🐕 🦮 :grin:

அதில் ஒரு மகன் சமையல் பானையை திறந்து சோறு கறி இருக்கிறதா என்று பார்ப்பார் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.. அதிகபடியாகத்தான் உள்ளது. இதைவிட வெளிக்கொணரவேண்டிய விடயங்கள் உள்ளது

உதாரணமாக:- 

- பெற்றோரை பிரித்து, தந்தை ஒரு பிள்ளையிடமும் தாய் இன்னொரு பிள்ளையிடமும் இருப்பது.. அவர்கள் அப்படி இருப்பது அவரவருடைய தனிப்பட்ட விடயமாக இருந்தாலும், வயோதிபகாலத்தில் அவர்களை பிரித்து வைப்பது, சரியென தெரியவில்லை.

- பெற்றோரில் ஒருவருக்கு இயலவில்லை என்றவுடன், அவரை முதியோர் இல்லத்திலும், மற்றவரை வீட்டிலும் வைத்திருப்பது மட்டுமல்ல, முதியோர் இல்லத்தில் இருப்பவரை பார்க்க அவருடைய துணை ஒவ்வொரு நாளும் அலைவது

- பெற்றோருக்கான விருப்பங்களை மறுப்பது

- பெற்றோர்களை, மற்றவர்கள் முன் மரியாதை குறைவாக அல்லது மனம் நோகும்படி கதைத்து அவமானப்படுத்துவது.. 

இப்படி பல.. 

ஆனாலும், நீங்கள் கூறுவதும் சரியே துல்பன் அண்ணா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.