Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை

spacer.png

தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்- மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர்ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நானும் எனது குடும்பத்தவர்களும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்.இந்நிலையில் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

http://www.samakalam.com/இந்த-நாட்டில்-நாங்கள்-அட/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவா கதைத்தால் சரியாகத்தான் இருக்கும் . ஐநா சபைக்கு பெட்டிசன் அடிங்கப்பா.👍

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானை விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் துமிந்தாவை விடுதலை செய்ய முடியாது என சிங்கள ஜனதாவா கேள்வி கேட்டிருப்பார்கள் ...

ஊடக சுதந்திரம்
தேசியம்
மனித உரிமைகள்
சுதந்திரம் 
இவை யாவும் மேற்குலகின் சிந்தனைகள் ....இவை யாவற்றையும் நாம் கணக்கில் எடுப்பதில்லை ...எமது அரசியல் குரு  சீனா புரட்சிவாதிகள் ....அவர்கள் எவ்வழியோ நாமும் அவ்வழி......

14 hours ago, கிருபன் said:

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை

spacer.png

 

 

  நம்ம மருதரும் கடும் வேதனையில் இரண்டு நாள்கள் உண்ணாவிரதமாம்..

  • கருத்துக்கள உறவுகள்

உவாவின்ர நிலமையே உப்பிடியெண்டால், எங்கட நிலைமை?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உணர தொடங்குகினம். முழுவதுமாய் உணரும்போது நரகத்துகை வெந்து கொண்டிருப்பினம். கனகாலத்துக்கு உண்மையை மறைத்து கைதட்ட முடியாது, இப்போ அது அவரவர் படலைக்கு வந்து தட்டிக்கொண்டிருக்குது.  

வெகுவிரைவில் தமிழரையும் உதவிக்கு கூப்பிடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பிள்ளையானை விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் துமிந்தாவை விடுதலை செய்ய முடியாது என சிங்கள ஜனதாவா கேள்வி கேட்டிருப்பார்கள் ...

அண்ணோய், பிள்ளையான் கிழக்கு மாகாண மக்களின்ர வாழ்வில விளக்கேற்ற வந்த செம்மணச் செம்மலல்லோ? அவரை விடுதலை செய்யிறதுக்கும், பாதாளக் கோஷ்ட்டிக்காரனை விடுதலை செய்யிறதுக்கும் கனக்க வித்தியாசம் இருக்குக் கண்டியளோ? 

பிள்ளையான், எங்களுக்கு நெல்சன் மண்டேலா ஆக்கும் !!!

துமிந்த - இன்னொரு பாதாளக் கோஷ்ட்டிக்காரன் பாரத லக்ஷமனைப் போட்ட கருங்காலியல்லோ ??

இரண்டும் ஈக்குவல் இல்லையண்ணை !!!!
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இல்லை எப்பவோ சிங்கள மக்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களை ஓப்பினாக உலக ஆதரவோடு அடிமையாக்கியவர்கள் தங்கள் இனத்தையும் வெளியே தெரியாதமாதிரி பயமுறுத்தி பழிவாங்கி அடக்குகிறார்கள். எப்போதோ அழியத் தொடங்கிய நாடு இப்போது மிகவும் வேகமாக அழிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒரு பகுதியிலிருந்தபடி இலங்கை முழுவதுமே சிங்கள அரசியல்வாதிகளோ தமிழ் அரசியல்வாதிகளோ நீங்கள் நினைத்தபடி ஆட முடியாது என்று கட்டுப்படுத்தியது புலிகள் இயக்கம்.

இப்போ தமிழ் அரசியல்வாதிகளை பற்றி தமிழர்கள் பெரிதாக கவலைபடுவதில்லை, ஆனால் சிங்கள அரசியல்வாதிகளை கேட்க யாருமே இல்லையா என்று சிங்களவர்கள் கவலைபடுகிறார்கள்.

இப்போ எல்லாம் புலிகள் இலங்கையில் இல்லையே என்று அதிகமாக கவலைபடுவது சிங்களவர்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் ஆட்சியில் இருந்த போது ஏதாவது உணர்ந்தீர்களா ஹிருணிகா?

இனவாதத்தை வைத்து குளிர்காயும் பிரமுகர்கள். பட்டுத்தெளியும் காலம் வெகு விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

 

இனவாதத்தை வைத்து குளிர்காயும் பிரமுகர்கள். பட்டுத்தெளியும் காலம் வெகு விரைவில் வரும்.

இன்னொரு இனவதி வருவான் சிங்கள ஜனதாவா வாக்கு போடும் .....சீனா இருக்கும் வரை இந்த இனவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.