Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்

ஜின்பிங்

ஜின்பிங் ( Ng Han Guan )

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிப்டத்தக்கது

newsletter_image.png?format=webp&w=576&dpr=1.0

விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!

எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!

Get Our Newsletter
“சீனாவையும், சீன நாட்டினரையும் சீண்ட நினைக்கும் எவராயினும் அவர்களது தலை 140 கோடி சீனர்களின் கேடயமாக இருக்கும் பெருஞ்சுவரின் மதில்களில் அவர்களது தலை மோதி அழிக்கப்படுவார்கள்”, -
சீன அதிபர் ஜின்பிங்

சீனாவில் கடந்த 1921ம் ஆண்டு, மாவோ சேதுங் என்பவரால் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை சீனாவில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து ஒட்டுமொத்தத தேசத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு நேற்றோடு (01.07.2021) 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ஒட்டுமொத்த சீனவுமே அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமாக கொண்டாடியது. அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு முழுவதும் தொடர் கொண்டாட்டங்களை நிகழ்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

`சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்
 
Ng Han Guan

இதனையடுத்து சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார். விழாவின் தொடக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பது. பின்னர் முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு பிரம்மாண்டமாக அரங்கேறியது. அப்போது விமானப்படையை சேர்ந்த விமானங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டை குறிக்கும் வகையில், 100 என்ற எண்ணை வானில் வடித்தவாரு பெய்ஜிங் மாநகர் முழுவதும் பறந்து சென்றது.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிப்டத்தக்கது. விழாவின் முக்கியப் பகுதியாக அமைந்த அதிபர் ஜின்பிங்கின் பேச்சு சமீப காலமாக கொரோனா விவகாரங்கள் குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றச்சாடுகளை முன்வைத்து வரும் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்று சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருருளாகியுள்ளது.

அமெரிக்காவை எச்சரித்த ஜின்பிங்!

விழாவில் சுமார் ஒருமணி நேரம் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் வளர்ச்சி பாதைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றுவரை எந்தளவிற்கு பங்காற்றி வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், சீனாவின் வளர்ச்சிக்கு சோஷியலிஸமே வழிவகுக்கும். அதை சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனால், எங்களது ஆளுமையிலோ அல்லது கட்சியிலோ பிளவு ஏற்படுத்த நினைக்கும் எவராயினும் அவர்களது முயற்சி தோற்கடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீனா இதுவரை எந்தவொரு நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கவோ, அடிமைப்படுத்தவோ எண்ணியதில்லை. அதேபோல், சீனாவின் இறையாண்மைக்கு எதிராகவோ , ஒருமைப்பாட்டை குலைக்கவோ, எங்களை அடிமையாக்கவோ நினைப்பவர்களைப் பார்த்துக்கொண்டு சீனா அமைதியாக இருக்காது. அவர்களது தலை சீனர்களின் கேடயமாக கட்டி எழுப்பப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் இரும்பு மதில்களில் மோதி அழிக்கப்படுவார்கள்” என்று ஆவேசமாக பேசினார்.

`சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்
 
Andy Wong

ஹாங்காங், தைவான் உள்ளிட்ட மாகாணங்களில் சீனா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவது, கொரோனா சர்ச்சைகள், அயல்நாட்டு வர்த்தகம், உளவு பார்த்தல் உள்ளிட்டவற்றில் சீனா - அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரும் சூழலில் சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிடும் விதத்திலேயே அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தீயாக வெடித்து வரும் அமெரிக்க - சீனா இடையிலான மோதல் போக்கு இதன்பிறகு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

`சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்
 
Ng Han Guan

ஆரம்பத்தில் வெறும் 100 பேர் கொண்ட சிறிய அமைப்பாக தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 92 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் கட்சியாக சீனாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. ஏழை நாடாக இருந்த சீனா, மாவோவின் காலத்தில் மெல்ல மெல்ல வளர்ந்து நடுத்தர பொருளாதாரத்தை ஈட்டும் நிலைக்கு வந்தது. மாவோ சேதுங் மறைவிற்கு பிறகு அதிபர் நாற்காலியில் அமர்ந்த டெங் சியோ பிங் அதுவரை சீனாவில் இல்லாத அந்நிய முதலீட்டிற்கு விதைபோட்டார். சீனாவின் பொருளாதாரம் உச்சத்திற்கு சென்றது. சீனா பெரும் வல்லரசு நாடாக உருவெடுத்து நின்றது. அதேவேளை, டெங் சியோ பிங்கின் செயல்பாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு முரண்பாடு ஏற்பட்டதால் அவரை எதிர்த்து குரல்கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு பெய்ஜிங்கின் தியானென்மன் சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்தபோது, அன்று அரசால் ஜனநாயகத்திற்கான குரல்கள் அடியோடு நசுக்கப்பட்டது என்பதை வரலாற்றின் பக்கங்கள் சீனாவின் பெரும் மனிதகுலப் படுகொலையாக காட்சிப்படுத்துகிறது. சீனாவில் இன்றுவரை ஜனநாயகம் அடிபணிந்தே உள்ளது என்கிறார்கள்.

 

https://www.vikatan.com/government-and-politics/international/china-xi-jinping-warns-foreign-foes-not-to-mess-with-china

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்”

 
“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்” -அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்ககை

சீனா உள்விவகாரத்தில் தலையிடும் அன்னிய சக்திகளின் தலையை நசுக்குவோம் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி இன்று நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் பேசிய ஷி ஜின்பிங், “சீன உள்விவகாரங்களில் எப்படி நாங்கள் செயல்பட வேண்டும் போன்ற போதனைகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று  எச்சரித்துள்ளார்.

ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், வர்த்தகம், உளவு பார்த்தல், கொரோனா பெருந்தொற்று போன்ற விவகாரங்களில் சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/ccp-100-xi-warns-china-will-not-be-oppressed-in-anniversary-speech/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, உடையார் said:

சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்

கலோ அமெரிக்கா சொன்னது கேட்டுதே? எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்கு. உங்களுக்கு மட்டும் புறம்பாய் வெத்திலை வைச்சு சொல்லேலாது கண்டியளோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:
4 hours ago, உடையார் said:

சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்

”குன்று முட்டிய குரூஇ போல” - என்று தமிழில் ஒரு பழைய மொழி உண்டு அதைத்தான் காப்பியடித்து சீனப் பெருஞ்சுவரில் மோத வேண்டாமென்று அதிபர் ஜின் பிங் கூறியிருக்கிறார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருகின்றது – அமெரிக்கா

 

1625202061-6292.jpg?resize=696%2C392&ssl

சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

“சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.

சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்தே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

“இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது” என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

https://www.ilakku.org/nuclear-weapons-us-china/

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 13:32, உடையார் said:

சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம்

 

On 2/7/2021 at 13:43, உடையார் said:

“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்”

ஒரு நாட்டின் அதிபர்... பேசும் பேச்சு மாதிரி தெரியவில்லை. "ரவுடியின்" பேச்சு மாதிரி.. உள்ளது. 😮

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 12:32, உடையார் said:

மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிப்டத்தக்கது.

உலகம் முழுக்க நோயை கொடுத்துவிட்டு சந்தோசமா கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் 

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கணும் அதுக்காக வல்லவன் ஆகணும் என்பதுக்கு மற்றவர்களை  வதம் பண்ணக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 07:46, குமாரசாமி said:

கலோ அமெரிக்கா சொன்னது கேட்டுதே? எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்கு. உங்களுக்கு மட்டும் புறம்பாய் வெத்திலை வைச்சு சொல்லேலாது கண்டியளோ 🤣

ஓம்… கேட்டது, கேட்டது. கஷாயம் வைச்சிருக்கிறம், ஒருக்கா பருக்கிவிட்டால் எல்லாம் சரிவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.