Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

 

DSCN1080 1 730x438 1 சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும்  என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த அவர்,

சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் நடந்து இருக்கின்றது, முறையான அனுமதி பெறப்பட வில்லை, இப்படி யெல்லாம் பார்க்கின்ற போது இன்று சீனா யாழ்ப்பாண குடாநாட்டு பக்கமாகச் சென்றால் அது இந்தியா இலங்கை மீது ஆத்திரம் அடையக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்.

ஆகவே இந்நிலையில் பார்த்தால் அவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் வருகின்ற போது இந்தியா தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனும் நிலைக்கு வரும். எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க் களமாக இந்து மா சமுத்திரத்தில் இலங்கை மாறப் போகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

எனவே இப்படியான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அண்மையில் உள்ள இந்தியா, ஜப்பான், சீனா போன்ற மற்றய நாடுகளோடு பொதுவான சமநிலையான முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆலோசனையாக இருக்கின்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத் தான் பார்க்கப் படுகின்றது, ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்து வருகின்றது. பாக்கிஸ்தானாக இருக்கட்டும் நேபாளமாக இருக்கட்டும் மியன்மராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி அந்த இந்தியாவை சுற்றி பெரிய தொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது. அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது.

வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களை தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சிய மென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக் கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப் பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் நான் சொல்லக் கூடிய ஒரு விடயமாக இருப்பது நிச்சயமாக சீனா கிழக்கிலும் வடக்கில் கால் ஊன்றுகின்ற போது நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக அது இருக்கும் அதன் மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக் கொள்ளாமல் யப்பானும் விரும்பாது, அமெரிக்கா விரும்பாது, மேற்குலக நாடுகளும் விரும்பாது, எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் சில வேளைகளில் கச்சதீவை கூட இந்தியா மீளப் பெறக்கூடிய நிலமை ஏற்படலாம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/chinasinfiltration-animosity-sri-lanka-india/

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எலும்புத் துண்டு கிடைத்தால் துள்ளிக் குதிக்க வேண்டியதுதான்...😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

 

27 minutes ago, valavan said:

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

விசயம் அதுவல்ல.... கையை மீறி விசயம் போட்டுது.... நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

அய்யாமாரே, இவர்களை, இந்த டெல்லிக்காரரை, நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக சீனா நமது பிரதேசத்தில் முதலீடு செய்து, அமைதியை உருவாக்கினால், புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கையுடன் வந்து, அவர்களுடன் சேர்ந்து வணிகம் செய்வார்கள் என்று அடித்து விடுங்கள், துணிவுடன்....

அதுவே, இன்று சரியான அரசியல்...

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

இவர்களை தூண்டி விடுவது, அண்மையில் சீனாவை கையாள்வது எவ்வாறு என்று தமக்கு  தெரியும் என்று  தம்பட்டம் அடித்த ஹிந்தியை தூதரகம்.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியாவுக்கு எப்போதும் உருட்டி விளையாடுவதற்கு தறுகாயாக  தமிழ்த்தலைமைகள் இருக்கிறார்கள். எந்தப்பக்கம் உருட்டினாலும் உருண்டுகொண்டே இருப்பார்கள். அது அவர்களின் ராஜதந்திரம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் சீன அதிகார போட்டி இருக்கும் வரைக்கும்  ஈழத்தமிழர் பிரச்சனை மூடப்பட்டே இருக்கும். காரணம் எமது தமிழ் அரசியல் தலைவர்களின் தீவிரம் அப்படி.
சர்வதேச அரசியலில் தமது தேவைக்காக யாராவது ஈழத்தமிழர் பிரச்சனையை தூசு தட்டி நல்ல தீர்வு வந்தால் ஒழிய வேறு வழியில்லை.

எமது அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய சோத்து மட்டைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.