Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1230038

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

அவரது நெடுநாள் கனவாயிருக்குமோ? இவரைக்கேட்டு இவரது ஒப்புதலோடுதானாம் நாட்டை விக்கிறதெண்டால் விப்பினமாம். இவர்தான் நாட்டை காட்டிக்கொடுப்பதில்லை, விற்பதில்லை என்று சூளுறைத்துவிட்டாரே. இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

மாட்டு வண்டியிலயா? போயினம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

கூட்டமைப்பினர் கூத்தாடிகளாக இருக்கும் வரையில் தோழர் டக்ளஸ் அவர்களின் காட்டில் மழை தான்.
மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

அபிவிருத்தியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர உரிமையை நிராகரிக்கவில்லை. மக்கள் உரிமைக்குரலை முன்கொண்டு செல்லத்தக்க தலைமையின்மையால்.. மக்கள் அந்தக் குரலை ஆக்கிரமிப்பு சூழலுக்குள் அடக்கி வாசிக்கிறார்களே தவிர..  அங்கு.. அபிவிருத்தியை நோக்கி உரிமையை கைவிட்டதாக அர்த்தப்பட வாய்ப்பில்லை.  பெரும்பான்மையான தமிழ் மக்கள் மனதில் உரிமை தொடர்பில்.. மண் தொடர்பில்.. ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

நெடுக்ஸ்... மிக அருமையான கருத்தை, 
ஆணித்தரமாக.... பதிந்து உள்ளமைக்கு நன்றி. 👏 :)

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொந்தளிப்போடு சூறாவளியும் சேர்ந்து கையில் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போக நடுக்கடலில்  நிர்க்கதியான ஒருவர் ஒரு துரும்பாவது கிடைக்காதா பற்றிக்கொண்டு கரையேறி விடலாம் என்று ஏங்கும் நிலையிலேயே மக்கள் இப்போதுள்ளனர். அநேரத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து வாக்கை கொள்ளையடிக்கின்றனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? எல்லா குள்ள நரிகளிடமும் ஏமாறுவதைவிட வேறு தெரிவு இல்லை. மக்களின் வாக்கை கொள்ளையடித்து கதிரை ஏறுபவர்கள் எல்லாம் யோக்கியர்கள் கிடையாது. வாக்கு போட்டவர் எல்லாம் நன்மை பெற்றவரும் கிடையாது. அவர்கள் குறைகளில் இவர்கள் இலாபம் அடைகின்றனர் அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.