Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

July 22, 2021

spacer.png

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. 

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/163735

  • Replies 110
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... சாமி குத்தமாகப்போகுது! சுத்த பத்தமில்லாமல் சாமியைத்தூக்கி, இருக்கிறதை விட இன்னும் கொட்டுன்னப்போகுது.

1 hour ago, கிருபன் said:

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

அவர்களுக்கும் அந்தப்பயம் தான். மக்களை திருப்பியாச்சு, இப்போ சுவாமியை தூக்கி சமரசம் செய்யினம்.

  • கருத்துக்கள உறவுகள்

2017ல் அய்யர் சொன்னார். வெளியாலை இருந்து காசு வருகுது, கோயில்கள் பெரிசாகுது. ஆனால் கோவில் மணி அடிக்க, சுத்தம் செய்ய ஆள் இல்லை. பெடியள் பிஸி.... அவையள் உந்த வேலைக்கே வரபோகினம்.

கடைசீல தென்பகுதியில் இருந்து தான் சமபளத்துக்கு ஆள் எடுக்கவேணும் போல எண்டு.

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

கோவில் வேலையில் இருந்து நீக்கினாலும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

இதுதான் நிலை. சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

9 hours ago, Nathamuni said:

ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

9 hours ago, Nathamuni said:

சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

வாழை பழத்தில் ஊசி.

இங்கே சாதி பிரச்சனையாலோ, சாமி தூக்க இந்துக்கள் இல்லை என்பதாலோ ஆமி சாமி தூக்கவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி தூக்க வேண்டிய மக்களை வெளியே விட்டு தாங்கள் தூக்கி உள்ளார்கள்.

ஏன் ஆமிக்கி கொரோனா தொத்தாதா?

பிள்ளை தண்டில் உள்வலம் வருவதெண்டால் - ஒரு சில உள்ளூர் இளஞர்களை தேர்ந்து இதை செய்ய விட்டிருக்கலாம். பின்னர் அவர்களை தனிமை படுத்தி இருக்கலாம்.

இப்படி முஸ்லீமோ, தமிழனோ போய் தலதா மாளிகை விடயத்தில் கை வைக்க முடியுமா?

இது நிச்சயமாக கலாச்சார அழிப்பின் ஒரு பங்குதான்.

நீங்கள் தூக்கிறெண்டா… தூக்கவே வேணாம் என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

வாழை பழத்தில் ஊசி.

தல, என்ன காத்தால.... வேறு ஒண்டும் சிக்கலையோ...

ஆள் மாறாட்டம், அடையாள அட்டையில் செய்யவில்லை. அதிகாரிகளுக்கும் பொய் சொல்லவில்லை.

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... அதனை முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

அதுவே காரணமாக சொல்லி, கேஸை முடித்தார்கள் என்று இங்கே ஒரு திரியில் விலாவரியாக விவாதித்து இருக்கிறோம்.

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே. 

Good luck!!

***

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

எனக்கென்னவோ இது, பக்தரை உள்நுழைய விடாமல் தடுத்து,  பிள்ளையாரை தாங்கள் காவிக்கொண்டு புத்தரை மூலஸ்தானத்தில் வைத்தார்களோ என்று சந்தேகமாய் கிடக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

12 minutes ago, Nathamuni said:

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

14 minutes ago, Nathamuni said:

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

15 minutes ago, Nathamuni said:

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

2 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

கோசன் சா என்ற பெயரில், யாழில் முழு நேரமாக வேலை செய்ய, பிராக்கிரசியரின் ஆலோசனை கேட்டனியலோ?

மூதூர் பிள்ளையார் கோவிலில், கோயில் மணி அடிக்க, புக்கை கிண்ட, வாற ஆளுக்கு பிரகிராசி ஆலோசனை.... தேவைதான்...

உங்களுக்கு வேலை இல்லை.... தெரியும்... உங்கள் தமிழுணர்வு குறித்து இந்த தளம் அறியும்.

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை. 

நன்றி.

12 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

உந்த பொட்டையள், உந்த மாதிரி, இளிச்சுக்கொண்டு நிண்டால், சுழட்டமால், வேற என்ன தான் செய்வார்கள்?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே. அதனை. என்னை முட்டாள் ஆக்க ஒருவர், பொதுக்கருத்தாக சொன்னதாக காட்டி விட முனைகிறார்.

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

Edited by Nathamuni

15 hours ago, கிருபன் said:

 

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

இனப்பாசம் மேலிட்டதாலோ என்னமோ - தமிழ் சினிமா ரேஞ்சுக்கு ஏழ்மை, பசி என திரைகதை எழுதி ஆள்மாறட்டம் செய்த நபருக்கு வக்காலத்து வாங்கிறீர்கள்.

ஏதோ ஒரு ஊரில் இருந்து பஸ் காசு கொடுத்து, பஸ் பிடித்து மூதூர் வருவதை விட்டு விட்டு, அந்த காசில் பணிஸ் வாங்கி சாப்பிடலாமே?

பள்ளிவாசலில் இல்லாத உதவியா? நான் ஒரு முஸ்லீம், பண கஸ்டத்தால் கோவிலில் வேலை செய்ய உத்தேசிக்கிறேன் என சொன்னாலே ஓடி வந்து உதவி செய்வார்கள்.

இலங்கையில் வேற வேலையே இல்லையா? கோவில் ஊழியத்தை தவிர?

அவரவருக்கு அவர் மத நம்பிக்கை புனிதமானது. தமது கோவில், பள்ளிவாசல் விடயங்களை தம் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே செய்ய வேண்டும் என விரும்புவது ஓர் அடிப்படை உரிமை.

நீங்கள் முன்பு ஒரு திரியில் CV யில் பொய் சொல்லுங்கள் என்று அட்வைஸ் கொடுத்த ஆள்.

அதே திரியில், நம்பி வேலை தந்த முன்னாள் முதலாளி வேலையை விட்டு நீக்கும் போது அவர் சிஸ்ட்ச்த்தில் சில “கண்ணி வெடிகளை” வைத்து விட்டு வருவதாகவும் சொன்னீர்கள். 

ஆகவே இந்த நபர் செய்தது உங்களுக்கு பெரிதாக தெரியாது - ஆனால் நிச்சயம் இது நம்பி கோவிலுக்கு போகும் மக்களின் மனதை புண்படுத்தவே செய்யும்.

42 minutes ago, Nathamuni said:

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை

மன்னிக்கவும் நான் யாரின் பதிலை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

இன்னும் ஆழ்ந்து பார்த்தால், இந்த மேலாடை இலலாமல் கோவிலில் வணங்கும் வழக்கம், கேரளத்தில் உள்ளது. தமிழகத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே

👇🏼நீங்கள் கூட இங்கே “ வேலையிடத்தில் , வேலைக்காக” என பொதுவாகத்தானே எழுதினீர்கள்? அதற்குத்தான் என் பதில் கருத்து.. 

“இந்த கோயில் வழக்கில், இந்த வேலைக்காக” என்று கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.. 

3 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்...

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாதவர்களுக்கு, CV யில் என்ன சொல்வது என்று என்னத்தை புரியும்.

நான் மாதம் குறைந்தது மூன்று பேருக்கு, வேலைக்கு, CV தயாரிப்புக்கு உதவுகிறேன். வேலையும் எடுக்கிறார்கள். இப்போது தான் ஒரு நேர்முக தேர்வு செய்து, ஒருவர் குறித்த எனது அபிப்பிராயம் சொல்லி வந்தேன்.

நிறுவனங்களில், CV குறித்தும் அதிலுள்ள உண்மைத்தன்மை குறித்து சொல்லி, எப்படி சரியானவர்களை அதனூடு தெரிவு செய்வது என்று டிரைனிங் கொடுக்கிறார்கள். எனக்கும் அந்த ட்ரெயினிங் தரப்பட்டுள்ளது.

முதலில் cv யில் எத்தனை பேர் உண்மை சொல்கிறார்கள் என்று பிரித்தானியாவில் சொல்லப்படும் சர்வே பார்க்கட்டும்.

வீட்டில் குந்தி இருந்து கொண்டு நியாயம் மட்டுமே பிளக்கலாம். யாழில் முழங்காலம். பிரயோசனம் இல்லை.

எனக்கு வேலை இல்லை என்று சொல்லிக்கொண்டே, cv குறித்து அலம்பறை பண்ணுவது வெறும் வெத்து வேட்டுதான்.

இதோ, கொரோனோ லொக்கடவுன் முடிந்து விட்டது. வரப்போகின்றனர் இந்தியர்கள். பட்டேலும், ரிஷியும் (மாமாவின் நிறுவனம் இன்போர்சிஸ்) போரிஸ்க்கு மண்டை கழுவி கதவு திறந்து விட்டாச்சு.

நாம cv ல அதை பண்ணாத, பிடுங்காத எண்டு பிளந்து கட்டுவம் எல்லோ. moral வகுப்பு எடுக்கினம், வேலை என்றால் என்ன என்று தெரியாதவயல்.

அக்கௌன்டன்ட் மார் தமது வேலைகளை IT கொண்டு போகுது என்று உணர்வு இல்லாமல் உள்ளனர்.  அந்த IT யுடன் வரப்போகின்றனர் வெளிநாடுகளில் இருந்து. என்னால் முடிந்த அளவுக்கு உதவுகிறேன்.

இருவர் இப்போது உதவி பெறுகின்றனர். ஒருவர் history டிகிரி. அடுத்தவர் accounting & finance: லண்டன் UCL படிப்பு, அனால் 2-2 வில் பாஸ். பிரயோசனம் இல்லை. ஆனால் IT யில் வேலை எடுக்க முடியும் என்று அவர்களை ஆர்வத்துடன் முயலவைக்கிறேன்.

இருவரும் இங்கே பிறந்தவர்கள், ஒருவர் காபி ஊத்துகிறார், இன்னோருவர் பெற்றிங்  கடையில் வேலை.... இதனை cv யில் சொன்னால் வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள். அல்லது, உங்கள் உதவி தேவை இல்லை, அவர்கள் அப்படியே வேலை செய்யட்டும் என்றாவது சொலுங்கள்.

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

*

cv யில் பொய் சொல்வது என்பதை இங்கே பலர், அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள் போலுள்ளது. பொய் என்பது, இல்லாத கல்வித்தகுதியை இருப்பதாக சொல்வதல்ல. அது எனது professional ethics கும் இல்லை.

உதாரணமாக, நான் ஒரு சாப்ட்வேர் பயிட்சி கொடுத்தால், அவர் அதில் தேர்ச்சி அடைந்த பின்னர், ஒரு நண்பரின் நிறுவனத்துக்கு அனுப்புவது, அந்த நிறுவனம் இந்தியவாவிலோம இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பார். அவரது அலுவலகத்தில் ஒரு மாதம் வேலை செய்தால் cv யில் 6 மாதம் என்று போடுவார். அந்த 6 மாதத்துக்கான கடும் முயல்வினை அந்த ஒரு மாதத்தில் எடுப்பார்.

இப்போது, வேலை ஓன்லைனினில் நடக்கிறது.

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

துரதிஷ்ட்டம், வேலையை நன்றாக செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு பொய் சொல்லவில்லை.

இது நடந்த வழக்கு, பத்திரிகையில் வந்தது, இங்கேயும் விவாதித்து இருக்கிறோம்.

ஆனால், ஏதோ கதை போல, அப்படி இருக்காதோ, இப்படி இருக்காதோ என்று ஒருத்தர், கதை விட்டு, குழப்புகிறாரே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

என்னை பிரகராசி என்றீர்கள். இன்னொரு திரியில் ஒன்லைனில் எதோ செய்கிறேன் என்றீர்கள். பின்னர் யாரோ எனக்கு ஊதியம் தந்து யாழில் எழுகிறேன். இடையில் டியூசன் டீச்சர். இப்போ வேலையில்லாதவன்.

ஓவரா சுத்தவிட்டாச்சு போல 🤣.

ஆனால் CVயில் பொய் சொல்ல கற்றுகொடுக்கும் உங்களுக்கு இதில் உள்ள   Ethics, moral பிரச்ச்னைகள் ஒரு பொருட்டல்ல என்பது தெரிந்ததுதான்.

நம்பி வேலை கொடுத்தவனுக்கு சிஸ்டத்யில் “கண்ணி வெடி சொருகிவிட்டேன்” என மார்தட்டி சொல்லும் நபர்களுக்கு moral compass பழுது என்பது தெரிந்ததுதான்.

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது.

மகளோ? 🥴 ஏன் உங்கள் சிந்தனை இப்படி தறி கெட்டு ஓடுகிறது?

இன்று மோத வேண்டும் என்று வேலை மினக்கெட்டு வந்து, ஏதோ மனதில் வருவதை எல்லாம் அலம்புகிறீர்கள்...

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது. மகளோ? 🥴

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

கடுப்பேறவில்லை, மை லோட்..

உங்களுக்குத்தான் நேரம் இருக்குதே.... ஏதையாவது போட்டு உருட்டி விளாட வேண்டும் எண்டு நான் அப்பப்ப உருட்டி விடுற தேங்காய், உதவுறது மகிழ்ச்சி.

டொட்டடோய்ங்.... தல, லீவைப் போட்டுட்டு கிளம்பப்போறார்.

அதுதான் என்னோட விளாடுடார்.....

நம்மள விட்டுட்டு போகாதீங்கப்பு.... அப்புறம்.... கூல்டவுண் ஆக எங்கை போறதாம். 😂

11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

நீங்கள், வேற... இதுக்குள நிண்டு..... புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு......

நன்றி.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.