Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான்.

நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.

 

சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

அதையே தான், நிழலிக்கு சொன்னேன்.

1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.

1280px-Vasco_da_Gama_perante_o_Samorim_de_Calecute.png

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள். மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..

 

“ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸)
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”

 

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

 

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார்.

அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. 

4 minutes ago, கிருபன் said:

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

*****

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

no comments!!!!

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

 

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது.

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

2 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

சாரி. பாஸ். எனக்கு நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம் கூகிள் மாப்பில்தான் தேடினால்தான் தெரியும். தெரிந்ததெல்லாம் வடமராட்சி மட்டும்தான். யாழ்ப்பாண ரவுண் கூட எட்டிப் பார்க்காமல் தன்னிறைவாக இருந்துவிட்டோம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

நீங்கள், மீண்டும், மீண்டும், சாதியம் என்ற ஒரு விடயத்தினை, மக்களிடம் வழக்கமே இல்லாத ஒரு விடயத்துடன் இணைக்க முனைகிறீர்கள் என்பதே எனது கருத்து.

பெண்களே மேலாடை இல்லாத நிலையில், ஆண்கள், சால்வை போட்டு இருப்பார்கள் என்பது சரியானது அல்ல.

பெண்களின் மார்புக்கச்சையே ஐரோப்பியர் அறிமுகம். ஐரோப்பியர் காலத்தின் பின்னரே மேலாடை பழக்கம் வந்தது. பிரித்தானியருக்கு முன்னான 300 வருட ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கை தீவில் உண்டாகி இருந்த இந்த மாறுதல் காரணமாகவே, 18 மைல் தூரத்தில் இருந்த இலங்கை, இந்தியாவுடன் இணைத்து ஆளப்படவில்லை. 1400 மைல் தொலைவில் இருந்த, அந்தமான், நிக்கோபார் இந்தியாவுடன் சேர்த்து ஆளப்பட்டது.

பிரித்தானியார் காலத்தில், தமிழகத்தில், முலை வரி வழக்கம் இருந்தது. ஆகவே மேலாடை வழக்கம் இல்லை. (மேலாடை போட்டால் வரி)

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

மேலாடை அணியாமல் இருந்த சமூகம், ஏன் மேலாடை புழக்கத்திற்கு வந்தபோது அதை கோயிலுக்கு மட்டும் தடை செய்தது என்ற கேள்வி உங்களுக்கு இன்னமும் வரவில்லை.  வரும்போது விளக்கம் கிடைக்கும்.

👆🏿

2 minutes ago, Nathamuni said:

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

இல்லை கிருபன் அய்யா... உங்கள் லெவலே வேறை...

நிழலியர் சத்தத்தையே காணவில்லை.... என்று ஒரு தூண்டில் போட்டேன். அவ்வளவுதான்....  😜

5 minutes ago, கிருபன் said:

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

வழக்கம் இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

இப்போது அதனை கடந்து குழப்புகிறோம், இல்லையா? 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

 

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

நான் சொன்ன பகுதியை தெரியாதா கிருபன். என்னப்பா நீங்கள். 

தெற்கு எல்லை பொம்மைவெளி 🤣

இப்ப விளங்கி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

 

அப்படி சொல்லுங்கோ... நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை... அதுக்காக, வேலைக்கு ஆள் வைத்திருக்க மாட்டார்கள். சக பக்தர்களே சொல்வார்கள்.

ஆட்டோவில் போனால், சேர்ட்டை கழட்டி உங்க விட்டுட்டு போங்கோ என்பார் ஆட்டோக்காரர்.

அது தெய்வ குத்தம் என்ற படியால், நான் போராட மாட்டேன்... 😜

பொருளாதார நிலைமை கூடுவதால், சாதியம் நாளடைவில் இல்லாமல் போகும் என்றே நினைக்கிறேன். புலம் பெயர் நாடுகளில், இன்னும் இரு தலைமுறையின் பின்னர் இல்லாது போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை...

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

உல்லாசப்பயணிகள், சிங்களவர் எல்லோருமே. 

இந்தாள் சேட்டு போடவில்லை, ஏன் எண்டு நினைக்கிறியள்? சாதியம்?

large.Temple.jpg.bd67ed3c4da23ff10b373bf74feb631a.jpg

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 1K devotees to be allowed into Kerala's Guruvayur temple from September 10-  The New Indian Express

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு  கிருபன் ஜி,

ஒரு தடவை பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து கொண்டார்களாம். அப்போ அம்பேத்கர் பெளத்தத்தை தழுவும் படி பெரியாருக்கு கூற அவர் சொன்னாராம், இந்த மதத்தை விட்டு வெளியேறிய மறு நிமிடம் இதில் உள்ள குறைகளை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறேன். ஆகவே மாற முடியாது என்று.

ஒரு மதத்தில் உள்ள பிற்போக்கான கூறுகளை விமர்சிக்க அந்த மதம் சார்ந்தவர்களாக், இடம் சார்ந்தவர்களக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பிழைகள் விளங்கும்.

2009 க்கு பிறகு சுற்றுலாவில் நல்லூருக்கு போய் - ஆட்டோகாரனிடம் தலவரலாறு படித்தவர்களிடம் எல்லாம் நீங்கள் விவாதிப்பது நேர மினெக்கேடு.

இது தம்மை தமிழர்களாக முன்னிறுத்த போடப்படும் போலி ஆசாரவாதி வேடம்.

பிற்சேர்க்கை

Lunar calendar எனும் நிலவு ஓட்டத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றுவார்கள். இப்போதான் உறைத்தது 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

 

இதுதான் உண்மை.

அண்ணை,

இப்போ நல்லூரில் இருக்கும் நடைமுறை இதுதான். எங்கள் ஊரிலும் இப்படி ஒரு நடைமுறைதான் இருக்கிறது.

அத்தோடு சேர்ட் வர முதலே - சால்வையை போட்ட படி கோவிலுக்குள் வர கூடாது என்ற நடை முறையும் இருந்திருக்கலாம். 

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மானிப்பாயில் இருக்கும் சந்தைக்கு பெயர் ரவிக்கை சந்தை. முதன் முதலில் தாழ்தபட்ட பெண்கள் ரவிக்கை அணிந்து வர அனுமதிக்கபட்ட சந்தை என்பதால்.

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

ஆகவே மேலாடைக்கும் சாதியத்துக்கும் உள்ள தொடர்பு பொய்யல்ல.

இப்போ குறிப்பாக நல்லூர் போன்ற தெற்கில், வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆட்கள் வரும் கோவில்களில் இது ஒரு வழமையான நடைமுறைதான். 

இப்போ மகிந்தவை சேர்ட் கழட்ட வைக்க சாதி காரணம் இல்லை. 

ஆனால் இந்த நடைமுறை ஆதியில் வர சாதி காரணமா?

எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் கிருபனின் கேள்வியின் நியாயம் விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

அது புத்தர் ஞானம் அடைந்தது பெளர்ணமியில் என்பதால். 

ஆனால் முஸ்லீம்களின் முழு வாழ்க்கையுமே நிலவை வைத்துத்தான்.

அடிகடி நிலவின் நிலைகளையும் செக் பண்ணி அதன்படி சமய அனுஸ்டானக்களை செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

உண்மைதான். 80/90 களின் போதே ஒரு மூக்கொழுகும் சிறுவனாக எனக்கு சிலது என் பெற்றாரின் பெற்றாரால் ( ஒரு பகுதி) சொல்லப்பட்டிருக்கிறது.

யார் வளவுக்குள் வரலாம், யார் கிணற்றில் தண்ணி அள்ளலாம், யார் சமயலறை வரை வரலாம். எப்படி, எங்கே வைத்து தேனீர் குடிக்கலாம். எத்தனையாவது பந்தியில் யார் உட்காரலாம்.  இப்படி வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் இது இருந்தது.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல, குறிச்சி, வட்டாரம் தெருப்பெயர்…நாரந்தனையில் வடக்கா, தெற்கா என கேட்பார்கள்.

இங்கே வெளிநாட்டில், எவ்விடம் தம்பி? யாழ்பாணம். ஓம் எல்லாரும் யாழ்பாணம்தான், யாழ்பாணத்தில் எவ்விடம்? ஊர் பேரை சொன்னால் - கோவிலுக்கு இடமோ, வலமோ? இப்படி உங்களை சில குறியீடுகள் மூலம் சாதி அறிவது யாழில் எப்போதும் நடப்பதுதான்.

இந்த பிண்ணனியில் மேலாடை விடயத்தையும் பார்க்லாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪

உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, 🙏

சும்மா விசயமே இல்லாமல், திரியை கடத்தி, உருட்டிக்கொண்டு அலம்பறை பண்ணாமல், நிதானத்துடன் யாரும் பேசினால் பேசலாம்.

பச்சை... சா...சா... நேரம் முடிந்து விட்டது.... வெளியால போகவேணும்... சந்திப்போம்... 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.