Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்': மலசலகூடத்துக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதி - ரிஷாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


59682616_2359056400820686_45143166230410

இன்று (04) அவர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

கௌரவ சபாநாயகர் அவர்களே,

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்த போது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே. வேறு எந்தக் காரணமும் இல்லை. 

‘24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்': மலசலகூடத்துக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதி - ரிஷாத் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

 

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

மலசலத்தையும் மூடிய அறைக்குள்ளேயே போக அனுமதிக்குமாறு மாண்புமிகு ஜனாதிபதியிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அத்துடன் அரசியல்வாதிகளாக இருந்து அதிகம் ஆட்டம்போடுபவர்களுக்கு “ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவா மனிதா”என்ற பாடலை பதிவு செய்து தினமும் காலை மாலை கேட்க ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.வொகோம ஸ்துதி ஜனாதிபதிதுமணி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆசுப்பத்திரி மருந்து திருகுதாளம்...என்னமாதிரி..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வீரகேசரி க்கு 102 நாட்கள் எத்தனை மாதம் என்றாவது தெரியுமா ?

எல்லாரும் அவர்களின் வறுமையை வைத்து விளையாடுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப ஆசுப்பத்திரி மருந்து திருகுதாளம்...என்னமாதிரி..

எல்லாம் மறந்திருப்பார்கள் அல்லது எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனை... தற்போது விளக்கமறியலில் உள்ள,
அவரது மனைவி, மாமன், மச்சான்மாருடன்...
ஒன்றாக இருந்து... "களி தின்ன" அனுமதிக்கும் படி  வேண்டுகின்றோம்.

மறியலில் உள்ள இவ(ரை)னை... பாராளுமன்றத்துக்குள் அனுமதித்ததே பெரிய தவறு.    😡

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:


மறியலில் உள்ள இவ(ரை)னை... பாராளுமன்றத்துக்குள் அனுமதித்ததே பெரிய தவறு.    😡

பாராளுமன்றத்திற்குள் இருபவர்களெல்லாம் மறியலில் இருந்தவர்களும், இருக்க வேண்டியவர்களுமே. சனாதிபதி உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

11 பெண்கள். நீங்கள் குடும்பதலைவனாக இருந்த வீட்டில், வீட்டுச்சிறை, சித்திரவதை, பாலியல் வதை என அனுபவித்த கொடுமைகளோடு ஒப்பிட்டால் இது ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை.

நீங்கள் அமைச்சராக இருந்த காலங்களில், குற்றமே செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்ட, இன்னும் விடுவிக்கபடாமல் உள்ள பலரோடு ஒப்பிட்டாலும் அப்படியே.

மூடீட்டு (வாயைத்தான்) உக்காருங்க🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிழம்பு said:

“என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள்

பயபுள்ள தமிழர்கள்தான் தன்னை மாட்டிவிட்டதாக மறைமுகமாக சொல்லுதுபோல. பிரச்சனையில்லை இப்போ சிங்களவர்கள் உங்களைவிட நாங்கள் பரவாயில்லையென்று ஈஸ்டர் தாக்குதலுடன் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

நாங்கள் கண்ணுக்கு தெரிந்த நேர்மையான எதிரிகள், வாழ்வோ சாவோ நேரடியாகவே மோதினோம் கூட இருந்து அவர்களுக்கு  குழிபறிக்கவில்லை.

சிங்களவர்கள் எம் நிலத்தை அபகரிப்பதைகூட ஒருவிதத்தில் நியாயபடுத்தலாம், அவர்கள் எம்மோடு போரிட்டு வென்றவர்கள் , போரில் வென்றவர்கள் எப்போதும் தோற்றவர்களை அடக்கியாளத்தான் நினைப்பார்கள் அது உலக வழமை.

போரில் வென்றது அவன், தோற்றது நாங்கள் ,ஆனால் போர் முடிந்த கையோடு வவுனியா முல்லைதீவு, மன்னார்  கிளிநொச்சி என்று அசுரவேகத்தில் தமிழர் நிலங்களை  சுவீகரிக்கவும் முஸ்லீம்களை குடியேற்றவும் முனைப்பு காட்டிய நீங்கள் யார்? 

மைத்திரி ஆட்சியின்போது, கிழக்கில் தமிழர்களிடமிருந்து இஸ்லாமியர் கைக்கு கொண்டு வந்துவிட்டோம், அடுத்து வடக்குத்தான் என்று எக்காளமிட்ட எத்தனையோ இலங்கை முஸ்லீம்களின் பதிவுகளை முகநூலில் பாத்திருக்கிறேன்.

இறுதிபோரின் பின்னர் சிங்கள தேசமெங்கும் பால் சோறும் சிங்க கொடியும் என்று களை கட்டியது, அதில் தவறில்லை,  அவன் எங்கள் எதிரி, சில தசாப்தங்களாக சிங்கள இனத்தின் இருப்பு இனி சிறிலங்காவில் என்னாகுமோ என்று அவர்கள் அஞ்சும் அளவிற்கு அவன் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய எம்மை  வெற்றி கொண்டதில் அவன் சந்தோசமாயிருந்தான், அதில் அவன் பக்கம் நியாயம் உண்டு.

ஆனால் அவர்களைவிட அதிக உணச்சி கொந்தளிப்பில் சிங்ககொடியை கொண்டு தெருக்களில் அங்கும் இங்கும் வேகமாக கும்பலாக ஓடினீர்கள், பால்சோறை நடனம் ஆடி ஆடியே உண்டீர்கள், எல்லாமே நினைவிருக்கு.

இவ்வளவும் செய்துவிட்டு  சிங்களவன் கூட இருந்தே சஹ்ரானின் பின்னணியிலிருந்து அவனுக்கே ஆப்பு வைத்தீர்கள், கண்ணுக்கு தெரியாத எதிரியான உங்களை அவன் மன்னிக்கவே தயாரில்லை,  

இப்போ என்ன அவசரம் ,வெளியில வந்து என்ன பண்ண போறீங்க?  தமிழர்பகுதி காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட இஸ்லாமிய குடியேற்றங்கள் பாதியில் நிக்குதா? ஆறுதலா இன்னும் சில வருஷங்கள் உள்ளே இருதிட்டு வாங்கோ ரிசாத் நானா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.