Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை உறுதிப்படுத்துவதற்கான சோதனைகள், பொது இடங்களில் நடத்தப்படும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கோவிட் மூன்றாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் டெல்டா திரிபு வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோவிட்-19 தடுப்புக்கான செயலணி இன்று (13) கூடியது.

கோட்டபாய

பட மூலாதாரம்,PMD

இந்த கூட்டத்தின்போது, பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் கடுமையாக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், ஆடைத் தொழில்துறை, விவசாயம், துறைமுகம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு நேற்று முன்தினம் (11) பதிவானதாக நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்று முன்தினம் 156 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தன.

கொரோனா

பட மூலாதாரம்,PMD

இந்த நிலையில், கோவிட் முதலாவது அலையில் 13 பேர் உயிரிழந்திருந்ததுடன், இரண்டாவது அலையில் 596 பேர் உயிரிழந்திருந்தனர்.

மூன்றாவது அலையில் 5 ஆயிரம் பேர் பலி

எனினும், கோவிட் மூன்றாவது அலையில் 5,011 பேர் உயிரிழந்துள்ளதாக கோவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் பதிவான கோவிட் உயிரிழப்புக்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா

பட மூலாதாரம்,NATIONAL COVID TASK FORCE

இதேவேளை, நாட்டை முழுமையாக மூடுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இனிவரும் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 345,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இனி காட்டையும் சுமந்து திரிய வேண்டுமா என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனி காட்டையும் சுமந்து திரிய வேண்டுமா என்ன ?

இல்லை

தொலைபேசியில் வைத்துக்கொள்ளலாம்

அதற்காக ஒரு லிங்க் தந்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இனி காட்டையும் சுமந்து திரிய வேண்டுமா என்ன ?

மேற்கு நாடுகளிலும் விரைவில் வரப்போகின்றது.  டிஜிரலாக கைத்தொலைபேசியுடன் இணைக்கும் திட்டமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இல்லை

தொலைபேசியில் வைத்துக்கொள்ளலாம்

அதற்காக ஒரு லிங்க் தந்திருக்கிறார்கள்

 

1 minute ago, nunavilan said:

மேற்கு நாடுகளிலும் விரைவில் வரப்போகின்றது.  டிஜிரலாக கைத்தொலைபேசியுடன் இணைக்கும் திட்டமும் உண்டு.

இரண்டு ஊசிகளும் போட்ட பின்னரே அடையாள அட்டை போல   ஒரு காட் கொடுப்பார்கள் என சொல்கிறார்கள் ஒன்லைனில் பதியப்பட்டு வருகிறது  பலர் போண் சிஸ்டம் தெரியாதவர்கள் உள்ளதால் அட்டை ஒன்றை வழங்க உள்ளதாக சொல்கிறார்கள் ஏற்கனவே ஓர் அட்டை கொடுத்து இருக்கிறார்கள் அதன் பிரதி வேலை செய்யும் இடங்களில் கொப்பி பண்ணப்பட்டு தனிப்பட்ட பைல்களில் இணைக்கப்பட்டுள்ளது  இங்கே அது இருந்தால் தான் வேலைக்கும் செல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனி காட்டையும் சுமந்து திரிய வேண்டுமா என்ன ?

 

5 hours ago, விசுகு said:

இல்லை

தொலைபேசியில் வைத்துக்கொள்ளலாம்

அதற்காக ஒரு லிங்க் தந்திருக்கிறார்கள்

அப்ப உறிதி ஆகிட்டுது தனி பிரான்ஸ்சில் தான் என்று.😄

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

இரண்டு ஊசிகளும் போட்ட பின்னரே அடையாள அட்டை போல   ஒரு காட் கொடுப்பார்கள் என சொல்கிறார்கள் ஒன்லைனில் பதியப்பட்டு வருகிறது  பலர் போண் சிஸ்டம் தெரியாதவர்கள் உள்ளதால் அட்டை ஒன்றை வழங்க உள்ளதாக சொல்கிறார்கள் 

என் அம்மாவுக்கு இரண்டு ஊசிகளும் போட்டு ஒரு கார்ட் கொடுத்துள்ளனர். ஒன்றுக்கு மூன்று பிரதி எடுத்து வைத்து கொண்டு தேவைக்கு மட்டும் வெளியில் போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

என் அம்மாவுக்கு இரண்டு ஊசிகளும் போட்டு ஒரு கார்ட் கொடுத்துள்ளனர். ஒன்றுக்கு மூன்று பிரதி எடுத்து வைத்து கொண்டு தேவைக்கு மட்டும் வெளியில் போகின்றார்.

நான் ஒரு ஊசி  போட்டுவிட்டேன் வரும்24ம் திகதி அடுத்த ஊசி அதன் பின்னர் தான் காட் வைத்துக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

நான் ஒரு ஊசி  போட்டுவிட்டேன் வரும்24ம் திகதி அடுத்த ஊசி அதன் பின்னர் தான் காட் வைத்துக்கொள்ளலாம். 

இல்லையே முதலாவது ஊசி போட்டதும் பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண் போன்றவற்றை பதிந்த அட்டை வழங்கப்பட்டதே!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இல்லையே முதலாவது ஊசி போட்டதும் பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண் போன்றவற்றை பதிந்த அட்டை வழங்கப்பட்டதே!

இரண்டாவதும் எடுத்துக்கொண்டால்தான் காட் செல்லுபடியாகுமாம் என்னிடம் காட் இருக்கிறது ஆனால் இறண்டாவதை போட்டுக்கொண்டாலே அது செல்லுபடியாகும் எல்லா இடங்களுக்கும் அட்டையை காண்பித்து செல்லலாம் 

23 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப உறிதி ஆகிட்டுது தனி பிரான்ஸ்சில் தான் என்று.😄

 யாரிட்டயும் சொல்லிடாதீங்க அண்ண நம்ம சுவி அண்ணை , விசுகர் ஆள் போட்டு தேடுவாங்கள் என்னை

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இல்லையே முதலாவது ஊசி போட்டதும் பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண் போன்றவற்றை பதிந்த அட்டை வழங்கப்பட்டதே!

அதற்கும் ஒரு பதில் கைவசமுண்டு எம்மிடம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2021 at 03:56, சுவைப்பிரியன் said:

அப்ப உறிதி ஆகிட்டுது தனி பிரான்ஸ்சில் தான் என்று.

யார், எங்கு வாழ்கிறார்கள் என்பதில் இல்லை பிரச்சனை. பிரச்சனையே பொருத்தமில்லா இரட்டை 
 வேஷத்திற்தான்.  அப்பப்ப மாத்தி, மாத்தி பேசி மாட்டுப்பட்டு முழிக்க வேண்டியுள்ளது.  ஆனாலும் சமாளித்து விடுவோமில்ல! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

யார், எங்கு வாழ்கிறார்கள் என்பதில் இல்லை பிரச்சனை. பிரச்சனையே பொருத்தமில்லா இரட்டை 
 வேஷத்திற்தான்.  அப்பப்ப மாத்தி, மாத்தி பேசி மாட்டுப்பட்டு முழிக்க வேண்டியுள்ளது.  ஆனாலும் சமாளித்து விடுவோமில்ல! 

ஐயோ பாவம் சார் நீங்கள் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.