Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல அரச ஊழியர்களும் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்குங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதுரை ஹஷான்

 

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்   சகல அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே நாட்டை   முழுமையாக முடக்க முடியும்.

நாட்டை முடக்கினால்  நடுத்தர மக்களுக்கும், குறை வருமானம்  பெறுபவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என  சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத  வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும்  சமூக சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

 

sisira.JPG

 

களுத்துறையில்  இடம்  பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாட்டை  வார கணக்கில் முழுமையாக மூடுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு நாட்டை முடக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால் பொருளாதார  மட்டத்தில் ஏற்படும் சிக்கல் நிலை குறித்து எவரும்  கருத்துரைக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால். நாட்டை தாராளமாக மூடலாம். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினால் குறைந்த வருமானம் பெறுபரும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நன்கொடைகளால் சேமிக்கப்படும் பணத்தை  நாட்கூலி பெறும் சுமார் 80 இலட்சம் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

சகல அரச ஊழியர்களும் மாத சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்குங்கள் - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

 சகல அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே நாட்டை   முழுமையாக முடக்க முடியும்.

வெளிநாடுகள் கைகொடுக்கும் என்கிற கனவில், இராணுவம் விரட்டியடிக்கும் என்று சவால் விட்டிட்டு, இப்போ உள்ளூரில் உதவி (பிச்சை) பாத்திரம் குலுக்குகினம். இதற்கு எதற்கு அரசாங்கம்? அரச ஊழியர்களே திண்டாடுகினம், இவர்கள் வேறு. சரி இப்போதைக்கு சமாளிக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், வரப்போகிற பொருளாதார நெருக்கடியை எப்படி தீர்ப்பினம்? எனக்கென்னவோ தமிழரின் வங்கியில் உள்ள பணத்தை நினைக்க பயமாக இருக்கிறது. அதுவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு வைப்புச் செய்திருந்தால்.....?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

வெளிநாடுகள் கைகொடுக்கும் என்கிற கனவில், இராணுவம் விரட்டியடிக்கும் என்று சவால் விட்டிட்டு, இப்போ உள்ளூரில் உதவி (பிச்சை) பாத்திரம் குலுக்குகினம். இதற்கு எதற்கு அரசாங்கம்? அரச ஊழியர்களே திண்டாடுகினம், இவர்கள் வேறு. சரி இப்போதைக்கு சமாளிக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், வரப்போகிற பொருளாதார நெருக்கடியை எப்படி தீர்ப்பினம்? எனக்கென்னவோ தமிழரின் வங்கியில் உள்ள பணத்தை நினைக்க பயமாக இருக்கிறது. அதுவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு வைப்புச் செய்திருந்தால்.....?

சச்ச அப்படி எடுக்க மாட்டம் அந்த பணத்தை வட்டியை கொடுக்காமல் எடுத்துக்கொள்வோம் பல பேரின் பணம் பிக்ஸ்சில் கிடக்கு சாட்டானுக்கு எவ்வளவு கிடக்கு ??

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சச்ச அப்படி எடுக்க மாட்டம் அந்த பணத்தை வட்டியை கொடுக்காமல் எடுத்துக்கொள்வோம் பல பேரின் பணம் பிக்ஸ்சில் கிடக்கு சாட்டானுக்கு எவ்வளவு கிடக்கு ??

அதெப்படி உவ்வளவு உறுதியாய் சொல்லுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அதெப்படி உவ்வளவு உறுதியாய் சொல்லுகிறீர்கள்?

நீங்கள் மட்டும் எப்படி  பணத்தினை வைப்பு செய்தவர்களின் பணத்தை அரசாங்கள் எடுக்கும் என சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் மட்டும் எப்படி  பணத்தினை வைப்பு செய்தவர்களின் பணத்தை அரசாங்கள் எடுக்கும் என சொல்கிறீர்கள்?

அரசின் எல்லா அடாவடியையும் அனுபவித்து, இன்றும் வாழிடங்களை உறுதியிருந்தும் மீட்க முடியாமல் மௌனம் காக்கிறோம், அவர்கள் மிளகாய் பிடுங்குகிறார்கள் தங்களுக்கு தெரியாதோ? உறவுகளை பிடுங்கிக்கொண்டு போட்டு தான் அறியேன் என்கிறான். போரின்போது எடுத்த நகைகளை தருவதாக கூறி ஒரு நாடகம் நடத்தினார்கள் பார்க்கவில்லையோ? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையோ ராசா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அரசின் எல்லா அடாவடியையும் அனுபவித்து, இன்றும் வாழிடங்களை உறுதியிருந்தும் மீட்க முடியாமல் மௌனம் காக்கிறோம், அவர்கள் மிளகாய் பிடுங்குகிறார்கள் தங்களுக்கு தெரியாதோ? உறவுகளை பிடுங்கிக்கொண்டு போட்டு தான் அறியேன் என்கிறான். போரின்போது எடுத்த நகைகளை தருவதாக கூறி ஒரு நாடகம் நடத்தினார்கள் பார்க்கவில்லையோ? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையோ ராசா?

ஆட்சி மாறும் காட்சிகளும் கட்சி கொள்கைகளுமே மாறுது  நாங்களே இலவு காத்த கிளி ஐயா  எந்த நேரம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் வாழுகிறம் இதில நீங்கள் தங்கம், காணி நிலம் என்று சொல்லி காலம் கடந்து போகிறது நடப்பதை யோசியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சச்ச அப்படி எடுக்க மாட்டம் அந்த பணத்தை வட்டியை கொடுக்காமல் எடுத்துக்கொள்வோம் பல பேரின் பணம் பிக்ஸ்சில் கிடக்கு சாட்டானுக்கு எவ்வளவு கிடக்கு ??

 

46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் மட்டும் எப்படி  பணத்தினை வைப்பு செய்தவர்களின் பணத்தை அரசாங்கள் எடுக்கும் என சொல்கிறீர்கள்?

ஆதாரம் கேட்டீர்கள் தந்தேன் ஐயா! இப்படி நழுவுகிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சாட்டானுக்கு எவ்வளவு கிடக்கு ?

எப்பிடிப்பாத்தாலும் ஒரு கோடியும், முற்றமும் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால 2 பேர் இங்க 2 பேர் ஒரே ஜாலி தன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

வெளிநாடுகள் கைகொடுக்கும் என்கிற கனவில், இராணுவம் விரட்டியடிக்கும் என்று சவால் விட்டிட்டு, இப்போ உள்ளூரில் உதவி (பிச்சை) பாத்திரம் குலுக்குகினம். இதற்கு எதற்கு அரசாங்கம்? அரச ஊழியர்களே திண்டாடுகினம், இவர்கள் வேறு. சரி இப்போதைக்கு சமாளிக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், வரப்போகிற பொருளாதார நெருக்கடியை எப்படி தீர்ப்பினம்? எனக்கென்னவோ தமிழரின் வங்கியில் உள்ள பணத்தை நினைக்க பயமாக இருக்கிறது. அதுவும் வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்கு வைப்புச் செய்திருந்தால்.....?

அப்படிஎடுக்கிறது என்றால் நீங்கள் எல்லாம் எவெளி நாட்டுக்கு ஓடி வந்த உடனேயே உங்கட காசை எல்லாம் ஆட்டையைப் போட்டு இருப்பினம் 

6 hours ago, satan said:

அரசின் எல்லா அடாவடியையும் அனுபவித்து, இன்றும் வாழிடங்களை உறுதியிருந்தும் மீட்க முடியாமல் மௌனம் காக்கிறோம், அவர்கள் மிளகாய் பிடுங்குகிறார்கள் தங்களுக்கு தெரியாதோ? உறவுகளை பிடுங்கிக்கொண்டு போட்டு தான் அறியேன் என்கிறான். போரின்போது எடுத்த நகைகளை தருவதாக கூறி ஒரு நாடகம் நடத்தினார்கள் பார்க்கவில்லையோ? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையோ ராசா?

நகைகளை அந்த மக்கள் புலிகளை நம்பியோ /நம்பாமலோ கொடுத்தது ...புலிகளுக்கு கொடுத்தது தங்களுக்கு உரியது என்று அரசு நினைத்திருக்கலாம் .
அந்த நகைகளை திரும்பி மக்களிடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்கு உண்டு ...அவர்கள் இல்லாதவிடத்து அந்த நகைகளுக்குரிய பணத்தை வெளி நாட்டில் பணத்தை சுருட்டியவர்கள் அந்த மக்களிடம்  திருப்பி கொடுக்கலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

எப்பிடிப்பாத்தாலும் ஒரு கோடியும், முற்றமும் கிடக்கு.

ம் இப்ப கோடிக்கும் அதிகமாக செல்கிறது காணி நமக்கு எதுவும் இல்லை எல்லாம் சுனாமி அள்ளி சென்று விட்டது 

2 hours ago, சுவைப்பிரியன் said:

அங்கால 2 பேர் இங்க 2 பேர் ஒரே ஜாலி தன்.😁

களம் சூடாக இருக்க வேண்டாமா அண்ண🙂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆட்சி மாறும் காட்சிகளும் கட்சி கொள்கைகளுமே மாறுது  நாங்களே இலவு காத்த கிளி ஐயா  எந்த நேரம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் வாழுகிறம் இதில நீங்கள் தங்கம், காணி நிலம் என்று சொல்லி காலம் கடந்து போகிறது நடப்பதை யோசியுங்கள் 

 என்ன இப்படிச் சலிச்சுக்கிறீங்க.. இதோ பிள்ளையான் வாரார்.. இதோ கொம்மான் வாரார் என்று வலு சந்தோசப்பட்ட மாதிரி தெரிஞ்சுது..?! அவையெல்லாம் என்ன ஆக்களையே காட்டினமில்ல.. பைசாவை காட்டுவினமா.. என்ன நிலைமை..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

 என்ன இப்படிச் சலிச்சுக்கிறீங்க.. இதோ பிள்ளையான் வாரார்.. இதோ கொம்மான் வாரர் என்று வலு சந்தோசப்பட்ட மாதிரி தெரிஞ்சுது..?! அவையெல்லாம் என்ன ஆக்களையே காட்டினமில்ல.. பைசாவை காட்டுவினமா.. என்ன நிலைமை..??!

யோவ் கொரோனா வந்ததால அவங்களுக்கும் இந்த நிலைதான் என்ன அவங்க காட்டிக்கொள்ளமாட்டாங்கள் நாங்க காட்டிக்கொள்கிறோம் வடிவேல் சொல்வது போல எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கைய்யா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் மட்டும் எப்படி  பணத்தினை வைப்பு செய்தவர்களின் பணத்தை அரசாங்கள் எடுக்கும் என சொல்கிறீர்கள்?

கட்டாயம் எடுப்பார்கள் திருப்பி தருவோம் எனும் உறுதிமொழியுடன் .உலகில் நடந்து உள்ளது அப்படி உறுதி மொழி காற்றில் பறந்ததும் உண்மை .

நாட்டின் எரிபொருள் இருப்பு பற்றி உண்மையை சொன்ன  தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டுள்ளார். நிலைமை தறிகெட்டு ஓடுது பாஸ் அடுத்த கிழமை என்ன நடக்கும் எது உருளும் எது ஓடும் என்று தெரியாமல் லங்கா இருக்குது .

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் வாசகம்

கொரானாவை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் ....
புலிகளை அழித்தோம், இவர்களை அழிக்க முடியாமைக்கு காரணம் இவர்கள் வேற்று கிரக வாசிகள் ......
 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சச்ச அப்படி எடுக்க மாட்டம் அந்த பணத்தை வட்டியை கொடுக்காமல் எடுத்துக்கொள்வோம் பல பேரின் பணம் பிக்ஸ்சில் கிடக்கு சாட்டானுக்கு எவ்வளவு கிடக்கு ??

என்கூற்றுக்குஆதாரம் கேட்டீர்கள் தந்தேன். உங்கள் கூற்றுக்கு ஆதாரம் கேட்டால், வேறு எதையோ சொல்லுகிறீர்கள். **** பதில் தர முடியாதவிடத்து நழுவுவது, பேச்சை மாத்துவது, அடாவடி பண்ணி விலகுவது.

 

16 hours ago, ரதி said:

அப்படிஎடுக்கிறது என்றால் நீங்கள் எல்லாம் எவெளி நாட்டுக்கு ஓடி வந்த உடனேயே உங்கட காசை எல்லாம் ஆட்டையைப் போட்டு இருப்பினம்

அக்காச்சி நடந்ததை ஏற்கெனவே எழுதி விட்டேன்.

 

16 hours ago, ரதி said:

அந்த நகைகளை திரும்பி மக்களிடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்கு உண்டு ...அவர்கள் இல்லாதவிடத்து அந்த நகைகளுக்குரிய பணத்தை வெளி நாட்டில் பணத்தை சுருட்டியவர்கள் அந்த மக்களிடம்  திருப்பி கொடுக்கலாம் 

நீங்கள் சொல்வது நிஞாயந்தான். புலிகளின் நிதியலுவலை கையாண்டவர் வி. முரளிதரன். அவரே சொல்லியிருக்கிறார் தான் நிதியை களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டது என. அவர் உயிரோடு, இலங்கையின் பணக்காரர் வரிசையில் இருக்கிறார். அடுத்தது குமரன் பத்மநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன். இவர்கள் பொறுப்பெடுக்கட்டும்.

Edited by மோகன்
*** - நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

அங்கால 2 பேர் இங்க 2 பேர் ஒரே ஜாலி தன்.😁

நீங்களும் ஜாலியா சுற்றி சுழன்று கொண்டுதானிருக்கிறியள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.