Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

உலக நாடுகள்  வாயை  மூடிக்கொண்டு இருக்கிறது  நீங்கள்  இங்கே கருத்து தெரிவித்து கொண்டுயிருக்கிறீர்கள் எனவே உங்ககிட்ட கேட்ட கேள்வி சரியானது மீண்டும்  நான்  கேக்கிறேன். உங்கள்  கருத்து என்ன?

அதைத்தான் சொல்லிவிட்டேனே? எனது கருத்து உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே. 😃

  • Replies 118
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு தமிழனின் பொருளாதாரத்தை அழித்து, உரிமைகளை பறித்து, இனச்சுத்திகரிப்பு செய்தவன் எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் தலையை நிமித்தி செய்தவைகளை நிஞாயப்படுத்திக்கொண்டு திரியிறான். வேறு வழியில்லாமல் தம்மை பாதுகாக்க ஆயுதம் தூக்கியவர்களை  அப்பப்ப கட்டியடிக்கினம் பரிசுத்தவான்கள். செத்த பாம்பை அடிக்கும் வீரர்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கற்பகதரு said:

அதைத்தான் சொல்லிவிட்டேனே? எனது கருத்து உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே. 😃

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை மட்டுமல்ல மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

திட்டமிட்டு தமிழனின் பொருளாதாரத்தை அழித்து, உரிமைகளை பறித்து, இனச்சுத்திகரிப்பு செய்தவன் எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் தலையை நிமித்தி செய்தவைகளை நிஞாயப்படுத்திக்கொண்டு திரியிறான். வேறு வழியில்லாமல் தம்மை பாதுகாக்க ஆயுதம் தூக்கியவர்களை  அப்பப்ப கட்டியடிக்கினம் பரிசுத்தவான்கள். செத்த பாம்பை அடிக்கும் வீரர்.

ஓட்டு மொத்தத் தமிழரும். புலிகளும். புலி ஆதரவாளர்களாகவும் இருந்தால் பிரச்சனை எப்போது தீர்திருக்கும். தமிழர்களின் ஒருசிறுபான்மையினர் புலிகளை எதிர்ப்பதே பிச்சனை. தீராமைக்கு முக்கியமான காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த தமிழரும் புலிகளாகவே சிங்களம் அழித்தது, இன்றுவரை அழித்துக்கொண்டும் இருக்கிறது. புலி எதிர்ப்பாளரைவிட எஜமானை காக்கிறவர்களும், நிஞாயப்படுத்துகிறவர்களுமே அதிகம். அதனால குற்றவுணர்வும் இல்லை, பிரச்சனையை தீர்க்கும் அவசியமுமில்லை என்றாகிவிட்டது.

58 minutes ago, Kandiah57 said:

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை மட்டுமல்ல மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

இரண்டுகையும் சேர்ந்தாற்தான் ஓசை வரும், ஒருகை தட்டுவதால் எந்தப்பயனும் இல்லை. கை வலிக்கத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

ஓட்டு மொத்தத் தமிழரும். புலிகளும். புலி ஆதரவாளர்களாகவும் இருந்தால் பிரச்சனை எப்போது தீர்திருக்கும். தமிழர்களின் ஒருசிறுபான்மையினர் புலிகளை எதிர்ப்பதே பிச்சனை. தீராமைக்கு முக்கியமான காரணம் 

 

தமிழீழ விடுதலை புலிகள் மக்கள் முன்னணி எனும் பெயரில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் கட்சி தொடங்கினார்கள். இதை பின்னர் கைவிட்டது தவறு.

பல குழப்பங்களுக்கு இதுவும் ஓர் காரணம்.

இந்த விடயத்தில் கருணா, டக்லஸ் ஆகியோர் வியூகம் சிறந்தது. அவர்கள் ஆயுத குழுக்களை பிரசன்னம் செய்யும் வகையில் அரசியல் கட்சி அமைத்து செயற்படுகிறார்கள்.

ஜே.வி.பி கூட இதற்கு முன் உதாரணம்.

தமக்கு மக்கள் வாக்குகள் விழுகின்றன என்பதை காண்பிக்க இதுவே ஒரு வாய்ப்பு.

வெறும் ஊகங்களும், அழுத்தங்களும், வெருட்டல்களும் அடாவடியும் மக்கள் ஆதரவின் காட்டிகள் அல்ல. அது யார் என்றாலும்.

தங்கள் கொள்கையை முன்னெடுக்க தாங்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சியை நடத்தாமல் வேறுபாடான சித்தாந்தம் கொண்ட இவர்கள் வருகைக்கு முன்பே தோன்றிய கட்சிகளை  பின்னே நின்று ஆட்டுவதும், அழுத்தம் கொடுப்பதும் சரியான வியூகம் இல்லை.

விடுதலை புலிகள் தோல்விக்கு இந்த பக்கத்தையும் அலசி பார்க்கலாம்.

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

 

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

ஆயுதம் தூக்கினவை மிகுந்த பொறுப்போடு இருந்திருக்கவேணும், மக்கள் தொகை குறைந்த எமது இனம் உட்பகையாலயும் பெரிய அழிவைச் சந்திச்சிட்டுது.
நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதியாகத்தான் வல்லாதிக்கங்கள் கூறின, இன்று விடுதலைப்போராளி. வல்லரசுகள் தங்களின் நலனுக்காக எதுவும் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

தமிழர்கள் மட்டும் உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் போதுமா ?உலகநாடுகளும்  தமிழர்களுக்குத்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே

ஈழத்தமிழர்கள் உலகநாடுகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்திருந்தால் உலகநாடுகளும் ஈழத்தமிழருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர்.

7 hours ago, Kandiah57 said:

பக்கத்து நாடே கண்டுகொள்ளவில்லை

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

7 hours ago, Kandiah57 said:

மற்றைய நாடுகள் தமிழர்களுக்குத் முக்கியத்துவம் கொடுக்க அனுமதிப்பதில்லை 

ஏன் மற்றைய நாடுகள் இப்படி செய்வதாக நினைக்கிறீர்கள்? காரணம் என்ன?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது.

அங்குதான் அதன் கபட நாடகமே ஆரம்பம். பயிற்சியும் கொடுத்து, அடிபடவிட்டு, தன்சொந்த நலனில் குறியாய் இருந்தது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, போட்ட ஆட்டத்தில இன்னொரு எதிரியை எல்லாப்பக்கத்தாலும் தன்னைச் சுற்றி இழுத்து விட்டு, இப்போ ஆப்பிழுத்த குரங்குமாதிரி  முழி பிதுங்கி நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தமிழீழ விடுதலை புலிகள் மக்கள் முன்னணி எனும் பெயரில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் கட்சி தொடங்கினார்கள். இதை பின்னர் கைவிட்டது தவறு.

பல குழப்பங்களுக்கு இதுவும் ஓர் காரணம்.

இந்த விடயத்தில் கருணா, டக்லஸ் ஆகியோர் வியூகம் சிறந்தது. அவர்கள் ஆயுத குழுக்களை பிரசன்னம் செய்யும் வகையில் அரசியல் கட்சி அமைத்து செயற்படுகிறார்கள்.

ஜே.வி.பி கூட இதற்கு முன் உதாரணம்.

தமக்கு மக்கள் வாக்குகள் விழுகின்றன என்பதை காண்பிக்க இதுவே ஒரு வாய்ப்பு.

வெறும் ஊகங்களும், அழுத்தங்களும், வெருட்டல்களும் அடாவடியும் மக்கள் ஆதரவின் காட்டிகள் அல்ல. அது யார் என்றாலும்.

தங்கள் கொள்கையை முன்னெடுக்க தாங்கள் தங்கள் சொந்த அரசியல் கட்சியை நடத்தாமல் வேறுபாடான சித்தாந்தம் கொண்ட இவர்கள் வருகைக்கு முன்பே தோன்றிய கட்சிகளை  பின்னே நின்று ஆட்டுவதும், அழுத்தம் கொடுப்பதும் சரியான வியூகம் இல்லை.

விடுதலை புலிகள் தோல்விக்கு இந்த பக்கத்தையும் அலசி பார்க்கலாம்.

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

நானும் உங்களோட சேர்த்து சொல்லுவேன் விடுதலைப்புலிகள் செய்த ஒவ்வொரு செயலும் மிகப்பிழையானாது...இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர்களும் சொல்லலாம் இதனால் என்ன பலன் உண்டு தீர்வு வந்து விடுமா ?இப்படி ஒவ்வொரு திரியிலும்  சொல்லிக் கொண்டிருக்க  இதுவரை கண்டபலனென்ன.?

கருணாவும...டக்லசும்.  சரியான பதையில் போனால் அவர்கள் தீர்வைப் பெற்று  தருவார்களா? அப்போ புலிகளை மறந்து விடவேண்டியதுதானே. 

உருத்திரகுமாரையும்.  நாடுகடந்ததமிஈழயரசையும் உலகில் ஒரு நாடும்  அங்கீகாரம்…………………… வழங்கவில்லை. கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார்

சுமந்திரனிடம் எதுவும் எதிரபார்க்கவில்லை. அவரால். தமிழர் பிரச்சினை யை தீர்வு பெற்று தரமுடியாது. அவர் வேலை செய்யவேண்டிய  இடம் நீதிமன்றம் மாறாக   பாராளுமன்றம் இல்லை இதுவரை அவர் தொட்டது எல்லாம் தோல்வியோ 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்ற உருத்திரகுமார் உள்ளார். அவர் செய்யக்கூடியதை சுமந்திரனிடம் எதிர்பார்க்கலாமா?

உருத்திரகுமார் விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்றவர் என்று உங்களுக்கு யார் சொன்னது???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் உலகநாடுகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்திருந்தால் உலகநாடுகளும் ஈழத்தமிழருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர்.

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

1 hour ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தமிழ்ஈழம் பெற்றுக்கொள்ள முடியுமா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஏன் மற்றைய நாடுகள் இப்படி செய்வதாக நினைக்கிறீர்கள்? காரணம் என்ன?

நான் நினைக்கவில்லை  இது தான்  நடந்தது...நடக்கிறது  நடக்கும்  பேச்சுவார்த்தை யினபோது. எரிக் சொல்கையும். ஒவ்வொரு தடவையும். ஏன் இந்தியா போனார் நேர்வே எமது போராட்டத்தைப் ஆதரவு வழங்குமா. என்ற  பயம்......அங்கு போகமால் விட்டுயிருந்தால் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணை நல்ல எதிர்க்கருத்துகளை வைத்துள்ளார், நன்றி அண்ணை. பொறுத்து பொறுத்து பாத்தார், பொங்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

 

3 hours ago, Kandiah57 said:

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தமிழ்ஈழம் பெற்றுக்கொள்ள முடியுமா 

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உருத்திரகுமார் விடுதலை புலிகளின் அங்கீகாரம் பெற்றவர் என்று உங்களுக்கு யார் சொன்னது???

விடுதலைப்புலிகள் தலைமை செயலகம் தலைவர் பிரபாகரன் வழிகாட்டுதலில் இயங்கிய காலத்தில் தமிழ்நெட்டில் மற்றும் இதர ஊடகங்களில அறிவித்தது. சமாதான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது தொடக்கம், தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் நகர்வுகளிலும், சட்ட விடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கையாள்வதிலும் அவர் அங்கீகாரம் பெற்றார்.

2009 உடன் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. தலைவர் பிரபாகரன் இல்லாத, மற்றும் அவர் வழிகாட்டுதல் பிரகாரம் மக்களுக்கு தெரியும்படி இல்லாமல் தான்தோன்றித்தனமாக எவரும் அமைப்புக்கு உரிமை கோறுவதோ, அமைப்பின் சார்பில் அறிக்கை விடுவதோ பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

 

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

யூட்டர்...

என்ன ஒரே குண்டக்க, மண்டக்க கேள்வியா கிடக்குது? 😁

எப்படி இருக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

நான் நினைக்கவில்லை  இது தான்  நடந்தது...நடக்கிறது  நடக்கும்  பேச்சுவார்த்தை யினபோது. எரிக் சொல்கையும். ஒவ்வொரு தடவையும். ஏன் இந்தியா போனார் நேர்வே எமது போராட்டத்தைப் ஆதரவு வழங்குமா. என்ற  பயம்......அங்கு போகமால் விட்டுயிருந்தால் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருக்கும்

அங்கை போயிருக்கத் தான் வேண்டும் எண்டு இல்லையே.

டெல்லிக்காரர், போனை போட்டு விசயத்தை கதைத்திருக்கலாம் தானே.

இறந்து போன, ஏதோ நியாயமான சிங்களவர் என்று சொல்லப்பட்ட மங்கள (சமாதானம் எண்டு அரிக்கண்டம் தந்ததால்) எரிச்சலில், இலங்கை பாராளுமன்றில்  'வேகாத அல்லது அரைவேக்காடு சமணும், பேகனும், தின்னும் நோர்வேக்காரர்' என்று சொன்ன எரிக், நோர்வே அரச செலவில், சும்மா டெல்லிக்கு போய், 5 ஸ்டார்ட் ஹோட்டலில் தங்கி, 'அனுபவிக்க' போயிருப்பார்.... கந்தையாண்ணய்....

எல்லாமே போலிகள் தானே...  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

எல்லாம் தலைவிதி....😁

சிங்களவன் வைக்காத நேரு சிலையை ஈழத்தமிழன் வைத்தான்.அழகு பார்த்தான்.சிங்கள பாட புத்தகத்தில் இல்லாத  நேரு வரலாற்றை ஈழத்தமிழன் பாட புத்தகத்தில் படித்தான்.பரீட்சையிலும் நேரு மாமா சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து வகுப்பில் சுட்டியாக திகழ்ந்தான். ஈழத்துக்கு சம்பந்தமில்லாத காந்தியை எங்கள் மகாத்மா தாத்தா தாத்தா என கொண்டாடிய ஈழத்தமிழனையா பார்த்தா சொல்கின்றீர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று????
 

இந்தியாவின் முக்கியத்துவம் பற்றி தலைவரின் மாவீரர் உரைகளிலும் தெளிவாக சொல்லப்பட்டது.

 

அதை விட குடியரசு,கூட்டணி,தமிழரசு எல்லாமே இந்திய சார்புதானே இதை விட இன்னும் என்ன வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

உலகநாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் கிடைத்துவிட்டதா?

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்  ...........இலங்கையில் தமிழரின்   எண்ணிக்கை அதிகரிக்கும் போது  எமக்கு ஒரு அரசு உருவாகும் வாய்ப்பு  100.  ஆண்டுகளில் வரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இந்தியா நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதால் தமிழ்ஈழம் பெற்றுக்கொண்டீர்களா?

எதிர்காலத்தில்  தமிஈழம் கிடைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்  ...........இலங்கையில் தமிழரின்   எண்ணிக்கை அதிகரிக்கும் போது  எமக்கு ஒரு அரசு உருவாகும் வாய்ப்பு  100.  ஆண்டுகளில் வரலாம் 

 எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? அதிகரிக்கிற எண்ணிக்கையினர் செயல்பாட்டுத் திறனையும் பேண வேண்டியதில்லையா? 

நான் நினைக்கிறேன், எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட இருக்கும் தமிழ் இளைஞர்களை கல்வியிலும், துறை சார்ந்த திறன்களிலும் சிங்களவர்களை விட அதிகரித்த ஆதிக்கம் செலுத்த வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு தெரியாத அல்லது மறைத்து விட்டு, தமக்காக அல்லாது தம் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை கொடுத்த காரணத்திற்காக அப்பப்போ புலிகளை சிலுவையில் அறைபவர்கள், தாங்கள் நீதிமான்கள் என நினைக்கிறார்களா? அல்லது தமது தவறுகளை மறைக்கிறார்களா? சிங்களவன் செய்யாத தவறை புலிகள் செய்துவிட்டார்களாம், பாடம் எடுக்கினம் ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியாதவர்கள். இழப்பும், வலியும் பெற்றவர்களுக்கே.  கண்ணை மூடிக்கொண்டு காத்துக்கிடக்கிறது, புலிகள் என்றொரு சத்தம் கேட்டால் போதும் வந்துவிடுவினம் பறந்தடிச்சுக்கொண்டு பாடம் நடத்த.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

நானும் உங்களோட சேர்த்து சொல்லுவேன் விடுதலைப்புலிகள் செய்த ஒவ்வொரு செயலும் மிகப்பிழையானாது...இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர்களும் சொல்லலாம் இதனால் என்ன பலன் உண்டு தீர்வு வந்து விடுமா ?இப்படி ஒவ்வொரு திரியிலும்  சொல்லிக் கொண்டிருக்க  இதுவரை கண்டபலனென்ன.?

கருணாவும...டக்லசும்.  சரியான பதையில் போனால் அவர்கள் தீர்வைப் பெற்று  தருவார்களா? அப்போ புலிகளை மறந்து விடவேண்டியதுதானே. 

உருத்திரகுமாரையும்.  நாடுகடந்ததமிஈழயரசையும் உலகில் ஒரு நாடும்  அங்கீகாரம்…………………… வழங்கவில்லை. கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார்

சுமந்திரனிடம் எதுவும் எதிரபார்க்கவில்லை. அவரால். தமிழர் பிரச்சினை யை தீர்வு பெற்று தரமுடியாது. அவர் வேலை செய்யவேண்டிய  இடம் நீதிமன்றம் மாறாக   பாராளுமன்றம் இல்லை இதுவரை அவர் தொட்டது எல்லாம் தோல்வியோ 

 

இனி ஓர் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டியது தான்.

அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாடு கடந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து அதனை பலப்படுத்தலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாக இயங்க வழிவிட வேண்டும்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்து பெற முடியாத தீர்வை அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் பெற்று கொடுக்க போவது இல்லை.

அவசியம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்குங்கள் சுமந்திரன் தொடக்கம் இதர இலங்கை தமிழ் அரசியல் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ வேண்டிய இளசுகளை ஆயுதம் ஏந்தத்தூண்டி, குற்றவாளிகளாக்கி அரசியல் செய்யும் தங்கள் அற்பத்தனத்துக்காக முதலில் சுமந்திரன் வெட்கித் தலைகுனிந்துவிட்டு, பிறகு மற்றவர்களின் செயலை நினைத்து வெட்கப்படட்டும். இவர் அப்பப்ப ஒரு விகடம் பேசிக்கொண்டு வரும்பொழுது தெரியும், ஏதோ சுத்து மாத்து செய்யப்போகிறாரென்று......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.