Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிப்புறப் பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெங்சங்கரிடம் பீரிஸ் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.மனோசித்ரா

 

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன் கருதி இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வுகள் அவசியம் என்பதை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போதே இரு நாட்டு அமைச்சர்களாலும் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

 

GL.JPG

 

இந்த சந்திப்பின் போது கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனையும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு விளக்கினார். பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது வலியுறுத்தினார்.

வெளிப்புறப் பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெங்சங்கரிடம்  பீரிஸ் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது

எப்ப அப்பு நீங்கள் முன்னேறிச் சென்றனியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய உக்கல் சாக்கு பீரீஸ்.
சந்திரிக்கா காலம் தொடக்கம் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு திரியுது...

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

பழைய உக்கல் சாக்கு பீரீஸ்.
சந்திரிக்கா காலம் தொடக்கம் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு திரியுது...

அந்த உக்கல் சாக்குக்கு… சுமந்திரன்,

நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், நன்கு படித்தவர்… என்று ஏகப்பட்ட  பாராட்டுக்களை வழங்கி இருக்கிறாராமே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பழைய உக்கல் சாக்கு பீரீஸ்.
சந்திரிக்கா காலம் தொடக்கம் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு திரியுது...

இல்லையண்ணை, இதுதான் நாங்கள் எல்லாரும் விடுற பிழை.

பீரீஸ் போன்றவர்களே சிங்கள இனவாதத்தை நடத்திச் செல்லும் கல்விமான்கள். கோத்தாவோ, மகிந்தவோ முன்னால் காட்டப்படும் அட்டைகள்தான். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு அதனை முன்னோக்கி இழுத்துச் செல்பவர்கள் இந்த படித்த அறிவுள்ள சிங்கலவர்களே. இந்த THINK TANKS எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அவ்வரசுகளால் இரு கரம் கொடுத்து வரவேற்கப்படுவார்கள். ஆட்சிகள் மாறலாம், ஆனால் இனவாதம் தொடர்ந்து அதே கதியில் முன்னெடுக்கப்பட பீரீஸ் போன்றவர்கள் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது,

வெளியுலக அழுத்தங்களில் இருந்து இலங்கையைப் பாதுகாப்பது இந்தியாவின் கடைமை. தவறினால் கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னரான அழிவுகளுக்கு நீங்கள்தான் காரணம் என்கின்ற இரகசியம் பாதுகாக்கப்படாது வெளிவரலாம். ..........

எனவே, எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

இதேவேளை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன் கருதி இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வுகள் அவசியம் என்பதை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

2009 தோடு இன சிக்கல் முடிஞ்சுது .. 😢

11 hours ago, பிழம்பு said:

வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது வலியுறுத்தினார்

hq720.jpg?sqp=-oaymwEXCNAFEJQDSFryq4qpAw

என்ன குருநாதா.!  மாட்டு ஐட்டத்தையும் , மனுச ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிருக்கனுவோ.😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.