Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MC Sai குழுமத்தின்.. கடலே என் கடலே கரிகாலா எங்க மறைஞ்சே.. பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

🙏🏽

கடலே என் கடலே...
காக்கவன்னியன்  காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன் ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி
இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன் 

நாம் தமிழர் போடு போடு 
நாம் தமிழர் 
தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம் தூய தமிழனை  தமிழ் கொண்டு எழுப்புவோம் சொல்லிசை கொண்டு எழுப்புவோம்..... 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

எம் இளம்தலைமுறையின் ஆகச்சிறந்த படைப்பு. 
வரிகளை உள்வாங்கிக்கொள்வோம்.. மக்களிடையே கொண்டுசெல்வோம்..
படையொன் ஆல்பம் கூடிய சீக்கிரம் வெளிவரும் 14 பாடல்கள் கொண்ட இந்த இசை வெளியீட்டில் அனைத்தும் நம்  போராட்டம் பற்றி  பேசக்கூடியவையாக அமைத்துள்ளார்கள். பாடியவர்கள்ளே எழுதிய படைப்பு இரத்தி ஆதித்தன் மற்றும் எம்.சி சாய்

காக்கை வன்னியன் காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன்

ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி

இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல துள்ளிசைப்பாடல்.

பகிர்வுக்கு நன்றி.

கருத்தியல் - பல தேவையான ஆணிகளும், சில தேவையில்லாத ஆணிகளும் பாடலில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் அடுத்த தலைமுறை இதில் ஈடுபடுவதே ஒரு பெரிய விசயம் என்ற அளவில் வரவேற்க்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.. ஆனால் இந்த தம்பிகளுக்கு ஒருகாலத்துக்கு முந்திய வரலாறு தெரியாது போல் உள்ளது.. இதன் பின்னால் பெரியவர்கள் யாரும் இருந்திருந்தால் வழிகாட்டி இருக்கலாம்.. தலைவர் இன்று இருந்திருந்தால் அவர் கவனத்துக்கு இந்த பாடல் போயிருந்தால் கண்டிப்பாக இதில் திராவிடம் தொடர்பான தேவைய்ற்ற சீண்டும் வரிகளை எடுக்க சொல்லி இருப்பார்.. நாலு ஜந்துபேரோடு தலைவர் போராட்ட வாழ்வின் ஆரம்பகாலங்களும் திராவிட இயக்கங்களும் பிரிக்கமுடியாதவை.. கோழி தன் குஞ்சுகளை இறகில் பொத்தி அடைகாப்பதுபோல் புலிகள் இயக்கத்தை ஒருகாலத்தில் பொத்திபொத்தி காத்து வளர்த்தவர்கள் திராவிட இயக்கத்து தோழர்கள்.. எவனாவது ஏறிய ஏணியை தட்டி உதைப்பானா??

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் இன்று இருந்திருந்தால் அவர் கவனத்துக்கு இந்த பாடல் போயிருந்தால் கண்டிப்பாக இதில் திராவிடம் தொடர்பான தேவைய்ற்ற சீண்டும் வரிகளை எடுக்க சொல்லி இருப்பார்.. நாலு ஜந்துபேரோடு தலைவர் போராட்ட வாழ்வின் ஆரம்பகாலங்களும் திராவிட இயக்கங்களும் பிரிக்கமுடியாதவை.. கோழி தன் குஞ்சுகளை இறகில் பொத்தி அடைகாப்பதுபோல் புலிகள் இயக்கத்தை ஒருகாலத்தில் பொத்திபொத்தி காத்து வளர்த்தவர்கள் திராவிட இயக்கத்து தோழர்கள்.. எவனாவது ஏறிய ஏணியை தட்டி உதைப்பானா??

நான் எழுத நினைத்து எழுதாமல் விட்ட வரிகள் 👏🏾👏🏾👏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

நான் எழுத நினைத்து எழுதாமல் விட்ட வரிகள் 👏🏾👏🏾👏🏾.

நீங்கள் இந்த பாட்டுக்கு கீழ வரும் கனெண்டுகளை படீச்சங்க எண்டா அது வேறமாரிபோகுது.. ஏதோ திராவிடக்கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சண்டைபோல கதை போகுது.. அப்போ சிங்களவன் எங்கடா..? அட பைத்தியங்களா இந்தியாவில் இருக்கும் ஆறுகோடி தமிழர்களும் இரண்டு திராவிட கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் பைத்தியங்களா.. தமிழன் விரலை கொண்டு தமிழன் கண்ணை குத்துறீங்க.. வெளிநாட்டில இருக்குற லூசுவள்தான் சிங்களத்தை விட்டிட்டு இப்பிடி புதுசா திராவிடத்துக்கு எதிரா பொக்ஸ் அடிக்கிறது.. விசர்க்கதை கதைச்சுகொண்டு திரியிறது.. பாவம் ஊரில் இருக்கும் ஈழத்தமிழன்.. அவனுக்கு சோத்துக்கு போராடவே நேரமில்லை.. நாம் தமிழர் திராவிடர்த்தை எதிர்ப்பதை வேறு.. அது அவர்கள் ஊர் அரசியல்.. ஈழத்தமிழர் இவங்கள் யாரை எதிர்க்கிறோம் என்று ஏதாவது தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை காசடிச்ச தமிழ்தேசியவாதிகள் வழியிலபோகிறார்களா எண்டு விளங்குதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் இந்த பாட்டுக்கு கீழ வரும் கனெண்டுகளை படீச்சங்க எண்டா அது வேறமாரிபோகுது.. ஏதோ திராவிடக்கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சண்டைபோல கதை போகுது.. அப்போ சிங்களவன் எங்கடா..? அட பைத்தியங்களா இந்தியாவில் இருக்கும் ஆறுகோடி தமிழர்களும் இரண்டு திராவிட கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் பைத்தியங்களா.. தமிழன் விரலை கொண்டு தமிழன் கண்ணை குத்துறீங்க.. வெளிநாட்டில இருக்குற லூசுவள்தான் சிங்களத்தை விட்டிட்டு இப்பிடி புதுசா திராவிடத்துக்கு எதிரா பொக்ஸ் அடிக்கிறது.. விசர்க்கதை கதைச்சுகொண்டு திரியிறது.. பாவம் ஊரில் இருக்கும் ஈழத்தமிழன்.. அவனுக்கு சோத்துக்கு போராடவே நேரமில்லை.. நாம் தமிழர் திராவிடர்த்தை எதிர்ப்பதை வேறு.. அது அவர்கள் ஊர் அரசியல்.. ஈழத்தமிழர் இவங்கள் யாரை எதிர்க்கிறோம் என்று ஏதாவது தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை காசடிச்ச தமிழ்தேசியவாதிகள் வழியிலபோகிறார்களா எண்டு விளங்குதில்லை..

நீங்கள் சொன்ன கண்டெண்டுகள் - இந்த திரியிலும் உள்ளதை காணலாம்.

அந்த இரு உறவுகளையும் குறிக்கும் நோக்கம் இல்லை - ஆனால் இந்த பாடலில் எத்தனையோ வரிகள் இருக்க அந்த ஒற்றை வரியைத்தான் ஹைலைட் பண்ண வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றும் அளவுக்குத்தான் இருக்கிறது இப்போ புலம்பெயர் அரசியல்.

கருணாநிதி என்ற ஒத்தை மனிதனின், அவரின் குடும்பத்தின், கட்சியின் பச்சை துரோகத்துக்காக, தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள ஒரு அரசியல் சித்தாந்தத்தை, பெரும் பலமுள்ள சாதிகளை, பல கோடி மக்களை வலிந்து எதிரியாக்குகிறோம்.

இந்த போக்கினால் அதிகம் நன்மை அடையபோவது, இந்தியாவும், இலங்கையுமே. முழு தீமையும் இலங்கையில் அல்லது இந்தியாவில் வாழும் எமது மக்களையே சாரும்.

புலம் பெயர் மக்களுக்கு இது சும்மா பொழுதுபோக்கு அல்லது, கருணாநிதி மீதான பழி தீர்ப்பு. 

ஆனால் கருணாநிதி அளவுக்கு இன அழிப்புக்கு உதவியவர்கள் ஜேர்மனியும், பிரான்சும், பிரிட்டனும், அமெரிக்காவும், கனடாவும். ஆனால் மறந்தும் திராவிட அரசியலை சாடுவது போல் இந்த நாட்டில் உள்ள கட்சிகளை இந்த புலம்பெயர் தமிழர்கள் சாட மாட்டார்கள். மேர்கலையோ, சார்கோசியையோ, பிரவுணையோ, ஒபாமாவையோ யுத்த குற்றவாளிகள் என பொதுவெளியில் முகம் காட்டி சொல்ல மாட்டார்கள்.

இவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு எதிராக ஒரு துரும்பைதானும் கிள்ளி போட மாட்டார்கள்.

இவ்வளவு ஏன் சொல்கைமுக்கு கூட ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்ட வக்கற்வர்கள், ஆனால் என்றைக்கோ செத்து போன பெரியாரை போட்டு மிதிப்பார்கள்🤣.

Rebels without a cause என்பார்கள். இவர்கள் அப்படித்தான்.

தமது இருப்புக்கு குந்தகம் வராதவரையில் எவனையாவது எதிர்த்து புரட்சி செய்ய வேண்டும்.

சிங்களவனை எதிர்த்தால் கொலிடே போக முடியாது.

இருக்கும் நாட்டில் எதிர்க்க தைரியம் இல்லை.

தமிழ் நாட்டில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து virtual revolution ( மெய்நிகர் புரட்சி 🤣) செய்தால் போராடியது போலவும் இருக்கும், பாதிப்பும் இராது 🤣.

இதை சொன்னால், எதிர்வினையாறினால் - நீங்கள் ஏன் தமிழ் நாட்டு அரசியலை பற்றி எழுதுகிறீர்கள் நீங்கள் திராவிட செம்பா? என எம்மையே கேட்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள்.

Edited by நந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.