Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் சீன ஊடுருவல் - கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார்.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

மூலம்:https://ibctamil.com/article/chinese-domination-in-the-north-and-east-sri-lanka-1639834526?itm_source=parsely-top

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைன்னா.. கூப்பிட்டு ஓனர் அடிப்பாரு..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார்.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

மூலம்:https://ibctamil.com/article/chinese-domination-in-the-north-and-east-sri-lanka-1639834526?itm_source=parsely-top

சைனா தொடர்ந்து வடகிழக்கு தமிழர்களுக்கு தொடர்  உதவி திட்டம்களை  கொண்டுவர இன்று இப்படி கதைப்பவர்கள் நாளை மாறிகதைப்பிணம் வந்தவனுக்கும்  தெரியும் எது மட்டும் பாயலாம் என்று சம்பந்தனுக்கு பீஜிங்கில் வீடு என்றால் எல்லாம் சரி கிண்ணியா விடயத்தில் அமைதியாக இருந்ததுக்கு  கிடைத்த பரிசு கொழும்பு வீடு சிங்கள அரசால் பரிசளிக்கப்படவில்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லைன்னா.. கூப்பிட்டு ஓனர் அடிப்பாரு..😂😂

🤣 இதையே ndtv, India today ய கூப்பிட்டு சொன்னால் ஓனருக்கு கொஞ்சமாவது கரிசனை வரும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

போய் முதலில் உங்கட உட்கட்சிக்கை சனநாயத்தை ஏற்படுத்துங்கோ அப்புக்காத்து ஐயா. கூட்டுக்கட்சிகள் மக்களின் கருத்துகளை செவிமடுங்கோ. வெறுமனே சிங்களத்தின் முகவராக இருக்காம  மனித உரிமை மீறல்களை நிறுத்துதல், தமிழின இனஅழிப்புப் பொறிமுறையை நிறுத்துதல், ஊடகவியலாளர்கள் பல்கலைக் கழக  மாணவர்கள் உட்பட மற்றும் மாணவர்களை பலிகொள்வதை நிறுத்துதல்,  போன்றவற்றை உங்கட அங்காளி பங்காளியளான ராசபக்ச அன்ட் கோட்டைச் சொல்ல முதலில் இலங்கைத் தீவிலை சநனாயகத்தை ஏற்படுத்திவிட்டுச் சீனாவுக்கு ஆலோசனை சொல்லுங்கோ அப்புக்காத்து ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MullaiNilavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார்.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.   

மூலம்:https://ibctamil.com/article/chinese-domination-in-the-north-and-east-sri-lanka-1639834526?itm_source=parsely-top

 

இந்தியா செய்யாத அநியாயங்கள், படுகொலைகளா? அல்லது அமெரிக்கா செய்யாத மனித உரிமை மீறல்களா? அல்லது இலங்கை அரசு அரங்கேற்றாத கொலை களங்களா? சுமந்திரன் அவர்களின் பார்வை மிகவும் தவறானது.  மூஞ்சூறு துடைப்பங்கட்டையை தூக்கும் கதையாக வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு தரப்பட்ட இந்திய Proxy கூவத்தொடங்கிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆதிக்கத்தை நாம் எதிர்ப்பது ஏன்? விளக்குகிறார் சுமந்திரன்

December 19, 2021

 

 

சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே இந்திய மீனவர்

“13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் தமிழ் பேசும் கட்சிகள் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ள கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி சமுகமளிக்கும்” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’, என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் பங்கேற்று பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர், வடக்கு, கிழக்கில் – தமிழர் தாயகத் தில் சீனா செல்வாக்கு நிலைபெறுவதை நாம் விரும்பவில்லை. சிலர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்கக்கூடாது என்று கேட்கின்றனர். சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் நாம் இரு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதில் ஒன்று – எமது அரசியல் விடிவுக்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது.

இரண்டாவது – இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால், சீனாவின் கடலில் இருந் திருந்தால், அது அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் நியாயமான கரிசனையாக இருந்திருக்கும். ஆனால், இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம். அதுவும் இந்தியாவுக்கு மிக அண் மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக் கத்தை நாம் விரும்பவில்லை.

இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன.

இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்புகள் அல்ல. அப்படியும் சில இங்கு இடம்பெறுகின்றன. சிலர் செய்கின்றனர். அப்படி அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை. இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’  என்றார்.

 

https://www.ilakku.org/why-do-we-oppose-chinese-domination-sumanthiran-explains/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவுக்கு தெரியாது.

 நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம், மனித உரிமை பாதுகாப்பு, சுதந்திரம் இந்தியாவுக்கும் கிடையாது.

இந்தியாவே நேரடி, மறைமுக ஆதரவோடு எங்கள் இனத்தை கொன்றொழித்தது.

 இந்தியாவினுடைய Algoritham (3), அதனை அடிப்படையாக வைத்தே தங்களுடைய வெளிநாட்டு கொள்கைகளையும், உள்நாட்டு கொள்கைகளையும் கையாள்வார்கள்.

விளங்குவதற்காக,

இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியன்மார் ஒருபொழுதும் அமைதியான நாடுகளாக இருக்க விட்டதில்லை. அவர்கள் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்க கூட விடமாட்டார்கள் அது அவர்களுடைய அடி நாதம்.

அவருடைய சித்தாந்தம், பெரிய கடை எதிர் சின்ன கடை வாடிக்கையாளர் ஒன்று (1).

இதுதான் அவர்களுடைய கொள்கையும் திட்டமிடல், ஆய்வுகளும் இதை ஓத்தே இருக்கும். அவர்களால் கடையும் வைத்து கொடுப்பார்கள் வாடிக்கையாளரை கட்டுப்படுத்துவார்கள்,இறுதியில் ஒருவருமே உருப்பட விடமாட்டார்கள்.

திரிசூல வியூகம் இத்துப்போன இந்தியா.

 

 

Edited by MullaiNilavan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இலங்கை இந்தியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனையை நாம் உள் வாங்கியிருக்கிறோம்.

இதுவரை இலங்கையில், இந்தியாவாலும், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனையோடும் தமிழர்கள் வகை தொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்டதை, சுமந்திரனையும் அவரது கூட்டத்தையும் தவிர வேறெவரும் உள்வாங்கியதாகத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இப்படி சீனாவின் ஆதிக்கத்தை நாம் இங்கு விரும்பவில்லை என்பதைச் சொல் லித்தான் – சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசனை கொண் டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை (சீன ஆதிக்கத்தை) விரும்ப வில்லை. இதன்போதே வடக்கு, கிழக் கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங் கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப் பது நாங்கள், எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால், எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கு மானால், நீங்கள் அந்தப் பயத்தைகொள் ளத் தேவையில்லை என்கின்றோம்.

நீண்ட காலத்துக்கு பிறகு பேச்சளவிலாவது ஒரு தெளிவான அணுகுமுறை.

6 hours ago, கிருபன் said:

இதேநேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. அவை இடம்பெறும்போது தெரியும்’’  என்றார்.

@Kapithan என்னப்பா நீங்கள் சொன்னமாரியே இவரும் சொல்லுறார். 

அப்படி என்னதான் நடக்குது?

6 hours ago, MullaiNilavan said:

 நீங்கள் குறிப்பிடும் ஜனநாயகம், மனித உரிமை பாதுகாப்பு, சுதந்திரம் இந்தியாவுக்கும் கிடையாது.

இந்தியாவே நேரடி, மறைமுக ஆதரவோடு எங்கள் இனத்தை கொன்றொழித்தது.

 இந்தியாவினுடைய Algoritham (3), அதனை அடிப்படையாக வைத்தே தங்களுடைய வெளிநாட்டு கொள்கைகளையும், உள்நாட்டு கொள்கைகளையும் கையாள்வார்கள்.

விளங்குவதற்காக,

இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியன்மார் ஒருபொழுதும் அமைதியான நாடுகளாக இருக்க விட்டதில்லை. அவர்கள் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்க கூட விடமாட்டார்கள் அது அவர்களுடைய அடி நாதம்.

அவருடைய சித்தாந்தம், பெரிய கடை எதிர் சின்ன கடை வாடிக்கையாளர் ஒன்று (1).

இதுதான் அவர்களுடைய கொள்கையும் திட்டமிடல், ஆய்வுகளும் இதை ஓத்தே இருக்கும். அவர்களால் கடையும் வைத்து கொடுப்பார்கள் வாடிக்கையாளரை கட்டுப்படுத்துவார்கள்,இறுதியில் ஒருவருமே உருப்பட விடமாட்டார்கள்.

திரிசூல வியூகம் இத்துப்போன இந்தியா.

 

 

உங்கள் இந்தியா பற்றிய பார்வை நியாயமானதே.

ஆனால் அமெரிக்காவும் கூட வருவதால் இந்த அணுகுமுறையில் மாற்றம் வரலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவைட கண்ணுக்கு ஹிந்திய ஊடுருவல் தெரியவில்லையோ..??!

சீனா தமிழருக்கு நல்லது செய்யன்னு வந்தா அதனோடு பேசி.. அந்த நல்லத்தை தமிழர்கள் தமதாக்கி.. தம்மை சிங்கள தேசத்திற்கு சவாலாக பலப்படுத்திக் கொள்வது தான் சிறப்பு. ஹிந்தியனுக்கு.. வால்பிடிப்பதிலும். ஏனெனில்.. தனக்கு ஆதாயம் என்றதும்.. ஈழத் தமிழனை வகை தொகையின்றி தானாகவும்.. சிங்களவனோடு சேர்ந்தும்.. ஏன் சீனாவோடு சிங்களவனின் பின்னால்.. கூட்டிணைந்தும்.. அழித்தவன் தான் ஹிந்தியன். அவன் ஊடுருவலை ரசிப்பவர்கள்.. சீன ஊடுருவலை ஏன் வெறுக்கனும்..?!

சீன ரகன் வந்து ஹிந்தியனை வதைத்தால்.. அது தான் சிறப்பு.. தமிழனுக்கு. 

On 18/12/2021 at 19:31, MullaiNilavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

தமிழர்களைப் பொறுத்த வரை சீனா எதிரியும் அல்ல நண்பனும் அல்ல. ஆனால் அமெரிக்காவும் ஹிந்தியாவும் அப்படியல்ல. தமிழர்களை அழிக்க துணை போன தரப்புக்கள். தமிழரின் பொது எதிரியான சிங்கள பெளத்த பேரினவாத்திற்கு நேரடியாக தமிழர்களை அழிக்க.. உதவி நின்றவர்கள். அதேவேளை தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள். ஆனால்.. சீனா அப்படி செய்யவில்லை. தமிழர்களை விட்டு எட்டவே நின்று தான் தமிழன அழிப்பில் பங்கேற்றது. அதேவேளை தமிழின போராட்டத்தில் சீனாவின் ஆயுதங்களின் பங்களிப்பு ஹிந்திய ஆயுதங்களின் பங்களிப்பை விட அதிகம். சீனா மறைமுகமாக தனது ஆயுதங்கள் தமிழர் கரங்களை அடைவதை தடுக்கவில்லை.. என்பதும் உண்மை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால், இவை தொடர் பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுவார்கள். அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண் ணம்கூட அவர்களுக்கு இருக்கலாம். நாம் அது குறித்தும் விளக்கிக் கூறியுள் ளோம். இங்கே தொடர்ச்சியாக குழப்ப நிலை இருந்தால், இலங்கை அரசிடமே நிலஅதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப் போகின்றன. அது உங்களுக்கும் சாதகம் இல்லை. இதனைத் தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக் கள் தொடர்கின்றன.

பாட்டி வடை சுட்டாளாம். காக்க வந்திச்சாம்.. காக்கா வடையை கொத்திக்கிச்சாம்.. நரி வந்திச்சாம்.. காக்க வடையை பறிக்க போச்சாம்.. காக்கா வடையோட பறந்து போச்சாம். வடை போச்சே. 

இந்தக் கதை உலகத்துக்கே தெரியும். இது தான் இவைட இராஜதந்திரமாம். அதை ஊடகத்துக்கே சொல்லினமாம்.

ஏன்னா.. ஹிந்தியாவும்.. அமெரிக்காவும்.. காக்கா.. நரி யாம்.. இவை பாட்டியாம். 

அண்ணே.. இந்தக் கதை விட்டது காணும்.. ரகனை இழுத்து பாட்டிக்கு பக்கத்தில விடுற.. கதைக்க எழுதுங்க.. புதுக்கதை. காக்கா நரி கூட பாட்டிக்கு உதவலாம். வடையும் போகாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.