Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

KKR இன் தோல்விக்கு ஷேரேயஸ் ஐயரின் திமிரும் ஒரு காரணம். வெங்கடேஷ் ஐயர் ஒருமுறை இரண்டாவது ரன் க்கு ஓடாதபோது மைதானத்திலேயே அவரை திட்டினார். ஒடியிருந்தால் அப்போதே வெங்கடேஷ் அவுட்டாகியிருப்பார். அடுத்த பந்தில் வெங்கடேஷ் வேண்டுமென்றே அவுட்டானதுபோல் இருந்தது. அதைவிட நேர்காணலில் எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் என்னாலும் அடிக்கமுடியுமென்றார். எமது அணியாலும் என்று சொல்லவில்லை. இப்போதுதான் தெரிகிறது ஏன் DC இவருக்கு மீண்டும் கேப்டன்சி கொடுக்கவில்லையென்று!!

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

RCB

பெங்களூரு அணி வீரர்கள்

ஐபிஎல் போட்டியின் 31வது ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத், டூ பிளஸ்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சமீராவின் பந்தில் 4 ரன்களிலேயே ராவத் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷபாஸ் அகமது 26 ரன்களும் எடுத்தனர். எனினும் மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய டூ பெளஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

இருப்பினும், அதிரடியாக விளையாடிய க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். ஜோஷ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற, 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

 

https://www.dinamani.com/sports/2022/apr/19/hazlewood-cleans-up-lucknow-as-bengaluru-registers-victory-3829875.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல விராட்கோலி "வந்தார் நின்றார் சென்றார்" முதலாவது ஒரு பந்தை சந்தித்து எதிர்பாராமல் கட்ச் குடுத்து ஆட்டமிழந்தார்......ராவத்தும் கோலியும் முதலாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளிலேயே அவுடாகினர்.......டூ பிளஸ்சி செம அடி, சூப்பர்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாபை எளிதாக வென்ற டெல்லி

dc

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மும்பையில் நடைபெற்ற 32வது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.  எனினும் தில்லி அணியின் லலித் யாதவ் பந்தில் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் (9), லியாம் லிவிங்ஸ்டன் (2), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார். எனினும், தில்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால், ஷாருக்கான், ரபாடா, நாதன் எல்லீஸ், ராகுல் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. தில்லி அணியில் குல்தீப், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களகாக ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களம்கண்டனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணி 10.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 20 பந்துகளை சந்தித்த ப்ரித்வி ஷா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/20/ipl-2022-delhi-demolish-punjab-win-by-9-wickets-3830276.html

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தை முடித்துவைத்த தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி

Mumbai Indians vs Chennai Super Kings won

தோனி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷன் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பிரேவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமார் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ஹிரித்திக் 25 ரன்களை சேர்த்தார்.

முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும், அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த மிட்செல், ராபின் உத்தப்பாவுடன் கைக்கோர்த்தார்.

எனினும் சாம்ஸ் பந்தில் மிட்செல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு அதிரடி காட்ட 35 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 

உத்தப்பா 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனையடுத்து வந்த ஷிவம் தூபே (13), ரவீந்திர ஜடேஜா (3), சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் பின்னர் களமிறங்கிய தோனி பெட்டோரியோஸ் உடன் அதிரடியாக விளையாடினார். எனினும் அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிராவோ களமிறங்கினார். இக்கட்டான சூழலில் தோனி தனது பாணியில் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். 

நெருக்கடி ஓவர்: நிதானி தோனி

கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில், பிராவோ ஒரு ரன் எடுத்தார். இதனால் மறுமுனைக்கு வந்த தோனி 4-வது பந்தில் பவுண்டரியை விளாசினார். 5வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இறுதிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான சூழலிலும் நிதானமாக ஆடிய தோனி கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை நடப்பு ஐபிஎல்-ல் 7வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/21/mumbai-indians-vs-chennai-super-kings-won-3831174.html

@MEERA, வயசாளி இன்றைய போட்டியை வென்று கொடுத்துவிட்டார்!

மும்பை இதுவரை எல்லாப் போட்டிகளிலும் தோற்றுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இன்று வெல்லவேண்டும் என்றுதான் விரும்பினேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ஜீ தல எப்போதும் தல தான்..💪

ஆனால் பொலாட் தனது முட்டாள் தனத்தாலும் அகங்காரத்தினாலும்  ஆட்டமிழந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

FQ927N1agAA2FG4

படம்: டிவிட்டர் / ஐபிஎல்

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 116(65 பந்துகள்), தேவ்தத் படிக்கல் 54, கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற போராடியது. இருப்பினும், 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தில்லி அணியில் அதிகபட்சமாக பண்ட் 44, லலித் யாதவ் 37, பிரித்வி ஷா 37, கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய பெளவெல் 36 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/22/delhi-struggle-in-vain-rajasthan-thrill-victory-3831947.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணாக போன ரஸ்ஸலின் அதிரடி; குஜராத் அசத்தல் வெற்றி

Russel

ரஸ்ஸல்

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டனர். தொடக்க வீரரான ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3ஆம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 

10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

செளதி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பாக ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பில்லிங்ஸ் 4 ரன்களிலும் நரைன் 5 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த போட்டி சுவாரஸ்யமாக நகர்ந்தது. 

இருப்பினும், குஜராத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் ரஸ்ஸல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

குஜராத் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷமி 20 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. 

 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/gujarat-claims-top-spot-as-russel-cameo-ends-in-vain-3832273.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு அதிர்ச்சி தோல்வி: 8 ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத்!

FRCoEFLaUAAM3V3

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

முதலில் ஆடிய பெங்களூரு அணி ஹைதராபாத் பௌலா்கள் ஜேன்ஸன், நடராஜனின் அபார பந்துவீச்சால் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 72/1 ரன்களை எடுத்து வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 36-ஆவது ஆட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது.

சரிந்த பெங்களூரு அணி:

தொடக்க வரிசை பேட்டா்களான கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5, அனுஜ் ரவாத், விராட் கோலி 0 என வந்த வேகத்திலேயே மாா்கோ ஜேன்ஸன் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினா். முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ், அனுஜ், கோலி வெளியேறினா்.

தினேஷ் காா்த்திக் ஏமாற்றம்:

கிளென் மேக்ஸ்வெல் 12, சுயாஷ் பிரபுதேசாய் 15 நிலைத்து ஆட முயன்றும் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் ஸ்கோரை உயா்த்துவாா் என மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தினேஷ் காா்த்திக் டக் அவுட்டானாா். ஷாபாஸ் அகமது 7, ஹா்ஷல் படேல் 4, ஹஸரங்கா 8, சிராஜ் 2 ரன்களுக்கும் வெளியேறினா்.

பெங்களூரு 68: 16.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.

ஜேன்ஸன், நடராஜன் 3 விக்கெட்:

ஹைதராபாத் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய மாா்கோ ஜேன்ஸன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

8 ஓவா்களில் ஹைதராபாத் வெற்றி:

69 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சா்மா அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட்டானாா். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 16, ராகுல் திரிபாதி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

8 ஓவா்களிலேயே 72/1 ரன்களுடன் பெங்களூருவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.

பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/hyderabad-reach-the-target-in-8-overs-3832322.html

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாத வெற்றி; எட்டாவது தோல்வி

spacer.png

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட எட்டாத மும்பைக்கு, இது தொடா்ந்து 8-ஆவது தோல்வியாகும்.

ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பையால் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

லக்னௌ தரப்பில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தாா். இதே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தான் அவா் முதல் சதத்தையும் அடித்திருந்தாா்.

இந்த ஆட்டத்தில் ராகுல் சதமடித்தாலும் இதர விக்கெட்டுகளை வரிசையாகச் சரித்து லக்னௌவை கட்டுப்படுத்தியது மும்பை. எனினும், அதன் இன்னிங்ஸில் ரோஹித் சா்மா, திலக் வா்மா தவிர இதர பேட்டா்கள் சோபிக்கத் தவறினா்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக குவின்டன் டி காக் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா். ராகுல் அதிரடியாக ஆடி ரன்கள் சோ்த்து வர, ஒன் டவுனாக வந்த மனீஷ் பாண்டே 22 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ரன்களின்றியும், கிருணால் பாண்டியா 1 ரன்னுடனும் பெவிலியன் திரும்பினா். தீபக் ஹூடா 10, ஆயுஷ் பதோனி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 103, ஜேசன் ஹோல்டா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ரைலி மெரிடித், கைரன் பொல்லாா்டு ஆகியோா் தலா 2, டேனியல் சேம்ஸ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, திலக் வா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்தனா். இஷான் கிஷண் 8, டெவால்ட் பிரெவிஸ் 3, சூா்யகுமாா் யாதவ் 7, கைரன் பொல்லாா்டு 19, டேனியல் சாம்ஸ் 3, ஜெயதேவ் உனத்கட் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் ரித்திக் ஷோகீன், ஜஸ்பிரீத் பும்ரா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் கிருணால் பாண்டியா 3, மோசின் கான், ஜேசன் ஹோல்டா், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/25/எட்டாத-வெற்றி-எட்டாவது-தோல்வி-3833106.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயுடு அதிரடி வீண்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

Rayudu

அதிரடியாக விளையாடிய ராயுடு

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆனால் மயங் அகர்வால் சோபிக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து ராஜபக்ச களமிறங்கினார். தவான், ராஜபக்ச இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 110 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜபக்ச 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களம்கண்ட லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 187 ரன்களை எடுத்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான உத்தப்பா 1 ரன் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர், ஷிவம் டுபே சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய ஜடேஜா, ராயுடுவுடன் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

 

https://www.dinamani.com/sports/2022/apr/25/punjab-beat-chennai-by-11-runs-3833584.html

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஓவருக்கு நாலு வைட் போல், பீல்டிங்கும் சொல்லும்படியாக இல்லை.....கடைசியில இரண்டு ஓவருக்கு 35 ரன்ஸ் அடிக்கிறதும் சிரமம்தான் ..........!   😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்

Prasidh_Krishna_Kohli_Out_PTI04_26_2022_000258A

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு தொடக்கம் மாற்றியும் சிறப்பாக அமையவில்லை. விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இதன்பிறகு, டு பிளெஸ்ஸி ஆட்டத்தை சற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பவர் பிளே முடிவுந்தவுடன், குல்தீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்த பந்தில் டு பிளெஸ்ஸி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் சென் அசத்தினார்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ரஜத் படிதார், சூர்யாஷ் பிரபுதேசாய் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். பெங்களூருவின் நம்பிக்கை நாயகனான தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

Chahal_Karthik_Run_Out_PTI04_26_2022_000

இதன்பிறகு ஆட்டத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு.

இதன்மூலம், 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/26/rajasthan-royals-beat-royal-challengers-bangalore-by-29-runs-3833985.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி எல்லாம் இனி 3 வது 4 வது ஆக இறங்கினால்தான் சரிவரும்......!

அஸ்வின் இப்ப எல்லாம் கொஞ்சம் பேட்டிங் நல்லா செய்கிறார் போல் இருக்கு.....போலிங் சொல்லி வேல இல்ல ......சூப்பர் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்: நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்த ரஷித் கான்

Rashid Khan 2 sixes in last 2 balls brings unbelievable win for GT

சஹா

ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கானின் கடைசி நேர அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா அதிரடி தொடக்கத்தைத் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். சஹா அதிரடியால் குஜராத் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 8-வது ஓவரில் உம்ரான் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த ஐபிஎல் முழுவதும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்திலும் வேகத்துக்குப் பஞ்சம் இல்லாமல் மிரட்டினார்.

இதற்குப் பலனாக முதலில் ஷுப்மன் கில் (22) போல்டானார். அடுத்து களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை முதல் பந்திலேயே மிரட்டினார். அடுத்த ஓவரில் அவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சஹா 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

உம்ரான் மாலிக்குக்கு ஓய்வளிக்கப்பட்டதையடுத்து சஹா சற்று அதிரடி காட்டி ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தார். பின்னர் 14-வது ஓவரில் மாலிக் மீண்டும் கொண்டுவரப்பட்டார். சிறப்பாக விளையாடி வந்த சஹாவை 153 கி.மீ. வேகத்தில் யார்க்கர் வீசி போல்டாக்கினார் மாலிக். சஹா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

எடுத்த விக்கெட் போதாதென்று தனது கடைசி ஓவரில் முதலில் டேவிட் மில்லரை (17) போல்டாக்கி ஹைதராபாத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மேலும் கடைசி பந்தில் அபினவ் மனோகரையும் போல்டாக்கி அசத்தினார் உம்ரான் மாலிக்.

4 ஓவரில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மாலிக்.

இந்த நிலையில், குஜராத் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கான் இருந்தனர்.

 நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஓரளவு சிறப்பாக வீசியதால் கடைசி 2 ஓவரில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரில் நடராஜன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கொடுத்ததால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. 

மார்கோ யான்சென் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை தெவாட்டியா சிக்ஸரை பறக்கவிட்டார். 3-வது பந்தை ரஷித் கான் சிக்ஸருக்கு அனுப்பினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காததால், கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் கான் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு குஜராத்துக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்றுத் தந்தார்.

கடைசி ஓவரில் 25 ரன்கள் விளாசிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாட்டியா 21 பந்துகளில் 40 ரன்களும், ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் தரப்பில் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மட்டுமே வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/27/rashid-khan-2-sixes-in-last-2-balls-brings-unbelievable-win-for-gt-3834574.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவர் ரசீத்கான் சூப்பர் அடி ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவெல் கடைசி நேரத்தில் அதிரடி: டெல்லி அபார வெற்றி

Kuldeep_Pant_PTI04_28_2022_000196A

பந்துவீச்சின்போது ஷ்ரேயஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் மற்றும் பந்த்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி மிரட்டல் தொடக்கத்தைத் தந்தார். ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் அதிரடியால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், 10-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் சுனில் நரைன், லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் பந்துவீசிய உமேஷ் யாதவ், டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார்.

3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்ததால் டெல்லி அணி நெருக்கடிக்குள்ளானது. ஆனால், அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோவ்மன் பவெல் அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். இந்த பாட்னர்ஷிப் கொல்கத்தாவுக்கு மீண்டும் நெருக்கடியளித்தது. 

இந்த நிலையில், அக்சர் படேல் 24 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால், பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் டிம் சௌதி ஓவரில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டதால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் ஷர்துல் தாக்குரால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால், சற்று விறுவிறுப்பு அதிகரித்தது. 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.

19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாவெல் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/28/rovman-powell-finishes-for-dc-against-kkr-3835296.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோஷின், க்ருணல், சமீரவின் அபார பந்துவீச்சு : பஞ்சாப்பை வெற்றிகொண்டது லக்னோ

(என்.வீ.ஏ.)

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓட்டங்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிபெற்றது. 

Ravi Bishnoi removed Shikhar Dhawan for 6, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

மோஷின் கான், க்ருணல் பாண்டியா, துஷ்மன்த சமீர ஆகிய மூவரது சிறந்த பந்துவீச்சு ஆற்றல்களின் உதவியுடன் சுமாரான மொத்த எண்ணிக்கையான 153 ஓட்டங்களை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தக்கவைத்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

Dushmantha Chameera is ecstatic after picking the wicket of Mayank Agarwal, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுபபெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மயன்க் அகர்வால், ஷிக்கர் தவான் ஆகிய இருவரும் வேகமாக 35 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

 5 ஆவது ஓவரில் மயன்க் அகர்வால் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Mohsin Khan got rid of Liam Livingstone for 18, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

 பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 46 ஓட்டங்களுடன் பலமான நிலையில் இருந்தது.

அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷிக்கர் தவான் (5), தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷ (9) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து ஜோடியான ஜொனி பெயார்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப எடுத்த முயற்சியை மொத்த எண்ணிக்கை 88 ஓட்டங்களாக இருந்தபோது மோஷின் கான் முடிவுக்கு கொண்டுவந்தார்.

Deepak Hooda played a crucial hand in the middle overs but his dismissal triggered a collapse, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

லிவிங்ஸ்டன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜிட்டேஷ் ஷர்மா (2) சொற்ப நேரத்தில் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து பெயார்ஸ்டோவ் (32), கெகிசோ ரபாடா (2), ராகுல் சஹார் (4) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ரிஷி தவான் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மோஷின் கான் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ருணல் பாண்டியா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

Dushmantha Chameera picked up the big wickets of Mayank Agarwal and Jonny Bairstow, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

இரண்டாவது ஓவரில் அணித் தலைவர் கே.எல். ராகுலின் (6) விக்கெட்டை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் இழந்தபோதிலும் குவின்டன் டி கொக் (46). தீப்பக் ஹுடா (34) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டி கொக், ஹூடா, க்ருணல் பாண்டியா (7), அயுஷ் படோனி (4), மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் (1), ஜேசன் ஹோல்டர் (11) ஆகியோரின் விக்கெட்களை இழந்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சிறு சவாலை எதிர்கொண்டது.

எனினும் துஷ்மன்த சமீர (2 சிக்ஸ்களுடன் 17), மோஷின் கான் (13 ஆ.இ) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தமது அணி 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர். அவேஷ் கான் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராகுல் சஹார் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

https://www.virakesari.lk/article/126616

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன தோனி - ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் சிஎஸ்கே ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆட்டத்தில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு எம்.எஸ் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு, சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

அதில், "ரவீந்திர ஜடேஜா தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்துள்ளார், மேலும் சிஎஸ்கேயை வழிநடத்த எம்எஸ் தோனிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் சிஎஸ்கே அணியை வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஐபிஎல் 15ஆம் சீசன் தொடக்கத்தில் எம்.எஸ் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அப்போது ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றார். ஆனால், ரவீந்திர ஜடேஜா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஆக அறியப்பட்ட அவர் பேட்டிங் அல்லது பந்து வீச்சு என எதிலும் பரிணமிக்கவில்லை.

33 வயதாகும் ஜடேஜா எட்டு போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக அவர் எடுத்தது 26 ரன்கள் மட்டுமே.

இருப்பை தக்க வைக்க போராடிய ஜடேஜா

 

ஐபிஎல் ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

ஐபிஎல் 2022 சீசனில் ஜடேஜாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, அவர் 8.19 என ஏமாற்றம் தரும் வகையில் 213 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

கடந்த சீசனில் நான்காவது முறையாக பட்டத்தை வென்ற போதிலும், ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது, ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது.சமீபத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை அணியின் வளர்ச்சிக்காக ஒப்படைப்பதாகக் கூறி பதவி விலகினார். அதுபோலவே தமது கேப்டன் பதவியை ஜடேஜா ஒப்படைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

எம்.எஸ். தோனி 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்தினார். இந்த 13 ஆண்டுகளில், நான்கு ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றிகளை தோனியின் தலைமை சிஎஸ்கேவுக்காக பெற்றுத் தந்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

தோனி மீண்டும் சிஎஸ்கே தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் காணப்படுகிறது. பலரும் சமூக ஊடகங்களில் தோனியின் வருகையை பாராட்டியும் ரவீந்திர ஜடேஜாவின் விலகலை விமர்சித்தும் இடுகைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தோனியின் தலைமை பிரவேசத்தால் இந்த சீசனில் சிஎஸ்கேவை பிளேஆஃபுக்கு தகுதி பெற முயற்சிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sport-61284409

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மில்லர், தெவாட்டியா அதிரடி: பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

ipl1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த கோலி, ராஜத் பட்டிடர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்டிடர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின்னர், வந்த மாக்ஸ்வெலும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பாக பிரதீப் சங்வான், 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சாஹா 29 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் தன்பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ராகுல் தெவாட்டியாவும், மில்லரும் இணைந்தனர்.  இந்த ஜோடி பெங்களூருவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.

இதனால் குஜராத் அணி 19.3 பந்துகளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39, ராகுல் தெவாட்டியா 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/30/ipl2022-miller-tewatia-guide-gujarat-to-6-wicket-win-3836500.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யகுமார் அரைசதம்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

FRm9fTAakAEsnAJ

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடியது.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 67 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20வது ஓவரில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்த மும்பை அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
 

 

https://www.dinamani.com/sports/sports-news/2022/apr/30/suryakumar-fifties-mumbai-taste-first-win-3836789.html

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ

ipl

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னெள அணியில் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டார். தில்லி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. லக்னெளவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக்கும் ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்த போதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அரைசதம் எடுத்த ஹூடா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினார். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு லக்னெள அணி 195 ரன்களை எடுத்தது. தில்லி அணி சார்பாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரித்வி ஷா 5, வார்னர் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் பிறகு வந்த மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பந்த் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் டெல்லி அணி சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய மார்ஷ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 30 பந்துகளை சந்தித்த ரிஷப் பந்த் 44 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட ரோவ்மன் பவெல், அக்சர் படேல் டெல்லிக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் இந்த ஜோடியை மோசின் கான் பிரித்தார். 21 பந்துகளில் 35 ரன்களுக்கு பவெல் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசி வரை போராடிய டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அக்சர் படேல் 42, குல்தீப் யாதவ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

லக்னௌ அணியில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/ipl-2022-lucknow-beat-delhi-by-6-runs-3837053.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

20220501171L

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ஐபிஎல் போட்டியின் 46ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். இருப்பினும் அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ருதுராஜ் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கான்வே 85(55 பந்துகள்), ஜடேஜா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர், 203 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா , கேன் வில்லியம்சன் களமிறங்கினர். தொடக்கம் முதலே  இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் அணி தடுமாறத் துவங்கியது. 

அடுத்த களமிறங்கிய பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சென்னை அணியின் பந்துவீச்சில் அதிம பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 189 ரன்களை எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியைத் தழுவியது.

அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்கள்  எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌதரி 4 விக்கெட்களையும், மகிஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/chaudhary-bowls-chennai-super-kings-beat-hyderabad-3837086.html

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.