Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் ஆட்சிக்கு வந்தாலும்... தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை, சடுதியாக மாற்ற முடியாது – பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யார் ஆட்சிக்கு வந்தாலும்... தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை, சடுதியாக மாற்ற முடியாது – பிள்ளையான்

இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோதிலும் அரசாங்கம் கிராமமட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையிலேயே சமுர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அதிகரித்த நிதி வழங்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் அரசாங்க செலவீனங்களை மிக கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றது.

எங்களுக்குகூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் செலவுகளை கட்டுப்படுத்துவது போன்று குடும்பங்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தினை செலவு செய்யவேண்டும்.

சிலர் ஏதோ இலங்கைக்கு மாத்திரம்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுபோன்று பேசிவருகின்றனர். இன்று சர்வதேசம் எங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது. மிக நீண்டகால முடக்கம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இந்த நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும்.

இன்று கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையினை மக்கள் சிறந்தமுறையில் கையாண்டு மக்கள் தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்துகின்றபோதுதான் நாடு உயரமுடியும்.

இதில் வெறுமனே அரசாங்கம் பிழைவிடுகின்றது. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியும் என்று ஊடகங்கள் உருவாக்கமுனைவது தெரிகின்றது.

நிச்சயமாக அப்படிசெய்ய முடியாது. எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது.

இருந்தபோதிலும் உறுதியான அரசாங்கம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் இதனை மிகவும் கவனமாக முகாமைசெய்து மீண்டெழுந்து வருகின்றது” மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1267012

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

உனது எசமான் அவ்வளவு தூரத்திற்கு நாட்டை நாசமாக்கிவிட்டான்   என்கிறாயா? நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன்று சர்வதேசம் எங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது.

இங்கு யேர்மனியில் பெற்றோல் 1லிற்றர் 2 யூரோவை எட்டியபோதும், மக்கள் தங்களின் வாகனங்கள் அனைத்திற்கும் புல்ராங் அடிப்பதை நிறுத்தவில்லை.😜

  • கருத்துக்கள உறவுகள்

அட பார்ரா ..நம்ம பிள்ளையான..

அப்ப இவர் ஹாவார்ட் எக்கணமிஸ்ரா மாறினவர்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அட பார்ரா ..நம்ம பிள்ளையான..

அப்ப இவர் ஹாவார்ட் எக்கணமிஸ்ரா மாறினவர்..🤣

ஹாவார்ட் எக்கணமிஸ் தான் அரசியல்  பேசணுமா சகோ??🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஹாவார்ட் எக்கணமிஸ் தான் அரசியல்  பேசணுமா சகோ??🤣

அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்.

ஆனால் Mr. பில்லை பேசுவது London School of Economics Professor மாதிரியல்லவோ....🤣

(டவுட்டுக் கணேசன் மாரின்ர தொல்லை தாங்க முடியவில்லையப்பா 🤣)

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இன்று சர்வதேசம் எங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது.

அது இப்போ. இருந்தாலும் ஒரு நேரம் சாப்பிடுங்கோ, நடந்து போங்கோ என்று மக்களிற்கு அறிவுறுத்தல் விடவில்லை, நெருக்கடி நேரத்தில் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆறுதலாய் உள்ளன சர்வதேச நாடுகள். தாங்கள் எப்போதுமே இப்படித்தான் என்பதை  ஏற்றுக்கொள்ளமாடீர்கள். பாவம் கொரோனா மாட்டி நிக்குது உங்களின் வரடுக்கவுரவத்தை மறைக்க.

15 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசாங்கம் அரசாங்க செலவீனங்களை மிக கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றது.

ரொம்ப கவலை இவருக்கு.

 

15 hours ago, தமிழ் சிறி said:

சமுர்த்தி பயனாளிகளுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அதிகரித்த நிதி வழங்கப்படுகின்றது.

அடிச்சு வைத்திருக்கும் காசை இப்படி விளம்பரத்தோடு அள்ளி வீசலாம் ஆனால் சாமான்களை இறக்குமதி செய்யாமல் கடதாசியை வைத்து என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்.

ஆனால் Mr. பில்லை பேசுவது London School of Economics Professor மாதிரியல்லவோ....🤣

(டவுட்டுக் கணேசன் மாரின்ர தொல்லை தாங்க முடியவில்லையப்பா 🤣)

memees.php?w=240&img=c2FudGhhbmFtL3NhbnR

நம்ம பேசன்ற்தான்..  ஆரோ இவரோட உள் மனசுல " நீங்க ஒரு பொருளாதார நிபுணர்" என்டு நம்ப வச்சுட்டினம்.. 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.