Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத சட்டத்தின் மூலம்... அநீதி நடந்திருக்கின்றது – சுரேன் ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பயங்கரவாத சட்டத்தின் மூலம்... அநீதி நடந்திருக்கின்றது – சுரேன் ராகவன்

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்  நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாயின் அந்த சட்டத்தை நாங்கள் முற்றாக நீக்க வேண்டும். எனினும், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியது. உதிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் சட்டங்கள் இருப்பது பிரச்சனையல்ல.

ஆனால் அந்த சட்டங்கள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆகையினால் அந்த சட்டத்தை சீர்திருத்தி நாட்டின் இறைமையை சரியான விதத்தில் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு சமாந்தரமாக இருக்கின்ற சர்வதேச சட்டங்களை பரிசீலித்து இலங்கையின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகப்புக்கும் ஏற்ற வகையில் பயங்கரவாத சட்டத்தை அமைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1267970

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்த அதிகம் படிச்சவர் எதனை இனப்பயங்கரவாதம் என்கிறார்... தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் தக்க வைத்திருந்த சுயநிர்ணய தன்னாட்சி அதிகாரத்தை காலணியத்துவத்துக்கும் பின் சிங்களத்துக்கும் இழந்ததை மீட்க நடத்திய போராட்டங்களையா..??!

அப்படி என்றால்.. தமிழர்கள் என்பதற்காவே 1950 கள்.. 70 கள்.. 80 களில் தமிழர்கள் மீது இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டதை.. 90 களில் 2000 களில் இனப்படுகொலைகளை நடத்தியமையை இவர் என்னென்று பார்கிறார்.. அவை சிங்கள பேரினவாதம் அரங்கேற்றிய.. இனப்பயங்கரவாதம் இல்லையோ..??! ஏன் அதனை தடுக்க இந்த பயங்கரவாதச் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை..??! ஏனெனில் அதைச் செய்தது சிங்கள அரச பயங்கரவாதமும் அதன் கூலிகளும். அதை இந்த மேதாவி சொல்வாரா..???! ஏற்றுக்கொள்வாரா..??!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

மத மற்றும் இன ரீதியான பயங்கரவாதமே நாட்டிற் போராட்டத்திற்கான களங்களைத் திறந்தததை இந்தக் கூலிக்குமாரடிக்கும் படித்தமேதாவிக்குப் புரியாமலிருக்குமா? முதலில் சிறிலங்காவின் அரச தலைமைகள் செய்யத பயங்கரவாதத்திற்கான நீதியை நிலைநாட்டினாலே நாடு உருப்படும். சிறிலங்காவின் அழிவிற்கு வித்திட்ட பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களச் சட்டம் முதல் பயங்கரவாதத் தடைச்சட்டம் வரையான அனைத்து ஒடுக்குமுறைகளுமே கரணியமாகும். வெறுமனே புத்த மதத்தவராக வேடம்தாங்கிய சிங்களமும், அதன் எடுபிடிகளான சுரேன் ராகவன் போன்றோரும் முதலில் தங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்பேசும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டோர். எனவே இந்தச் சட்டம்குறித்து வகுப்பினை சிங்கள அரசியல்வாதிகளுக்கு எடுப்பதே நன்று. அனைத்துலக  அழுத்தத்திற்கு ஏன் வவுனியாவில் நின்று கூத்தாடுவான். கொழும்பையல்லவா கேட்கவேண்டும:.

  • கருத்துக்கள உறவுகள்

சப்பிரி.சுரேன் ராகவன்... யாழ்ப்பாண  ஆளுணர்....டங்கி எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணுறாங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

சப்பிரி.சுரேன் ராகவன்... யாழ்ப்பாண  ஆளுணர்....டங்கி எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணுறாங்கள்...

ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கப் போகிறது.
சர்வதேசத்துக்கு… நல்ல பிள்ளைகளாக காட்ட,
குட்டிச் சாத்தான்களை… இறக்கி விட்டுள்ளார்கள்.
கூட்டத் தொடர் முடிய… வேதாளம் வழமை போல் முருங்கை மரத்தில் ஏறி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்மீட்கப் போராடிய போராளிகள் உண்மையிலே பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் இன்று இலங்கைத்தீவு முழுவதும் அந்தப் போராளிகளின் ஆட்சியில் இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாய் தொங்குகிறவனுக்கு எல்லாம் தலைகீழாய்த்தான் தெரியும். அதுக்கு இந்த சுரேன் ராகவன் ஒன்றும் விதிவிலக்கல்ல. தன் இனத்துக்கு நடக்கும் அநியாயத்துக்கு நிஞாயம் கேட்க துப்பில்லை, போதிக்க வந்திட்டார். இலங்கை தமிழரின் வரலாறே தெரிந்திருக்காது அவருக்கு. பாவம் அவர்! எசமான் இட்டதை நிறைவேற்ற துடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நான் திரும்ப திரும்ப சொல்வது இந்த படித்தவர்களை நம்பி அரசியல் பதவிகள் கொடுப்பது முழுக்க முழுக்க பிழையானது என்பதற்கு இவரின் அறிக்கை ஒன்றே போதுமானது .இந்த பயங்கரவாத தடை சட்டம் நேற்று முந்தாநாள் கொண்டுவந்த ஒன்றல்ல கடந்த 79களில் இருந்து ஒவ்வொரு மாதமும் கவனிக்க ஒவ்வொரு மாதமும் நமது தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் நீட்டிக்கப்பட்ட ஒன்று . இப்ப சர்வதேசம் நெருக்குவாரங்கள் இடம் இருந்து தப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் அவசரமாக, அப்பாவிகளாக.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியில் படிக்கும்

வாழ்வில் அனுபவித்தும்

மண்டைக்குள் எதுவும் ஏறாமல்

அடிமை மனநிலை.

எஜமானர்களை நாய்கள் காப்பாற்றுவதன் தொடர்ச்சியாக இவர்கள்.😭

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பள்ளியில் படிக்கும்

வாழ்வில் அனுபவித்தும்

மண்டைக்குள் எதுவும் ஏறாமல்

அடிமை மனநிலை.

எஜமானர்களை நாய்கள் காப்பாற்றுவதன் தொடர்ச்சியாக இவர்கள்.😭

அடிமை மனநிலை அடிமைகளுக்கும் உண்டு. அடிமைகளாக்கி வைத்திருக்கும் தலைவர்களுக்கும் உண்டு. கடவுளை வைத்து வர்னாச்சிரமத்தைப் புகுத்திய அந்தனர் வாழுமட்டும் அன்றேல் அழியுமட்டும் இந்த நிலை மாறுவதோ, மாற்றுவதோ கானல்நீர்தான். 

உலகில் இரண்டே சாதி, அது ஆண்சாதி, பெண்சாதி. மனிதவாழ்வின் நெறி இதுவென ஏற்று மனம் மகிழ்கிறது,  ஆனாலும் எதற்காக ஆண், பெண் என்று மட்டும் கூறி வேறுபடுத்தாமல், அதற்குள் சாதி புகுந்தது.?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.