Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது

யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது

 

தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் போல மிக விரைவில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுக் கொள்வது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பாரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.அதே போன்ற ஒரு வெற்றியை இலங்கையில் அடுத்து வருகின்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றி பெறும் அந்த காலம் மிக தூரத்தில் இல்லை.

இன்று மக்கள் நாள்தேர்றும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.எல்லா அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு. எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசைகளில் ஏதோ ஒரு விடயத்திற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு விடயத்திலும் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றார்கள். ஒரு அமைச்சர் கூறுகின்றார் விலை அதிகரிக்காது என்று. இன்னும் ஒரு அமைச்சர் கூறுகின்றார் விலை அதிகரிப்பு நிச்சயம் என்று. ஆனால் அரசாங்கம் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என கூறுகின்றது.

உண்மையான நிலைமையை மக்கள் மாத்திரமே அறிவார்கள். காலையில் எழுந்தவுடன் அன்றாடம் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலைமை. டீசல் தட்டுப்பாடு காரணமாக பாரிய அளவில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொடர்பாக பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு போகின்றவர்கள் திரும்பி வீடு வருகின்ற வரை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எந்த நேரத்திலும் போக்குவரத்து தடைப்படலாம். வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம். எனவே மிகவும் சிக்கலான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உண்மையை மறைத்து வருகின்றது.

இலங்கையில் 30 வருட யுத்தம் நடைபெற்ற பொழுது வடகிழக்கு மக்கள் மாத்திரமே இவ்வாறான ஒரு நிலைமையை எதிர் கொண்டார்கள். ஆனால் இன்று நாடே இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் வடகிழக்கு பகுதிகளில் பொருட்களின் தட்டுப்பாடு பொருட்களின் விலை அதிகரிப்பு பாதுகாப்பற்ற ஒரு நிலைமை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு பதட்டமான நிலைமை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை முழு நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு காரணம் இலங்கை அரசாங்கமே. முறையற்ற முகாமைத்துவம். அதிகாரிகளின் அசமந்த போக்கு. ஒரு சிலரின் தீர்க்க தரிசனம் அற்ற தீர்மானங்கள். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்று இந்த மோசமான நிலைமை இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இன்றைய நிலைமையை அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டு உண்மையான நிலைமையை நாட்டு மக்களுக்க அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் ஒரளவு தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் இந்த நாட்டை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது.
 

-மலையக நிருபர் தியாகு-

யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது (adaderana.lk)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, nunavilan said:

யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது

தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டப்பம் என்றால் என்ன? 

தெரிந்துகொள்ள கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஓட்டப்பம் என்றால் என்ன? 

தெரிந்துகொள்ள கேட்கிறேன்.

அது பட்டினத்தார் பாடினதாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஓட்டப்பம் என்றால் என்ன? 

தெரிந்துகொள்ள கேட்கிறேன்.

ஓட்டின் மீது போட்ட அப்பம் ஓட்டப்பம் மற்றும்படி அப்படி ஒரு அப்பம் இல்லை ......!

பட்டினத்தாரின் குடும்பம் வாணிபம் செய்யும் குடும்பமாகும். அதனால் அவர் இளவயதில் தந்தையின் சொல்லுக்கிணங்க வணிகம் செய்யும் பொருட்டு கப்பலில் பொருட்களைக் ஏற்றிக் கொண்டு அயல்நாடு சென்று அங்கு அவற்றை விற்று வணிபம் செய்து வேறு பொருட்களும் நிறைய பணமும் சேகரித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.மகன் வந்ததை அறிந்த தந்தையார், விற்ற பணமெல்லாவற்ரையும் கெதியா அனுப்பும்படி மகனுக்கு ஆளனுப்புகிறார். இதனால் கடுப்பான மகன் "காதற்ற ஊசியும் (நூல் கோர்க்கமுடியாத உடைந்த ஊசி) வாராது காண் உன் கடைவழிக்கே" என்று எழுதி அனுப்பிவிட்டு துறவு மேற்கொள்கிறார். 

அவர் ஊரில் பிட்சை எடுத்து உண்பதை அவமானமாக நினைத்த உறவினர்கள் அவரது தமக்கையாரிடம் சொல்லி ஆப்பத்தில் சயனைட் தடவி அவருக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். அதை அவர் வாங்கி அதில் விஷம் இருப்பதை உணர்ந்து "தன்வினை தன்னை சுடும் ஒட்டப்பம்  வீட்டை சுடும்" என்று சொல்லி வீட்டின் மீது போட வீடு பத்தி எரிந்தது......அதாவது "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்" என்பதுபோல....!

இதுதான் விடயம்.......நீங்கள் அவசரப்பட்டு ஒட்டப்பம் செய்து தாங்கோ என்று வீட்டில கேட்டு அவங்க துடைப்பத்தை தூக்கமுன் உங்களைக் காப்பாற்றி விட்டிருக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஓட்டப்பம் என்றால் என்ன? 

தெரிந்துகொள்ள கேட்கிறேன்.

 

1 hour ago, ஏராளன் said:

அது பட்டினத்தார் பாடினதாம்!

 

1 hour ago, suvy said:

ஓட்டின் மீது போட்ட அப்பம் ஓட்டப்பம் மற்றும்படி அப்படி ஒரு அப்பம் இல்லை ......!

பட்டினத்தாரின் குடும்பம் வாணிபம் செய்யும் குடும்பமாகும். அதனால் அவர் இளவயதில் தந்தையின் சொல்லுக்கிணங்க வணிகம் செய்யும் பொருட்டு கப்பலில் பொருட்களைக் ஏற்றிக் கொண்டு அயல்நாடு சென்று அங்கு அவற்றை விற்று வணிபம் செய்து வேறு பொருட்களும் நிறைய பணமும் சேகரித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.மகன் வந்ததை அறிந்த தந்தையார், விற்ற பணமெல்லாவற்ரையும் கெதியா அனுப்பும்படி மகனுக்கு ஆளனுப்புகிறார். இதனால் கடுப்பான மகன் "காதற்ற ஊசியும் (நூல் கோர்க்கமுடியாத உடைந்த ஊசி) வாராது காண் உன் கடைவழிக்கே" என்று எழுதி அனுப்பிவிட்டு துறவு மேற்கொள்கிறார். 

அவர் ஊரில் பிட்சை எடுத்து உண்பதை அவமானமாக நினைத்த உறவினர்கள் அவரது தமக்கையாரிடம் சொல்லி ஆப்பத்தில் சயனைட் தடவி அவருக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். அதை அவர் வாங்கி அதில் விஷம் இருப்பதை உணர்ந்து "தன்வினை தன்னை சுடும் ஒட்டப்பம்  வீட்டை சுடும்" என்று சொல்லி வீட்டின் மீது போட வீடு பத்தி எரிந்தது......அதாவது "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்" என்பதுபோல....!

இதுதான் விடயம்.......நீங்கள் அவசரப்பட்டு ஒட்டப்பம் செய்து தாங்கோ என்று வீட்டில கேட்டு அவங்க துடைப்பத்தை தூக்கமுன் உங்களைக் காப்பாற்றி விட்டிருக்கு......!   😂

 

தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.

 நேரம் எடுத்து இணைத்துள்ளீர்கள். மிகவும் நன்றி ஐயா. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

ஓட்டின் மீது போட்ட அப்பம் ஓட்டப்பம் மற்றும்படி அப்படி ஒரு அப்பம் இல்லை ......!

பட்டினத்தாரின் குடும்பம் வாணிபம் செய்யும் குடும்பமாகும். அதனால் அவர் இளவயதில் தந்தையின் சொல்லுக்கிணங்க வணிகம் செய்யும் பொருட்டு கப்பலில் பொருட்களைக் ஏற்றிக் கொண்டு அயல்நாடு சென்று அங்கு அவற்றை விற்று வணிபம் செய்து வேறு பொருட்களும் நிறைய பணமும் சேகரித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.மகன் வந்ததை அறிந்த தந்தையார், விற்ற பணமெல்லாவற்ரையும் கெதியா அனுப்பும்படி மகனுக்கு ஆளனுப்புகிறார். இதனால் கடுப்பான மகன் "காதற்ற ஊசியும் (நூல் கோர்க்கமுடியாத உடைந்த ஊசி) வாராது காண் உன் கடைவழிக்கே" என்று எழுதி அனுப்பிவிட்டு துறவு மேற்கொள்கிறார். 

அவர் ஊரில் பிட்சை எடுத்து உண்பதை அவமானமாக நினைத்த உறவினர்கள் அவரது தமக்கையாரிடம் சொல்லி ஆப்பத்தில் சயனைட் தடவி அவருக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். அதை அவர் வாங்கி அதில் விஷம் இருப்பதை உணர்ந்து "தன்வினை தன்னை சுடும் ஒட்டப்பம்  வீட்டை சுடும்" என்று சொல்லி வீட்டின் மீது போட வீடு பத்தி எரிந்தது......அதாவது "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்" என்பதுபோல....!

இதுதான் விடயம்.......நீங்கள் அவசரப்பட்டு ஒட்டப்பம் செய்து தாங்கோ என்று வீட்டில கேட்டு அவங்க துடைப்பத்தை தூக்கமுன் உங்களைக் காப்பாற்றி விட்டிருக்கு......!   😂

நன்றி விளக்கத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2022 at 16:49, suvy said:

ஓட்டின் மீது போட்ட அப்பம் ஓட்டப்பம் மற்றும்படி அப்படி ஒரு அப்பம் இல்லை ......!

ஏனில்லை சுவி அவர்களே! ஓட்டின்மீது போட்ட அப்பம் மட்டும் ஓட்டப்பம் அல்ல, ஓட்டின்மீது சுட்ட அப்பமும் ஓட்டப்பம்தான்!! அக்காளின் நடை, உடைகளைப் பார்க்காமல், அவர் ஓட்டப்பம் சுடுவதற்குத் தெரிவிக்கும் ரெசிப்பியை மட்டும் கேட்டுப் பாருங்கள் தெரியும்.🤗

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ இதை.... இதை ஓட்டப்பம் என்றும் சொல்லலாம் சுட்ட இட்லி என்றும் சொல்லலாம்.........!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.