Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யா - உக்ரேன் மோதல் இலங்கைக்கும் பாரிய சவால் - இலங்கை விமானப்படை தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

 

இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதனால் எமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்களை தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் சுதர்ஷன பதிரன தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் கூறுகையில்,

ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன்  நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டவை அல்லது சோவியத் யூனியர் காலத்தில் பெற்றுக்கொண்ட விமானங்களாகும்.

ஆகவே எமது விமானங்களை புனரமைக்க அல்லது ஏதேனும் தேவைகள் இருப்பின் பெற்றுக்கொள்ள அவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் தேவைப்படும். 

எனினும் இன்று இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக எம்மிடம் உள்ள விமானங்களை பத்திரப்படுத்தி வைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இப்போது எம்மிடம் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரேன் விமானங்களை கவனமாக பராமரிக்கவும் தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தவும் இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

அதேபோல் இந்த இரண்டு நாடுகள் தவிர்ந்து ஏனைய சில நாடுகளிடம் இருந்தும் விமானங்களை பெற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் அவர்களுடன் நாம் தொடர்புகொண்டு எமது விமானங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்புக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டு எமது விமானங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதல் எமக்கும் பல்வேறு படிப்பினையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. விமானப்படையாக நாமும் எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டின் ஐக்கியத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் விதமாகவும் ஆகாய எல்லையை பாதுகாக்கும் விதமாகவும் விசேட ரேடார் கட்டமைப்பு, தாக்குதல் விமானங்கள் மற்றும் மிசேல் போன்றவற்றை கொண்டு ஆகாய எல்லைகளை பலப்படுத்தியுள்ளோம் என்றார். 

ரஷ்யா - உக்ரேன் மோதல் இலங்கைக்கும் பாரிய சவால் - இலங்கை விமானப்படை தளபதி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா…. சக்கை, எண்டானாம்.
இவையின்ரை போர் விமானத்துக்கு, உதிரிப் பாகம் இல்லையாம்.
ஆரோடை இப்ப சண்டை பிடிக்க… உதிரிப் பாகம் வேணுமாம்.

எடுக்கிறது பிச்சை… நினைப்பு மட்டும், உச்சியிலை நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அட்றா…. சக்கை, எண்டானாம்.
இவையின்ரை போர் விமானத்துக்கு, உதிரிப் பாகம் இல்லையாம்.
ஆரோடை இப்ப சண்டை பிடிக்க… உதிரிப் பாகம் வேணுமாம்.

எடுக்கிறது பிச்சை… நினைப்பு மட்டும், உச்சியிலை நிக்குது.

அவர்கள் நடுநிலையில் இருக்கினமாம்......இதுதான் நரித்தந்திரம்.......இது முடியாததனால்தான் எம்மினம் அழிந்தது .........ஏன் தேவைக்கும் மீறிய ராணுவம் இருக்குது, இரண்டு பக்கமும் 50,000.....50,000அனுப்பி வைக்கலாம்தானே......! 

14 minutes ago, suvy said:

அவர்கள் நடுநிலையில் இருக்கினமாம்......இதுதான் நரித்தந்திரம்.......இது முடியாததனால்தான் எம்மினம் அழிந்தது .........ஏன் தேவைக்கும் மீறிய ராணுவம் இருக்குது, இரண்டு பக்கமும் 50,000.....50,000அனுப்பி வைக்கலாம்தானே......! 

அல்லது உக்ரேன் விமானிகள் இலங்கை வந்து கூலிக்கு குண்டு போட்ட மாதிரி (செஞ்சோலை படுகொலை உட்பட) இவர்களும் அங்கு போய் குண்டு போட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து உலகை காப்பாற்றலாம் தானே..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிழம்பு said:

ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதல் எமக்கும் பல்வேறு படிப்பினையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. விமானப்படையாக நாமும் எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டின் ஐக்கியத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் விதமாகவும் ஆகாய எல்லையை பாதுகாக்கும் விதமாகவும் விசேட ரேடார் கட்டமைப்பு, தாக்குதல் விமானங்கள் மற்றும் மிசேல் போன்றவற்றை கொண்டு ஆகாய எல்லைகளை பலப்படுத்தியுள்ளோம் என்றார். 

உவர் இப்ப என்ன சொல்ல வாறார்? 
சொந்தமாய் சொந்த மூளையிலை என்னவும் செய்யப்போகினமாமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அல்லது உக்ரேன் விமானிகள் இலங்கை வந்து கூலிக்கு குண்டு போட்ட மாதிரி (செஞ்சோலை படுகொலை உட்பட) இவர்களும் அங்கு போய் குண்டு போட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து உலகை காப்பாற்றலாம் தானே..?

ஹா ஹாஹா.....  இது தெரிந்திருந்தால் உக்ரேன் விமானிகள் ஏன் இங்கு குண்டு போட வந்திருக்கபோகினம்? இப்போ இந்தியா இங்கு படையெடுக்கப்போகுது என்று வைத்துக்கொள்ளுங்கள்; எந்த நாட்டு விமானிகள் வருவினம் குண்டு போட? இருக்கிற விமானங்களுக்கும் உதிரி பாகங்கள் இல்லையாம், இந்த லட்ஷணத்தில இவை போர் செய்து .... அங்கு குண்டு போட சொல்ல எங்கு போய் கொட்டுவார்களோ? எல்லா நாட்டுக்கும் தெரியும் இவர்களின் வீரம் எப்படியானது என்று, இதில இவர்கள் போய் குண்டு போடுவது நடக்கிற காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையிலும்  தமிழர்  தலையில்  குண்டு  போடுவதை  தள்ளி வைக்க விருப்பமில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இந்த நிலையிலும்  தமிழர்  தலையில்  குண்டு  போடுவதை  தள்ளி வைக்க விருப்பமில்லை??

பிறகு எதற்கு போர் விமானம் உதிரி பாகம் என்று கவலைப்படுகினம்? நாட்டு மக்கள் கஞ்சி குடிக்க வழியில்லை, விளக்கு எரிக்க எண்ணெயில்லை. இவை போர் விமானம் பற்றி கவலைப்படுகினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதிரிப்பாகங்கள் இல்லாததால்......🤣

Bild

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.