Jump to content

இலங்கை மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

வயிறு எரிந்து கொண்டிருக்கிறது 
வாழ்வு தொலைந்து கொண்டிருக்கிறது 
மிஞ்சி இருப்பதற்கு இனி என்ன இருக்கிறது.

அப்போது தமிழ்க் குழந்தை பாடினான் இப்போது சிங்களக் குழந்தை பாடுகிறான். இதை என்னவென்பது கர்மம் என்பதா இல்லை காலம் என்பதா. இன்று அரசு மேல் ஆத்திரமாக இருக்கிறீர்கள் ஆளுக்கு ஆள் திட்டியும் தீர்க்கிறீர்கள். அடுத்த நாள் சோத்துக்கே என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்கள். யுத்தம் இல்லாத போதும் இன்று நித்தம் சோதனை. ஏன் இந்த நிலைமை என்று உங்களை நீங்களே கேளுங்கள் எம் சிங்கள இன சகோதரரே. 

ஒருவரை ஒருவர் வெறுத்தீர்கள் உங்களை போல் இன்னும் ஒரு இனம் வாழ விடாமல் தடுத்தீர்கள். இனவாதம் என்ற பெயரில் எல்லா பொய்களையும் சொல்லி இனத்தை எல்லாம் பிரித்தீர்கள். பௌத்த நாடு என்ற பெயரில் மதம் என்ற மதத்தால் மனிதத்தை கொன்றீர்கள். சிறு பான்மை தமிழ் இனத்தின் ஒரு மறக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வை யுத்த வெற்றி என்று கொண்டாடி மகிழ்ந்தீர்கள். தொலைந்து போன மகனை தேடி அலையும் ஒரு தாயின் கண்ணீரின் வலி தெரியாது இருந்தீர்கள். 

எதிர் காலத்தில் எமக்காய் என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர் எம் இளம் சமுதாயத்துக்காக எப்படி என்ன செய்யப் போகிறீர் என்று ஆட்சிக்கு வருபவரை எதுகுமே கேட்காமல் முழுக்க முழுக்க இனவாதம் கக்கிய பொய்களை நம்பி ஆட்சி அதிகாரம் ஏற வைத்து விட்டு இனி அழுது என்ன பயன். இலங்கை இப்படி ஒரு துன்பவியல் வரலாற்றை சந்திப்பது இதுவே முதல் தடைவை . இனியாவது இந்த நாடு மாற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் மாற வேண்டும் அனைத்து இனமும் ஒற்றுமையாய் இருக்கும் வழியை தேட வேண்டும். அவர் அவர் உரிமையை பகிர்ந்து அளிக்க வேண்டும். நீண்டகால பொருளாதார திட்டங்களை சரியான முறையில் எதிர்காலத்தை எண்ணி மாற்றவேண்டும். 

சகோதரத்துவம் சகிப்புத்தன்மை ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற அறம் சார்ந்த கொள்கையோடு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுகும் தப்பினால்  உங்கள் பசியை யாராலும் போக்கி விட முடியாது. இன்னும் நாடுகளிடம் கை ஏந்தும் நிலைமை தான் தொடரும். எத்தனை காலம் தான் இந்த நிலைமையில் இருப்பது. எல்லா இலங்கையின் பொது மகனும் இவ்வளவு கடனை எப்படி தன் தலையில் சுமப்பது. குடுப்பத்தை எப்படி சுமப்பது. 

நாம் தமிழர்கள் தர்மத்தின் வழி நின்று தர்மம் செய்த நாகரீக வாழ்வில் இருந்தது வந்தவர்கள். தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியின் சொந்தங்கள். ஆதலால் இந்த துன்பம் கடந்து போக வேண்டும். அன்று தமிழரின் பரிதாப நிலை கண்டு தமிழ் தலைவர் தந்தை செல்வா சொன்னார் இறைவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். 

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2022 at 02:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

கருத்துக்கு நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் இனி அவ்வளவு தான் 😭

Link to comment
Share on other sites

உதயகுமார் அவர்களே! உங்கள் ஆக்கம் ஆக்கபூர்வமானது. ஆனாலும் அது சிங்கள அரசுகள் என்ற எருமைமாடுகளின்மேல் பொழியும் மழை போன்றது என்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.🤔  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் நாங்கள் வாழ்கிறோம்.....முதலில் விகாரைகளுக்குள் இருந்து அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளையும் மக்களையும் மூளைச்சலவை செய்து   இனவாதம் கக்கி நாட்டை சாக்கடையாக்கும் போலிப் பிக்குகளை களை எடுத்து விட்டால் போதும் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 11:27, விளங்க நினைப்பவன் said:

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் இனி அவ்வளவு தான் 😭

 

On 19/3/2022 at 11:44, Paanch said:

உதயகுமார் அவர்களே! உங்கள் ஆக்கம் ஆக்கபூர்வமானது. ஆனாலும் அது சிங்கள அரசுகள் என்ற எருமைமாடுகளின்மேல் பொழியும் மழை போன்றது என்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.🤔  

 

On 19/3/2022 at 12:21, suvy said:

எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் நாங்கள் வாழ்கிறோம்.....முதலில் விகாரைகளுக்குள் இருந்து அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளையும் மக்களையும் மூளைச்சலவை செய்து   இனவாதம் கக்கி நாட்டை சாக்கடையாக்கும் போலிப் பிக்குகளை களை எடுத்து விட்டால் போதும் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.......! 

கருத்துக்களுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.