Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலும்  உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலும்  உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
-------------------------
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்
பாடுகள் ஒன்றானபோதும்
கோடுகள் வெவ்வேறானது!
முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட
அனைத்துலகும் ஒன்றாய் நின்றது
நன்றாய் அள்ளியும் கொடுத்தது!
உக்கிரேனென்றதும்
உலகம் மூன்றாய் நான்காய்
முகம் காட்டி நடக்கிறது!
எல்லா உயிர்களும் 
ஒன்றெனச் சொல்கிறோம்
பதின்மூன்று ஆண்டுகள் முன்
இவர்கள் எங்கே போயினர்
பனியாய் உறைந்து போயா கிடந்தனர்!
மேற்கின் தெருவெங்கும்
கெஞ்சியும் அழுதும் 
யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் 
அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க 
அனைத்துலகின் படிகளில் நின்றோம்
ஆனாலும் நடந்தது என்ன
வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?)
கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர்
கொலைக்கான அறிவும் கொடுத்தனர்
கொலைக்கான வேவும் சொன்னார்கள்
கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே
கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே 
மேற்கின் கூலிகள் வழி காட்டின  
எல்லாம் எம்மினக் கொலைக்காகவே!
பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும்
ஐரோப்பிய ஒன்றியமும்
நேட்டோ கூட்டணியும் 
ஜீ ஏழு நாடுகள் குழுவும்
உக்கிரேனென்றதும் உடனே கூடுது
ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே 
கண்டனம் செய்தே தடைகளை போட்டன!
மனித உயிர்கள் ஒன்றெனும் 
அதனை மதித்து நடத்தல் 
அரசுகளின் கடனென்றும் 
அடிக்கடி கூறிடும் ஐநாவே
பதின்மூன்றாண்டின் முன்
எங்கேபோனது உன் சமன்பாடு!
முள்ளிவாய்க்காலில் 
உன் முகம் இழந்து போனாயே!
உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று
எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே
என்ற உணர்விலே வாழும் தமிழனோ
பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன்
பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன்
இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர்
காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது
இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால்
எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம்
எங்கே ஒருமுறை சிந்திப்பீரா
எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா?

அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Edited by நிழலி
நொச்சி கேட்டதுக்கு இணங்க தலைப்பு மாற்றம்
  • Like 7
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“முள்ளிவாய்க்காலும், உக்ரேனும்” சமன்பாடு, ஒப்பீட்டை…
மிக அழகாக உங்கள் கவிதையில் கொண்டு வந்தீர்கள், நொச்சி. 👍🏽

மேற்குலகு தான்…, முள்ளிவாய்க்காலை ஓர வஞ்சனையுடன் அணுகியது என்றால்…
நம்மவர் சிலரும்… வெள்ளைத் தோல் மோகத்தில்,
உக்ரைனை… முள்ளி வாய்க்காலுடன் ஒப்பிட்டு…
கண்ணீர் வடிக்கும், அறியாமையை… என்ன வென்று சொல்வது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால்
எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம்
எங்கே ஒருமுறை சிந்திப்பீரா
எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா?

இதே சிந்தனை தான் எனக்கும்.

நன்றி நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர்

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

7 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

 

பிரபா,

எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா?

எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? 

மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா?

நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்?  இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? 

சரி, அதைவிடுங்கள்  முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை  முறியடிப்பது யார்? 

//எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? //

போராட்டதை அவர்கள் மட்டுமா முறியடித்தார்கள்?

//மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.//

இருக்கலாம். ஆனால்  தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான கவிதை நொச்சி.........உளமார வரவேற்கிறேன்......!   👍

Link to comment
Share on other sites

59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்?  இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? 

சரி, அதைவிடுங்கள்  முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை  முறியடிப்பது யார்? 

 

இந்தியா, சீனா, ரஷ்சியா மட்டுமல்ல, எந்த நாடுகளிடமும் நாம் எதனையும் கேட்டுப் பெற முடியாது தான் நிதர்சனம். ஆனால் இதில் சீனாவும் ரஷ்சியாவும் இலங்கைக்கு செய்த உதவிகளை விட (ஆயுத உதவி மற்றும் இலங்கையை ஐ.நாவில் காப்பாற்றுவது)  மேற்கு எமக்கு செய்தது தான் மிகப் பெரும் துரோகம். 

எம் போராட்ட வலுவை முற்றாகச் சிதைத்ததில் மேற்கினது பங்களிப்பு முக்கியமாக அமெரிக்காவினது பங்களிப்பு இந்தியாவின் பங்களிப்புக்கு நிகரானது.

59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

இருக்கலாம். ஆனால்  தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்.. 

எனக்கு தெரிந்து இருவரைத் விர மனித உயிர்களின் இழப்பை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தப் போரை ஆரம்பிக்க கூடிய தவிர்க்க முடியாத நிலைக்கு ரஷியாவை கொண்டு நிறுத்திய காரணங்களை நியாயப்படுத்துகின்றதை தான் அவதானிக்க முடிகின்றது.


இன்று வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் கொண்ட மக்களின் இறப்புக்காக இங்கு கவலைப்படும் பலர் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி யேமனில் நடாத்தும் படுகொலைகளுக்கு கவலைப்படுவதை காண முடியுது இல்லை. அதே போன்று அன்று அலெப்போ நகர் மீது 4 வருடங்கள் முற்றுகையிட்டு இறுதியில் குளோரின் குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

“முள்ளிவாய்க்காலும், உக்ரேனும்” சமன்பாடு, ஒப்பீட்டை…
மிக அழகாக உங்கள் கவிதையில் கொண்டு வந்தீர்கள், நொச்சி. 👍🏽

மேற்குலகு தான்…, முள்ளிவாய்க்காலை ஓர வஞ்சனையுடன் அணுகியது என்றால்…
நம்மவர் சிலரும்… வெள்ளைத் தோல் மோகத்தில்,
உக்ரைனை… முள்ளி வாய்க்காலுடன் ஒப்பிட்டு…
கண்ணீர் வடிக்கும், அறியாமையை… என்ன வென்று சொல்வது.

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி.

19 hours ago, ஈழப்பிரியன் said:

இதே சிந்தனை தான் எனக்கும்.

நன்றி நொச்சி.

படித்தமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.இன்றைய சூழலை கையாளும் திறனற்ற தலைமைகளால் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் போராடினால் மட்டுமே மாற்றம்வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் நாமாக இருப்பதே எமக்கு நன்மை. அதேவேளை மனித உயிர்களின் அழிவினை யார் ஏற்படுத்தினாலும் கண்டித்தல் அவசியம்.
மேற்குலகின் நகர்வுகளனைத்தும் தலைமைப்பாத்திரம் மாறிவிடுமோ என்ற ஐயத்தின் வெளிபாடே. யூகோசிலாவியாவை மேற்குத் துண்டாடியதபோல்(அதற்கான கரணியங்களும் இருந்தன) உக்கிரேன் துண்டாடப்படுமானால் மேற்கின் பாத்திரம் ஆட்டம்காணலாம்.

10 hours ago, suvy said:

உணர்வுபூர்வமான கவிதை நொச்சி.........உளமார வரவேற்கிறேன்......!   👍

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

9 hours ago, நிழலி said:

சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.

ஒருவேளை நாங்களும் மதவாதக் கண்ணாடியூடாக நோக்கியதன் விளைவாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரகால கவிதை அருமை நொச்சி. 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நேரகால கவிதை அருமை நொச்சி. 👏

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

விருப்பையும் நன்றியையும் வழங்கி உற்சாகமூட்டும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

யார் மேற்கின் எதிரி?
ரஷ்யாவா நிச்சயமாக இல்லை?
கிழக்கு மேற்கு ஜேர்மனி இணைவிற்கு பின் பனிப்போர் முடிவிற்கு வந்து விட்டது என கிழக்குலகு கொண்டாடியது. அதை நயவஞ்சமாக துர்பிரயோகம் செய்தது மேற்குலகு குறிப்பாக அமெரிக்கவும் பெரிய பிரித்தானியாவும்...... ரஷ்யாவை நம்ப வைத்து கெட்ட வேலைகளை செய்தது இந்த மேற்குலகு. இன்று கூட ஜேர்மனிய பழம்பெரும் அரசியல்வாதிகள் ரஷ்யாவின் பக்கம். அதனால் அவர்களின் செய்திகள் வெளியில் வருவருவதில்லை(மேற்குலக ஊடக சுதந்திரம்) ரஷ்ய அதிபர் புட்டின் மேற்குலக ஐரோப்பிய தலைவர்களுடன் மிக மிக நட்பாக  இருந்தவர். பனிப்போர் முடிந்து விட்டது என ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தவர்.எல்லா மக்களுக்கும் சுதந்திரம் உண்டு என அறிவித்தவர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. காரணம் இவர்கள் ஒன்று பட்டால் தன் பிழைப்பு கெட்டுப்போய் விடும் என அமெரிக்கா பயந்தது.

வரலாறுகள்  செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to முள்ளிவாய்க்காலும்  உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

 

வரலாறுகள்  செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்

வணக்கம் குமாரசாமி அண்ணா!

வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட  எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. 

ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் குமாரசாமி அண்ணா!

வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட  எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. 

ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா? 

உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. 🙏

இலங்கைத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி ஏதும் நடக்க சாத்தியமுள்ளதா என சொல்லுங்கள். அதன் பின் உக்ரேன் சண்டையை பற்றி விவாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இலங்கைத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி ஏதும் நடக்க சாத்தியமுள்ளதா என சொல்லுங்கள்

இல்லை, ஆனால் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் தரக்கூடிய நாடுகள் எங்கே இருக்கின்றன என்றால் அது மேற்குலக நாடுகளில்தான் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் இணைந்தோ இல்லை அனுசரித்தோ நடக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். எங்கள் விடயத்தில் யார் ஓரளவிற்கேனும் உதவுவார்கள் என்பதை/சரியானதை விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்கிறேன்..

இந்த உக்ரோன் போரைப் பற்றி இணையத்தளங்களில் அவர்கள் மீது வெறுப்பை காட்டி எழுதியதால்தான் இந்தளவு கருத்துக்களும், இல்லாவிடில் ஏதோவொரு செய்தியாக பார்த்துவிட்டு மனதிற்குள் புடினை சபித்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களிற்காக இரக்கப்பட்டிருப்பேன் ஏனெனில் போர் ஏற்படுத்திய வலிகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதனை வெறுக்கிறேன்.. அவ்வளவுதான்.. 

நன்றி அண்ணா. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை, ஆனால் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் தரக்கூடிய நாடுகள் எங்கே இருக்கின்றன என்றால் அது மேற்குலக நாடுகளில்தான் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் இணைந்தோ இல்லை அனுசரித்தோ நடக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். எங்கள் விடயத்தில் யார் ஓரளவிற்கேனும் உதவுவார்கள் என்பதை/சரியானதை விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்கிறேன்..

இந்த உக்ரோன் போரைப் பற்றி இணையத்தளங்களில் அவர்கள் மீது வெறுப்பை காட்டி எழுதியதால்தான் இந்தளவு கருத்துக்களும், இல்லாவிடில் ஏதோவொரு செய்தியாக பார்த்துவிட்டு மனதிற்குள் புடினை சபித்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களிற்காக இரக்கப்பட்டிருப்பேன் ஏனெனில் போர் ஏற்படுத்திய வலிகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதனை வெறுக்கிறேன்.. அவ்வளவுதான்.. 

நன்றி அண்ணா. 

 

இன்னுமா மேற்கை நம்புகிறீர்கள்? 

நாங்கள் எப்படி வாய்கிழியக் கத்தினாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை.

அவர்கள் தங்களுக்குத் தேவையென்றால்  எங்களைப் பாவிப்பார்கள், தேவை இல்லையென்றால் தூக்கி எறிவார்கள். தேவைக்கு ஆட்கள் இல்லையென்றல் உருவாக்கிக்கொள்வார்கள். தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவார்கள். 

இப்போது உக்ரேனுக்கு என்ன நடந்ததோ/ நடக்கிறதோ அதைத்தான் இந்தியா எமக்குச் செய்தது. மேற்கும் செய்கிறது. 

சிங்களம்சீனாவிடம் போகாமல் மேற்கிடம் அல்லது இந்தியாவிடம் சரணடைந்தால் எங்கள் நிலை என்னாகும் ?

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.