Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்!

அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும்.

அந்தவகையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் மிரிஹான வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது தவறான செயலாகும். என்னதான் வதந்திகள் பரவினாலும், முறையான விசாரணையின்றி மக்களை கைது செய்து, துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சமையல் எரிவாயு, எரிபொருள் இன்றி மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். இதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர். அதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாம் ஆதரவு.

மிரிஹான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் கண்டிக்கின்றோம். அது நியாயமற்ற செயலாகும். மக்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசுக்கு எமது எதிர்ப்பை காட்டிவிட்டோம். சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்தோம். ஆனால் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் இ.தொ.கா. இப்படி செயற்பட்டது என சிலர் வதந்தி பரப்பினர்.

இராணுவத்துக்காக 10 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடமும் உள்ளடங்குகின்றது. இதனை நாம் எதிர்த்தோம்.

மக்களுக்கு வேலை நடக்கனும், நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு சார்பான முடிவையே நாம் எடுப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனால் அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274491

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுண்ணி கழன்று அடுத்த இடத்தில் ஒட்டிக்கொள்ளப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஒட்டுண்ணி கழன்று அடுத்த இடத்தில் ஒட்டிக்கொள்ளப் போகுது.

இதுதான் உண்மை.

ஏழைத் தோட்டத் தொழிலாளரின் வியர்வையையும், குருதியையும் கொண்டுபோய் சிங்கள எஜமானர்களின் காலில் போட்டு தமது வயிறு வளர்க்கும் பெருச்சாளிகள்.

அடுத்த அரசு உருவாகும்வரை இவன் பார்த்திருக்கப்போகிறான். உருவானவுடன், ஓடோடிப்போய் பதவிப்பிரமாணம் செய்யப்போபவனும் இவனே.

இந்த அரசு சரியில்லையென்று உனக்கு இன்றுதான் தெரிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றோர் இன்னும் அரசுடன் ஒட்டி உள்ளனரா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றோர் இன்னும் அரசுடன் ஒட்டி உள்ளனரா??

ஓம். பிள்ளையானை… கொலை கேசில் இருந்து வெளியே கொண்டு வந்தது மகிந்த.
ஆன படியால், அவர்களுடனேயே இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றோர் இன்னும் அரசுடன் ஒட்டி உள்ளனரா??

டக்ளஸ் இன்னும் ஆதரவு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். அங்கயன் அமத்தி வாசிக்கிறார்,  எங்கே மாறி பாயலாம் என்று ஆராட்ச்சியில் இருக்கிறாரோ தெரியவில்லை. இந்த நேரத்தில் யாராவது பிள்ளையானை கவனிப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தோட்ட தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை  முஸ்லீம் கட்சிகளுக்கும் இடையில் ஒரு இஞ்சி கூட வித்தியாசமில்லை.
கொள்கை ஏதுமில்லாமல்  ஆளும் தரப்பு கதிரையில் இருந்து கொண்டு சுகபோகங்களை அனுபவிக்க காத்திருப்பவர்கள். கேட்டால் அபிவிருத்தி என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

........ .......  மூத்திரம் பெய்யத் தெரியாது இருந்ததை மகிந்து மாத்தையாதான்..எம்பி ஆக்கினவர்..இப்ப அவருக்கு கயிறு கொடுக்குது...அடுத்த பதவி ஆசையில்..

மூனாக்கள் பதவி எடுக்க ரெடி கக்கீம் நானா நேற்று பெரிய கூட்டம் கூட்டி ஊர்வலம் நடத்தினவர்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.