Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார் –

 

 

 
( திருக்கோவில் நிருபர்)
 
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
IMG_9237-300x225.jpgIMG_9235-300x225.jpgIMG_9241-300x225.jpgIMG_9233-300x225.jpg
மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி இரண்டுநிமிட அங்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பூபதியின் மகள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.இன்று எனது தாயாரான அன்னை பூபதியம்மாவின் 34 வது ஆண்டு நினைவு நாள் அதனையிட்டு நாவலடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர் சென்றோம் அப்போது அங்கு இருந்த பொலிசார் எங்களை விசாரித்துவிட்டு நீதிமன்ற உத்தரவு என ஒரு பேப்பரை வாசித்துவிட்டு அவர் விடுலைப்புலிகளுக்காக உண்ணாவிரம் இருந்துள்ளர் எவரும் அஞ்சலி செலுத்த முடியாது என பொலிசார் தெரிவித்து அங்கு அஞ்சலி செலுத்த செல்லவிடாது தடுத்தனர்.
எமது தாயார் அப்போது மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் அமைதியான முறையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரம் இருந்தார் எனவும் என பொலிசாருக்கு எடுத்துரைத்தேன். இருந்தபோதும் எங்கள் மூன்று பேரையும் அஞ்சலி செலுத்த விடாது பொலிசார் தடுத்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளோம்.
கடந்த 3 வருடங்களுக்கு முதல் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்போது எனது தாயாருக்கு சென்று அஞ்சலி செலுத்தவேண்டும் அதற்கு தடை இல்லை எனவும் அவருடைய அஞ்சலியை தொடர்ந்து செய்து வரவேண்டும் அதற்கான உரிமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார். ஆனதல் இப்போது பொலிசார் தடுக்கின்றனர்.
எனவே எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த பிள்ளைகளுக்கு உரிமை இல்லையா? எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து தரவேண்டும் அதேவேளை அன்னை பூபதியை வைத்து அவரின் பிள்ளைகளுக்கு உதவுவதாக எனது உறவினர் உட்பட சிலர் வெளிநாடுகளில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.
எங்களுக்கு எனது சகோதரங்களுக்கோ ஒரு உதவியும் தரப்படவில்லை அதேவேளை அரசியல் வாதிகள் உட்பட பலர் வந்து அன்னை பூபதியின் சமாதியை அபிவிருத்தி செய்வோம் பூங்கா அமைப்போம் சிலை வைப்போம் என தெரிவித்து வாக்குறுதி தந்துவிட்டு சென்றவர்கள் சென்றவர்கள் தான்.
எனவே இவ்வாறான நிலையில் இன்று நாங்கள் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு பொலிசார் தடுத்து நிறுத்தியது மிகவும் மனவேதனையான விடையம். எனவே எதிர்வரும் காலத்தில் அன்னை பூபதியின் பிள்ளைகள் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காவது அனுமதியை பெற்றுத்தர அனைவரும் உதவவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/174512

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் திருந்தி விட்டான் என்று ஒப்பாரி வைப்பவர்கள் வரிசையில் வருக ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

அன்னை பூபதியை வைத்து அவரின் பிள்ளைகளுக்கு உதவுவதாக எனது உறவினர் உட்பட சிலர் வெளிநாடுகளில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.

இந்த மோசடி வேறு நடக்கின்றதா?
அன்னை பூபதிக்கு, அஞ்சலி செலுத்த மறுக்கப் பட்ட விடயத்தை…
சாணக்கியன் உடனடியாக தலையிட்டு, அவர்களின் கடமையை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

சிங்களவன் திருந்தி விட்டான் என்று ஒப்பாரி வைப்பவர்கள் வரிசையில் வருக ?

நான் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு இளயதலைமுறை சார்ந்த இளைஞர் யுவதிகளோடு தொடர்பில் இருக்கிறேன். இன்று அவர்கள் மத்தியில்; தமிழ்சிறி இணைத்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவுஏந்தல், அங்குநடைபெற்ற போலீஸ் தலையீடு பற்றி எடுத்து கூறினேன். அவர்கள் அன்னை பூபதி பற்றிய எந்தவித தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. 
சிறிது நேரத்தை எடுத்து அவர்களுக்கு அன்னையின் வரலாறு, இந்திய ராணுவ கெடுபிடி, அவரின் மகன்மாரின் இழப்புகள், அன்னையின் உண்ணாவிரத போராட்டம்,  அவரின் மறைவு, அவருக்கு தேசிய தலைவரால் கொடுக்கப்பட்ட அதிஉயர் கௌரவம் போன்ற விடயங்களை பகிர்ந்ததோடு இன்றைக்கு 33 வருடங்களின் பின்னர் கூட அவருக்கான அஞ்சலியை செலுத்துவதில் எமக்குள்ள சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றியும் எடுத்தது கூறினேன். 
அதோடு சார்ந்து, அவர்கள் திலீபன் அண்ணா, வெலிகடை சிறையில் கொலைசெய்யப்பட்ட குட்டிமணி அண்ணா, ஜெகன் அண்ணா போன்றவர்கள் பற்றிய விபரங்களையும் மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்த தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
அப்போது ஒரு சிங்கள சகோதரி அவரின் பெயர் மதுஷிகா கொழும்பில் உள்ள IT கம்பனியில் வேலை  பார்ப்பவர், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஒரு பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தான் உரையாற்ற இருப்பதாகவும், என்னிடம் அன்னை பூபதி சார்ந்த செய்திகளை, அவர் சரிதங்களை ஆங்கிலத்தில் பகிர முடியுமா என்று கேட்டு இருந்தார். உடனடியாக நானும் அவற்றை அவருக்கு பகிர்ந்திருந்தேன்.
சுமார் இருணித்தியாலங்களின் பின்னர் அந்த இளம் சகோதரி அவர் அங்கே உரையாற்றிய விடயங்கள், படங்கள் போன்ற தகவல்களை எனக்கு அனுப்பி இருந்தார். தன்னால் இன்றைக்கு  அன்னைபூபதி அம்மாவின் நினைவு சார்ந்து பேசக்கூடிய செய்திகளை தந்தமைக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.
இது ஒரு பெரிய விடயமல்ல... ஆனாலும் மாற்றங்களை நாங்கள் தான் சிறிது சிறிதாக சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே அவர்கள் புரிந்து கொள்ளவேனும், அவர்கள் செய்யவில்லை, அவர்கள் உணரவில்லை என்று தொடர்ந்தும் நடக்காத ஒன்றை பற்றியே நித்தமும் பேசுவது எந்தளவுக்கு நன்மை தருமோ எனக்கு தெரியவில்லை.

சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன அவனுக்கு உண்மையை எடுத்து சொல்வோம்... மனமாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி இல்லையேல் சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:


சிறிது நேரத்தை எடுத்து அவர்களுக்கு அன்னையின் வரலாறு, இந்திய ராணுவ கெடுபிடி, அவரின் மகன்மாரின் இழப்புகள், அன்னையின் உண்ணாவிரத போராட்டம்,  அவரின் மறைவு, அவருக்கு தேசிய தலைவரால் கொடுக்கப்பட்ட அதிஉயர் கௌரவம் போன்ற விடயங்களை பகிர்ந்ததோடு இன்றைக்கு 33 வருடங்களின் பின்னர் கூட அவருக்கான அஞ்சலியை செலுத்துவதில் எமக்குள்ள சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றியும் எடுத்தது கூறினேன். 
அதோடு சார்ந்து, அவர்கள் திலீபன் அண்ணா, வெலிகடை சிறையில் கொலைசெய்யப்பட்ட குட்டிமணி அண்ணா, ஜெகன் அண்ணா போன்றவர்கள் பற்றிய விபரங்களையும் மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்த தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
அப்போது ஒரு சிங்கள சகோதரி அவரின் பெயர் மதுஷிகா கொழும்பில் உள்ள கம்பனியில் வேலை  பார்ப்பவர், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஒரு பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தான் உரையாற்ற இருப்பதாகவும், என்னிடம் அன்னை பூபதி சார்ந்த செய்திகளை, அவர் சரிதங்களை ஆங்கிலத்தில் பகிர முடியுமா என்று கேட்டு இருந்தார். உடனடியாக நானும் அவற்றை அவருக்கு பகிர்ந்திருந்தேன்.
சுமார் இருணித்தியாலங்களின் பின்னர் அந்த இளம் சகோதரி அவர் அங்கே உரையாற்றிய விடயங்கள், படங்கள் போன்ற தகவல்களை எனக்கு அனுப்பி இருந்தார். தன்னால் இன்றைக்கு  அன்னைபூபதி அம்மாவின் நினைவு சார்ந்து பேசக்கூடிய செய்திகளை தந்தமைக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.
இது ஒரு பெரிய விடயமல்ல... ஆனாலும் மாற்றங்களை நாங்கள் தான் சிறிது சிறிதாக சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே அவர்கள் புரிந்து கொள்ளவேனும், அவர்கள் செய்யவில்லை, அவர்கள் உணரவில்லை என்று தொடர்ந்தும் நடக்காத ஒன்றை பற்றியே நித்தமும் பேசுவது எந்தளவுக்கு நன்மை தருமோ எனக்கு தெரியவில்லை.

சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன அவனுக்கு உண்மையை செடுத்து சொல்வோம்... மனமாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி இல்லையேல் சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏

மிகப் பெரிய வேலை ஒன்றை… செய்துள்ளீர்கள் சசி வர்ணம்.
அந்த சிங்கள சகோதரி…. ஆர்வமாக, எமது மாவீரர்களைப் பற்றிய தகவல்களை 
கேட்டு அறிந்து கொண்டதில் இருந்து… சிங்கள இளைய சமுதாயத்தில் இருந்து,
சிறிய மாற்றம், குறைவான விகிதத்தில் இருந்தாவது….
ஆரம்பித்திருப்பது, நல்ல அறிகுறி என நினைக்கின்றேன்.
அதனை… புத்த பிக்குகள் கெடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே, என் பிரார்த்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சசி வர்ணம். 

மிகப்பெரிய, பெறுமதியான வேலையை அமைதியாக செய்துள்ளீர்கள். 

பாராட்டுக்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

நான் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு இளயதலைமுறை சார்ந்த இளைஞர் யுவதிகளோடு தொடர்பில் இருக்கிறேன். இன்று அவர்கள் மத்தியில்; தமிழ்சிறி இணைத்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவுஏந்தல், அங்குநடைபெற்ற போலீஸ் தலையீடு பற்றி எடுத்து கூறினேன். அவர்கள் அன்னை பூபதி பற்றிய எந்தவித தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. 
சிறிது நேரத்தை எடுத்து அவர்களுக்கு அன்னையின் வரலாறு, இந்திய ராணுவ கெடுபிடி, அவரின் மகன்மாரின் இழப்புகள், அன்னையின் உண்ணாவிரத போராட்டம்,  அவரின் மறைவு, அவருக்கு தேசிய தலைவரால் கொடுக்கப்பட்ட அதிஉயர் கௌரவம் போன்ற விடயங்களை பகிர்ந்ததோடு இன்றைக்கு 33 வருடங்களின் பின்னர் கூட அவருக்கான அஞ்சலியை செலுத்துவதில் எமக்குள்ள சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றியும் எடுத்தது கூறினேன். 
அதோடு சார்ந்து, அவர்கள் திலீபன் அண்ணா, வெலிகடை சிறையில் கொலைசெய்யப்பட்ட குட்டிமணி அண்ணா, ஜெகன் அண்ணா போன்றவர்கள் பற்றிய விபரங்களையும் மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்த தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
அப்போது ஒரு சிங்கள சகோதரி அவரின் பெயர் மதுஷிகா கொழும்பில் உள்ள கம்பனியில் வேலை  பார்ப்பவர், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஒரு பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தான் உரையாற்ற இருப்பதாகவும், என்னிடம் அன்னை பூபதி சார்ந்த செய்திகளை, அவர் சரிதங்களை ஆங்கிலத்தில் பகிர முடியுமா என்று கேட்டு இருந்தார். உடனடியாக நானும் அவற்றை அவருக்கு பகிர்ந்திருந்தேன்.
சுமார் இருணித்தியாலங்களின் பின்னர் அந்த இளம் சகோதரி அவர் அங்கே உரையாற்றிய விடயங்கள், படங்கள் போன்ற தகவல்களை எனக்கு அனுப்பி இருந்தார். தன்னால் இன்றைக்கு  அன்னைபூபதி அம்மாவின் நினைவு சார்ந்து பேசக்கூடிய செய்திகளை தந்தமைக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.
இது ஒரு பெரிய விடயமல்ல... ஆனாலும் மாற்றங்களை நாங்கள் தான் சிறிது சிறிதாக சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே அவர்கள் புரிந்து கொள்ளவேனும், அவர்கள் செய்யவில்லை, அவர்கள் உணரவில்லை என்று தொடர்ந்தும் நடக்காத ஒன்றை பற்றியே நித்தமும் பேசுவது எந்தளவுக்கு நன்மை தருமோ எனக்கு தெரியவில்லை.

சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன அவனுக்கு உண்மையை செடுத்து சொல்வோம்... மனமாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி இல்லையேல் சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏

சசி உங்களுக்காக பாலசிங்கத்தார் அன்றே கூறி விட்டு போய்  விட்டார் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

சசி உங்களுக்காக பாலசிங்கத்தார் அன்றே கூறி விட்டு போய்  விட்டார் 

 

 

சூப்பர் பெருமாள் ... எனக்கு இதுநாள் வரையிலும் 👆இவரை யார்ரென்று தெரிந்திருக்கவில்லை.
சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏 
அவர் சொன்னார்.....போய்ட்டார். நாங்களும் அதை செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யூ டியுப்பில் ..பொலிசு அதிகாரி.. முன்னாள் எம்பியின் கையிலுள்ள தீபத்தை தட்டி எறிவதைப்பார்த்தேன்...ஏலாவாளியாய் நிற்கும் எம்பியையும் பார்த்தேன்....பரிதாபம்..பாணந்த்துறையிலுள்ள ரோட்டு மறிப்புப் போராட்ட சண்டையையும் பார்த்தேன்.. இரு குழுவாக நடக்குது...பொலிசு வேடிக்கை பாக்குது... இப்ப விளங்கிட்டுது..இதுதாண்டா இலங்கைப் பொலிசு..😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Sasi_varnam said:

நான் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு இளயதலைமுறை சார்ந்த இளைஞர் யுவதிகளோடு தொடர்பில் இருக்கிறேன்.

நல்ல செயல்.நல்ல முன்னெடுப்பு. தொடருங்கள். 🙏👍

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக சிறப்பான வேலை செய்து விட்டிருக்கிறீர்கள் சசிவர்ணம்......சிறுதுளி பெரு வெள்ளமாகும்......பாராட்டுக்கள் .......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

நான் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு இளயதலைமுறை சார்ந்த இளைஞர் யுவதிகளோடு தொடர்பில் இருக்கிறேன். இன்று அவர்கள் மத்தியில்; தமிழ்சிறி இணைத்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவுஏந்தல், அங்குநடைபெற்ற போலீஸ் தலையீடு பற்றி எடுத்து கூறினேன். அவர்கள் அன்னை பூபதி பற்றிய எந்தவித தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. 
சிறிது நேரத்தை எடுத்து அவர்களுக்கு அன்னையின் வரலாறு, இந்திய ராணுவ கெடுபிடி, அவரின் மகன்மாரின் இழப்புகள், அன்னையின் உண்ணாவிரத போராட்டம்,  அவரின் மறைவு, அவருக்கு தேசிய தலைவரால் கொடுக்கப்பட்ட அதிஉயர் கௌரவம் போன்ற விடயங்களை பகிர்ந்ததோடு இன்றைக்கு 33 வருடங்களின் பின்னர் கூட அவருக்கான அஞ்சலியை செலுத்துவதில் எமக்குள்ள சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றியும் எடுத்தது கூறினேன். 
அதோடு சார்ந்து, அவர்கள் திலீபன் அண்ணா, வெலிகடை சிறையில் கொலைசெய்யப்பட்ட குட்டிமணி அண்ணா, ஜெகன் அண்ணா போன்றவர்கள் பற்றிய விபரங்களையும் மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்த தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
அப்போது ஒரு சிங்கள சகோதரி அவரின் பெயர் மதுஷிகா கொழும்பில் உள்ள IT கம்பனியில் வேலை  பார்ப்பவர், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஒரு பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தான் உரையாற்ற இருப்பதாகவும், என்னிடம் அன்னை பூபதி சார்ந்த செய்திகளை, அவர் சரிதங்களை ஆங்கிலத்தில் பகிர முடியுமா என்று கேட்டு இருந்தார். உடனடியாக நானும் அவற்றை அவருக்கு பகிர்ந்திருந்தேன்.
சுமார் இருணித்தியாலங்களின் பின்னர் அந்த இளம் சகோதரி அவர் அங்கே உரையாற்றிய விடயங்கள், படங்கள் போன்ற தகவல்களை எனக்கு அனுப்பி இருந்தார். தன்னால் இன்றைக்கு  அன்னைபூபதி அம்மாவின் நினைவு சார்ந்து பேசக்கூடிய செய்திகளை தந்தமைக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.
இது ஒரு பெரிய விடயமல்ல... ஆனாலும் மாற்றங்களை நாங்கள் தான் சிறிது சிறிதாக சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே அவர்கள் புரிந்து கொள்ளவேனும், அவர்கள் செய்யவில்லை, அவர்கள் உணரவில்லை என்று தொடர்ந்தும் நடக்காத ஒன்றை பற்றியே நித்தமும் பேசுவது எந்தளவுக்கு நன்மை தருமோ எனக்கு தெரியவில்லை.

சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன அவனுக்கு உண்மையை எடுத்து சொல்வோம்... மனமாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி இல்லையேல் சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏

வாழ்த்துக்கள் தோழர்..💐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.