Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.
 

http://www.samakalam.com/மக்கள்-பிரச்சனைகளை-ஆராய/

 

திரும்பவும் முதலில் இருந்தா....! முடியல.

அப்படியே இவர்கள் ஒவ்வொருவரும் கலந்துரையாட இன்னொரு குழுவை அமைப்பினம். அந்தக் குழு திட்டமிடலுக்காக இன்னொரு குழுவை அமைக்க, அந்தக் குழு செயற்பாட்டுக்காக புதுக் குழுவை அமைக்க, அந்தப் புதுக் குழு செயற்பாடல்களில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஆராய பிறிதொரு குழுவை அமைக்க...

குழுவும் குழுவும் குழுக்கல்களாக சேர்ந்து கூத்தாட்டம் போட்டே ஆடிக் கழிப்பாரே பாராய்...அவர் ஆடி களைப்பாரே பாராய்!
 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

வழமைபோல ஆணைக்குழுக்கள் அமைக்கலையோ?

10 minutes ago, கிருபன் said:

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தமிழர்களா?

அண்ணன் தம்பிகளா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

திரும்பவும் முதலில் இருந்தா....! முடியல.

மக்கள் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவும் திசைதிருப்புவதற்குமான திட்டம். அதனால், அதனை, அவன் முடிப்பான் என்று கோத்தா டீலைப்போட்டுக் குடுத்திருக்கிறார். நரியார் இறங்கியிருக்கிறார். இரண்டாவது நிலையிலிருந்த மக்கள் சக்தியிடம் கொடுக்காது சனநாயக மரபற்று நரியாரிடம் சும்மா கொடுத்திருப்பார்களா? இன்னும் சிலவாரங்களில் சாயம் களன்றுவிடும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர்.

 

1     நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும்

2   ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும்.

3   அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.

சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட  நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான   பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும்.

பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும்.

குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும்.

அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது.

என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும்.

போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே மக்களின் பிரச்சனை தெரியுது..... உந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியவில்லையாம் .....இந்த சைக்கிள் கப்பில தன்னுடைய கட்சியை வளர்த்து போடுவம் என நினைக்கிறார்  

9 minutes ago, Elugnajiru said:

ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர்.

 

1     நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும்

2   ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும்.

3   அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.

சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட  நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான   பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும்.

பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும்.

குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும்.

அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது.

என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும்.

போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே

நல்லது,, ஆனால் இடது சாரி வாடை அடிக்கின்றது,ஆகவே நீங்கள் ஆட்சி அமைக்க நான் IMF கதைக்க மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

மக்கள் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவும் திசைதிருப்புவதற்குமான திட்டம். அதனால், அதனை, அவன் முடிப்பான் என்று கோத்தா டீலைப்போட்டுக் குடுத்திருக்கிறார். நரியார் இறங்கியிருக்கிறார். இரண்டாவது நிலையிலிருந்த மக்கள் சக்தியிடம் கொடுக்காது சனநாயக மரபற்று நரியாரிடம் சும்மா கொடுத்திருப்பார்களா? இன்னும் சிலவாரங்களில் சாயம் களன்றுவிடும்தானே.

இந்த இடத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்....ஜே வி பி செய்தியின் ...வெட்டுத்துண்டு

 

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய போராடுபவர்களின் உணர்வுடன் தான் உடன்படுகின்ற போதிலும் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பலனளிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த இடத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்....ஜே வி பி செய்தியின் ...வெட்டுத்துண்டு

 

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய போராடுபவர்களின் உணர்வுடன் தான் உடன்படுகின்ற போதிலும் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பலனளிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ரணில் மற்றக் கட்சிகள் சுட்டுவதுபோல், கோத்தாவின் முகவரேயன்றி வேறல்ல. யுத்தம் முடிந்து நாடு பெரும் இன்னலை எதிர்கொள்ள வெற்று மென்போக்கான கருத்துகளோடு நகர்ந்து இன்று பிரதமராகியுள்ளார். நாளை மொட்டுக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, nochchi said:

ரணில் மற்றக் கட்சிகள் சுட்டுவதுபோல், கோத்தாவின் முகவரேயன்றி வேறல்ல. யுத்தம் முடிந்து நாடு பெரும் இன்னலை எதிர்கொள்ள வெற்று மென்போக்கான கருத்துகளோடு நகர்ந்து இன்று பிரதமராகியுள்ளார். நாளை மொட்டுக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது

இதற்க்காகத்தான்  கோ கோத்தா போராட்ட ஆரம்பகாலம் முதல் சொல்கிறேன். ஈழத்தமிழனே அமைதியாக உன் வேலையும் உன் பாடும் என இருந்து தொலை....

சிங்களத்துக்கு காய்ஞ்ச வயிறு குளிர்ந்தால் இனவாதம் தலைக்கேறும்.

சுமந்திரன் ஓ போடட்டும்....அது அவர் தொழில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.