Jump to content

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !

நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஆறாவது முறையாகும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற பின்னர் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் நிதி உதவிக்காக உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு கோரி போராடிவரும் போராட்டக்காரர்களின் மனநிலையை புரிந்துகொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும் குற்றம் சாட்டுவது செயலுக்கு வழிவகுக்காது என்றும் ஜனாதிபதி இராஜினாமா செய்யமாட்டார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1281792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி இராஜினாமா செய்யமாட்டார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அவ்வளவுதான்!சோத்துப்பிரச்சனைதான் என்று எல்லாத்தையும் சொதப்பி போட்டானுகள்!

இலங்கையில் இருப்பது இனப்பிரச்னையல்ல பயங்கரவாதம், தமிழருக்கு இருப்பது அரசியல் பிரச்சனையல்ல வேலையில்லாப்பிரச்சனை, இப்போ இருப்பது வெறும் சோத்துப்பிரச்சினை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அவ்வளவுதான்!சோத்துப்பிரச்சனைதான் என்று எல்லாத்தையும் சொதப்பி போட்டானுகள்!

முதலில்... ஜனாதிபதி சஜித்தை, பிரதமராக வரும் படி அழைப்பு  விடுத்த போது...
தயக்கம் காட்டாமல்  உடனே... வருவது வரட்டும் என்று ஏற்று இருக்க வேண்டும்.
இவர் தயக்கம் காட்ட... கோத்தாவும் இது தான் சந்தர்ப்பம் என்று,
தமது நண்பரான... ரணிலை கூப்பிட்டு பிரதமராக்கி விட்டார்.  

நல்ல திசையில் போய்க் கொண்டிருந்த போராட்டம், பிசு பிசுத்து விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா கோகம இன்னும் களத்தில நிற்பதால் சஜித் தயங்கி இருப்பார், ஆனால் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். ரணிலின் வீடும் எரிக்கப்படவேண்டும் என்று விதி இருந்தால் யார்தான் தடுக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !

பசி வந்தால் பத்தும் பறந்திடும் அதனால் வந்ததுதான் கோ கோத்தா ஆர்ப்பாட்டம். சிங்கள சனத்தின்ரை கொட்டு காயவிடாமல் பார்த்தால் கோ கொட்டியா நிலைப்பாடு கெட்டியாக  நிலைத்து நிற்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பசி வந்தால் பத்தும் பறந்திடும் அதனால் வந்ததுதான் கோ கோத்தா ஆர்ப்பாட்டம். சிங்கள சனத்தின்ரை கொட்டு காயவிடாமல் பார்த்தால் கோ கொட்டியா நிலைப்பாடு கெட்டியாக  நிலைத்து நிற்கும். 😁

பசிமாறப் பழையபடி மீண்டும் இனவாதம் தலைக்கேறும். பிறகென்ன சிங்களத்தின் அரசியல் சீராகும். தமிழருக்கு தொடர்கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people

 

May be an image of 14 people, people sitting and indoor

May be an image of 2 people and text

மகிந்தவும், ரணிலும்... ஒன்று. அதை நம்பாதவன் வாயில, மண்ணு. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

மகிந்தவும், ரணிலும்... ஒன்று. அதை நம்பாதவன் வாயில, மண்ணு. 🤣

மகிந்தவும் ரணிலும் சிங்களவர்கள். ஒங்க வாயில தா மண்ணு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மகிந்தவும் ரணிலும் சிங்களவர்கள். ஒங்க வாயில தா மண்ணு 😂

ரணிலும், மகிந்தவும்... புத்த சமயத்தினர், உங்க வாயிலதான்... மண்ணு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது அரசியல் மாற்றம் வந்து இலங்கைத்தீவு ஒரு அதிசய பூமியாக மாற்றப்படும் என்று நினைச்சன்.... :(

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.