Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

பலர்... தொழில்களை இழக்கும், அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக வறுமையும் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சலுகை வழங்காதவிடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்கு முடியாது போகும் என்பதால்,பலர் தமது தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1283936

  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கி, முதலில் இதனை தான் எதிர்பார்க்கின்றது. அடுத்த 6 மாத காலத்துக்கு, இதுவே நடக்கும்.

அரசியல் அல்லக்கைகள், அரசு பதவிகள் பெற்று, 100 பேருக்கு 27 பேர் அரச வேலையில்... தேவையில்லாமல் இருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த போது, 100 பேருக்கு 3 பேர். ஆகவே, இவர்களில் பலர் வீடு போவார்கள்.

படைத்துறையில், பலர்.... வேலையே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள். இராணுவத்தில் இருப்பவர்களுக்கான உணவை, ராணுவமே விவசாயம் செய்கிறதாம். அதுக்காக தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து, விவசாயம் செய்கிறது. ஆகவே, இவர்களில் குறைப்பு நிகழும்.

சிலவேளைகளில், இலவச மருத்துவம், இலவச கல்வி மீதும் கை வைக்க கூடும். குறைந்த பட்சம், அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே இலவசம் என்கிற நிலை வரலாம்.

பல்கலைக்கழக கல்வி இலவசம் என்கிற நிலை, கடன் தாறோம், வாங்கிக்கொண்டு படியுங்கள் என்றாகலாம்.

பிக்குமார் ஆகின் எல்லாமே இலவசம் என்பதால், படிக்கும் வரை பிக்கர், படித்து முடித்த பின், காவியை தூக்கி கடாசும், பௌத்த மத திருட்டுக்கு, முடிவுரை வரலாம்.

அந்த ஆறு மாதகாலத்தில், ரணில் ஜனாதிபதி ஆகலாம். தீவின் சிறுபான்மை அரசியல் சிக்கலுக்கு தீர்வும் உண்டாகலாம். ஏனெனில், எதிர்க்க கூடிய முகாந்திரம் கொண்டோர் அரசியல் செய்ய முடியாமல் போகலாம்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முற்றாக வெளியேறும் நிலை ஏற்படும், குறிப்பாக ஆடை தாயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருளை பெற்று கொள்ளுவதற்கு தேவையான அன்னிய செலாவணியில், ஏற்கனவே உள்ள தட்டுப்பாடு, அடிப்படை பொருளாதார கட்டமைப்பிற்கான செலவீடு குறையும் போது ஏற்படும் வினியோகச்சிக்கல், உற்பத்தி செலவு அதிகரித்தல் என்பன நீண்டகால அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு முதலீட்டிற்கு ஏற்புடையதற்ற நாடாக உருவாகியுள்ளது.

https://tradingeconomics.com/sri-lanka/manufacturing-pmi

பொதுவாக PMI 50 இற்கு குறைவாகும்போது பொருளாதார சுருக்கம் ஏற்படும் என்பார்கள், இலங்கையின் PMI (Leading indicator) சித்திரை மாதம் 36.4 வீதத்தினை எட்டி உள்ளது.

இலங்கையின் பொருளாதார சரிவு எதிர்பார்த்ததினை விட அதிகரித்த விகிதத்தில் நிகழ்கிறது.

ஐ எம் எப் கடன் இலகுவில் கிடைக்காது என முன்பே யாழில் கூறப்பட்டுள்ளது, ஐ எம் எப் இடமிருந்து தற்போது வெளியாகும் சமிஞ்சைகள் அதனை ஓரளவு உணரக்கூடியதாகவுள்ளது.

ஐ எம் எப் கடன் ( 4 பில்லியன்) கூட இலங்கை பொருளாதார சரிவிற்கு உதவாது.

தற்போது இலங்கையினில் நிகழும் விபரீதத்தினை புரிந்து கொள்ளவேண்டுமாயின் அதனை டொமினோவின் விளைவுடன் ஒப்பிடலாம்.

டொமினோவில் உள்ள ஒவ்வொரு டொமினோவும் அதன் 150% விளைவினை ஏற்படுத்த கூடியது, டொமினோவை வைத்து ஒரு மலையினை புரட்டி விடலாம் என கூறுவார்கள், தற்போது இலங்கையின் பொருளாதர வீழ்ச்சி அந்த அடிப்படையில் நிகழ்கிறது.

முன்பு சொல்வார்கள் தமிழர்களது போராட்டம் தமிழர்களை பொருளாதார ரீதியாக 40 வருடம் பிந்தள்ளி விட்டது என்று ஆனால் இப்போது இலங்கையில் நிகழும் பொருளாதார அனர்த்தம் அதனை விட மோசமானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

முன்பு சொல்வார்கள் தமிழர்களது போராட்டம் தமிழர்களை பொருளாதார ரீதியாக 40 வருடம் பிந்தள்ளி விட்டது என்று ஆனால் இப்போது இலங்கையில் நிகழும் பொருளாதார அனர்த்தம் அதனை விட மோசமானதாகும்.

இது தவறு... என்பது எனது அபிப்பிராயம்.

தமிழர்கள் பொருளாதாரம் இலங்கையினை நம்பி இல்லையே. 

இலங்கை அரசு கடனை வாங்கி சண்டையை பிடித்த போது , புலிகளின் பொருளாதார தேவையினை சமன் செய்தது புலம் பெயர் தமிழர் பொருளாதாரம்.

இன்று இலங்கை அரசே, புலம் பெயர் தமிழர்களிடம் உதவி கோரும் நிலையில் இருக்கின்றது. புலம் பெயர் தமிழர்கள் நாட்டுக்கு உதவிட வேண்டும் என்கிறார் ரணில்.

இலங்கையின் இந்த பொருளாதார சிக்கல், தமிழர்களுக்கு, blessing in disguise.

இலங்கை கடன் வாங்கி, திருடிய அரசியல்வாதிகளால் உண்டாகிய பொருளாதார சிக்கல்களுக்கு நாம் பாதிப்புக்கு ஆளாக முடியாது. எம்மை பார்த்துக்கொள்ளக்கூடிய பொருளாதார வலு, எம்மிடம் உள்ளது.

அதற்குரிய பொறிமுறை வேண்டும் என்று, தகுந்த நேரத்தில், உலகெங்கும், போராட தயாராக வேண்டும்.

அப்போது, சிங்கள இனவாதிகள், அய்யகோ.... நாம் சகோதரர்கள், இந்த தீவில் ஒன்றாக வாழ்வோம், புடுங்குவோம் என்று பீத்துவார்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கிரயுவேட் என 42000 பேருக்கும் ஒரே தடவையில் வேலை வாய்ப்பு வழங்கியமையும்  ஒரு லட்சம் வேலைவாய்ப்பு என வேலை வழங்கியமையும் அரசுக்கு பாரிய நிதி நெருக்கடியை கொடுத்து இருக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிரயுவேட் என 42000 பேருக்கும் ஒரே தடவையில் வேலை வாய்ப்பு வழங்கியமையும்  ஒரு லட்சம் வேலைவாய்ப்பு என வேலை வழங்கியமையும் அரசுக்கு பாரிய நிதி நெருக்கடியை கொடுத்து இருக்கிறது  

அரசு தற்போது ஐ எம் எப் கடனை எதிர்நோக்கியுள்ளது, அதனால் அரசின் செலவுக்கு வரி அதிகரித்தல் அல்லது பணத்தினை அச்சிடுவதினை தவிர வேறு தெரிவு அரசுக்கு இருப்பதாகத்தெரியவில்லை.

இதனால் பொருளாதாரம் மேலும் மேலும் சீரழியும்.

எதிர்வரும் காலத்தில் இப்போது அரசினால் நட்டத்தில் இயக்கப்படும் துறைகள் தனியார் மயப்படுத்தப்படும், அதன் போது இவ்வாறான தேவையற்ற ஊழியர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்.

அவுஸ்ரேலியாவில் தனியார்துறையில் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி சம்பளமில்லாமல் வீட்டில் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தினை அடிப்படை வலது சாரி அரசு வழங்கியுள்ளது. இது சரியான முடிவுதான், அண்மையில் எமது நிறுவனமும் இந்த நடைமுறையினை அமுல்படுத்தவுள்ளதாகக்கூறியுள்ளது (மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்).

கல்வி, மருத்துவம் இந்த இரண்டிலும் அரசு கைவைக்கப்போகிறது என்பது போல தெரிகிறது (நுணாவிலான் இரணிலின் ஒளிப்பதிவொன்று பதிவேற்றியுள்ளர்).

பல தற்காலிக ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இது தவறு... என்பது எனது அபிப்பிராயம்.

தமிழர்கள் பொருளாதாரம் இலங்கையினை நம்பி இல்லையே. 

இலங்கை அரசு கடனை வாங்கி சண்டையை பிடித்த போது , புலிகளின் பொருளாதார தேவையினை சமன் செய்தது புலம் பெயர் தமிழர் பொருளாதாரம்.

இன்று இலங்கை அரசே, புலம் பெயர் தமிழர்களிடம் உதவி கோரும் நிலையில் இருக்கின்றது. புலம் பெயர் தமிழர்கள் நாட்டுக்கு உதவிட வேண்டும் என்கிறார் ரணில்.

இலங்கையின் இந்த பொருளாதார சிக்கல், தமிழர்களுக்கு, blessing in disguise.

இலங்கை கடன் வாங்கி, திருடிய அரசியல்வாதிகளால் உண்டாகிய பொருளாதார சிக்கல்களுக்கு நாம் பாதிப்புக்கு ஆளாக முடியாது. எம்மை பார்த்துக்கொள்ளக்கூடிய பொருளாதார வலு, எம்மிடம் உள்ளது.

அதற்குரிய பொறிமுறை வேண்டும் என்று, தகுந்த நேரத்தில், உலகெங்கும், போராட தயாராக வேண்டும்.

அப்போது, சிங்கள இனவாதிகள், அய்யகோ.... நாம் சகோதரர்கள், இந்த தீவில் ஒன்றாக வாழ்வோம், புடுங்குவோம் என்று பீத்துவார்கள். 

நீங்கள் கூறுவதும் சரிதான், இலங்கை இந்த பொருளாதார புதைமணலில் வெளிவருவதாயின் பிற நாட்டுக்கடனை நம்பியிருக்கக்கூடாது, அது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை அதிகரிக்குமேயன்றி குறைக்காது. புலம்பெயர் இலங்கையினர்  ஒரு நல்ல தெரிவுதான்.

இலங்கையின் அமைவிடம்,  உயர் கல்வியறிவு ரீதியாக இலங்கை சந்தைப்பொருளாதாரத்திற்கு சிங்கப்பூரினை விட சாதகமானது.

ஆனால் இலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள், சிறுபான்மை சமூகத்திற்கு செய்த அநீதி, எவ்வாறு கிட்லர் சாமானிய ஜேர்மனியினரின் வளங்களை கொள்ளையிட்டு யூதர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள் என்பது போல முன்பு தமிழர்கள் பொருளாதார உச்சநிலைக்கும் சிங்களவர்களின் வறுமைக்கு காரணம் (வருமான ஏற்றத்தாழ்வு) தமிழர்கள் என்ற ரீதியில் தமிழர் சொத்துகளை அபகரித்து (நில உச்ச வரம்பு சட்டம்) பெரும்பான்மையினருக்கு கொடுத்தல், இனக்கலவரங்களை உருவாக்கி தமிழரின் வளங்களை பிற சமூகம் அபகரித்தில் இருந்து ஆரம்பித்து இலாங்கையின் சாபக்கேடு.

புலம்பெயர் தமிழர்கள் இனி எந்த அடிப்படையில் இந்த பெரும்பான்மை சிங்கள அரசினை நம்பி பயணிப்பார்கள் என்று தெரியவில்லை, ஆனால் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தமிழர்களையும் பாதிக்கும்.

இலங்கையின் அரசியல் அமைப்பிற்குள் வட கிழக்கு மாகாண அரசினால் எதுவும் செய்ய முடியாது, நிதி, காணி, காவல்துறை அதிகாரங்கள் கூட இருந்தாலும் (தற்போது அந்த அதிகாரங்கள் கூட இல்லை), இலங்கை பணம், இலங்கை மத்திய வங்கியினூடாக வட கிழக்கு மாகாணங்களால் எதுவும் செய்துவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவதும் சரிதான், இலங்கை இந்த பொருளாதார புதைமணலில் வெளிவருவதாயின் பிற நாட்டுக்கடனை நம்பியிருக்கக்கூடாது, அது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை அதிகரிக்குமேயன்றி குறைக்காது. புலம்பெயர் இலங்கையினர்  ஒரு நல்ல தெரிவுதான்.

இலங்கையின் அமைவிடம்,  உயர் கல்வியறிவு ரீதியாக இலங்கை சந்தைப்பொருளாதாரத்திற்கு சிங்கப்பூரினை விட சாதகமானது.

ஆனால் இலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள், சிறுபான்மை சமூகத்திற்கு செய்த அநீதி, எவ்வாறு கிட்லர் சாமானிய ஜேர்மனியினரின் வளங்களை கொள்ளையிட்டு யூதர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள் என்பது போல முன்பு தமிழர்கள் பொருளாதார உச்சநிலைக்கும் சிங்களவர்களின் வறுமைக்கு காரணம் (வருமான ஏற்றத்தாழ்வு) தமிழர்கள் என்ற ரீதியில் தமிழர் சொத்துகளை அபகரித்து (நில உச்ச வரம்பு சட்டம்) பெரும்பான்மையினருக்கு கொடுத்தல், இனக்கலவரங்களை உருவாக்கி தமிழரின் வளங்களை பிற சமூகம் அபகரித்தில் இருந்து ஆரம்பித்து இலாங்கையின் சாபக்கேடு.

புலம்பெயர் தமிழர்கள் இனி எந்த அடிப்படையில் இந்த பெரும்பான்மை சிங்கள அரசினை நம்பி பயணிப்பார்கள் என்று தெரியவில்லை, ஆனால் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தமிழர்களையும் பாதிக்கும்.

இலங்கையின் அரசியல் அமைப்பிற்குள் வட கிழக்கு மாகாண அரசினால் எதுவும் செய்ய முடியாது, நிதி, காணி, காவல்துறை அதிகாரங்கள் கூட இருந்தாலும் (தற்போது அந்த அதிகாரங்கள் கூட இல்லை), இலங்கை பணம், இலங்கை மத்திய வங்கியினூடாக வட கிழக்கு மாகாணங்களால் எதுவும் செய்துவிட முடியாது.

இன்று நேற்று அல்ல. பல ஆண்டுகளாக இந்த தளத்தில் நான் சொல்லி வந்த விடயம் கீழே.

முதலில் கேலி செய்தார்கள். கனவில் நடக்கும் என்றார்கள். ஆனால் இன்று இது கண் முன்னே நிதர்சனமாகிறது. 

இதுவே நடக்கும்.

"ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய பொருளாதார மையமாகிய, ஹொங்கோங் பகுதியை சீனாவிடம் இழந்த பின்னர், மேற்கு ஒரு புதிய இடத்தினை தேடுகிறது. 

ஆசியாவின் முன்னணி பொருளாதார நாடுகளில், தாய்வான், சீனாவின் கொல்லைப்புறத்தில், தென் கொரியாவின், தலைவலி வட கொரியா. தாய்லாந்து அரசியல் உறுதிப்பாடு இல்லாதது. இந்தோனேசியா, மலேசியா இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்டது.

எஞ்சி உள்ள சிங்கப்பூரில் 72% சீனர்கள். 

ஆக, மிக சிறிய, தமது குடியுரிமைகளை கொண்டுள்ள, பொருளாதார பலம் கொண்ட ஈழத்தமிழர்கள், மேற்கின் நம்பிக்கைக்குரியவர்கள். அவர்களது பிரதேசமே அவர்கள் தேடும் பொருளாதார மையமாக அமைய சிறப்பான இடம்.

இந்தியா, பொருளாதார ரீதியில் வளர்ந்தாலும், அதன் வங்கியியல் மிகவும் பலவீனமானது. அந்த பலவீனத்தின் ஒரு சான்று விஜய் மல்லையா.

ஆகவே, அந்த நாட்டுக்கும், சிறப்பான வங்கியியல் கொண்ட ஒரு மையம் தேவை.

மத்தியகிழக்கில், உறுதியான, மேற்கு சார்பு இஸ்ரேல் போல, தென் கிழக்கில் மேற்கு தேடும், ஒரு பிரதேசமாக ஈழம் அமைய சந்தர்ப்பம் உள்ளது.

முழு இலங்கையையும் மேற்கு எடுக்கலாம் தானே என்ற கேள்வி எழலாம். பிரச்சனை, மலேசியா, இந்தோனேசியா போன்றவைகளுக்கு சளைக்காமல், பௌத்த மத அடிப்படைவாதம் சிங்கள பகுதியில் ஆழமாக வேர் ஊன்றி விட்டது. அதிலிருந்து சிங்களம் மீள்வது கடினம்."

***

அதேவேளை, அணிலை திரத்தி வந்து, மரம் ஏற விட்டு விட்ட நாய் போல, இந்தியா மெத்தனமாக இருந்து சீனா உள்ளே புகுந்து கொண்டதை, மேற்கு ரசிக்கவில்லை.

ஆகவே, இலங்கையினுள் நடக்கும் சகல விடயங்களும், மேற்கு மேற்பார்வையில் நடக்கின்றன. புதிதாக வந்துள்ள அமெரிக்க தூதுவர், தென் அமெரிக்காவில், இந்த வகை வேலைகளை ஒப்பேத்திய வகையில் அனுபவம் மிக்கவர்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்று நேற்று அல்ல. பல ஆண்டுகளாக இந்த தளத்தில் நான் சொல்லி வந்த விடயம் கீழே.

முதலில் கேலி செய்தார்கள். கனவில் நடக்கும் என்றார்கள். ஆனால் இன்று இது கண் முன்னே நிதர்சனமாகிறது. 

இதுவே நடக்கும்.

"ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய பொருளாதார மையமாகிய, ஹொங்கோங் பகுதியை சீனாவிடம் இழந்த பின்னர், மேற்கு ஒரு புதிய இடத்தினை தேடுகிறது. 

ஆசியாவின் முன்னணி பொருளாதார நாடுகளில், தாய்வான், சீனாவின் கொல்லைப்புறத்தில், தென் கொரியாவின், தலைவலி வட கொரியா. தாய்லாந்து அரசியல் உறுதிப்பாடு இல்லாதது. இந்தோனேசியா, மலேசியா இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்டது.

எஞ்சி உள்ள சிங்கப்பூரில் 72% சீனர்கள். 

ஆக, மிக சிறிய, தமது குடியுரிமைகளை கொண்டுள்ள, பொருளாதார பலம் கொண்ட ஈழத்தமிழர்கள், மேற்கின் நம்பிக்கைக்குரியவர்கள். அவர்களது பிரதேசமே அவர்கள் தேடும் பொருளாதார மையமாக அமைய சிறப்பான இடம்.

இந்தியா, பொருளாதார ரீதியில் வளர்ந்தாலும், அதன் வங்கியியல் மிகவும் பலவீனமானது. அந்த பலவீனத்தின் ஒரு சான்று விஜய் மல்லையா.

ஆகவே, அந்த நாட்டுக்கும், சிறப்பான வங்கியியல் கொண்ட ஒரு மையம் தேவை.

மத்தியகிழக்கில், உறுதியான, மேற்கு சார்பு இஸ்ரேல் போல, தென் கிழக்கில் மேற்கு தேடும், ஒரு பிரதேசமாக ஈழம் அமைய சந்தர்ப்பம் உள்ளது.

முழு இலங்கையையும் மேற்கு எடுக்கலாம் தானே என்ற கேள்வி எழலாம். பிரச்சனை, மலேசியா, இந்தோனேசியா போன்றவைகளுக்கு சளைக்காமல், பௌத்த மத அடிப்படைவாதம் சிங்கள பகுதியில் ஆழமாக வேர் ஊன்றி விட்டது. அதிலிருந்து சிங்களம் மீள்வது கடினம்."

***

அதேவேளை, அணிலை திரத்தி வந்து, மரம் ஏற விட்டு விட்ட நாய் போல, இந்தியா மெத்தனமாக இருந்து சீனா உள்ளே புகுந்து கொண்டதை, மேற்கு ரசிக்கவில்லை.

ஆகவே, இலங்கையினுள் நடக்கும் சகல விடயங்களும், மேற்கு மேற்பார்வையில் நடக்கின்றன. புதிதாக வந்துள்ள அமெரிக்க தூதுவர், தென் அமெரிக்காவில், இந்த வகை வேலைகளை ஒப்பேத்திய வகையில் அனுபவம் மிக்கவர்.  

மன்னிக்க வேண்டும் நாதம்,

நீங்கள் முன்பு சொன்னது இதையல்ல. நீங்கள் கூறியது போல பொருளாதார மீட்சிகாக ஒரு போதும் தமிழர் உரிமைகளை விற்க சிங்களம் தயாரில்லை. ஒரு போதும் ஒரு அங்குல நிலத்தை கூட இப்படி ஒரு டீலில் தமிழர் கையில் தர அவர்கள் தயாரில்லை.

இன்றும், என்றும், எப்போதும்.

இன்றும் அவர்கள் புலம் பெயர் தமிழரிடம் கேட்பது எல்லாம் உதவியே அதாவது ஸ்டாலின் கொடுப்பது போல நிபந்தனையற்ற உதவி மட்டுமே. எந்த அரசியல்வாதியாவது புலம்பெயர் தமிழர் உதவினால் எமக்கு அரசிலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தி சமஸ்டி தருவதாக சொல்லவில்லையே? ரணில் உட்பட.

ஆகவே இலங்கையோடு நாம் நேரடியாக வாங்கும்-விற்கும் டீல் போட முடியாது. அன்று போல் இன்றும் இது நகைப்புகிடமான சிந்தனையே.

அடுத்து நீங்கள் புலம் பெயர் தமிழர் பொருளாதார வளம் பற்றி மிக மதிப்பீடு செய்கிறீர்கள்.

முதலில் உலகில் எத்தனை புலம்பெயர் தமிழரின் நிறுவனங்கள் இப்படி ஒரு பொது இன நன்மைக்காக இலங்கையில் முதலிடுவோம் என அறிவித்துள்ளன?

உலகின் அதிக பொருளாதார வலுவுள்ள முதல் 10 இலங்கை தனிழ் புலம்பெயர் தமிழர் நிறுவனங்கள் யாவை?இந்த பட்டியல் உங்களிடம் உள்ளதா?

இருப்பின் அதில் எத்தனை இன நலனுக்காக இலங்கையில் முதலிட முன்வரும் என்பது தெரியுமா?

லைக்காவே மகிந்தவின் பினாமி என்கிறார்கள்.

ஆகவே,

1. சிங்கள பெளத்த பேரினவாதிகள் பொருளாதார உதவிக்காக எமக்கு உரிமைகளை விட்டு தருவார்கள் என்பது ஒரு மிகை கற்பனை.

2. அப்படி அவர்கள் ஒத்து கொண்டாலும், அப்படி இலங்கையை மீட்கும் பொருளாதார பலம் எம்மிடம் உள்ளது, அதை பயன்படுத்த புலம்பெயர் தனவான்கள் தயாராக உள்ளனரா என்பது மிகபெபெரும் கேள்வி.

மற்றும்படி நீங்களும், நானும், விசுகு அண்ணை, மீரா, டில்ஜோ இன்னும் யாரும் முதலிடும் 1 மில்லியன் பவுண்டுக்கும் குறைவான காசு எல்லாம் - யானை பசிக்கு சோளப்பொரி - இதை இலங்கை எண்ட யானை வாங்கி சாப்பிடும் ஆனால் தமிழருக்கு லத்தி கூட கிடைக்காது.

இதுதான் யதார்தம்.

ஆகவே இப்படி பட்ட மாயமான (mythical solutions) ஐ விட்டு விட்டு, நடக்க கூடியதை கதைப்போம்.

இலங்கையை மீட்பதென்றால் அது Marshall Plan மூலம் ஜேர்மனியை மீட்டது போல ஒரு பல்நாட்டு அணுகுமுறையாலேயே சாத்தியம்.

கடன் வாங்கி நாட்டை மீட்க முடியாது என்ற @vasee வசியின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. 

2ம் உலக யுத்தத்தின் பின் ஜப்பானும், ஜேர்மனியும், ஏன் யூகேயும் கூட கடன் பட்டே நாட்டை எழுப்பின.

யூகேயின் அமெரிக்காவுகான கடன் மிக அண்மையில்தான் அடைக்கப்பட்டது.

ஆகவே கடன் வாங்கி எ இலங்கை என்ன செய்யபோகிறது என்பதில்தான் இது தங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கும் ஜேர்மனிக்கு கடனுக்கும், யுத்த அழிவுக்கும் என போடப்பட்ட நிபந்தனிகள் உண்டு.

2ம் உலக யுத்த பேரழிவை ஆதரித்த ஜேர்மன் மக்கள், இன்று நற்பிரசைகளாக திகழ இந்த நிபந்தனை அடிப்படியில் மீள உருவாக்கபட்ட ஜேர்மன் சமூக, அரசியல் கட்டமைப்பும் ஒரு காரணம்.

அதைப்போல நிபந்தனைகள் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க வேண்டும், இந்த நிபந்தனைகள் ஒரு inclusive, federal, pluralistic இலங்கையை உருவாக்க வேண்டும் என, உதவி வழங்கும் நாடுகளை இப்போ திரை மறைவிலும், பின்னர் தேவைபட்டால் வீதிக்கு இறங்கியும் நெருக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது.

தவிர புலம்பெயர் தமிழர் புண்ணாக்கு விற்ப்போம், நீங்கள் புளியங்குளத்தை விட்டுத்தாருங்கள் என்ற மீன் சந்தை டீல் எல்லாம் - இப்போதும் நகைபுகிடமானதே. 

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அதே போலவே இலங்கை சம்பந்தமான மேற்கின் அணுகுமுறையும். இலங்கையில் ஒரு ஹொங்கொங்கை அமைப்பது அல்ல அவர்கள் நோக்கம். 

ஹொங்கொங் உருவானது காலனிய காலத்தில். இப்போ அம்ந்ரிக்கா செய்வது நவ காலனியம். இதில் நாடுகளை அடிமை கொள்வது அல்ல மாற்றாக தென்கொரியா, தைவான், அவுஸ்ரேலியா, நேட்டோ நாடுகள் போல தம் சார்பான, ஆனால் சுயாதிக்கம் உள்ள நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதே அமெரிகாவின் அணுகுமுறை.

இதைதான் இலங்கையிலும் செய்ய எத்தனிகிறார்கள். அதன் முதல் படிதான் ரணில், கோட்ட, சவேந்திராவின் அண்மைய நெருக்கம், நெருக்குதல்கள்.

ஆகவே, அமெரிக்காவிடம் போய் நீங்கள் சொல்லுவது போல் திருகோண மலையை தாறோம் எண்டு டீல் போட முடியாது.

எமது அணுகுமுறையை அவர்களின் நலனுடன் பொருந்த வைப்பதன் மூலமே காரியம் சாதிக்க முடியும்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் நாதம்,

நீங்கள் முன்பு சொன்னது இதையல்ல. நீங்கள் கூறியது போல பொருளாதார மீட்சிகாக ஒரு போதும் தமிழர் உரிமைகளை விற்க சிங்களம் தயாரில்லை. ஒரு போதும் ஒரு அங்குல நிலத்தை கூட இப்படி ஒரு டீலில் தமிழர் கையில் தர அவர்கள் தயாரில்லை.

இன்றும், என்றும், எப்போதும்.

இன்றும் அவர்கள் புலம் பெயர் தமிழரிடம் கேட்பது எல்லாம் உதவியே அதாவது ஸ்டாலின் கொடுப்பது போல நிபந்தனையற்ற உதவி மட்டுமே. எந்த அரசியல்வாதியாவது புலம்பெயர் தமிழர் உதவினால் எமக்கு அரசிலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தி சமஸ்டி தருவதாக சொல்லவில்லையே? ரணில் உட்பட.

ஆகவே இலங்கையோடு நாம் நேரடியாக வாங்கும்-விற்கும் டீல் போட முடியாது. அன்று போல் இன்றும் இது நகைப்புகிடமான சிந்தனையே.

அடுத்து நீங்கள் புலம் பெயர் தமிழர் பொருளாதார வளம் பற்றி மிக மதிப்பீடு செய்கிறீர்கள்.

முதலில் உலகில் எத்தனை புலம்பெயர் தமிழரின் நிறுவனங்கள் இப்படி ஒரு பொது இன நன்மைக்காக இலங்கையில் முதலிடுவோம் என அறிவித்துள்ளன?

உலகின் அதிக பொருளாதார வலுவுள்ள முதல் 10 இலங்கை தனிழ் புலம்பெயர் தமிழர் நிறுவனங்கள் யாவை?இந்த பட்டியல் உங்களிடம் உள்ளதா?

இருப்பின் அதில் எத்தனை இன நலனுக்காக இலங்கையில் முதலிட முன்வரும் என்பது தெரியுமா?

லைக்காவே மகிந்தவின் பினாமி என்கிறார்கள்.

ஆகவே,

1. சிங்கள பெளத்த பேரினவாதிகள் பொருளாதார உதவிக்காக எமக்கு உரிமைகளை விட்டு தருவார்கள் என்பது ஒரு மிகை கற்பனை.

2. அப்படி அவர்கள் ஒத்து கொண்டாலும், அப்படி இலங்கையை மீட்கும் பொருளாதார பலம் எம்மிடம் உள்ளது, அதை பயன்படுத்த புலம்பெயர் தனவான்கள் தயாராக உள்ளனரா என்பது மிகபெபெரும் கேள்வி.

மற்றும்படி நீங்களும், நானும், விசுகு அண்ணை, மீரா, டில்ஜோ இன்னும் யாரும் முதலிடும் 1 மில்லியன் பவுண்டுக்கும் குறைவான காசு எல்லாம் - யானை பசிக்கு சோளப்பொரி - இதை இலங்கை எண்ட யானை வாங்கி சாப்பிடும் ஆனால் தமிழருக்கு லத்தி கூட கிடைக்காது.

இதுதான் யதார்தம்.

ஆகவே இப்படி பட்ட மாயமான (mythical solutions) ஐ விட்டு விட்டு, நடக்க கூடியதை கதைப்போம்.

இலங்கையை மீட்பதென்றால் அது Marshall Plan மூலம் ஜேர்மனியை மீட்டது போல ஒரு பல்நாட்டு அணுகுமுறையாலேயே சாத்தியம்.

கடன் வாங்கி நாட்டை மீட்க முடியாது என்ற @vasee வசியின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. 

2ம் உலக யுத்தத்தின் பின் ஜப்பானும், ஜேர்மனியும், ஏன் யூகேயும் கூட கடன் பட்டே நாட்டை எழுப்பின.

யூகேயின் அமெரிக்காவுகான கடன் மிக அண்மையில்தான் அடைக்கப்பட்டது.

ஆகவே கடன் வாங்கி எ இலங்கை என்ன செய்யபோகிறது என்பதில்தான் இது தங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கும் ஜேர்மனிக்கு கடனுக்கும், யுத்த அழிவுக்கும் என போடப்பட்ட நிபந்தனிகள் உண்டு.

2ம் உலக யுத்த பேரழிவை ஆதரித்த ஜேர்மன் மக்கள், இன்று நற்பிரசைகளாக திகழ இந்த நிபந்தனை அடிப்படியில் மீள உருவாக்கபட்ட ஜேர்மன் சமூக, அரசியல் கட்டமைப்பும் ஒரு காரணம்.

அதைப்போல நிபந்தனைகள் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க வேண்டும், இந்த நிபந்தனைகள் ஒரு inclusive, federal, pluralistic இலங்கையை உருவாக்க வேண்டும் என, உதவி வழங்கும் நாடுகளை இப்போ திரை மறைவிலும், பின்னர் தேவைபட்டால் வீதிக்கு இறங்கியும் நெருக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது.

தவிர புலம்பெயர் தமிழர் புண்ணாக்கு விற்ப்போம், நீங்கள் புளியங்குளத்தை விட்டுத்தாருங்கள் என்ற மீன் சந்தை டீல் எல்லாம் - இப்போதும் நகைபுகிடமானதே. 

 

 

மன்னிக்க வேண்டும் பங்கர்...

நீங்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தில்... சிங்களம் அண்மைய காலம் வரை.... தலைக்கனம் மேலேறி போட்ட ஆட்டம் அனைவரும் அறிவோம். இன்று இந்த பொருளாதார சிக்கல் வந்திராவிடில், அல்லது கொரோனா வந்திராவிடில், இந்தியாவுக்கும், மேற்குக்கும் எந்தவித பிடிமானமும் இருந்திருக்காது.

சிங்களம், சீனாவுடன் சேர்ந்து கூத்தாடி இருக்கும்.  யாருக்குமே, ராஜபக்சக்களை எதிர்த்து, ஒரு விரலை தூக்கும் தைரியம் வந்திருக்குமா என்ன?

நான் சொல்வது, புதிய நிலைமையில், சிங்களம் பலவீன நிலையில் உள்ள பார்வை. சிங்களத்தின் விருப்பு, வெறுப்பு செயலிழந்துள்ள பார்வை.

சவேந்திர டீ சில்வாவை தூக்கினால் பயம் இல்லை என்று ராஜபக்சேக்கள் நினைக்கலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.

இலங்கை, இப்போது ஒரு கலங்கிய குட்டை. இங்கே மீன் பிடிக்க பலர் முயல்கிறார்கள். இங்கே சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாக தெரியவில்லை.

இருந்தாலும் மேற்கின் கை ஓங்கி இருப்பது போலவே தெரிகிறது.  ஆனாலும் சீனா சும்மா இருக்காது. அவர்களது முதலீடு பெரியது.

ஆக, இந்த வல்லரசுகள் போட்டியினால் தான் நமது விடிவும் வருமே அன்றி... கோத்தா கோ கமவில், பத்து பேர் தமிழ் தேசியகீதம் 'பாவத்துக்கு' இரங்கி பாடுவதாலோ அல்லது, கஞ்சி குடிப்பதாலோ அல்ல. 

சரி.... நாளையே... சீனா... இந்தா பிடி 10 பில்லியன் என்றால், மகிந்தா தலையை சிலுப்பிக் கொண்டு, பிரதமர் ஆவார். ரணில் ஓடுவார். போராடும் அனைவரும் வீடு போவார்கள் அல்லது அனுப்பி வைக்கப்படுவார்கள்.

உங்கள் விபரத்துக்கு: இந்தியாவின் டாலர் கையிருப்பு 500 பில்லியன், சீனாவின் கையிருப்பு 3.25 டிரில்லியன். 

ஆகவே.... சீனா, இந்த நிலைமையை ஒரேநாளில் மாத்திவிடக்கூடும் என்பதை மறக்காதீர்கள்.

புலம் பெயர் தமிழர் பொருளாதாரம் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். லைகாவை மட்டுமே கவனிக்கிறீர்கள் போலும். வெளியே தெரியாத பல மில்லியனர்ஸ் இருக்கிறார்கள்.

ஒரு முன்னணி தமிழ் கணக்காளர் சொன்னார். தனது முக்கிய பத்து தமிழ் வாடிக்கையாளர்களின் சொத்து £250 மில்லியன் வரும் என்று.

இது குறித்து, விவாதிக்கலாம். ஆனாலும், வேகமாக நிலைமைகள் மாறுவதால், இரண்டொரு வாரம், பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

கடன் வாங்கி நாட்டை மீட்க முடியாது என்ற @vasee வசியின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. 

2ம் உலக யுத்தத்தின் பின் ஜப்பானும், ஜேர்மனியும், ஏன் யூகேயும் கூட கடன் பட்டே நாட்டை எழுப்பின.

யூகேயின் அமெரிக்காவுகான கடன் மிக அண்மையில்தான் அடைக்கப்பட்டது.

ஆகவே கடன் வாங்கி எ இலங்கை என்ன செய்யபோகிறது என்பதில்தான் இது தங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கும் ஜேர்மனிக்கு கடனுக்கும், யுத்த அழிவுக்கும் என போடப்பட்ட நிபந்தனிகள் உண்டு.

2ம் உலக யுத்த பேரழிவை ஆதரித்த ஜேர்மன் மக்கள், இன்று நற்பிரசைகளாக திகழ இந்த நிபந்தனை அடிப்படியில் மீள உருவாக்கபட்ட ஜேர்மன் சமூக, அரசியல் கட்டமைப்பும் ஒரு காரணம்.

அதைப்போல நிபந்தனைகள் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க வேண்டும், இந்த நிபந்தனைகள் ஒரு inclusive, federal, pluralistic இலங்கையை உருவாக்க வேண்டும் என, உதவி வழங்கும் நாடுகளை இப்போ திரை மறைவிலும், பின்னர் தேவைபட்டால் வீதிக்கு இறங்கியும் நெருக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது.

தவிர புலம்பெயர் தமிழர் புண்ணாக்கு விற்ப்போம், நீங்கள் புளியங்குளத்தை விட்டுத்தாருங்கள் என்ற மீன் சந்தை டீல் எல்லாம் - இப்போதும் நகைபுகிடமானதே. 

 

 

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

 ஏன் இலங்கை தற்போதய நிலையில் கடன் வாங்கி மீள முடியாது எனக்கூறினேன் என்றால்.

கிட்டத்தட்ட 46% அரச செலவில் கடனுக்கு வட்டி செலுத்துவதிலேயே செலவாகிறது என நினைக்கிறேன் (சரியாக நினைவில் இல்லை).

கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானத்தில் இலங்கையின் கடனுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 70% அளவில் இருந்தாக நினைவில் உள்ளது.

இந்த நிலையில் மேலதிக கடனால் வட்டி செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்குமேயன்றி குறையாது என நினைக்கிறேன். 

அரசினால் ஒருநிகர பாதீட்டினை உருவாக்க முடியாமல் உள்ள நிலையில் எவ்வாறு மேலதிக கடனுக்கான வட்டியினை செலுத்த முடியும்?

இது வருமானம் குறைந்தவர்கள் கடனட்டையினை பயன்படுத்துவது போல ஒரு மோசமான விளிவை உருவாக்காதா?

ஆனால் அன்னிய செலாவணி இருப்பு தொழில்துறைக்கு அவசியமாகிறதுதான், ஆனால் இப்போது வாங்கும் கடனில் பெரும் பகுதி நுகர்வு செலவாக உள்ளது.

உங்கள் கருத்து தவறு என்று நிறுவ முயலவில்லை, ஆனால் இந்த கேள்விகள் எனது மனதில் உள்ளது, அ த்துடன் எனக்கு ஒரு சிறிய தெளிவே இது தொடர்பாகவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும் பங்கர்...

நீங்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தில்... சிங்களம் அண்மைய காலம் வரை.... தலைக்கனம் மேலேறி போட்ட ஆட்டம் அனைவரும் அறிவோம். இன்று இந்த பொருளாதார சிக்கல் வந்திராவிடில், அல்லது கொரோனா வந்திராவிடில், இந்தியாவுக்கும், மேற்குக்கும் எந்தவித பிடிமானமும் இருந்திருக்காது.

சிங்களம், சீனாவுடன் சேர்ந்து கூத்தாடி இருக்கும்.  யாருக்குமே, ராஜபக்சக்களை எதிர்த்து, ஒரு விரலை தூக்கும் தைரியம் வந்திருக்குமா என்ன?

நான் சொல்வது, புதிய நிலைமையில், சிங்களம் பலவீன நிலையில் உள்ள பார்வை. சிங்களத்தின் விருப்பு, வெறுப்பு செயலிழந்துள்ள பார்வை.

சவேந்திர டீ சில்வாவை தூக்கினால் பயம் இல்லை என்று ராஜபக்சேக்கள் நினைக்கலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.

இலங்கை, இப்போது ஒரு கலங்கிய குட்டை. இங்கே மீன் பிடிக்க பலர் முயல்கிறார்கள். இங்கே சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாக தெரியவில்லை.

இருந்தாலும் மேற்கின் கை ஓங்கி இருப்பது போலவே தெரிகிறது.  ஆனாலும் சீனா சும்மா இருக்காது. அவர்களது முதலீடு பெரியது.

ஆக, இந்த வல்லரசுகள் போட்டியினால் தான் நமது விடிவும் வருமே அன்றி... கோத்தா கோ கமவில், பத்து பேர் தமிழ் தேசியகீதம் 'பாவத்துக்கு' இரங்கி பாடுவதாலோ அல்லது, கஞ்சி குடிப்பதாலோ அல்ல. 

புலம் பெயர் தமிழர் பொருளாதாரம் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். லைகாவை மட்டுமே கவனிக்கிறீர்கள் போலும். வெளியே தெரியாத பல மில்லியனர்ஸ் இருக்கிறார்கள்.

ஒரு முன்னணி தமிழ் கணக்காளர் சொன்னார். தனது முக்கிய பத்து தமிழ் வாடிக்கையாளர்களின் சொத்து £250 மில்லியன் வரும் என்று.

இது குறித்து, விவாதிக்கலாம். ஆனாலும், வேகமாக நிலைமைகள் மாறுவதால், இரண்டொரு வாரம், பொறுத்திருந்து பார்ப்போம்.

 

ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன் - எனக்கு இரெண்டு விடயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

1. சிங்களவரின் மாறாத இனத்துவேசம்

2. தமிழர்களின் மாறாத சுயநலம்.

இந்த இரெண்டும் இருக்கும் வரை, புலம் பெயர் தமிழர் பொருளாதாரம் நீங்கள் சொல்வதை போல் பெரிதாக இருந்தாலும் (அப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை) - நீங்கள் சொல்லும் வகையில் சிங்ளத்துட டீல் பேசி நாம் எதையும் பெற முடியாது.

தந்தை செல்வா முதல் தலைவர், பாலா அண்ணா போன்ற சுளியர்கள் பெரும்பலத்தோடு இருந்த போதே, தாம் தாழ்ந்த நிலையில் இருக்கையில் பேச வந்து, பின் எம்மை பேசியே அழித்தவர்கள் அவர்கள்.

ஒரு ஒன்றுபட்ட, அரசியல் நோக்கு, பொருளாதார, அரசியல் தலைமையே இல்லாத புலம்பெயர் சமூகம், இலங்கை அரசுடன் டீல் பேசும் நிலையில் இருந்தாலும் அதில் வெல்லும் என்பதும் மிகை கற்பனையே.

என்னை பொறுத்தவரை இப்படியான கதைகள் தேவையில்லாத distractions. திசை திருப்பல்கள். இந்த மாயமான்களின் பின்னால் ஓடி மனப்பால் குடிப்பதால், தக்க தருணத்தில், செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டு, இன்னொரு வரலாற்று பிழையை நாம் விடல் ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன் - எனக்கு இரெண்டு விடயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

1. சிங்களவரின் மாறாத இனத்துவேசம்

2. தமிழர்களின் மாறாத சுயநலம்.

இந்த இரெண்டும் இருக்கும் வரை, புலம் பெயர் தமிழர் பொருளாதாரம் நீங்கள் சொல்வதை போல் பெரிதாக இருந்தாலும் (அப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை) - நீங்கள் சொல்லும் வகையில் சிங்ளத்துட டீல் பேசி நாம் எதையும் பெற முடியாது.

தந்தை செல்வா முதல் தலைவர், பாலா அண்ணா போன்ற சுளியர்கள் பெரும்பலத்தோடு இருந்த போதே, தாம் தாழ்ந்த நிலையில் இருக்கையில் பேச வந்து, பின் எம்மை பேசியே அழித்தவர்கள் அவர்கள்.

ஒரு ஒன்றுபட்ட, அரசியல் நோக்கு, பொருளாதார, அரசியல் தலைமையே இல்லாத புலம்பெயர் சமூகம், இலங்கை அரசுடன் டீல் பேசும் நிலையில் இருந்தாலும் அதில் வெல்லும் என்பதும் மிகை கற்பனையே.

என்னை பொறுத்தவரை இப்படியான கதைகள் தேவையில்லாத distractions. திசை திருப்பல்கள். இந்த மாயமான்களின் பின்னால் ஓடி மனப்பால் குடிப்பதால், தக்க தருணத்தில், செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டு, இன்னொரு வரலாற்று பிழையை நாம் விடல் ஆகாது.

கடன் வாங்கி நாட்டை மீட்க முடியாது என்ற @vasee வசியின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை என்கிறீர்கள்.

உதாரணமாக  ஜப்பானும், ஜேர்மனியும் UK யும் என்கிறீர்கள்.

இந்த தொழில்துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன், ஊழல் மிக்க, சுஜ தொழில்துறை இல்லாத இலங்கையினை ஓப்பீடு செய்ய முடியுமா என்ன?

இன்றைய சீரழிவுக்கு காரணம், கடனும், வட்டியும் தானே...

****

சிங்களத்துடன் டீல் போட எதுவுமே இல்லை.

நான் எதிர்பார்ப்பது, சீனாவின் எதிர் நடவடிக்கையினை. அது எப்போதுமே நடக்கலாம்.

இந்தியா, மாலைதீவு அடைக்கலம் கொடுக்க முனைந்த போதும், பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல்வாதி மகிந்தா கொழும்பு திருப்பியதன் காரணம் சீனா என்று கேள்விப்படுகின்றேன்.

ஆகவே.... இந்த வல்லரசு போட்டி.... தீவில் ஓயப்போவதில்லை. இதனை வைத்தே, நான் மேலே சொன்ன விடயத்தினை மீண்டும் வாசியுங்கள்.

நாளை சீனா, இலங்கைக்கு உடனடியாக $10 - $20 பில்லியன் கொடுக்கிறோம் என்று அறிவித்தால், நிலைமை தலை கீழாக மாறுமா இல்லையா என்ற கேள்வியுடன் உங்களை விட்டு விட்டு.....

சந்திப்போம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

 ஏன் இலங்கை தற்போதய நிலையில் கடன் வாங்கி மீள முடியாது எனக்கூறினேன் என்றால்.

கிட்டத்தட்ட 46% அரச செலவில் கடனுக்கு வட்டி செலுத்துவதிலேயே செலவாகிறது என நினைக்கிறேன் (சரியாக நினைவில் இல்லை).

கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானத்தில் இலங்கையின் கடனுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 70% அளவில் இருந்தாக நினைவில் உள்ளது.

இந்த நிலையில் மேலதிக கடனால் வட்டி செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்குமேயன்றி குறையாது என நினைக்கிறேன். 

அரசினால் ஒருநிகர பாதீட்டினை உருவாக்க முடியாமல் உள்ள நிலையில் எவ்வாறு மேலதிக கடனுக்கான வட்டியினை செலுத்த முடியும்?

இது வருமானம் குறைந்தவர்கள் கடனட்டையினை பயன்படுத்துவது போல ஒரு மோசமான விளிவை உருவாக்காதா?

ஆனால் அன்னிய செலாவணி இருப்பு தொழில்துறைக்கு அவசியமாகிறதுதான், ஆனால் இப்போது வாங்கும் கடனில் பெரும் பகுதி நுகர்வு செலவாக உள்ளது.

உங்கள் கருத்து தவறு என்று நிறுவ முயலவில்லை, ஆனால் இந்த கேள்விகள் எனது மனதில் உள்ளது, அ த்துடன் எனக்கு ஒரு சிறிய தெளிவே இது தொடர்பாகவுள்ளது.

இல்லை நீங்கள் சொன்ன அந்த கருத்தில் 99% உடன் எனக்கும் உடன்பாடே. 

மேலே நீங்கள் சொன்ன வட்டி மீள் செலுத்தல் கணக்கும் சரியே.

ஆனால் - இனி இலங்கை பெறும் கடன் என்பது (பெற்றால்) கிட்டதட்ட தனியார் கடனில் consolidation of debts என்று எடுக்கும் நீண்டகால கடனை போல இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு.

கடனுக்கு மேல் கடனை வாங்கி மீள முடியாது என்பது இலங்கைக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும், இனி கொடுப்பவருக்கும் தெரிந்தே இருக்கும்.

ஆகவே கடனை ஒருங்கிணைத்தல், சிலதை ரத்து செய்தல், நீண்ட கால நோக்கில் கடனை மீள செலுத்தல், அதீத செலவீனங்களை தவிர்த்தல், வருமானத்தை உயர்தல், சொத்துக்களை விற்றல் என பல வகையான உபாயங்கள் நிறைந்த ஒரு நீண்டகாலத்தில் கடனில் இருந்து மீளும் திட்டம் அமல்படுத்தபம்போது …நீங்கள் கூறியது போல, வட்டி கட்ட கடன் வாங்கும் நிலை தவிர்க்கப்படும்.

ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு இலங்கை உட்பட்டு, அமல்படுத்தவும் வேண்டும். 

இந்த நிபந்தனைகளின் ஓர் அங்கமாக எமக்கான தீர்வையும் சொருகி அதை கடன் வழங்கும் நாடுகளின் guarantee தோடு எடுக்க நாம் முயல வேண்டும்.

நாதம் சொன்னது போல இது மேற்கின் அணுகுமுறை. சீனா இப்போ இருப்பதை விட இன்னும் இறங்கி ஆடுமா? என்பது பெரிய கேள்வி.

4 minutes ago, Nathamuni said:

உதாரணமாக  ஜப்பானும், ஜேர்மனியும் UK யும் என்கிறீர்கள்.

இந்த தொழில்துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன், ஊழல் மிக்க, சுஜ தொழில்துறை இல்லாத இலங்கையினை ஓப்பீடு செய்ய முடியுமா என்ன?

நிச்சயமாக முடியும். 2ம் உலக போரின் பின் இந்த நாடுகளில் எதுவுமே மிஞ்சி இருக்கவில்லை. அதேபோல் ஒரு தக்க தலமை வாய்த்தால் தொழில்துறை உட்பட அத்தனை துறைகளிலும் பிரகாசிக்கும் மனித, இயற்கை, அமைவிட வளம் இலங்கையில் உண்டு:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கடன் வாங்கி நாட்டை மீட்க முடியாது என்ற @vasee வசியின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை என்கிறீர்கள்.

உதாரணமாக  ஜப்பானும், ஜேர்மனியும் UK யும் என்கிறீர்கள்.

இந்த தொழில்துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன், ஊழல் மிக்க, சுஜ தொழில்துறை இல்லாத இலங்கையினை ஓப்பீடு செய்ய முடியுமா என்ன?

இன்றைய சீரழிவுக்கு காரணம், கடனும், வட்டியும் தானே...

****

சிங்களத்துடன் டீல் போட எதுவுமே இல்லை.

நான் எதிர்பார்ப்பது, சீனாவின் எதிர் நடவடிக்கையினை. அது எப்போதுமே நடக்கலாம்.

இந்தியா, மாலைதீவு அடைக்கலம் கொடுக்க முனைந்த போதும், பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல்வாதி மகிந்தா கொழும்பு திருப்பியதன் காரணம் சீனா என்று கேள்விப்படுகின்றேன்.

ஆகவே.... இந்த வல்லரசு போட்டி.... தீவில் ஓயப்போவதில்லை. இதனை வைத்தே, நான் மேலே சொன்ன விடயத்தினை மீண்டும் வாசியுங்கள்.

சந்திப்போம். 

இன்னும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கையில் துறைமுக நகரம் திறக்கபட்ட நேரம் யாழில் எழுந்த கருத்துக்களை, ஒருக்கால் நினைவு மீட்டி பாருங்கள்.

பலர் சீனா இலங்கையில் முழுதாக இறங்கி விட்டது. இனி இந்தியா மட்டும் அல்ல, அமெரிக்காவே இலங்கையில் ஒண்டும் செய்ய முடியாது என யாழில் எழுதினார்கள்.

நம்மில் சிலர் எழுதினோம் - இதை இன்னும் அமெரிக்க நேரடியாக டீல் பண்ணவில்லை, இந்தியாவிடம் இருந்து எடுத்து அவர்கள் நேரடியாக களம் இறங்கினால் நிலைமை மாறும் என.

நடந்தது என்ன? தனது பிரதம சீடர் மகிந்தவை கூட காப்பாற்ற முடியாத நிலை சீனாவுக்கு. யாழ்பாணம் போய் இந்தியாவுக்கு தூரம் கேட்ட சீன தூதரும், தூதரகமும் கூட அடக்கியே வாசிக்கிறார்கள்.

அமெரிக்க தூதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்ததரை சந்திக்கிறார்.

இதுவே இதன் முடிவல்ல. சீனாவும் விடாதுதான்.

ஆனால் உக்ரேன் யுத்தமும், இலங்கை நிகழ்வுகள் நமக்கு சொல்வது, இன்றைக்கும் அமெரிக்காதான் உலகில் top dog என்பதையே. 

சும்மா உலக நியாய கிரந்தங்கள் கதையாமல், ஒரு ஒடுக்கபட்ட இனமாக இதை உணர்ந்து நாம் நடக்க வேண்டும் என்பது என் கருத்து.

@பெருமாள் அடிக்கடி விசனப்படுவார் நாம் வெள்ளைகாரன் பிளேன் வாங்க காசு கொடுத்த ஆட்கள் என. அது வெள்ளையின விசுவாசம் இல்லை. இஉச்சபட்ச சுயநலம். அவ்வாறாக வெள்ளைகாரனுக்கு ஒத்தாசை புரிந்ததால்தான், இலங்கையிலும், இந்தியாவிலும், மலேயாவிலும் ஒரு சிறுபான்மையாக இருந்தும் நாம் பெரும்பான்மைகுரிய அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. இப்போதும் தேவைப்படுவது அப்படி ஒரு அணுகுமுறையே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அடிக்கடி விசனப்படுவார் நாம் வெள்ளைகாரன் பிளேன் வாங்க காசு கொடுத்த ஆட்கள் என. அது வெள்ளையின விசுவாசம் இல்லை. இஉச்சபட்ச சுயநலம். அவ்வாறாக வெள்ளைகாரனுக்கு ஒத்தாசை புரிந்ததால்தான், இலங்கையிலும், இந்தியாவிலும், மலேயாவிலும் ஒரு சிறுபான்மையாக இருந்தும் நாம் பெரும்பான்மைகுரிய அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. இப்போதும் தேவைப்படுவது அப்படி ஒரு அணுகுமுறையே. 

அப்படி பிளேன் வாங்கி குடுத்த நாங்கள் எப்படி இருக்கிறம் இலங்கையில் ?

உடனே நான் சொன்ன கோணம் உங்களுக்கு விளங்கவில்லை என்று டகாலடி காட்ட வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நிச்சயமாக முடியும். 2ம் உலக போரின் பின் இந்த நாடுகளில் எதுவுமே மிஞ்சி இருக்கவில்லை. அதேபோல் ஒரு தக்க தலமை வாய்த்தால் தொழில்துறை உட்பட அத்தனை துறைகளிலும் பிரகாசிக்கும் மனித, இயற்கை, அமைவிட வளம் இலங்கையில் உண்டு:

நீங்கள் சொன்ன இந்த விடயத்துக்கு பதில், நீங்கள் தந்து இருக்கிறீர்கள்.

59 minutes ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை இப்படியான கதைகள் தேவையில்லாத distractions. திசை திருப்பல்கள். இந்த மாயமான்களின் பின்னால் ஓடி மனப்பால் குடிப்பதால், தக்க தருணத்தில், செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டு, இன்னொரு வரலாற்று பிழையை நாம் விடல் ஆகாது.

மிகச்சிறந்த கல்வி அறிவும், தொழில் துறை வளர்ச்சியும் கொண்ட நாடுகளுடன், brain drain அதிகமாக கொண்ட ஒரு சிறு தீவினை ஒப்பிடுகிறீர்களே. நியாயமானது தானா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

அப்படி பிளேன் வாங்கி குடுத்த நாங்கள் எப்படி இருக்கிறம் இலங்கையில் ?

உடனே நான் சொன்ன கோணம் உங்களுக்கு விளங்கவில்லை என்று டகாலடி காட்ட வேண்டாம் .

பிளேன் வாங்கி கொடுத்தது 1ம் உலக போரில், மலாயாவில் இருந்த மல்லாகத்தை சேர்ந்த சுப்பிரமணியன்.

1. இன்றைக்கு மலேசியாவில் இலங்கை தமிழர் இருக்கும் நிலைக்கும், இந்திய தமிழர் இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையும். 

2. சிங்கபூரில் உள்ள இதே வித்தியாசத்தையும்

3. இலங்கையில் 1915-1948 வரை தமிழர் அனுபவித்த மேம்பட்ட நிலையையும் 

ஒப்பு நோக்கினால் நான் சொல்வது விளங்கும்.

1915ல் சுப்ரமணியம் வெள்ளைகாரனுக்கு வாங்கி கொடுத்த பிளேன் 1972 இற்கு பின் சிங்களவனிடம் இருந்து எம்மை பாதுகாக்கவில்லை என நீங்கள் நோவது அவ்வளவு சரியாக படவில்லை.

ஒருவேளை, சுதந்திரம், சுதேசி ஆட்சி, காந்தியம் மண்ணாங்கட்டி எண்டு கூத்தடிக்காமல் தமிழ் நாட்டில் ஆரோ ஒரு கிழவன் சொன்னது போல் “கொள்ளைகாரனை விட வெள்ளைகாரன் தேவல” எண்டு நாமும் இருந்திருந்தால் நிலமை வேறுமாரி இருந்திருக்கலாம்.

1948 காலத்தை இன்ஐய காலத்தை வைத்து benefit of hindsight உடன் எடை போட முடியாது. ஆகவேதான் நான் அதிகம் அந்த கால தலைவர்களை 72 க்கு பின்னான நிலைக்கு பழி சொல்வதில்லை.

ஆனாலும் இலங்கையில் நாம் இன்று இருக்கும் நிலைக்கு காரணம் நிச்சயமாக 1915இல் பிளேன் வாங்கி கொடுத்த சுப்ரமணியம்கள் இல்லை. மாறாக வரப்போகும் இனவாதத்தை கணிக்க தவறிய 1948 அரசியல்தலைவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் சொன்ன இந்த விடயத்துக்கு பதில், நீங்கள் தந்து இருக்கிறீர்கள்.

மிகச்சிறந்த கல்வி அறிவும், தொழில் துறை வளர்ச்சியும் கொண்ட நாடுகளுடன், brain drain அதிகமாக கொண்ட ஒரு சிறு தீவினை ஒப்பிடுகிறீர்களே. நியாயமானது தானா?

மிக நியாயமானது.

இங்கே ஜப்பானின் பொருளாதாரம் போல் இலங்கை பொருளாதாரம் வளரும் என்பதல்ல.

நான் ஒப்பிடுவது நாட்டின் பொருளாதார மீட்சி விகிதத்தை. Rate of economic growth not size of growth. 

மேலும் ஒரு நாடு பொருளாதாரத்தில் எழும்ப தொழில் துறை அத்தியாவசியம் என்பதில்லை. 2ம் உலக யுத்த முடிவு வரைக்கும் ஜப்பான் பெரிய தொழில்துறை நாடும் அல்ல. அது போல் தொழில்புரட்சியின் தாய்வீடான யூகே, 2ம் உலக போரின் பின் ஒரு services based economy ஆக பரிணாமம் பெற்றது.

அதே போல் வளமற்ற சின்னஞ்சிறு தீவு சிங்கப்பூர். மலேசியாவில் இருந்து பிரிந்தபோது இருந்த நிலை என்ன, இப்போ நிலை என்ன?

ஆகவே ஜப்பானை போல கார் உற்பத்தியில் இலங்கை பிரகாசிக்கும் அல்லது யூகே போல G7 பொருளாதாரமாக வரும் என்பதில்லை. ஆனால் சரியான தலைமை அமைந்தால் அதே rate of economic recovery சாத்தியமே.

நாடு வளம் பெறும் போது அந்த நம்பிக்கை வளரும் போது brain drain, brain gain ஆக மாறும் என்பது ஏனைய நாடுகளில் ஏலவே நிரூபிக்கபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

[பொருளாதார பலம் கொண்ட ஈழத்தமிழர்கள் மேற்கின் நம்பிக்கைக்குரியவர்கள். அவர்களது பிரதேசமே அவர்கள் தேடும் பொருளாதார மையமாக அமைய சிறப்பான இடம்.]

ரஷ்யாவின் கொள்கை விளக்கும் தொண்டர்களாக மேற்குலகில் தீவிரமாக யார் செயல்படுகிறார்கள் என்று அந்த நாடுகளுக்கு தெரியாமல் இருக்கும்படி உடான்ஸ் சாமியாரை பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

ஆனால் சரியான தலைமை அமைந்தால் அதே rate of economic recovery சாத்தியமே.

நாடு வளம் பெறும் போது அந்த நம்பிக்கை வளரும் போது brain drain, brain gain ஆக மாறும் என்பது ஏனைய நாடுகளில் ஏலவே நிரூபிக்கபட்டுள்ளது.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்... சித்தப்பா என்று கூப்பிடலாம்.

கடந்த 74 வருடத்தில் நடவாத நிகழ்வு... இனி நடக்கும் சாத்தியம் இல்லை.

மிகச்சிறந்த படிப்பறிவு கொண்ட நாட்டில், ஓக்ஸ்போர்ட் கல்வியாளர் பண்டா 1950 களில் தழுவிய, இனவாதத்தினையே, பத்தாம் வகுப்பு, கோத்தாவும் 2019ல்  தழுவி, வாக்குகளை வென்றார் என்கிற நிலையில், brain drain, brain gain ஆகும் சந்தர்ப்பம் இல்லவே இல்லை.

இன்றய யாழ் செய்தி, அரச வேலையில் இருந்த பலர் வெளியே ஓடுகிறார்கள்.

ஆகவே... உங்கள் wishful thinking சிறப்பு தான். இலங்கை நடைமுறைக்கு ஒருபோதுமே சரிவராது.  அந்த நாடு எப்போதுமே, வெளியார் தலையீட்டுக்கு தன்னை தயாராக வைத்திருக்கும். 

*****

சிங்கப்பூர், உருவாக்கியபோது, அதனை வெளியே அனுப்ப, மலேசிய பாராளுமன்றில் வாக்கெடுப்பில், எதிர் வாக்குகள் ஒன்று கூட இல்லை. இப்படி வெட்டி விடுகிறீர்களே என்று அழுது துடித்தார் லீ. 

இழப்பத்துக்கு எதுவுமே இல்லை. செய் அல்லது, செத்து மடிவோம் என்கிற நிலையில், நாட்டின் குடிமக்கள் அனைவருமே ஒன்று திரண்டு சிங்கப்பூரினை உயர்த்திய கதை. லீ வழங்கியது தலைமைத்துவமே. அது மட்டுமே காணாது என்று அவரே சொல்லி இருக்கிறார்.

அது, இந்த தீவில் இன்றய நிலையில் கனவு தான்.

நாளை ஒரு தீர்வு கிடைத்தாலும், நான் நாடு திருப்புவேனா என்று நினைக்கும் போதே.... இல்லை என்று மனது சொல்கிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்... சித்தப்பா என்று கூப்பிடலாம்.

கடந்த 74 வருடத்தில் நடவாத நிகழ்வு... இனி நடக்கும் சாத்தியம் இல்லை.

மிகச்சிறந்த படிப்பறிவு கொண்ட நாட்டில், ஓக்ஸ்போர்ட் கல்வியாளர் பண்டா 1950 களில் தழுவிய, இனவாதத்தினையே, பத்தாம் வகுப்பு, கோத்தாவும் 2019ல்  தழுவி, வாக்குகளை வென்றார் என்கிற நிலையில், brain drain, brain gain ஆகும் சந்தர்ப்பம் இல்லவே இல்லை.

இன்றய யாழ் செய்தி, அரச வேலையில் இருந்த பலர் வெளியே ஓடுகிறார்கள்.

ஆகவே... உங்கள் wishful thinking சிறப்பு தான். இலங்கை நடைமுறைக்கு ஒருபோதுமே சரிவராது.  அந்த நாடு எப்போதுமே, வெளியார் தலையீட்டுக்கு தன்னை தயாராக வைத்திருக்கும். 

*****

சிங்கப்பூர், உருவாக்கியபோது, அதனை வெளியே அனுப்ப, மலேசிய பாராளுமன்றில் வாக்கெடுப்பில், எதிர் வாக்குகள் ஒன்று கூட இல்லை. இப்படி வெட்டி விடுகிறீர்களே என்று அழுது துடித்தார் லீ. 

இழப்பத்துக்கு எதுவுமே இல்லை. செய் அல்லது, செத்து மடிவோம் என்கிற நிலையில், நாட்டின் குடிமக்கள் அனைவருமே ஒன்று திரண்டு சிங்கப்பூரினை உயர்த்திய கதை. லீ வழங்கியது தலைமைத்துவமே. அது மட்டுமே காணாது என்று அவரே சொல்லி இருக்கிறார்.

அது, இந்த தீவில் இன்றய நிலையில் கனவு தான்.

நீங்கள் சொன்ன வரலாறு என்னவோ வாஸ்தவம்தான்.  இலங்கையின் இனவாத சகதி நாம் எல்லாரும் அறிந்ததே.

ஆனால் இப்படிபட்ட இலங்கையோடு சில புலம்பெயர் தமிழர் டீல் போட்டு வெல்லாம் என்ற உங்கள் யோசனை மேலே நீங்கள் சொல்லி உள்ளதுக்கு முற்றிலும் புறம்பானது அல்லவா?

ஆனால் நான் சொல்ல வந்த கோணத்தை நீங்கள் கவனிக்கவில்லை போலத்தெரிகிறது. இதில் எனது wishful thinking எதுவுமில்லை

நான் மேலே சொல்லி இருப்பது தற்போது இலங்கை விடயத்தில் மேற்கின் அணுகுமுறை என்ன என்று நான் நினைப்பதை மட்டுமே. தவிர நான் எதிர்காலத்தை கணிக்கும் சூரன் என்று எப்போதும் கூறுபவன் அல்ல.

ஜேர்மனியில் கிட்லர் மக்கள் ஆதரவு மூலம் ஆட்சிக்கு வந்தவர். அவரின் ஆட்சியின் பெரும்பகுதிக்கு ஜேர்மன் மக்களின் பலத்த ஆதரவு இருந்தது. தாம் ஆரிய மேம்பட்ட இனம் என பலர் நம்பினார்கள். நாஜி கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.

யுத்தத்தின் பின் மேற்கு ஜேர்மனியின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பிய அதேவேளை பெரும் எடுப்பில் அங்கே de nazification உம் இடம்பெற்றது. இன்றும் நடக்கிறது.

இதுவே மிலேச்சதனமான இனவாத பாதையில் இருந்து இன்றைய மேம்பட்ட நிலைக்கு ஜேர்மன் மக்களை கொண்டு வந்தது.

இப்படி ஒரு அணுகுமுறையை மேற்கு இலங்கையில் எடுத்து, அதற்கு சமாந்திரமாக பொருளாதார உதவியும் கிடைத்தால், லீ குவான் யூ வின் 25% தகமை உள்ள ஒரு தலைவர் அமைந்தாலே இலங்கை பொருளாதாரம் மீள முடியும். 

ஆகவேதான் சொல்கிற்றேன், மேற்கு எங்கே போனாலும் தனியே பொருளாதார மாற்றம் மட்டும் அல்ல, சமூக, அரசியல் மாற்றத்தையும் நிகழ்த்தி தம்மை போல ஆக்கி தமது கூட்டணியில் சேர்க்கவே முயல்வார்கள்.

ஜேர்மனி, தென்கொரியா பின்னாளில் போலந்து உட்பட்ட முன்னைய சோவியத் ஆதரவு  நாடுகளில் இந்த அணுகுமுறை வெற்றியளித்தது. ஆனால் என்ன முயன்றும் ஈராக்கில், ஆப்கானில் அந்த நாட்டவரை இப்படி மாற்ற முடியவில்லை.

ஆகவே இதில் எனது wishful thinking ஏதுமில்லை.

நடைமுறை சாத்தியமில்லாத கற்பனைகளை விடுத்து, மேற்கின் அணுகுமுறையை புரிந்து அதன்படி எமது நலனை நாம் position பண்ண வேண்டும் என்பதே நான் சொல்வது.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

அரசு தற்போது ஐ எம் எப் கடனை எதிர்நோக்கியுள்ளது, அதனால் அரசின் செலவுக்கு வரி அதிகரித்தல் அல்லது பணத்தினை அச்சிடுவதினை தவிர வேறு தெரிவு அரசுக்கு இருப்பதாகத்தெரியவில்லை.

இதனால் பொருளாதாரம் மேலும் மேலும் சீரழியும்.

எதிர்வரும் காலத்தில் இப்போது அரசினால் நட்டத்தில் இயக்கப்படும் துறைகள் தனியார் மயப்படுத்தப்படும், அதன் போது இவ்வாறான தேவையற்ற ஊழியர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்.

அவுஸ்ரேலியாவில் தனியார்துறையில் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி சம்பளமில்லாமல் வீட்டில் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தினை அடிப்படை வலது சாரி அரசு வழங்கியுள்ளது. இது சரியான முடிவுதான், அண்மையில் எமது நிறுவனமும் இந்த நடைமுறையினை அமுல்படுத்தவுள்ளதாகக்கூறியுள்ளது (மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்).

கல்வி, மருத்துவம் இந்த இரண்டிலும் அரசு கைவைக்கப்போகிறது என்பது போல தெரிகிறது (நுணாவிலான் இரணிலின் ஒளிப்பதிவொன்று பதிவேற்றியுள்ளர்).

பல தற்காலிக ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம்.

கல்வி மற்றும் மருத்துவ துறையை தனியாரிடம் ஒப்படைக்க யோசித்து வருவதாகவும் கதை உலாவுகிறது தற்போது மருத்துவ துறையில் மேலதிக  வேலை நேர கொடுப்பனவை நிறுத்தியுள்ளது அரசு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நடைமுறை சாத்தியமில்லாத கற்பனைகளை விடுத்து, மேற்கின் அணுகுமுறையை புரிந்து அதன்படி எமது நலனை நாம் position பண்ண வேண்டும் என்பதே நான் சொல்வது.

இரண்டாம் உலகயுத்தத்துக்கு முன்னரே, பிரிட்டன் ஒரு பொருளாதார வல்லரசு. பென்ஸ் போன்ற கார்களை தயாரிக்கும் அளவுக்கு, பெரும் படையெடுப்பை நடாத்துமளவுக்கு ஜேர்மன் பொருளாதாரம் கொண்டிருந்தது.

அணைத்துக்கும் மேலே, ஜப்பானிய, பிரிட்டிஸ், ஜேர்மன், பிரெஞ்சு மக்களிடம் மீளவேண்டும் என்ற ஓர்மம் இருந்தது.

எடுத்தவுடன் தீ வைப்பதே நம் கடன் என்றழையும் சிங்களவருடன் டீல் போட வேண்டும் என்று எங்கே சொன்னேன்?

எந்த டீலுமே கிழித்து வீசப்படும் என்பது பட்டறிவு. இந்திய மத்தியஸ்துவ டீல் படும் பாடும் பார்கிறோமே.

நான் சொல்வது, புலம் பெயர் தமிழர், அரசியல், பொருளாதார பலத்துடன் மேற்கின் ஊடான தீர்வு. அதே வேளை மேற்கின் பொருளியல் மைய தேவை குறித்த பார்வை. (நான் பொருளாதார மையம் குறித்து பேசினால், நீங்கள் திருகோணமலை இராணுவ மையம் குறித்து அல்லவா பேசுகிறீர்கள்.)

புத்திமான் பலவான் - தமிழ் பழமொழி.

இந்த மையம், அதன் தேவை குறித்து சொல்வதன் காரணம், பச்சைப்புள்ளிகள் அல்ல.

கருத்துருவாக்கம். உங்களுக்கு புரியும் பங்கு.👌

இந்த தேவையை, எமது போராட்டத்துடன் லாவகமாக இணைப்பதே எமது அரசியலாக இருக்க வேண்டும்.

ஓரே ஒரு கனடிய தமிழ் எம்பி, ஒட்டுமொத்த கனடிய பாராளுமன்றத்தை எதிர்ப்பே இல்லாத தீர்மானம் நிறைவேற்ற வைத்தார்.

ஒரு நாட்டின் இறைமையுள்ள பாராளுமன்ற தீர்மானத்தை மீறி, கனடிய அரசு இலங்கையின் இன்றைய அரசுக்கு உதவ முடியாது.

சிங்களவர் தாமும் வாழார்.... தீவில் சேர்ந்து வாழவும் விடார்.

மறைந்த கோப்பாய் எம்பி கதிரவேற்பிள்ளை சொன்னது போல, தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி தோலின் ஆழமாயின், சிங்களத்தின் இனவெறி எலும்பு வரை ஆழமானது.

அது விலகும், ஒரு சிறந்த தலைவன் வந்தாலும் மாறும் என்பது தான் உங்கள் wishful thinking என்றேன் அய்யா.

படித்த பண்டா, தனது தவறை உணரந்து திருத்திக் கொண்டோட முயன்ற போது சுடப்பட்டார். அவரது மணைவி, மகளே.... அவரின் பட்டறிந்த வழியே போகவில்லை.

கோத்தா பதவிக்கு வர, ஈஸ்டர் குண்டுகளை வைத்தார் என்கிறார் பாதர் மல்க்கம்.

இவர்களுடன் டீலா?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.