Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
 

https://www.virakesari.lk/article/128324

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

யாழில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
 

https://www.virakesari.lk/article/128324

 

மிகவும் சோகமான செய்தி. இருவரும் மூதாட்டிகள்.
இவர்கள் வயோதிப இல்லத்தில் பராமரிக்கப் பட்டிருந்தால்…
அவர்களின் இறுதிக் காலம், நிம்மதியாக கழிந்திருக்கும்.
புலம் பெயர் மக்கள்… தமது ஆடம்பர செலவுகளை குறைத்து…
ஊருக்கு, ஒரு முதியோர் இல்லங்களோ, தொண்டு நிறுவனங்களோ அமைக்க முன் வர வேண்டும்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனநடமாட்டம் புழங்காத இடமாக மாறிவிட்டது அல்லது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பவர்கள் இல்லாத அளவுக்கு நகரத்து வாழ்வு எல்லா இடமும் தோன்றிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இப்படியாக இறந்து 6 மாதத்தின் பின் தனியே வசித்த மூதாட்டியின் உடல் இலண்டன் அப்பார்மெட்ட்டில் கண்டுபிடிப்பு என்ற செய்திகளை பார்த்து ஊரில் இப்படி நடக்காது என நினைப்பதுண்டு.

ஆனால் இப்போ சங்கரத்தையிலும் அதுவே நடக்கும் அளவுக்கு அங்கேயும் இயந்திரமயமாகி விட்டது வாழ்வு. 

ஒருவர் இறந்த பின் அந்த வீட்டில் மற்றையவர் 2 கிழமை இருந்துள்ளார்.

கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை  மனநலக் குறைபாடு இருந்திருக்கலாம்.  ஏனென்று கேட்க ஒரு மனிதாபிமானம்  கொண்டவர் இல்லையே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

சனநடமாட்டம் புழங்காத இடமாக மாறிவிட்டது அல்லது பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பவர்கள் இல்லாத அளவுக்கு நகரத்து வாழ்வு எல்லா இடமும் தோன்றிவிட்டது. 

இது தான் மேலைத்தேய கலாச்சாரம்.

ஊரில்  நான் சிறுவனாக இருந்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருமல் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் பார்ப்போம்.

இங்கே முன் வீட்டில் ஒருவர் இறந்தால் கூட அமைதி எனும் பெயரில் கறுப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அமைதியாக இருப்பர்.

மேலைத்தேய வாழ்வுக்கு ஆசைப்பட்டால் உதுவும் அடங்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இன்னும் நிறையவே வரும்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இது தான் மேலைத்தேய கலாச்சாரம்.

ஊரில்  நான் சிறுவனாக இருந்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருமல் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் பார்ப்போம்.

இங்கே முன் வீட்டில் ஒருவர் இறந்தால் கூட அமைதி எனும் பெயரில் கறுப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அமைதியாக இருப்பர்.

மேலைத்தேய வாழ்வுக்கு ஆசைப்பட்டால் உதுவும் அடங்கும்.
 

இது மேலை, கீழை தேகம் என்பதை விட கால மாற்றம் அல்லது வர்க்க வேறுபாடு என நினைக்கிறேன். 1960 களூகு முன்பும் இங்கேயும் இப்படித்தான் வாழ்ந்துள்ளார்கள். எனக்கு படிப்புத்த ஆசிரியர் ஒருவர் சொல்லுவா, தெருவுக்கு ஒரு குளியல் அறை இருந்ததாம். ஒன்றாக கூடி வாழ்ந்தார்களாம்.

இப்போதும் council estate எனும் அரச வீட்டுதிட்ட பக்கம் போனால் குருநகர் வீட்டுத்திட்டத்தில் இருப்பதை போல அக்கம் பக்கம் நெருங்கி பழகுவதை காணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

இது மேலை, கீழை தேகம் என்பதை விட கால மாற்றம் அல்லது வர்க்க வேறுபாடு என நினைக்கிறேன். 1960 களூகு முன்பும் இங்கேயும் இப்படித்தான் வாழ்ந்துள்ளார்கள். எனக்கு படிப்புத்த ஆசிரியர் ஒருவர் சொல்லுவா, தெருவுக்கு ஒரு குளியல் அறை இருந்ததாம். ஒன்றாக கூடி வாழ்ந்தார்களாம்.

இப்போதும் council estate எனும் அரச வீட்டுதிட்ட பக்கம் போனால் குருநகர் வீட்டுத்திட்டத்தில் இருப்பதை போல அக்கம் பக்கம் நெருங்கி பழகுவதை காணலாம்.

காலமாற்றம் சரிதான்......ஆனால் விரலுக்கு ஏற்ற வீக்கமும் வேணுமெல்லோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

காலமாற்றம் சரிதான்......ஆனால் விரலுக்கு ஏற்ற வீக்கமும் வேணுமெல்லோ? 🤣

குசாவுக்கு வடபகுதி நிலை சரிவரத் தெரியாதுபோல...😔

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இங்குள்ள நிலமை யாரை யார் பார்ப்பது என்ற நிலைதான் சிலிண்டரை சுமந்து திரிகிறேன் விறகு இல்லை விறகு எடுக்க போனால் காட்டிற்கு பொலிஸ் பிடிக்கும்  தனக்கு தனக்கு என வாழ்க்கையை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இலங்கை😴😴🙄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.