Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12.5 கிலோ சமையல் எரிவாயு... 6,850 ரூபாய், 5 கிலோ எரிவாயு 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்தன !!

லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபாய் என்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1285491

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to 12.5 கிலோ சமையல் எரிவாயு... 6,850 ரூபாய், 5 கிலோ எரிவாயு 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்தன !!

லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபாய் என்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1285491

 

யாழில்.... கொழும்பில்.... கறுப்பு சந்தையில் 15,000 ருபா. தமிழகத்தில் இருந்து..... மீன் பிடித்தலை விட்டு....  காஸ் சப்பிளை நடப்பதாக கேள்விப்பட்டேன்.... உண்மையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

யாழில்.... கொழும்பில்.... கறுப்பு சந்தையில் 15,000 ருபா. தமிழகத்தில் இருந்து..... மீன் பிடித்தலை விட்டு....  காஸ் சப்பிளை நடப்பதாக கேள்விப்பட்டேன்.... உண்மையா ?

தமிழகத்தில் இருந்து... இலங்கைக்கு எரிவாயு கடத்தலா...
இப்போ தான், கேள்விப் படுகின்றேன். 
ஆபத்தான  கடத்தல் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில் இருந்து... இலங்கைக்கு எரிவாயு கடத்தலா...
இப்போ தான், கேள்விப் படுகின்றேன். 
ஆபத்தான  கடத்தல் போலுள்ளது.

காற்றுள்ள போதே தூத்த வேண்டியது தானே.

தமிழகத்தில் இருந்து.... சீனி.... கோதுமை... மரக்கறி..... மண்ணெண்ணெய்..... காஸ்.....

மீன் யாரப்பா பிடிக்கினம்..... 360 மைல்.... கொழும்பில் இருந்து வாறதுக்கு..... 18 மைல் கடலுக்கிளால வாறது கஸ்டமே?

ஸ்ராலின் கப்பலில் கொழும்பு அனுப்பினால் இலவசம்.... இது காசு.....😁

நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு மீனவ மக்களுக்கு, யாழ், இந்திய துணைத்தூதர், கடற்துறை அமைச்சர் டக்கியர் ஊடாக 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் கொடுத்த செய்தியும் வந்ததே. இதை கொண்டு வந்து கொடுத்ததே தமிழக மீனவர்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தியாவில் இருந்து ஒரு சாமான் எடுக்க வேணும்.யாருக்கும் தொடர்பு இருக்குதோ.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இந்தியாவில் இருந்து ஒரு சாமான் எடுக்க வேணும்.யாருக்கும் தொடர்பு இருக்குதோ.

முதலமைச்சர் ஸ்ராலினுடன் தொடர்பு கொண்டால் மாதாமாதம் அனுப்புற சாமானுகளுடன் அனுப்பிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

யாழில்.... கொழும்பில்.... கறுப்பு சந்தையில் 15,000 ருபா. தமிழகத்தில் இருந்து..... மீன் பிடித்தலை விட்டு....  காஸ் சப்பிளை நடப்பதாக கேள்விப்பட்டேன்.... உண்மையா ?

உண்மை. 

மருந்துப் பொருட்கள். எரிபொருள், ஜெனறேற்றர் என தேவையானதெல்லாம் மன்னார் கடலினூடாக இறக்குகிறார்கள். கடற்படை பிடிப்பதை அப்படியே அமுக்கிவிடுகிறார்கள். 

என்ன.. முன்னர் பீடி இலையும் கிப்ஸ் சாரமும், புடவைகளும் கூடவே நடிகைகளையும் இறக்கினார்கள். இப்போது அத்தியாவசியப் பொருட்களை இறக்குகிறார்கள். அம்புட்டுதே. 

😉

 

42 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இந்தியாவில் இருந்து ஒரு சாமான் எடுக்க வேணும்.யாருக்கும் தொடர்பு இருக்குதோ.

என்ன சாமான் எண்டு சொல்லுங்கோ 🤛

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

யாழில்.... கொழும்பில்.... கறுப்பு சந்தையில் 15,000 ருபா. தமிழகத்தில் இருந்து..... மீன் பிடித்தலை விட்டு....  காஸ் சப்பிளை நடப்பதாக கேள்விப்பட்டேன்.... உண்மையா ?

உன்மையாக இருக்கலாம் உலக யுத்த காலங்களில் காக்கிநாடா  ரங்கூன் அதிராம்பட்டினம் போன்ற துறைமுகாம்களில் இருந்து முக்கியமாய் ரங்கூன் அரிசி போன்றவை ஜப்பானிய குண்டு வீச்சு  விமானம்களின்  கேட்டு கேள்வியுற்ற குண்டு வீசுதல்களுக்கு மத்தியில் உணவு பொருள்கள் கொண்டுவந்து சேர்த்தவர்கள் பின்பு ஸ்ரீமாவின் காலங்களில் அதிராம்பட்டினம் மூலம் செத்தல் மிளகாய் அதிகளவில் கொண்டுவந்து சேர்த்தார்கள் இப்படி பல இடர்பாடுகளை கடந்து உணவு பஞ்சம் வராமல் பாதுகாத்தவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த பட்டம் கள்ள கடத்தல்காரர்கள் காரணம் அரசுக்கு வரிகட்டாமல் பொருள் இலங்கைக்குள் கொண்டுவருவது சட்ட விரோதமாம் கொண்டுவரும் உணவு பொருளை இங்குவாழும் மக்களுக்கு உற்பத்தி செய்ய வக்கற்ற அரசுகளை எப்படி அழைப்பது ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

 

என்ன சாமான் எண்டு சொல்லுங்கோ 🤛

live meal worms.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

live meal worms.

கோமியம் வேண்டினால் live meal worms இலவசம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சாமான்கள் மட்டுமல்லாமல் விரைவில் யாழின்/வடக்கின் அதிகாரபூர்வமற்ற கரன்சியாக இந்தியன் ரூபாய் மாறும் என்றும் சொல்கிறார்கள். இப்பவே வர்தகர்கள் இடையே இந்தியன் ரூபாயில் பரிமாறுவது அதிகரித்து செல்கிறதாம்.

எப்போதும் ஒரு நிலையான அதே நேரம் இலகுவில் மாற்ற கூடிய கரன்சியையே மக்கள் நாடுவார்கள். அந்த தகுதியை இலங்கை ரூபாய் இழக்கும் போது அதை இந்தியன் ரூபாய் (டொலர், பவுண்ட்ஸ், ஈரோ பெறுமதி கூட) பிரதியீடு செய்ய கூடும்.

அப்படி மாறினால் 1948 இல் இலங்கை பெற்றது Independence அல்ல Indian-dependence என்ற கூற்று முற்றிலும் உண்மையாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாமான்கள் மட்டுமல்லாமல் விரைவில் யாழின்/வடக்கின் அதிகாரபூர்வமற்ற கரன்சியாக இந்தியன் ரூபாய் மாறும் என்றும் சொல்கிறார்கள். இப்பவே வர்தகர்கள் இடையே இந்தியன் ரூபாயில் பரிமாறுவது அதிகரித்து செல்கிறதாம்.

எப்போதும் ஒரு நிலையான அதே நேரம் இலகுவில் மாற்ற கூடிய கரன்சியையே மக்கள் நாடுவார்கள். அந்த தகுதியை இலங்கை ரூபாய் இழக்கும் போது அதை இந்தியன் ரூபாய் (டொலர், பவுண்ட்ஸ், ஈரோ பெறுமதி கூட) பிரதியீடு செய்ய கூடும்.

அப்படி மாறினால் 1948 இல் இலங்கை பெற்றது Independence அல்ல Indian-dependence என்ற கூற்று முற்றிலும் உண்மையாகும். 

உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ? 

இந்தியாவுக்கு பலர் சுற்றுலா செல்வது அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ? 

இந்தியாவுக்கு பலர் சுற்றுலா செல்வது அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. 

கேள்விபட்டதுதான். புடவை கடை வைத்திருப்போர்  முதலை இப்போ இந்தியன் ரூபாயில் வைத்திருபதாயும் - இதன் மூலம் விலை தளம்பலால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பிப்பதாயும்.  பலரும் இந்த துறையில் இப்படியே செய்வதாயும் கேள்விப்பட்டேன்.

கொழும்பில் இருந்து  (POI கார்ட் காரர்) இந்தியாவுக்கு முதலீடுகள் நகர்ந்துள்ளது எனக்குத்தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.