Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் - மகாநாயக்க தேரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிபந்தனையற்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து உடன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான 'செங்கடகல பிரகடனத்திற்கு' மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

 

Signature.JPG

செங்கடகல பிரகனடத்திற்கு கைச்சாத்திடல் இன்று கண்டி நகரில் உள்ள கெப்பட்டிபொல நினைவு தூபி அருகில் இடம்பெற்றது. பிரகடனத்தில் சிவில் அமைப்பினர், பொது மக்கள் உட்பட பலர் கைச்சாத்திட்டனர்.

ஜனாதிபதி பதவி விலகல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், சர்வக்கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக செங்கடகல பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மே மாதம் 11 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து நிபந்தனையற்ற வகையில் உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து நாட்டு மக்களும்,சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பதில் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.இடைக்கால பதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

சமூக கட்டமைப்பி;ல் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரையறுக்கப்பட்;ட பதவி காலத்தை உள்ளடக்கியதாக சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்டமைப்பினை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள் ஆகவே சர்வக்கட்சி அரசாங்க கட்டமைப்பில் ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்கள் நடத்தப்படும் காலம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்களை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விடயங்களை உள்ளிடக்கிய பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள்,சர்வமத தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

கண்டி நகரில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கம' வளாகத்தில் பெரும்பாலான மக்கள் செங்கடகல பிரகடனத்திற்கு கைச்சாத்திட்டனர்.குறித்த பிரகடனத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் - செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் கையெழுத்து | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து நாட்டு மக்களும்,சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பதில் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.

கோத்தபாய பதவி விலகினால்… இடைக்கால ஜனாதிபதியாக யார் வருவார்?
மைத்திரியை… நியமிப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நீங்கள், என்ன… நினைக்கிறீர்கள்? 
உங்கள் ஊகம்… சரியாக வருகின்றதா என்று பார்ப்போம். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தபாய பதவி விலகினால்… இடைக்கால ஜனாதிபதியாக யார் வருவார்?
மைத்திரியை… நியமிப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நீங்கள், என்ன… நினைக்கிறீர்கள்? 
உங்கள் ஊகம்… சரியாக வருகின்றதா என்று பார்ப்போம். 🙂

அத்தைக்கு மீசை முளைக்கட்டும், சித்தப்பா எண்டு கூப்பிடலாம்.

சொன்னாப்போல, ஜனாதிபதி, பதவி விலகினால், இறந்தால், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானால், பிரதமர் ஒரு மாதகாலம் ஜனாதிபதி ஆவார்.

பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் அதை உறுதி செய்தால் தொடர்ந்தும் 5 வருடத்தின் மிகுதியுள்ள காலத்துக்கு அவரே தொடர்வார்.

ரணில் ஏன், நசிகுக் கொண்டு நிக்கிறார் எண்டு விளங்குதே? 😁

முன்னுதாரணம்: பிரேமர் இறக்க, பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜயதுங்க ஜனாதிபதியானார். அவர் மீண்டும் போட்டி போட விரும்பாததால், சந்திரிகா வந்தார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அத்தைக்கு மீசை முளைக்கட்டும், சித்தப்பா எண்டு கூப்பிடலாம்.

சொன்னாப்போல, ஜனாதிபதி, பதவி விலகினால், இறந்தால், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானால், பிரதமர் ஒரு மாதகாலம் ஜனாதிபதி ஆவார்.

பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் அதை உறுதி செய்தால் தொடர்ந்தும் 5 வருடத்தின் மிகுதியுள்ள காலத்துக்கு அவரே தொடர்வார்.

ரணில் ஏன், நசிக்குக் கொண்டு நிக்கிறார் எண்டு விளங்குதே? 😁

ரணிலையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்பத்தான்… பிளான் போட்டிருக்கிறார்கள்.
ரணில் போனால்… அந்த இடத்துக்கு, சஜித் பிரேமதாச வருவார்.
இப்ப… ஜனாதிபதி பதவிக்குத்தான், ஆட்களை தேடுறம். 😂
அதுக்கு… யாழ். களத்தின் உதவியை எதிர் பார்க்கிறம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதுக்கு… யாழ். களத்தின் உதவியை எதிர் பார்க்கிறம்.

சம்பந்தன் ஐயா தான் சரியான தேர்வு. ஏனெனில் அவருக்கு அதிகாரம் தேவையில்லை. இருக்க வீடு கொடுத்தால் காணும். மேலும் அவரா பதவி விலகாவிட்டாலும்.. இயற்கை விட்டு வைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகாநாயக்கர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கினாலே அரைவாசி பிரச்சனை தானா தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா போனால்>... பெற்றோல் வங்கிவரப் போன நசீரு காக்காவின் நிலை என்ன/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கோட்டா போனால்>... பெற்றோல் வங்கிவரப் போன நசீரு காக்காவின் நிலை என்ன/

நசீரு…. போனதுதான் தெரியும். திரும்பி வந்த மாதிரி… எந்தச் செய்தியும் வரவில்லை.
உள்ளூர் செய்திகளிலும், அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை.
ஆளுக்கு என்ன நடந்திருக்கும்? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி பதவிக்குத்தான், ஆட்களை தேடுறம்.

ஏன்  நம்ம சுமந்திரன் வந்தால் ஆகாதோ? அவருக்கு என்ன குறைச்சல்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

ஏன்  நம்ம சுமந்திரன் வந்தால் ஆகாதோ? அவருக்கு என்ன குறைச்சல்?

சுமந்திரன் வந்தால்....  கதிரையை விட்டு, கிளப்புறது கஸ்ரம். 😂
கூட்டமைப்பு... படுகிற பாடு, தெரியும் தானே....  🤣

சல்லி சல்லியாய்... நொருக்கிக் கொண்டு இருக்கிறார். 😢

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றிலுள்ள அத்தனை பதவியும் அவர்கைக்கு மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, satan said:

பாராளுமன்றிலுள்ள அத்தனை பதவியும் அவர்கைக்கு மாறிவிடும்.

அது, கூட... பரவாயில்லை.
இராஜதந்திரிகளை... முன் கதவாலையும்,  பின்  கதவாலையும் சந்தித்து,
நேரத்துக்கு ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்.

வெளிநாடுகள் உதவி செய்ய வந்தால் .. கூட, 
உள்நாட்டு  பிரச்சினையை... உள்ளூரிலேயே தீர்த்து கொள்கின்றோம் என்று,
வந்தவனை திருப்பி அனுப்பி விட்டுடுவார். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாய பதவி விலகினால்… இடைக்கால ஜனாதிபதியாக யார் வருவார்?
மைத்திரியை… நியமிப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நீங்கள், என்ன… நினைக்கிறீர்கள்? 
உங்கள் ஊகம்… சரியாக வருகின்றதா என்று பார்ப்போம். 🙂

ஹிருணிகா வரட்டும் ...நாமும் மருதரை பிடித்து எமக்கு தேவையானதை எடுக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஹிருணிகா வரட்டும் ...நாமும் மருதரை பிடித்து எமக்கு தேவையானதை எடுக்கலாம் 

Hirunika Premachandra - Sri Lankan Politician - Whois - xwhos.com

வருங்கால ஜனாதிபதி.... ஹிருணிகா வாழ்க. 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.