Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின்... பதவி விலகல் கடிதம், இதுவரை... கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

ஜனாதிபதியின்... பதவி விலகல் கடிதம், இதுவரை... கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவி வலிகினால், எதிர்வரும் 19ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும், 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1291002

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

சேரவேண்டிய இடத்தை... அடைந்த பின்னரே, ஜனாதிபதி  இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவை அடைந்துள்ளார்.

அங்கிருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1291026

  • கருத்துக்கள உறவுகள்

தப்பி ஓடுறவர், உயர் அரசபதவிக்கு அயல் நாடுகளில் அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிமுறையை (Diplomatic Immunity)பயன்படுத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் முத்திரை வாங்கி ஒட்டக்கூட காசில்லாமல் போச்சே.😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

பாவம் முத்திரை வாங்கி ஒட்டக்கூட காசில்லாமல் போச்சே.😄

கனக்க சந்தோசப்படாதேங்கோ😁. இது ஒன்றும் அவர்களின் அரசியல் வீழ்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி மட்டுமே.
நாளைக்கு கோத்தபாயவை விட இன்னொரு இனவாத அரசியல்வாதி அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வேரானால்  அவர்தான் அங்கு தெய்வம்.

நான் விளங்கிக்கொண்ட அளவில் இலங்கையில் நடந்தது மனித உரிமைக்கான போராட்டமில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரைச் சென்றடைந்ததும் இராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிப்பாராம் ஜனாதிபதி - சபாநாயகர் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றதன் பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பதாக தன்னிடம் அவர் குறிப்பிட்டதாக சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன்,நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றினால் அது பாரதுரமான விளைவை ஏற்படுத்தும் என கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியில் இருந்து விலக வேண்டும்.

அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரே மக்கள் போராட்டத் தீவிரமடைந்துள்ளது என கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கட்சி தலைலவர் கூட்டத்தில் முன்னெடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கடந்த 9ஆம் திகதி இரவு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக அறிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும்'என தீர்மானிக்கப்பட்டது.சபாநாயகர் இத்தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு அறிவித்தார்.

தான் 13 ஆம் திகதி பதவி விலகுவதை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஓரிரு நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆராயும் வகையில் கடந்த திங்கட்கிழமை விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது குறிப்பிட்டதற்கமைய ஜனாதிபதி பதவி விலகினால் நாளை பாராளுமன்றத்தை கூட்டவும்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜனாதிபதிக்காக வேட்பு மனுக்கலை பரிசீலனை செய்யவும்,20ஆம் திகதி இரசகிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ள காரணத்தினால் ஜனாதிபதியின் கடமைகளை செயற்படுத்துவதற்காக அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,தான் குறிப்பிட்டதற்கமைய பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக இன்றைய தினமே (நேற்று) அறிவிப்பேன் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக சபாநாயகர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
 

https://www.virakesari.lk/article/131414

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா !

இதுவரை... இராஜினாமா கடிதத்தினை, கையளிக்காத கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவி விலகுவதாக கடந்த 9ஆம் திகதி அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

பின்னர், அவர் நேற்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  சபாநாயகர் நேற்று ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை எனக்குறிப்பிட்டார்.

அதன்பின்னர், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரமே தெரிவித்திருந்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1291111

  • கருத்துக்கள உறவுகள்

 மாலை தீவு போய் சிங்கப்பூர் ஆயிற்று இனி அங்கே இருந்து அமெரிக்கா அல்லது பிலிப்பின்ஸ் முன்னாள் ஜனாதிபதி Marcos மாதிரி எங்கேயாவது ஒரு தீவிற்கு போகுமட்டும் தரமாட்டார்.. 

சபாநாயகரும் பாவம்.. என்னதான் அந்த ஆள் செய்யமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினாமா கடிதம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து ராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) பதவி விலகுவதாக கடந்த 9ஆம் திகதி அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

image_81de443535.jpg

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டா

பின்னர், அவர் நேற்று (13) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  சபாநாயகர் நேற்று ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்றார்.

அதன்பின்னர், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரம் கூறினார்.

image_0afac76324.jpg

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

அத்துடன், பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு வர்த்தமானி வெளியானது.

பின்னர் நேற்று மாலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

image_9fe44209a2.png

சிங்கப்பூர்  சென்றதும் இராஜினாமா

அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார் என்றும்,  சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், தனது இராஜினாமா கடித்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பலாம் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இதுவரை இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ராஜினாமா-கடிதம்-குறித்து-வெளியான-புதிய-அறிவிப்பு/150-300398

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மாலை தீவு போய் சிங்கப்பூர் ஆயிற்று இனி அங்கே இருந்து அமெரிக்கா அல்லது பிலிப்பின்ஸ் முன்னாள் ஜனாதிபதி Marcos மாதிரி எங்கேயாவது ஒரு தீவிற்கு போகுமட்டும் தரமாட்டார்.. 

சபாநாயகரும் பாவம்.. என்னதான் அந்த ஆள் செய்யமுடியும்

சிலவேளை, தனக்குக் கிடைக்காடஹ் நாடும் அதிகாரமும் இருந்தால்த்தான் என்ன, இல்லாவிட்டால்த்தான் என்ன என்கிற மனோநிலையில் தனது ராஜினாமாக் கடிதத்தினை அவர் மறைத்திருக்கலாம். அல்லது நீங்கள் கூறுவதுபோல அரசுத்தலைவருக்கான பாதுகாப்பினைப் பாவித்து, ஏதாவது நேச நாடொன்றில் தரையிறங்கி, தன்னை நிலைநாட்டியபின்னர் அதனை அவர் வெளியிடலாம். 

அல்லது, இவை எதுவுமே இல்லாமல், தானே மீண்டும் ஜனாதிபதியாக, ராணுவத்தின் உதவியுடன் நாடு திரும்பலாம்.

ஆனால், இவை எதுவுமே நாட்டிற்கு நண்மை பயக்கப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

சிலவேளை, தனக்குக் கிடைக்காடஹ் நாடும் அதிகாரமும் இருந்தால்த்தான் என்ன, இல்லாவிட்டால்த்தான் என்ன என்கிற மனோநிலையில் தனது ராஜினாமாக் கடிதத்தினை அவர் மறைத்திருக்கலாம். அல்லது நீங்கள் கூறுவதுபோல அரசுத்தலைவருக்கான பாதுகாப்பினைப் பாவித்து, ஏதாவது நேச நாடொன்றில் தரையிறங்கி, தன்னை நிலைநாட்டியபின்னர் அதனை அவர் வெளியிடலாம். 

அல்லது, இவை எதுவுமே இல்லாமல், தானே மீண்டும் ஜனாதிபதியாக, ராணுவத்தின் உதவியுடன் நாடு திரும்பலாம்.

ஆனால், இவை எதுவுமே நாட்டிற்கு நண்மை பயக்கப் போவதில்லை. 

உண்மைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

கோட்டாவின் பதவி விலகல் குறித்த... முக்கிய விடயத்தினை தெரிவித்தார் சபநாயகர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினத்திற்குள் அனுப்பிவைப்பதாக தொலைபேசி ஊடாக தமக்கு அறிவித்ததாகவும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் இந்த சந்தர்ப்பத்தில் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் நாளைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும்  நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1291168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.