Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வது உட்பட தீர்வுகளுக்கு, புதிய அமைச்சரவையில் எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்றோர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1934716_1693233430889351_7755905304956056347_n.jpg

நூருல் ஹுதா உமர்

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.

 

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட  கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் இலங்கை நாட்டுக்கு பல கோடி ரூபாய் பணங்களை அரபு நாடுகளில் இருந்தும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்தும் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.

 

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தான் அரசியல் அதிகாரத்திலிருந்த காலங்களில் பல கோடிக்கணக்கான பணங்களை இலங்கை நாட்டுக்கு உதவியாக பெற்று கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் தனது சேவையை வழங்கியுள்ளார். இனவாத, பிரதேசவாத அரக்கர்களை கொன்ற ஆட்சியாக மலரவிருக்கும் ஜனாதிபதி ரணிலை தலைமையாக கொண்ட இந்த அரசாங்கத்தில் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்ற மொழியாற்றல், திறமை, நாட்டுப்பற்று மிக்கவர்கள் அமைச்சர்களாக அல்லது அதிகாரம் பொருந்தியர்வர்களாக இருக்கவேண்டியது நாட்டின் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.madawalaenews.com/2022/07/blog-post_685.html

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம் பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.

பலம் பொருந்திய அமைச்சுப் பதவி என்றால்...
பாதுகாப்பு அமைச்சர் பதவியை... கொடுத்தால் போச்சு.  😜

இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது  அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். 
ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா கிளம்ப, குளிர் விட்டுப்போயிரிச்சு.😉

அந்த மாவனல்ல சிவப்புத் தொப்பிக்காரரை கொஞ்ச நாளாக் காணவில்லை..... 😁

கிஸ்புல்லா  எம்பி இல்லை.... அப்புறம் எப்படி?

அட நம்ம கக்கீம், ரிசாத், அல்சப்ரீ எல்லாம் இருக்காங்களே....

இவரு எதுக்கு...... ஓ.... கோத்தா பறித்த மட்டு பல்கலைகழகம் திருப்பி எடுக்க வேணும் எல்லோ... 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அந்த மாவனல்ல சிவப்புத் தொப்பிக்காரரை கொஞ்ச நாளாக் காணவில்லை..... 😁

யாரது எங்க தலைவன பத்தி தப்பா பேசுறது?😆

முபாரக் அப்துல் மஜீத் எண்டா அண்ட சராசரமும் அதிரும் தெரியுமா?

ஆள் மாவனல்ல இல்லை அம்பாறை மாவட்டம் என நினைக்கிறேன்?

3 hours ago, நிழலி said:

இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது  அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். 
ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.

விக்கி அமைச்சராகி இவர்கள் போல் நடந்து கொண்டால் புலம்பெயர் தமிழர் எதிர்வினை எப்படி இருக்கும்?

அப்போ இந்த முறையை கையில் எடுக்க அரசியல்வாதிகள் பயப்படுவதிலும் நியாயம் உண்டுதானே?

 

21 minutes ago, goshan_che said:

 

விக்கி அமைச்சராகி இவர்கள் போல் நடந்து கொண்டால் புலம்பெயர் தமிழர் எதிர்வினை எப்படி இருக்கும்?

அப்போ இந்த முறையை கையில் எடுக்க அரசியல்வாதிகள் பயப்படுவதிலும் நியாயம் உண்டுதானே?

 

தாயக அரசியலில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வினையாற்றலுக்கு இனி இடமில்லை, அவர்கள் அதற்கான வெளியை இனி தரப்போவதும் இல்லை. 2009 இன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்த தலைமைகள் இங்கு புலம்பெயர் தேசங்களில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூக வலை தல  பின்னூட்டம்:

ரணிலின் பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளது என்பதை புரியமுடியாத முட்டாள் போல பேசுகிறார் சுமந்திரன். ரணில் வென்றபின்னராவது, வாயை மூடிக்கொண்டு நடக்கிற அலுவலை பாராமல், போராட்டகாரர்கள், எதிர்ப்பதால், ரணிலை எப்படி ஆதரப்பித்து என்கிறார்.

சம்பந்தனிலும் பார்க்க இவருக்கு தான் அறளை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோடிகளின் வரவிற்காக.. இன்னும் ஒரு 500 தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்களின் உயிர்கள் விலைபேசப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 

ரணிலின் முன்னைய ஆட்சியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களும் தான் சொறீலங்காவின் இன்றைய நிலைக்கு காரணம். கொரோனா மட்டுமல்ல...! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2022 at 04:02, Nathamuni said:

ஒரு சமூக வலை தல  பின்னூட்டம்:

ரணிலின் பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளது என்பதை புரியமுடியாத முட்டாள் போல பேசுகிறார் சுமந்திரன். ரணில் வென்றபின்னராவது, வாயை மூடிக்கொண்டு நடக்கிற அலுவலை பாராமல், போராட்டகாரர்கள், எதிர்ப்பதால், ரணிலை எப்படி ஆதரப்பித்து என்கிறார்.

சம்பந்தனிலும் பார்க்க இவருக்கு தான் அறளை.

ஏன் நாதம்! இங்கு ஒருவர் அடிக்கடி சுமந்திரன் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்றும்  கூட்டமைப்பு, விக்னேஸ்வரன்  இந்தியாவின் அடிமைகள்  சொல்லிக்கொண்டு திரிந்தாரே? ஆனால் சுமந்திரனோ;   கூட்டாக தாம் ரணிலை ஆதரிக்கவில்லை என பகிரங்கமாக அறிவித்து விட்டார்.  இப்போ இந்தியா, அமெரிக்கா இரண்டுமே இவர்களை கைகழுவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது ராஜதந்திரம் என்று சொல்லி மறைத்துக்கொள்வார்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.